Tamil Nadu Engineering Admission
Medical Fitness Certificate and
Anti Ragging form
From Anna University website
Tamil Nadu Engineering Admission
Medical Fitness Certificate and
Anti Ragging form
From Anna University website
TNEA BE Counselling
Provisional Allotment order DOWNLOAD செய்து
கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கும்
*7.5 கோட்டாவில் No College Fees No Hostel Fees Free Seat பெற்றுள்ள அரசுப்பள்ளி குழந்தைகள் & பெற்றோர் கனிவான கவனத்திற்கு* 👇
முதல் சுற்றில் தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரிகளில் BE seat பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.💐💐💐
30.07.2026 வியாழன் காலை 10 மணிக்குள் கிடைத்த கல்லூரிக்கு சென்று விடுங்கள்
*ஒரு நாள் முன்பே 29.07.2026 புதன் அன்றே சென்று விடுவது சிறப்பு*
கீழ்காண் original + மூன்று set Xerox சான்றிதழ்களை எடுத்து செல்லுங்கள்👇
1. Provisional order
2. SSLC Mark Sheet *original*
3. +1 & +2 Combined Mark Sheet with HM Signature
4. +2 *original TC* or College *original* TC
5. *Medical Fitness Certificate*
Digitally signed *e-certificates* for👇
6. BC MBC DNC BCM SC SCA ST COMMUNITY CERTIFICATE
7. *NATIVITY CERTIFICATE*
8. *First Graduate Certificate*
9. *Srilankan Tamil Refugee Certificate*
10. *Income certificate* for AICTE TUITION FEES WAIVER SCHEME and SC SCA ST POST MATRIC SCHOLARSHIP SCHEME
11. Passport size Photo -4 copies
(7.5 QUOTA வில் BE Free seat பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் Nativity First Graduate Sri Lankan Refugee and Income certificate ஆகிய 4 சான்றிதழ்கள் தவிர மீதமுள்ள 7 ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தால் போதும்🛑 மேற்காண் 4 ஆவணங்கள் கைவசம் இருந்தால் சமர்ப்பிக்கலாம் தவறில்லை. கட்டாயமில்லை🛑)
சிறந்த பொறியாளர்களாக படித்து மிளிர்ந்து
உங்கள் தலைமுறைகளை சிறக்க செய்திருங்கள்👌👍👏 வாழ்த்துகள்💐💐💐
உங்கள் சேர்க்கையில் ஏதும் சிரமம் ஏற்பட்டால் .... உடனே அருகில் உள்ள TFC மையத்தின் உதவியை நாடவும்.
அல்லது ....
1800 425 0110 என்ற DOTE Help line எண்ணை அழைக்கவும்.
அல்லது
tneacare@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் புகார் செய்யவும்.👌👍👏💐
7.5 கோட்டா Bonafide certificate தேவையில்லை. கேட்க மாட்டார்கள். EMIS மூலம் அரசு Online verification முடித்து விட்டது. ஆகவே Bonafide certificate அவசியமில்லை.
இருப்பினும் தேவை என நீங்கள் கருதினால் உங்கள் பள்ளி தலைமை ஆசியரிடம் கேளுங்கள். ஒரே நிமிடத்தில் தந்து விடுவார். 6-12 வகுப்புகளை 3 - 4 பள்ளிகளில் படித்திருந்தால் .... அந்தந்த பள்ளிக்கு சென்றால் .... ஒரு நிமிடத்தில் கிடைத்து விடும். இருப்பினும் இது தேவையற்ற வீண் அலைச்சல். தவிர்ப்பது நல்லது👌👍👏💐 பதிவு நாள் : 26.07.2026 ஞாயிறு மாலை 4 மணி
Medical Fitness Certificate Format link👇
https://www.auegov.ac.in/Admissions/assets/PDF/DownloadDoc.pdf
58 பொறியியல் கல்லூரிகள் மூடல்
2025-26ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல் - அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE)
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 12 கல்லூரிகளும், மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் பஞ்சாப்பில் தலா 4 கல்லூரிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் தலா 3 கல்லூரிகளும் மூடல்.
குஜராத், கர்நாடகா, புனே மற்றும் தமிழ்நாட்டில் தலா 2 கல்லூரிகளும், குறைந்தபட்சமாக ஹரியானா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தலா 1 கல்லூரிகளும் மூடப்பட்டதாக அறிவிப்பு.
Part Time B.E., | தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 308, நாள் : 29-06-2026
B.E., Degree for Working Professionals Admission (Formerly Part Time B.E.,)
பட்டயப் படிப்பு முடித்து ஓராண்டு பணிபுரிந்த / பணிபுரியும் அலுவலர்களுக்கு பகுதி நேர பி.இ. பொறியியல் பட்டப்படிப்புகள் அறிமுகம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
2026-2027 கல்வியாண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA) தொடர்பான விவரங்கள்:
1. பதிவுக் காலம்: விண்ணப்பங்கள் மே 3, 2026 அன்று தொடங்கின, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 2, 2026 ஆகும்.
2. விண்ணப்ப இணையதளம்: மாணவர்கள் www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் .
3. தரவரிசை: மாணவர்களுக்கான தகுதிப் பட்டியல் (தரவரிசைப் பட்டியல்) 2026 ஜூன் 29 அன்று வெளியிடப்பட உள்ளது.
TNEA 2025 Ranking list of Engineering colleges in Tamil Nadu based on student admissions
TNEA 2025 Analysis After Round 3 : Based on Maximum No. of Seats and Percentage of Seats Filled
TNEA 2025 மாணவர் சேர்க்கை அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்
TN Engineering Colleges Rank List - Analysis Based on % and Total Filled
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பொறியியல் மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் வெளியீடு
TNEA 2025 Random Number Released
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு.
அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தகவல்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை ( TNEA - B.E., B.Tech / B.Arch ) - 2025-2026 அறிவிப்பு
Tamil Nadu Engineering Admission (B.E., B.Tech / B.Arch) - 2025-2026 Notification
பி.இ., பி.எட்., பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை வெளியீடு
இளம் பொறியியல் (எந்த துறையும்) உடன் இளம் கல்வியியல் (இயற்பியல் அறிவியல்) பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை (நிலை) எண்.16, நாள் : 04-02-2025 வெளியீடு
G.O.Ms.No.16, Dated : 04-02-2025 - B.E., ( Any discipline ) B.Ed., ( Physical Science). Eligible to the post of B.T. Assistant Physics. Eligible to teach class 6 to 8th
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பொறியியல் படிப்புடன் கூடிய பி.எட். (இயற் அறிவியல்) படிப்பு - பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணிக்குத் தகுதி & 6-8 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க இணை அரசாணை வெளியீடு
பிஇ - பிஎட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயா்கல்வித் துறை அரசாணை வெளியீடு
பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என்று உயா்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.
இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பி.எட்., (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்களாவர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
2001-2002ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு.
செமஸ்டர் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.
>>> தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2022 - தகவல் கையேடு (TNEA 2022 - Information Brochure)...
விண்ணப்பிக்க வலைதள முகவரி...👇
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...
ஈரோடு, சாலை மற்றும் போக்குவரத்து(IRTT) பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்படுகிறது. பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை G.O. (Ms) No.165, Dated : 27.08.2021 வெளியீடு...
>>> Click here to Download G.O. (Ms) No.165, Dated : 27.08.2021...
பொறியியல் நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம்...
பொறியியல் (B.E., B.Tech.,) சேர்க்கை - நாளை (26-07-2021) முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது...
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், பிப்ரவரி / மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுத்தேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் மறுத்தேர்வு மற்றும் ஏப்ரல் / மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
* தேர்வுகள் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதை போல 3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும்.
* வீட்டிலிருந்தே தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
* முன்னதாக மாணவர்கள் தேர்வுத் தாளைப் பதிவிறக்கம் செய்ய, கணினி / மடிக்கணினி / மொபைல்போன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைய வசதியுடன் வைத்திருக்க வேண்டும்.
* மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், அழிப்பான், ஏ4 தாள்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
* ஹால் டிக்கெட்டை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் அந்தந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
* தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக மின்னஞ்சல் / கூகுள் கிளாஸ்ரூம்ஸ் / மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் வினாத்தாள் அனுப்பப்படும்.
* தேர்வு காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக 3 மணி நேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும்.
* வினாத்தாளைப் பெறுவதற்கு 9 முதல் 9.30 வரையிலும், தேர்வுகளை எழுத 9.30 முதல் 12.30 வரையிலும் விடைத்தாளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய 12.30 முதல் 1.30 வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிற்பகல் வேளையில் 2 முதல் 2.30 வரை வினாத்தாளைப் பெறவும் 2.30 முதல் 5 மணி வரை தேர்வு எழுதவும் 5.30 முதல் 6 மணி வரை விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பவும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்து, தனி வெள்ளைத் தாளில் நீலம் மற்றும் கருப்பு நிற மையால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் காலிப்பக்கம் விடக்கூடாது. ஒருவேளை பக்கம் எழுதப்படாமல் இருந்தால் பேனாவால் கோடிட்டு அடிக்க வேண்டும்.
* ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் மாணவர்கள் தேர்வெழுத வேண்டும்.
* தேர்வு எழுதி முடித்தவுடன் விடைத்தாளை ஸ்கேன் செய்து பிடிஎஃப் வெர்ஷனாக அனுப்பி வைக்க வேண்டும்.
* தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். காலதாமதமாக அனுப்பினால் விடைத்தாள் நிராகரிக்கப்படும்.
* விடைத்தாளை எடுத்து நூலில் கட்டி, விரைவுத் தபால், பதிவுத் தபால் அல்லது கொரியர் மூலம் அந்தந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் பெயரில் அன்றைய தினமே அனுப்ப வேண்டும்.
* நேரடியாகக் கல்வி நிறுவனத்திற்குச் சென்று விடைத்தாளைத் தரக்கூடாது.
* ஒவ்வொரு தாளின் மேல்புறத்திலும் மாணவரின் பெயர், பாடக் குறியீட்டு எண், தேர்வின் பெயர், பதிவு எண் ஆகியவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.
* ஒவ்வொரு தாளின் கீழ்ப்புறத்திலும் தேர்வு தேதி, பக்கம் எண், மாணவர்களின் கையொப்பம் ஆகியவை இருக்க வேண்டும். கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அந்தந்தக் கல்லூரி நிர்வாகத்தை மாணவர்கள் அணுகலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகள் கட்டாயப்படுத்துவதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, பிப்ரவரியில் 'ஆன்லைன்' வழி தேர்வு நடந்தது. மாணவர்கள் ஆன்லைனில் இருந்தபடி, மொபைல்போன் மற்றும் 'லேப்டாப்' வாயிலாக தேர்வு எழுதினர்.
ஆன்லைனில் மாணவர்களின் முகம் மற்றும் கண் அசைவுகள், அப்போது கேட்கும் ஒலி ஆகியவை பதிவாகும் வகையில், 'சாப்ட்வேர்' பயன்படுத்தப் பட்டது.
அறிவிப்பு
இந்த தேர்வில், பல மாணவர்களின் கண் அசைவுகள் மற்றும் அருகில் கேட்ட சத்தங்களின் அடிப்படையில், பலர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், காப்பி அடித்ததாகவும், சாப்ட்வேர் பதிவு செய்தது. அதனால், 30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இது குறித்து, மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்ததால், மறு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மறு தேர்வு, ஜூன் 14ல் துவங்க உள்ளது.'ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், விருப்பம் இருந்தால், மீண்டும் மறு தேர்வு எழுதலாம்; அவர்களுக்கு மறு தேர்வு கட்டாயமில்லை. மற்ற மாணவர்கள் கட்டாயம் மறுதேர்வில் பங்கேற்க வேண்டும்' என, அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.
கோரிக்கை
இந்நிலையில், பல தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், தங்கள் மாணவர்கள், ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மீண்டும் தேர்வை எழுதும்படி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.புதிய மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதால், தங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்தி காட்டுவதற்காக, மீண்டும் தேர்வு எழுத வற்புறுத்துவதாக, பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, உயர் கல்வித் துறை சார்பில், கல்லுாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மறு தேர்வுக்கு கட்டாயப்படுத்தும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும். இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் AICTE தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பயிலலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதன்காரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் தாய் மொழியிலும் இடம்பெறும். பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது. மேலும் 11 இந்திய மொழிகளிலும் பொறியியல் பாடங்களை கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் அதிகம் பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளது என AICTE தகவல் தெரிவித்துள்ளது.
டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் >>> தரவிறக்கம் செய்...