கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள்‌ ஆணையரக அழைப்பாணை இல்லாமல்‌ வருகை புரியக் கூடாது - ADW ஆணையர்...



 ந.க.எண்‌.இ6/500 /2021 , நாள்‌.13.07.2021. 

ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகம்‌,

சென்னை - 5.


சுற்றறிக்கை

பொருள்‌: பணியாளர்‌ தொகுதி - ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகம்‌ - மாவட்டத்தில்‌ பணிபுரியும்‌ - பணியாளர்கள்‌ -ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகத்திற்கு வருகை புரிவது - தொடர்பாக.


மாவட்டங்களில்‌ பணிபுரியும்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறை சார்ந்த அனைத்து நிலை பணியாளர்கள் (ஆசிரியர்கள்‌, காப்பாளர்கள்‌ மற்றும் அனைத்து பணியாளர்கள்‌) மற்றும்‌ சங்க நிர்வாகிகளும் எவ்வித அனுமதியும்‌ இன்றி ஆணையரகத்திற்கு வருகை புரிவதால்‌ ஆணையரகத்தில்‌ பணி நடைபெறுவதில்‌ தேக்க நிலை ஏற்படுகிறது.


எனவே, மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள்‌ ஆதிதிராவிடர்‌ நல ஆணையரக அழைப்பாணை இல்லாமல்‌ பிற காரணத்திற்க்காக ஆணையரகத்திற்கு வருகை புரிவதற்கு மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர் நல அலுவலர்களின்‌ அனுமதி பெற்ற பின்பே வருகை புரியுமாறு அறிவறுத்துமாறு கேட்‌டுக் கொள்ளப்படுகிறது.


எந்த வித முன்‌ அனுமதியும்‌ இன்றி ஆணையரகத்திற்கு மாவட்டப் பணியாளர்கள் வருகை புரிந்தால்‌ பணியாளர்களிடம்‌ விளக்கம்‌ கேட்குமாறு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்‌ நல அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இச்சுற்றறிக்கையை மாவட்டங்களில்‌ பணிபுரியும்‌ அனைத்து நிலை பணியாளர்‌களுக்கும்‌, சுற்றறிக்கைக்கு அனுப்புமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

ஒம்‌- சோ.மதுமதி,

ஆதிதிராவிடர்‌ நல ஆணையர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hi-Tech Lab : Revised Timetable

  உயர் தொழில்நுட்ப ஆய்வகம் : திருத்தப்பட்ட கால அட்டவணை - DSE செயல்முறைகள் , நாள் : 23-07-2025 Hi-Tech Lab : Revised Timetable - DSE Proceedi...