கரூர் துயர நிகழ்வு : ஒரு நபர் ஆணையம் விசாரிக்க தொடங்கியது
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று நடத்திய பிரசாரத்தில் 40 பேர் பலியானார்கள். பலர் மயக்கமடைந்தனர். இதையடுத்து அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.
விஜய் பிரசாரம் செய்த வேலுச்சாமிபுரத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது காவல்துறையினரிடம் சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார். மேலும் கள நிலவரம் குறித்து அவரிடம் காவலர்கள் எடுத்துரைத்தனர். இதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் அங்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அருணா ஜெகதீசன் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். அப்போது பலர் கதறி அழுதனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.