கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்லுளி மங்கன் : பெயர்க் காரணம்



கல்லுளி மங்கன் : பெயர்க் காரணம் 


 பொதுவாகவே நமது முன்னோர்கள் பின்பற்றிய பழக்கங்களுக்க பின்னால் துல்லியமான அறிவியல் காரணம் இருப்பது போல், இவர்களின் சொல்லும் பெரும் அர்த்தங்கள் பொதிந்தவையாக இருக்கும்.


பெரும்பாலானவர்களை திட்டும் போது சரியாக “கல்லுளி மங்கன்” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை அவைருமே அறிந்திருக்க கூடும்.அதற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?


என்ன அர்த்தம்?

உண்மையில் “கல்லுளி மங்கன்” என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் கூறப்படுகின்றது. கல்+உளி(உரி)+மங்கன் ஆரம்த்தில் இந்த வார்த்தை கல்லுரி மங்கன் என்று தான் குறிப்பிடப்பட்டது.


அதாவது உரிக்கவே முடியாத கல்லை உரிக்க வேண்டும் என்ற பிடிவாதகுணம் கொண்டவர்களை தான் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.


ஆனால் இது காலப்போக்கில் கல்லுளி மங்கன் என மாற்றம் பெற்றது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் கல்லை உளியால் செதுக்கி தான் சிலை செய்வார்கள்.


இப்படி கல்லை செதுக்கக்கூடிய கூர்மையான உளியையே மங்கச்செய்யும் அளவுக்கு ( உடைய செய்யும்) அழுத்தம் நிறைந்த கல் போன்ற குணம் கொண்டவர்கள் என்று அர்த்தம்.


அதாவது நீங்கள் எவ்வளவு போராடினாலும் சிலர் அவர்களின் அருத்துக்களில் இருந்து மாறவே மாட்டார்கள் மாறாக அவர்களுடன் போராடும் நீங்கள் தான் சோர்வடையும் நிலை ஏற்படும்.


இப்படிப்பட்டவர்களை தான் கல்லுளி மங்கன் என குறிப்பிட்டுள்ளனர். இனிமேல் இந்த வார்த்தையை சரியான இடத்தில் அர்தத்தை அறிந்து பயன்படுத்துங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...