கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2025

 

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 27.10.2025

கிழமை:- திங்கள்கிழமை


*திருக்குறள்*

பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல்

அதிகாரம்:- சிற்றினம் சேராமை



*குறள் : 456*


மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் 

கில்லைநன் றாகா வினை 


*விளக்க உரை:*


மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.


*பழமொழி :*


Time well spent is the life well lived. 


சரியாக பயன்படுத்திய நேரமே நன்றாக வாழ்ந்த வாழ்க்கை ஆகும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.


2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.



*பொன்மொழி :*


தோற்றத்தில் எளிமையும் இனிமையும் அழகிற்கு அத்தியாவசிய தேவை- எட்மண்ட் பர்க்.


*பொது அறிவு :*


01.உலகில் அதிக தூரம் பயணிக்கும் பறவை எது?



ஆர்க்டிக் ஆலா - Arctic tern


02.இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


டாக்டர். எஸ்.ஆர்.ரங்கநாதன் 

Dr. S. R. Ranganathan 


*English words :*



pampering – to take care of somebody very well and make them comfortable, ஒருவரை மிக நல்ல முறையில் பேணுதல், செல்லம் கொடுத்தல்


*தமிழ் இலக்கணம்:*


 வினைச்சொல் முக்கியமாகத் தெரிநிலை வினை, குறிப்புவினை என இருவகைப்படும்.

எ.கா. தொடுத்தாள், வந்தான், கரிகாலன்


*அறிவியல் களஞ்சியம் :*



 நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.


நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.


*அக்டோபர் 27*


*கே. ஆர். நாராயணன் அவர்களின் பிறந்தநாள்*


கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.


*நீதிக்கதை*



கதை :


ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 



பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். 



முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. 



எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. 


அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். 



இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 




நீதி :


எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்தி விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.


*இன்றைய செய்திகள்*


27.10.2025


⭐அரபிக் கடலில் 11 நாட்களாக சிக்கித் தவித்த 31 மீனவர்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை


⭐ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு-பிரதமர் மோடி பெருமிதம்


⭐போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀மகளிர் உலக கோப்பை: கடைசி லீக்கில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இங்கிலாந்து


*Today's Headlines*


⭐Indian Coast Guard rescues 31 fishermen stranded in Arabian Sea for 11 days 


⭐PM Modi proudly said GST tax cut boosts sales of goods .


⭐93 killed in Israeli strikes on Gaza in violation of ceasefire 


 *SPORTS NEWS* 


🏀Women's World Cup, England easily beat New Zealand in final league.


WD-40 Pidilite Multipurpose Spray, Lubricant, Rust Remover, Squeak Noise Remover, Stain Remover, And Cleaning Agent, 170G



Actual Price: Rs. 260

Offer Price : Rs. 214

Benefit : Rs. 46


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3J3L1Vz


தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2025

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...