நிலவு ஆய்வை முடித்துவிட்டு பூமி திரும்பியது ஆர்டெமிஸ் 2 குழு
Artemis 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் பத்திரமாக அமெரிக்காவில் தரையிறங்கினர்.
10 நாட்கள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஓரியான் விண்கலம் மூலம் வீரர்கள் பூமிக்கு திரும்பினர்.
இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு சான் டியாகோவுக்கு அருகே கடல் பகுதியில் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.
மொத்தம் 11 லட்சத்து 2 ஆயிரத்து 398 கி.மீ. தொலைவுக்கு விண்கலம் பயணம்.
பசிபிக் பெருங்கடலில் Splash Down முறையில் வந்திறங்கிய ஓரியன் விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்களை அமெரிக்க கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
10 நாள் பயணத்தை முடித்துத் திரும்பிய அவர்கள், முழு நலத்துடன் இருப்பதாக நாசா தெரிவிப்பு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.