இடுகைகள்

ஒய்வு வயது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தியது ஏன்? விளக்கம் வேண்டும் - தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு...

படம்
 அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து  செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை. அதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்தும் எதுவும் விளக்கவில்லை. கொரோனா காரணமாக      அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதாவது தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள நிலையில் 2020-21-ம் ஆண்டுகளில் ஓய்வுபெற இருந்த 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு த

ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை...

படம்
 🛑ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார். 🛑இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: '🛑'தமிழக அரசு புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக்கிடாத நிலையில், படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணி என்பது வெறும் கனவாகவே இருந்து வருகிறது. தற்போது, தமிழக அரசுப் பணியிடங்கள் அவுட் சோர்ஸிங் முலம் பணியமர்த்தப்படுவதாலும், மத்திய, மாநில அரசுகளின் பணியிடங்களில் வேறு மாநிலத்தவர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வருவதாலும் படித்த இளைஞர்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர். 🛑இந்நிலையில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தித் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. 🛑மேலும் இந்த அறிவிப்பானது, தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் மட்டுமே வழங்கிட முடியும். ஓய்வூதியப் பணப்பலன்கள் எதையும் வழங்கிட இயலாது எனும் நிலையிலேயே தமிழக அரசின் நிதி நிலைமை மிக

அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...

படம்
 அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59-இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், இதனை 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 2021 மே மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது வரம்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>> மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் தமது அதிகபட்ச சேவை காலத்தை 30 ஆண்டுகள் பூர்த்தி செய்தால், ஓய்வு பெறுவதற்கான திட்டம் உள்ளதா...? - நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அரசின் பதில் (தமிழாக்கத்துடன்..)...

படம்
தமிழாக்கம்...  இந்திய அரசு... தனிப்பட்ட, பொதுக் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்களின் அமைச்சகம்.. (தனிப்பட்ட மற்றும் பயிற்சித் துறை) மக்களவை குறிப்பிடப்படாத கேள்வி எண். 576 (16.09.2020 அன்று பதிலளிக்கப்பட வேண்டும்) ஊழியர்களின் ஓய்வு 576. திரு.எல்.எஸ். தேஜஸ்வி சூர்யா: (அ)மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் தமது அதிகபட்ச சேவை காலத்தை 30 ஆண்டுகள் பூர்த்தி செய்தால், ஓய்வு பெறுவதற்கான திட்டம் உள்ளதா...? (ஆ) அப்படியானால், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசாங்க அனைத்து ஊழியர்களுக்கும்  கட்டாயமா...? (இ) அப்படியானால்,  அனைத்து மாநில அரசுகள் தமது ஊழியர்களுக்கும்  இதை கட்டாயமாக்குமா...?  மற்றும் (ஈ) அரசாங்கத்திற்கு 30 வருட சேவையின் உச்சவரம்பு வரம்பை வைப்பதன் பின்னணி..? பதில் முதன்மை மந்திரி அலுவலகத்தில்  ஓய்வூதியங்கள் மற்றும் பொதுக் குறைகள் அமைச்சர் (டி.ஆர். ஜிதேந்திர சிங்) (அ): மத்திய அரசின் ஊழியர்களுக்கு மேலதிக வயதை மாற்றுவதற்கான திட்டம் எதுவும் இல்லை. மாநில அரசு ஊழியர்கள் அந்தந்த மாநில அரசுகளால் வடிவமைக்கப்பட்ட விதிகள் / விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (ஆ) முதல் (ஈ) வரை:  இக்கேள்விக

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...