கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

High Court லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
High Court லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Case seeking payment of gratuity in the new pension scheme - High Court order


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்கக் கோரிய வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவு


Case seeking payment of gratuity in the new pension scheme - High Court order


* தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ராஜா என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரி கொடுக்கப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


* புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்குவது பற்றி மூன்று வாரங்களுக்குள் அரசு கூடுதல் வழக்கறிஞர் எதிர்வாத உரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  நீதியரசர் வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.


No teacher should be harmed for giving advice to a student or giving minor punishments for indiscipline and bad behavior - Kerala High Court orders


ஆசிரியர்கள் பயந்து வேலை செய்யும் நிலை இருக்கக் கூடாது - கேரள உயர்நீதிமன்றம் 



ஒரு மாணவருக்கு அறிவுரை வழங்கியதாலோ அல்லது ஒழுக்கமின்மை மற்றும் மோசமான நடத்தைக்காக சிறிய தண்டனைகளை வழங்கினாலோ எந்த ஆசிரியரும் பாதிக்கப்படக்கூடாது - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு 


No teacher should be harmed for giving advice to a student or giving minor punishments for indiscipline and bad behavior - Kerala High Court orders


ஆசிரியர்கள் கையில் பிரம்பு வைத்திருக்கலாம் - பயன்படுத்துவதில் கவனம் அவசியம் - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு 


கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையை சேர்ந்த ஆசிரியர் சிபின்.  இவர் ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவரை கம்பால் அடித்துள்ளார். இதனால் இவருக்கு எதிராக அந்த மாணவரின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் விழிஞ்சம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


 இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சிபின் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் முன் ஜாமீன் அளித்து உத்தரவு பிறப்பித்தார்.


 அப்போது அவர் ஆசிரியரின் கையில் பிரம்பு வைத்திருக்கலாம். அதை எப்போதும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்களுடன் பிரம்பு இருப்பது மாணவர் சமூகத்தில் ஒரு உளவியல் விளைவை உருவாக்கும்.


 இதன் மூலம் மாணவர்களை சமூக தீமைகள் செய்வதிலிருந்து விலக்கி வைக்க முடியும். பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் போது அல்லது ஒரு மாணவனின் ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பாக எந்த தீமையும் இல்லாமல் ஆசிரியர் தாக்கினால் அதற்காக அவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.


 கல்வி முறையை வலுப்படுத்தவும், நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர் சமூகத்தின் நலன்களை பாதுகாக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கை.


 ஒரு மாணவருக்கு அறிவுரை வழங்கியதாலோ அல்லது ஒழுக்கமின்மை மற்றும் மோசமான நடத்தைக்காக சிறிய தண்டனைகளை வழங்கினாலோ எந்த ஆசிரியரும் பாதிக்கப்படக்கூடாது.


 கிள்ளுதல், முறைத்தல், அடித்தல், குத்துதல் போன்ற புகாருடன் காவல்துறையை சில பெற்றோர்கள் அணுகுவர். இது போன்ற புகார்கள் பெறப்பட்டால், தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி முதற்கட்ட விசாரணை போலீஸ் அதிகாரிகள் நடத்த வேண்டும். இது போன்ற நிலையில் எந்த ஆசிரியரையும் கைது செய்யக்கூடாது.


 சிறிய செயல்களுக்கு கூட வழக்கு தொடுப்பதில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள் நம் சமூகத்தில் நிறைய உள்ளனர். இது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆசிரியர்கள் நமது சமூகத்தின் போற்றப்படாத ஹீரோக்கள். அவர்கள் நமது எதிர்கால தலைமுறையின் மனம், இதயம் மற்றும் ஆன்மாவை வடிவமைக்கின்றனர். 


எனவே ஆசிரியர்களின் மன உறுதியைக் குறைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது.


 இது தொடர்பான ஒரு சுற்றறிக்கையை டிஜிபி வெளியிட வேண்டும். மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்குள் ஆயுதங்களை பயன்படுத்துவது, போதைப் பொருள் மற்றும் மது அருந்துவது பற்றிய செய்தி அறிக்கைகள் அதிகமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அத்தகைய உத்தரவு அவசியம் என்று அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.





பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு கம்பு வைத்திருக்க வேண்டும் - கேரள ஐகோர்ட் கருத்து


``மாணவர்களின் எதிர்கால நலனுக்காக சின்ன தண்டனை கொடுத்தால் கிரிமினல் வழக்கு வந்துவிடுமோ என பயந்துகொண்டு ஆசிரியர்கள் வேலை செய்யவேண்டிய நிலை இருக்கக்கூடாது...'' - ஐகோர்ட் நீதிபதி கருத்து



கேரள உயர்நீதிமன்றம்


கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரால், விழிஞ்ஞம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


அந்த வழக்கில் முன் ஜாமின் பெறுவதற்காக ஆசிரியர் கேரள ஐகோர்ட்டில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:


"பள்ளி மாணவர்கள் ஒழுக்கமுடன் இருப்பதற்காக ஆசிரியர்கள் கையில் சிறிய கம்பு வைத்திருக்க வேண்டும். கம்பை உபயோகிக்காமல் அதை ஆசிரியர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்தாலே மாணவர்களிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.


ஆசிரியர் மாணவர்கள்

மாணவர்களின் எதிர்கால நலனுக்காக சின்ன தண்டனை கொடுத்தால் கிரிமினல் வழக்கு வந்துவிடுமோ என பயந்துகொண்டு ஆசிரியர்கள் வேலை செய்யவேண்டிய நிலை இருக்கக்கூடாது. யாராவது புகார் அளித்தார்கள் என்பதற்காக போலீஸார் உடனே வழக்குப்பதிவு செய்யக்கூடாது. இளம் தலைமுறையினரின் செயல்பாடு கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


இளம் தலைமுறையில் சிலர் போதை பொருள்களுக்கு அடிமைகளாக இருப்பதை பார்க்க முடிகிறது. முன்பு இப்படி ஒன்றும் இல்லை. ஆசிரியர்களை மிரட்டி பயமுறுத்துவது, ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செய்திகள் இப்போது வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புதிய தலைமுறைகளின் சிற்பிகள் தான் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வேண்டும் " என ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


Cinema songs should not be allowed in temples - High Court

 

 

கோயில்களில் சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது -  உயர்நீதிமன்றம்


Cinema songs should not be allowed in temples - High Court


கோவில்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் பொழுது பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும், சினிமா பாடல்கள் பாட அனுமதிக்க கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்


கோவில்களில் நடைபெறும் இசை கச்சேரியில் சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


புதுச்சேரி திருமலைராயன்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற இசை கச்சேரியில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "கோவில்களில் இசை கச்சேரிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். கோவில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சினிமா பாடல்களை பாட அனுமதிக்க கூடாது" என்று திட்டவட்டமாக கூறியது.


இதையடுத்து, கோவில்களில் சினிமா பாடல்கள் தவிர பிற பாடல்கள் பாடப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கவனிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


Rs. 25,000 fine and sentenced to one week in jail to CEO & DEO who do not pay pension benefits - Madurai Bench of the High Court orders immediate surrender before the Registrar

 


ஓய்வூதிய பணப் பலன்களை வழங்காத முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம், ஒரு வாரம் சிறை தண்டனை - பதிவாளர் முன் உடனடியாக சரண்டர் ஆக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு


Chief Education Officer and District Education Officers who do not pay pension benefits will be fined Rs. 25,000 and sentenced to one week in jail - Madurai Bench of the High Court orders immediate surrender before the Registrar


அரசுப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதிய பண பலன்கள் வழங்காத விவகாரம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு


அரசுப் பள்ளியில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பண பலன்கள் வழங்காத கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு வார சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.



அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்கள்


கன்னியாகுமரி மாவட்டம் சேர்ந்த பொன்னம்மாள், ஸ்ரீதேவி, மேரி மகள் செல்வக்கிளி தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய பொன்னம்மாள், ஆரல் பெருமாள் புரம் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஸ்ரீதேவி, மார்த்தாண்டம் கொடுங்குளம் அரசு பள்ளியில் பணியாற்றிய செல்வக்கிளி ஆகியோர் தூய்மை பணியாளராக 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி உள்ளனர். இவர்களுக்கு அப்போது 105 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 2011 ஆண்டு ஓய்வு பெற்றுள்ளனர்.


ஓய்வூதிய பண பலன்களை வழங்காத விவகாரம்:

இந்நிலையில் தங்களுக்கு அரசு விதிமுறைகளின் படி பணி வரன்முறை செய்து தங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பண பலன்கள் உள்ளிட்ட ஓய்வூதியத் தொகை வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனுவை அப்பொழுது விசாரணை செய்த நீதிபதி விக்டோரியா கவுரி தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பணப் பலன்களை 12 வாரங்களுக்குள் வழங்க உத்தரவு பிறப்பித்து இருந்தார்.


இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மூன்று பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.



இந்த வழக்கு இன்று நீதிபதி விக்டோரியா கௌரி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தரப்பில் மனுதாரரின் கோரிக்கை பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இதனைப் பார்த்து கோபம் அடைந்த நீதிபதி விக்டோரியா கௌரி, இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.


மேலும் சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இது குறித்து தெளிவான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவுள்ள நிலையில் இதுவரை உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பால தண்டாயுதபாணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.


அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்டக் கல்வி அலுவலர் மோகன் ஆகியோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வாரம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.


அதேபோல் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை இரண்டு வாரங்களில் நிறைவேற்றி அதன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி உடனடியாக நீதிமன்றப் பதிவாளர் முன் சரண்டர் ஆக வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.



'Because she is a woman, everything she says is not true' - High Court judge in sexual harassment case


 'பெண் என்பதால், அவர் கூறும் அனைத்தும் உண்மை ஆகாது' - பாலியல் துன்புறுத்தல் புகார் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து


'Because she is a woman, everything she says is not true' - High Court judge in sexual harassment case


பெண்ணின் கூற்று எப்போதும் உண்மையைப் பிரதிபலிக்கும் எனக் கருதலாகாது: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆணுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


முன்னாள் பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கும் போது நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.


கேரள உயர்நீதிமன்றம், குற்றவியல் வழக்கை விசாரிப்பது என்பது புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கை விசாரிப்பதாகும் என்று கூறியது. 


சுருக்கமாக

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இருவரின் கூற்றுகளையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறது.

தவறான குற்றச்சாட்டுகள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும், அத்தகைய புகார்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்படுகிறது.


பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளில், புகார்தாரர் பெண் சொல்வதெல்லாம் "சரியான உண்மை" என்று எந்த அனுமானமும் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏனெனில், இப்போதெல்லாம் இதுபோன்ற விஷயங்களில் அப்பாவி மக்களை சிக்க வைக்கும் போக்கு உள்ளது.


முன்னாள் பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கும் போது நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.


இந்த வழக்கில், சரியாக வேலை செய்யாததற்காக அந்தப் பெண் தன்னை வேலையிலிருந்து நீக்கிய பிறகு, அவரை வாய்மொழியாகத் திட்டியதாகவும், மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த ஆரம்பப் புகாரை காவல்துறை விசாரிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது.


குற்றவியல் வழக்கின் விசாரணை என்பது புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கை விசாரிப்பதாகும் என்று நீதிமன்றம் கூறியது.


"புகார்தாரர் மட்டும் தொடுத்துள்ள வழக்கில் ஒருதலைப்பட்ச விசாரணை நடத்த முடியாது. புகார்தாரர் ஒரு பெண் என்பதால், எல்லா வழக்குகளிலும் அவரது கூற்றுகள் உண்மை என்று எந்த ஊகமும் இல்லை, மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கைக் கருத்தில் கொள்ளாமல் அவரது அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை தொடரலாம்.


"இப்போதெல்லாம், பாலியல் வன்கொடுமை தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளுடன் குற்றவியல் வழக்குகளில் அப்பாவி மக்களை சிக்க வைக்கும் போக்கு உள்ளது" என்று பிப்ரவரி 24 தேதியிட்ட அதன் உத்தரவில் அது கூறியது.



ஆண்கள் மீதான அத்தகைய பெண்களின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று காவல்துறை கண்டறிந்தால், சட்டம் அனுமதிக்கும் விதமாக, "புகார் அளித்தவர்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும்" என்று நீதிமன்றம் மேலும் கூறியது.


தவறான குற்றச்சாட்டுகளால் ஒரு குடிமகனுக்கு ஏற்படும் சேதங்களை பணம் செலுத்துவதன் மூலம் மட்டும் ஈடுசெய்ய முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.


"ஒரு பொய் புகாரால் அவரது நேர்மை, சமூகத்தில் அந்தஸ்து, நற்பெயர் போன்றவை அழிக்கப்படலாம். விசாரணை கட்டத்திலேயே குற்ற வழக்குகளில் உண்மையைக் கண்டறிய காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.


"எனவே, குற்றவியல் வழக்குகளில் இறுதி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு முன்பு, பதரிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுப்பது காவல்துறையின் கடமையாகும்" என்று நீதிமன்றம் கூறியது.


இந்த வழக்கில், தான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர், பாலியல் நோக்கத்துடன் தனது கைகளைப் பிடித்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.


மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர், அந்தப் பெண்ணின் வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் மிரட்டல்கள் குறித்து போலீசில் புகார் அளித்தார், மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, அவர் பேசியவற்றின் ஆடியோ பதிவு அடங்கிய பென் டிரைவையும் கொடுத்தார்.


குற்றம் சாட்டப்பட்டவரின் புகாரையும் விசாரணை அதிகாரி (IO) விசாரித்திருக்க வேண்டிய பொருத்தமான வழக்கு இது என்று நீதிமன்றம் கூறியது.


குற்றம் சாட்டப்பட்டவர் பென் டிரைவை விசாரணை அதிகாரி முன் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது, மேலும் அது குறித்து விசாரிக்க அதிகாரிக்கு உத்தரவிட்டது.


"... மனுதாரர் (குற்றம் சாட்டப்பட்டவர்) மீது உண்மையான புகார்தாரர் (பெண்) தவறான வழக்கை சமர்ப்பித்திருப்பது கண்டறியப்பட்டால், சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது.


குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்காக விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட்டால், அதே தொகைக்கு தலா இரண்டு  ஜாமீன்களுடன் ரூ.50,000 தொகைக்கான பிணையை நிறைவேற்றி ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் அது கூறியது.


தேவைப்படும் போதெல்லாம் ஐஓ முன் ஆஜராக வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், வழக்கில் சாட்சிகளை பாதிக்கவோ அல்லது மிரட்டவோ கூடாது என்பது பிற ஜாமீன் நிபந்தனைகளில் அடங்கும்.


தான் பணிபுரிந்த நிறுவனத்தின் மேலாளர், பாலியல் நோக்கத்துடன் கைகளை பிடித்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, சரியாக வேலை செய்யாததற்காக அந்த பெண் தன்னை வேலையில் இருந்து நீக்கிய பிறகு, தன்னை திட்டியதாகவும் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் புகார் அளித்தார்.


இந்த வழக்கு, கேரள நீதிமன்றத்தின் நீதிபதி பி.வி. குன்ஹி கிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்னை திட்டி பேசிய ஆடியோ பதிவு அடங்கிய பென் டிரைவை குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து பொய்யாக வழக்கு போடப்பட்டிருப்பதாக வாதாடினார். இதனை விசாரித்த நீதிபதி, ‘குற்றவியல் வழக்கின் விசாரணை என்பது புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கை விசாரிப்பதாகும். புகார்தாரர் மட்டும் தொடுத்துள்ள வழக்கில் ஒருதலைப்பட்ச விசாரணை நடத்த முடியாது. புகார்தாரர் ஒரு பெண் என்பதால், எல்லா வழக்குகளிலும் அவரது பதிப்புகள் உண்மை என்று எந்த ஊகமும் இல்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கைக் கருத்தில் கொள்ளாமல் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்.


இப்போதெல்லாம், பாலியல் வன்கொடுமை தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளுடன், குற்றவியல் வழக்குகளில் அப்பாவி மக்களை சிக்க வைக்கும் போக்கு உள்ளது. ஆண்கள் மீதான அத்தகைய பெண்களின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று காவல்துறை கண்டறிந்தால், புகார் அளித்தவர்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். தவறான குற்றச்சாட்டுகளால் ஒரு குடிமகனுக்கு ஏற்படும் சேதங்களை பணம் செலுத்துவதன் மூலம் மட்டும் ஈடுசெய்ய முடியாது. ஒரு பொய்யான புகாரால் அவரது நேர்மை, சமூகத்தில் அந்தஸ்து, நற்பெயர் போன்றவை அழிக்கப்படலாம். விசாரணை கட்டத்திலேயே குற்ற வழக்குகளில் உண்மையைக் கண்டறிய காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.


எனவே, குற்றவியல் வழக்குகளில் இறுதி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு முன்பு, பதரிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுப்பது காவல்துறையின் கடமையாகும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது உண்மையான புகார்தாரர் தவறான வழக்கை சமர்ப்பித்திருப்பது கண்டறியப்பட்டால், சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்காக அதிகாரி முன் ஆஜராக வேண்டும். அவர் கைது செய்யப்பட்டால், அதே தொகைக்கு தலா இரண்டு ஜாமீன்களுடன் ரூ.50,000 தொகைக்கான பிணையை நிறைவேற்றி ஜாமீனில் விடுவிக்கப்படுவார்” என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட மேலாளருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.



Woman's story not always gospel truth: Court gives bail to man in harassment case

The observations by Justice P V Kunhikrishnan came while granting anticipatory bail to a man accused of sexually harassing a former woman employee.


In Short

Court grants anticipatory bail to accused in sexual harassment case

Police must investigate both complainant's and accused's claims, says court

False allegations can harm reputation, actions against such complainants allowed

The Kerala High Court has held that in criminal cases, including sexual crimes, there is no presumption that everything the complainant woman says is "gospel truth" as nowadays there is a tendency to implicate innocent people in such matters.


The observations by Justice P V Kunhikrishnan came while granting anticipatory bail to a man accused of sexually harassing a former woman employee.


The high court said that in the instant case, the police did not investigate the accused's initial complaint that the woman had verbally abused and made threats against him after he fired her for not working properly.


The court said that investigation of a criminal case means probing the case of the complainant and the accused.


"There cannot be any unilateral investigation of the case put up by the complainant alone. Merely because the de facto complainant is a lady, there is no presumption that, in all cases, her versions are gospel truth, and the police can proceed based on her statement without considering the case of the accused.


"Nowadays, there is a tendency to implicate innocent people in criminal cases with serious allegations of sexual assault," it said in its order dated February 24.


The court further said that if the police find that the allegations of such women against men are false, "they can very well take action against the complainants also" as the law permits it.


The court also said that the damages caused to a citizen because of false implication cannot be compensated by payment of money alone.


"His integrity, position in the society, reputation, etc, can be ruined by a single false complaint. The police authorities should be alert and vigilant, to find the truth in criminal cases during the investigation stage itself.


"Hence, it is the duty of the police to separate the chaff from the grain, before submitting final reports in criminal cases," it said.


In the instant case, the woman had alleged that the accused, who was the manager of a company where she worked, grabbed her arms with sexual intent.


On the other hand, the accused had complained to the police about the woman's verbal abuse and threats and also gave a pen drive containing an audio recording of what she had said, according to the court order.


The court said it was a fit case where the investigating officer (IO) ought to have probed the accused's complaint also.


It directed the accused to produce the pen drive before the IO and ordered the officer to investigate the same.


"...if the de facto complainant (woman) is found to have submitted a false case against the petitioner (accused), appropriate action, in accordance with law, should be taken," the court said.


It directed the accused to appear before the IO for interrogation and said that if he was arrested, then he shall be released on bail on executing a bond for a sum of Rs 50,000 with two solvent sureties each for the like sum.


The other bail conditions included appearing before the IO as and when required, cooperating with the probe and not to influence or intimidate witnesses in the case


High Court orders government to state stand on removal of caste names from school and college names



 பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


High Court orders government to state stand on removal of caste names from school and college names


பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற பரிந்துரைகளை பெற்றது. அவ்வாறு இருக்கும் போது, பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்?” எனக்கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி ஒருவார கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.


சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் சாதிப் பெயருடன் உள்ள நிலையில், அங்கு ஆசிரியர் "சாதிகள் இல்லையடி பாப்பா" என பாடம் நடத்துவது பெரிய முரண் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இதேபோன்ற வழக்கில் மதுரை அமர்வு, சாதி சங்கங்கள் குறிப்பிட்ட சாதியினரின் நலனுக்கானது என்ற சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சங்கங்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


`எந்த சங்கங்களும் விதிகளை திருத்தியதாக தெரியவில்லை’ எனத் தெரிவித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, விதிகளை திருத்தாத சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மேலும், சில அரசு பள்ளிகளில் கூட சாதிப் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.


இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் பள்ளிக்கு சூட்டப்பட்டிருக்கும் என விளக்கமளித்தார்.


அப்படி இருந்தாலும், சாதிப் பெயர் சேர்க்கப்படக் கூடாது எனக் கூறிய நீதிபதி, பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் சங்கங்களும் கூட சாதிப் பெயர்களை தாங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.


மேலும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.


Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பி. பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.


தமிழ்நாடு அரசுக்கு எதிர்வாத உரை அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.



Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு


Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


▪️ அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்த இருந்த போராட்டத்திற்கு எதிராக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது


▪️ அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்


▪️ இரு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்





HC Madurai Branch orders Tamil Nadu government to file reply within three weeks in case of gratuity claim by employee who completes service in CPS


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கில் மூன்று வாரங்களில் தமிழ்நாடு அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு


High Court Madurai Branch orders Tamil Nadu government to file reply within three weeks in case of gratuity claim by employee who completes service in Contributory Pension Scheme

 

தஞ்சாவூர் மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி  புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ராஜா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற எனக்கு  ஈட்டிய விடுப்பு,  சிபிஎஸ் வைப்பு நிதி தொகை மட்டுமே ஓய்வின் போது வழங்கினர். எனது பணி காலத்திற்கான பணிக்கொடை வழங்கவில்லை. அதனால் தமிழ்நாடு அரசு நிதித் துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர்களிடம் பணிக்கொடை கோரி விண்ணப்பம் செய்தும் பதில் ஏதும் இல்லாததால், பணிக்கொடை வழங்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரசின் பதில் அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் வழங்க நீதியரசர் திரு. பட்டு தேவானந்த் அவர்கள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.


One week jail term and ₹5000 fine for CEO - HC orders


முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் -  உயர்நீதிமன்றம் உத்தரவு


One week jail term and ₹5000 fine for Chief Education Officer - High Court orders


நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு



நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட முன்னால் முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுவுக்கு ஒரு வார கால சிறை தண்டனை மற்றும் ₹5000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு



பணி நிரந்தரம் தொடர்பாக தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என நீதிபதி விக்டோரியா கெளரி அவர்கள் உத்தரவு


நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக் கல்வித் துறை செயலர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசுக்கு ஒரு வார சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஆசிரியை ஹெலினி ரோனிகா ஜோசுபெல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உடற்க்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தேன்.


இந்த பள்ளியில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர் பணியிட மாற்றம் செய்து சென்று விட்டதால் காலியாக இருந்த உடல் கல்வி ஆசிரியர் பணியை எனக்கு வழங்க பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் பல காரணங்களை கூறி என்னை பணி நிரந்தரம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தேன். வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் எனக்கு பணி நிரந்தரம் வழங்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.


ஆனால் உத்தரவு பிறப்பித்து இதுவரை நீதிமன்ற உத்தரவின் படி எனக்கு பணி வழங்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு இன்று நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசு மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கையின் கீழ் கல்வி அதிகாரிக்கு ஒரு வார சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


மேலும் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றி பிப்ரவரி 26 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.







Lack of attendance - denying permission to write exam - High Court dismissed the appeal

 

 வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து மாணவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.


The Madras High Court dismissed the appeal filed by the student against the order denying him permission to write the university examination due to lack of attendance.


வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும்.


கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது எனப் பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து



வருகைப்பற்றாக்குறையை மன்னிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது, 


இது வழக்கமாக வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை கேலி செய்வதாக இருக்கும் என்று கூறுகிறது. 


வருகைப்பதிவு குறைபாட்டிற்கு மன்னிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகிய மாணவருக்கு நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் மறுத்துவிட்டது. 

அவரை "இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்பிய துரதிர்ஷ்டவசமான மாணவர்" என்று நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி சி குமரப்பன் பெஞ்ச் குறிப்பிட்டது, 

நீதிமன்றம் அந்த மாணவருக்கு அனுதாபம் காட்டினால், அது தவறான அனுதாபமாகவும், வகுப்புகளுக்கு தொடர்ந்து வரும் மாணவர்களை கேலி செய்வதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டது. நீதிமன்றங்கள் கல்வி விஷயங்களில் தலையிட முடியாது என்றும், 

இதுபோன்ற விஷயங்களை கல்வியாளர்களின் அறிவுக்கே விட்டுவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 

“கல்வி விஷயங்களில் இந்த நீதிமன்றம் தலையிடாது, அதை கல்வியாளர்களின் அறிவுக்கே விட்டுவிட்டது என்று பலமுறை கூறப்பட்டு வருகிறது.

 UGC ஒழுங்குமுறைக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வருகைப்பதிவு தேவைப்படுகிறது மற்றும் ஒரு மாணவர் அந்த சதவீத வருகைப் பதிவைக் கொண்டிருக்கவில்லை என்றால், மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்பது மட்டுமே முடிவு. 

பல்கலைக்கழகத்தின் கற்றறிந்த ஆலோசகர் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த நீதிமன்றம் அத்தகைய மாணவர்களை அனுதாபத்தைத் தேர்வுசெய்தால், அது தவறான அனுதாபமாக மட்டுமே இருக்கும், மேலும் அது வகுப்புகளுக்குத் தவறாமல் கலந்துகொள்ளும் மாணவர்களை கேலி செய்வதாக இருக்கும்” என்று நீதிமன்றம் கூறியது.


மன்னிக்கத்தக்க 65% வருகைப்பதிவு மாணவருக்கு இல்லாததால், பல்கலைக்கழகம் தேர்வு எழுத அனுமதி மறுத்து, அவரைப் பட்டியலில் இருந்து நீக்கியதாகக் கூறி தனி நீதிபதி நிவாரணத்தை மறுத்துவிட்டார். 

தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததால், மாணவர் மேல்முறையீடு செய்தார். இதுபோன்ற வழக்குகளில் சட்டத்தின் ஆட்சியை கடுமையாகப் பயன்படுத்தக் கூடாது என்று வாதிடுவதற்கு மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை நம்பியிருந்தாலும், அந்த வழக்கின் விசித்திரமான உண்மைகளைக் கருத்தில் கொண்டு இந்த அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதை முன்னுதாரணமாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. அந்த மாணவன் தேர்வு எழுதுவதற்கு போதுமான வருகைப் பதிவு இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 

யுஜிசி விதிமுறைகளின்படி, மாணவர் 75% வருகையைப் பெற வேண்டும் என்றும், மன்னிக்கத்தக்க 10% வரம்பையும் வழங்கியது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதாவது, ஒரு மாணவர் தேர்வுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 65% வருகைப் பதிவு பெற்றிருக்க வேண்டும். தற்போதைய வழக்கில், 10% மன்னிக்கக்கூடிய வரம்பைச் சேர்த்த பிறகும், மாணவர் 67% வருகையைப் பெறுவார், இது 75% வருகையை விட 8% குறைவாக இருக்கும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் எந்தவித குறைபாடும் இல்லை என கருதி, நீதிமன்றம் தலையிட விரும்பாமல், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 

எவ்வாறாயினும், தேவையான கட்டணத்தை செலுத்துவதன் மூலம் மாணவர் படிப்பை மீண்டும் செய்யத் தயாராக இருக்கிறார், பல்கலைக்கழகம் மாணவர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, மாணவர் தொடர்ச்சியான படிப்பிற்கான நல்ல சூழ்நிலையைப் பெறுவதை உறுதிசெய்ய முடியும் என்று நீதிமன்றம் மேலும் கூறியது. 

மேல்முறையீட்டாளருக்கான வழக்குரைஞர்: திரு. எஸ்.சிலம்பனன், , திரு.கே.வசந்தநாயகனன் மூத்த வழக்கறிஞர் 

பிரதிவாதிக்கான வழக்கறிஞர்: திருமதி. பி.ஆர். உமாமகேஸ்வரி 

வழக்கு தலைப்பு: கே. ஷ்ரிஷ் எதிராக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் 

வழக்கு எண்: W.A.No.3487 of 2024 


தீர்ப்பைப் படிக்க/பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்



Madras HC Declines Student's Plea To Condone Attendance Shortage, Says It Would Amount To Mocking Students Who Attend Classes Regularly


The Madras High Court recently refused relief to a student who had approached the court seeking condonation of deficiency of attendance.


Calling him an “unfortunate student who wanted to ride two horses” the bench of Justice R Subramanian and Justice C Kumarappan noted that if the court chose to sympathize with the student, it would only be misplaced sympathy and amount to mocking students who attend the classes regularly. The court also added that the courts could not interfere in academic matters and had to leave such matters to the wisdom of academicians.


“It has been repeatedly held that in academic matters this Court will not interfere and leave it to the wisdom of the academicians. The UGC Regulation requires a particular percentage of attendance and if a student does not possess that percentage of attendance, the only result could be the students cannot appear for the examination. As rightly pointed out by the learned counsel for the University if this Court chooses to sympathize with such students, it will be only mis-placed sympathy and it would amount to mocking of students who attended the classes regularly,” the court said.


The appellant K Shrish who was pursuing II year B.Com had approached the court after the University refused to permit him to write examinations citing shortage of attendance which was beyond the condonable 10%. He had approached the court seeking directions to the Controller of Examination, The Dean, and the Head of the Department of SRM Institute of Science and Technology to permit him to write the 3rd-semester examination and to permit him to attend classes for the academic year 2024-25.


The single judge had refused relief stating that since the student did not have the condonable 65% attendance, the University had rightly refused permission to write exams and removed him from the rolls. Since the single judge, dismissed the plea, the student filed the appeal.


Though the student relied upon an earlier decision of the Madras High Court to argue that the rule of law should not be applied rigidly in such cases, the court held that the observation was made taking into consideration the peculiar facts of that case and could not be treated as a precedent.


The court noted that the student did not have sufficient attendance enabling him to write the examinations. The court noted that as per the UGC regulation, the student required 75% attendance and also provided a condonable 10% limit. This meant that a student should have had minimum 65% attendance to enable him to appear for examinations. In the present case, the court noted that even after addinga 10% condonable limit, the student would get only 67% attendance, which would still be 8% less than the required attendance of 75%.


Thus, finding no infirmity in the order of the single judge, the court was not inclined to interfere and dismissed the appeal. However, the court added that of the student is willing to redo the course by paying the required fee, the University can take the student back into the rolls and ensure that the student gets a good ambiance for continuing studies.


Counsel for Appellant: Mr. S. Silambanan, Senior Advocate for Mr. K. Vasanthanayagan


Counsel for Respondent: Mrs. P. R. Umamaheswari


Case Title: K. Shrish v The Controller Of Examination


Citation: 2025 LiveLaw (Mad) 64


Case No: W.A.No.3487 of 2024


Click Here To Read/Download The Judgment



Time restriction for minors below 16 years of age to watch movies - Telengana High Court orders



16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் திரைப்படம் பார்க்க நேரக் கட்டுப்பாடு - தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு


Time restriction for minors below 16 years of age to watch movies - Telengana High Court orders


*🔹🔸தெலங்கானாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு காலை 11 மணிக்கு முன்பும் இரவு 11 மணிக்கு பின்பும் திரையரங்கிற்குள் அனுமதி இல்லை..!


*▪️ தெலங்கானா: 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு!


*அதிகாலை, நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து.



Even words or actions that cause discomfort to women in the workplace are sexual harassment – ​​Madras High Court explains

 


 பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்


Even words or actions that cause discomfort to women in the workplace are sexual harassment – ​​Madras High Court explains


 சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரிவு அதிகாரிக்கு எதிராக அங்கு வேலை செய்யும் 3 பெண்கள் பாலியல் தொல்லை புகார்


 புகாரை விசாரித்த அந்நிறுவனத்தின் விசாகா குழு, அந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக்கூடாது என பரிந்துரைத்தது


 விசாகா குழுவின் பரிந்துரை ஒருதலைப்பட்சமானது என அந்த அதிகாரி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு


 குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாகா குழு பரிந்துரையை நீதிமன்றம் ரத்து செய்தது


 தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் வழக்கு. புகாரளித்த பெண்களின் இருக்கைக்கு பின்னால் அந்த அதிகாரி நிற்பதாகவும், உடல் அளவைக் கேட்டதாகவும் நிறுவனம் தரப்பில் வாதம்


 உயரதிகாரி என்ற முறையில் இருக்கைக்கு பின்னால் நின்று கண்காணித்தேன். பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கம் இல்லை என அதிகாரி தரப்பு வாதம்


 பணியிடத்தில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் மற்றும் செயல்களும் பாலியல் துன்புறுத்தல்தான் என உத்தரவிட்ட நீதிபதி மஞ்சுளா, விசாகா குழு பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பு


NHIS - Madurai teacher ordered by High Court to pay medical expenses

 

 மதுரை ஆசிரியைக்கு மருத்துவ செலவு தொகையை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு


NHIS - Madurai teacher ordered by High Court to pay medical expenses


தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மதுரை ஆசிரியைக்கு மருத்துவ செலவு தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாநகராட்சி பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் தனலெட்சுமி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கு ரூ.1,22,254 செலவானது. இந்த தொகையை அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் திரும்பக் கோரி மனு அளித்தார். அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதால் சிகிச்சைக்கான செலவு தொகையை திரும்ப வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தனலெட்சுமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.


இதனை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு மருத்துவ செலவு தொகை வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு 12 வாரத்தில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு 25.3.2019-ல் உத்தரவிட்டார். அதன்பிறகும் பணம் வழங்கப்படாத நிலையில் மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட அளவிலான குழு பரிந்துரையின் பேரில் 4 வாரத்தில் பணம் வழங்க வேண்டும் என 28.11.2019ல் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி மாநில நிதித்துறை செயலாளர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: ''அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு விஷயத்தில் மாவட்ட அளவிலான குழுவின் முடிவு இறுதியாது. இந்தக் குழுவில் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்ளனர். மருத்துவ செலவு தொகை வழங்குவதில் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஆட்சேபம் இருந்தால் குழுவிடம் தான் தெரிவிக்க வேண்டும்.


மாவட்ட அளவிலான குழு மருத்துவ சிகிச்சைக்கான தொகையை வழங்க உத்தரவிட்டால் அந்தப் பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியாது. அவ்வாறு மறுக்கும் அதிகாரம் காப்பீட்டு நிறுவனத்துக்கு கிடையாது. மாவட்ட குழுவில் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி இருப்பதால் மாவட்ட குழுவின் முடிவுக்கு மாறாக வேறு முடிவெடுக்க முடியாது.


இந்த வழக்கில் மாவட்ட குழுவின் பரிந்துரையில் பிரச்சினை இருந்தால் காப்பீட்டு நிறுவனம் மாநில அளவிலான குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. எனவே மாவட்ட குழு 25.9.2019-ல் எடுத்த இறுதியானது. அதன்படி ஆசிரியை தனலெட்சுமிக்கு 8 வாரத்தில் மருத்துவ செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தவறினால் 7 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.'' இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Commenting on a woman's body is also a sexual offense - Kerala High Court

 


பெண்ணின் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே - கேரள உயர்நீதிமன்றம்


Commenting on a woman's body is also a sexual offense - Kerala High Court


பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரிடம் அவரது உடலமைப்பு குறித்து தவறாகப் பேசியுள்ளார்.


2013 முதல் தன்னை தவறாகப் பேசி வருவதாகவும் 2016-17 ஆம் ஆண்டில் தவறான முறையில் குறுஞ்செய்தி மற்றும் குரல் பதிவுகளை அனுப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதையடுத்து அவர் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த நபர் தொடர்ந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பதருதீன் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


"ஒரு பெண்ணின் உடலமைப்பு 'நன்றாக இருக்கிறது' என்று கூறினாலும் அதுவும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும். 


எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது பாலியல் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சரியே" என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவையும் ரத்து செய்தார்.


Husband should be given leave to look after wife during maternity - High Court


மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்


Husband should be given leave to look after wife during maternity - High Court


மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை (Paternity Leave) வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி கர்ப்பமாக உள்ளார். பிரசவ காலத்தில் மனைவியுடன் இருப்பதற்காக எனக்கு மே 1 முதல் 90 நாட்கள் விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி எனக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டது.


இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், என் விடுமுறை விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மே 1 முதல் 30 நாள் எனக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மே 31-ல் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் வழியாக தகவல் அனுப்பினேன். இதனை ஏற்க மறுத்து நடத்தை விதிகளை மீறியதாக எனக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியாகவுரி பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க தந்தைக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பேசப்படுகிறது. குழந்தை பிறக்கும்போது தந்தையும் உடனிருப்பது அவசியமானது. குழந்தை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு.


பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாயுடன் தந்தைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கப்படுகிறது. இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் தந்தைக்கு விடுமுறை அளிப்பதற்கான தனிச் சட்டம் இல்லை. இருப்பினும் மத்திய குடிமைப் பணிகள் (விடுமுறை) விதியில் தந்தையருக்கான விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் பொறுப்புள்ள தந்தையாக செயல்பட்டுள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



 ஆண்களுக்கு அவர்களின் மனைவி பிரசவத்திற்கு முன் அல்லது பின் 15 நாட்கள் உண்டு


அரசு கடித எண் 11618/ ஜி2/ 2022, நாள் 15-12-2022 - கல்லூரி கல்வித்துறை



>>> தந்தையர் விடுப்பு - தகவல் அறியும் உரிமை சட்ட கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Paternity Leave - மனைவியின் பிரசவத்திற்கு ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு தந்தைவழி விடுப்பு - RTI Reply


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திரு.கே. ஜீவா என்பார் கோரப்பட்ட தகவல்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. (08.09.2023)


1. தந்தைவழி விடுப்பு இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை கொண்ட அனைத்து ஆண் பணியாளர்களுக்கு (தகுதிகாண் பருவத்தினர் உட்பட) 15 நாட்களுக்கு விடுப்பு வழங்கத் தகுதியுள்ள ஒரு அதிகாரியால் தந்தைவழி விடுப்பு வழங்கப்படும். அதாவது அவரது மனைவியின் பிரசவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும்.


2. தந்தைவழி விடுப்பு வேறு எந்த வகையான விடுமுறையுடனும் இணைக்கப்படலாம். 3. தந்தைவழி விடுப்பு, விடுப்புக் கணக்கிலிருந்து பற்று வைக்கப்படாது.


4. தந்தைவழி விடுப்பு குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பெறப்படாவிட்டால் அத்தகைய விடுப்பு காலாவதியானதாக கருதப்படும்.


பொது தகவல் அலுவலர் மற்றும் நேர்முக அலுவலர், கல்லூரிக் கல்வி இயக்ககம், Chennai - 600 006.


கல்லூரிக் கல்வித் துறை

Procedures to be followed while filing Affidavits in cases - Chief Secretary's letter, Dated : 30-12-2024



வழக்குகளில் பிரமாணப் பத்திரங்கள் (Affidavits) தாக்கல் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டியவை தொடர்பாக தலைமைச் செயலாளரின் கடிதம், நாள் : 30-12-2024



Chief Secretary's letter, Dated : 30-12-2024 regarding procedures to be followed while filing Affidavits in cases



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


High Court orders changes in prison rules




சிறைத்துறை விதிகளில் மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு


High Court orders changes in prison rules



"விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்"


சிறைத்துறை விதிகளில் மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Appointment of Judges in High Courts - Caste Category Representation - Number of Vacancies - Ministry of Law's Reply, dated : 28-11-2024



உயர்நீதிமன்றங்களில் யாருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம்?


உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் நியமனம் - வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - சட்ட அமைச்சகத்தின் பதில், நாள் : 28-11-2024


Appointment of Judges in High Courts - Caste Category Representation - Number of Vacancies - Ministry of Law's Reply, dated : 28-11-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



GOVERNMENT OF INDIA

MINISTRY OF LAW AND JUSTICE

DEPARTMENT OF JUSTICE

RAJYA SABHA

UNSTARRED QUESTION NO. 438

ANSWERED ON 28/11/2024

SOCIAL DIVERSITY IN HIGHER JUDICIARY

438. SHRI P. WILSON:

Will the Minister of Law and Justice be pleased to state:

(a) whether Government has included in memorandum of procedure proposed for appointment of High Court and Supreme Court judges, requirement of social diversity/reservations;

(b) details and number of SC,ST,OBC, forward caste, women and minority judges in all the High Courts and in Supreme Court as on 31.10.2024; 

(c) reasons due to which the names of Ramasamy Neelakandan and John Sathyam have been kept pending despite being recommended by the Supreme Court Collegium on 17.01.2023 for appointment as judges of Madras High Court; and

(d) details of total number of vacancies in all High Courts for judges with total strength as on 31.10.2024?


ANSWER

MINISTER OF STATE (INDEPENDENT CHARGE) OF THE MINISTRY OF LAW AND JUSTICE; AND MINISTER OF STATE IN THE MINISTRY OF PARLIAMENTARY AFFAIRS.

(SHRI ARJUN RAM MEGHWAL)

(a) to (d): Appointment of Judges to the Supreme Court and High Courts is made under Articles 124, 217 and 224 of the Constitution of India and according to the procedure laid down in the Memorandum of Procedure (MoP) prepared in1998 pursuant to the Supreme Court Judgment of October 6, 1993 (Second Judges case) read with their Advisory Opinion of October 28, 1998 (Third Judges case), which do not provide for reservation for any caste or class of persons. Therefore, category-wise data pertaining to representation of SCs, STs and OBCs among the Judges of High Courts are not centrally maintained. However, since 2018, the recommendees for the post of High Court Judges are required to provide details regarding their social background in the prescribed format (prepared in consultation with the Supreme Court). Based on the information provided by the recommendees, out of 684 High Court Judges appointed since 2018,


21 belong to SC category, 14 belong to ST category, 82 belong to OBC category and 37 belong to Minorities. As on 31.10.2024, 02 women Judges are working in the Supreme Court and 106 in various High Courts.


2. As per the Memorandum of Procedure (MoP), the responsibility for initiation of proposals for appointment of Judges in the Supreme Court vests with the Chief Justice of India, while the responsibility for initiation of proposals for appointment of Judges in the High Courts vests with the Chief Justice of the concerned High Court, in consultation with two senior-most puisne Judges of the High Court. However, the Government has been requesting the Chief Justices of High Courts that while sending proposals for appointment of Judges, due consideration be given to suitable candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Other Backward Classes, Minorities and Women to ensure social diversity in the appointment of Judges in High Courts. 


3. As per the Memorandum of Procedure (MoP), the proposals recommended by the High Court Collegium for appointment as High Court Judges, are to be considered in light of such other reports/inputs as may be available to the Government for assessing the suitability in respect of the names under consideration.The Supreme Court in its Judgment dated 6.10.1993 in Supreme Court Advocates on Record Vs. Union of India (Second Judges Case) inter-alia observed that merit selection is the dominant method for judicial selections and the candidates to be selected must possess high integrity, honesty, skill, high order of emotional stability, firmness, serenity, legal soundness, ability and endurance. 


4. Appointment of Judges in the higher judiciary is a continuous, integrated and collaborative process between the executive and the judiciary. It requires consultation and approval from various Constitutional Authorities both at State and Central level. The Government exercises its opinion on the recommendations made by the Supreme Court Collegium (SCC) by virtue of this collaborative process so as to ensure that most suitable and meritorious candidate is appointed to the esteemed post of a Judge in the Constitutional Courts. Only those persons are appointed as Judges of the Supreme Court and High Courts whose names have been recommended by the SCC.


5. The sanctioned strength and vacancies of Judges in the High Courts as on 31.10.2024 is at Annexure.


*****

Annexure

Statement showing Sanctioned strength and Vacancies of Judges in the High Courts 

(As on 31.10.2024)

Sl. No. High Court(s) Sanctioned Strength Vacancies

1 Allahabad 160 78

2 Andhra Pradesh 37 8

3 Bombay 94 25

4 Calcutta 72 29

5 Chhattisgarh 22 5

6 Delhi 60 23

7 Gauhati 30 6

8 Gujarat 52 20

9 Himachal Pradesh 17 6

10 J & K and Ladakh 25 10

11 Jharkhand 25 7

12 Karnataka 62 12

13 Kerala 47 2

14 Madhya Pradesh 53 18

15 Madras 75 8

16 Manipur 5 1

17 Meghalaya 4 0

18 Orissa 33 14

19 Patna 53 18

20 Punjab & Haryana 85 32

21 Rajasthan 50 18

22 Sikkim 3 0

23 Telangana 42 15

24 Tripura 5 0

25 Uttarakhand 11 5

Total 1122 360



The Constitution of India does not provide for caste-wise reservation for High Court judges, so the government does not maintain caste-wise data on High Court judges. However, since 2018, the government has collected social background information on High Court judge nominees. Here is some information on the caste of High Court judges appointed since 2018: 

Caste

Number of judges

Scheduled Caste (SC)

21

Scheduled Tribe (ST)

12

Other Backward Class (OBC)

78

General

499

The government has also asked High Court Chief Justices to consider candidates from underrepresented groups, such as SCs, STs, OBCs, minorities, and women, when appointing judges. 

Appajee Vardarajan was the first Scheduled Caste judge of the Madras High Court, serving from 1980–1985


Accused in financial fraud cases may be allowed to travel abroad with conditions - High Court



நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம் - உயர் நீதிமன்றம்


Accused in financial fraud cases may be allowed to travel abroad with conditions - High Court 


வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில், பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி சேஷசாயி, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமை என்பது வளத்துடன் வளர்வது.


விடுமுறை தொடங்கி தொழில் மேம்பாடு, கல்வி, புனிதப் பயணம் ஆகிய காரணங்களுக்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு. குற்ற நீதி பரிபாலனம், குற்றம்சாட்டப்பட்டவரின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டுமே தவிர, அவரது தனிப்பட்ட வாழ்வுரிமையை பாதிக்க்கக் கூடியதாக இருக்கக் கூடாது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்ற அச்சம் சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகளுக்கு வரக்கூடாது. அவர்கள் நாடு திரும்பக் கூடிய அளவில் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை இருக்க வேண்டும்.


ஒரு சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்து விட்டதால் தான் ஒவ்வொரு வழக்கிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வெளிநாடு செல்லும் உரிமையை வழங்குவதுடன், அவர் நாடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் நிபந்தனைகளை விதிக்கலாம். லுக் அவுட் நோட்டீசுக்கு மாற்று நடவடிக்கைக்கு இறுதி வடிவம் வழங்கும் வரை, தனி நபரின் பயண உரிமையை பாதிக்காத வகையில் லுக் அவுட் சுற்றறிக்கை நீடிக்கலாம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால், தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.



இந்த மனுக்களை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள், குறிப்பிட்ட தொகையையோ, அல்லது அதற்கு ஈடான சொத்துக்களை டெபாசிட் செய்யும்படி நிபந்தனை விதிக்கலாம். உறவினர் அல்லது தொழில் பங்குதாரர்களின் பாஸ்போர்ட்டை விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் நாடு திரும்பிய பிறகு அதை திருப்பிக்கொடுக்கலாம். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைத்து வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் இருவரும் தலா 10 லட்ச ரூபாய்க்கு சொந்த பிணையும், அதே தொகைக்கு இரு நபர் பிணையும், உறவினரின் பாஸ்போர்ட்டை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென நிபந்தனை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைத்து இருவரும் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்வு முடியும் கடைசி நாள் நடவடிக்கைகள் - CEO Proceedings

தேர்வு முடியும் கடைசி நாள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - CEO Proceedings Steps to be followed on the...