இடுகைகள்

கல்வி கட்டணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல் - மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு...

படம்
  விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல் - மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு... சட்டவிரோதமாக பள்ளிக் கட்டணம் அதிகரிப்பு: ம.பி.யில் 11 வழக்குகள் பதிவு; 20 போ் கைது ஜபல்பூா்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பள்ளிக் கட்டணம் மற்றும் பாடநூல்களின் விலையை உயா்த்தியதாக பள்ளி நிா்வாகிகள், கடை உரிமையாளா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஜபல்பூா் மாவட்ட ஆட்சியா் தீபக் சக்ஸேனா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆதித்ய பிரதாப் சிங் ஆகியோா் கூறுகையில், ‘மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் சில பள்ளிகள் 10 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை உயா்த்தின. சில பள்ளிகள் மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவை அணுகாமல் 15 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை அதிகரித்தன. மொத்தம் 11 பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக ரூ.81.3 கோடி கட்டணம் வசூலித்தன. இதையடுத்து அந்தப் பள்ளிகளுக்கு ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல பாடநூல்களின் விலையும் சட்டவிரோதமாக அதிகரிக்கப

கல்விக் கட்டண நிர்ணயம்(School Fees Fixation) - பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்...

படம்
 கல்விக் கட்டணம் தொடர்பாக, தனியார் பள்ளிகள் விண்ணப்பங்களை அனுப்ப, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, சுயநிதி பள்ளிகள் கல்விக் கட்டண கமிட்டி செயல்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், கல்விக் கட்டணம் தொடர்பாக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில் எழுந்த கோரிக்கையை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி, கல்விக் கட்டண கமிட்டி தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கூடுதல் கல்விக் கட்டணம்: முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை...

படம்
 கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தனியார் மெட்ரிகுலேசன் / நர்சரி & பிரைமரி / பிறவாரிய (CBSE / ICSE / IGCSE) பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 2021 முடிய 40% கல்விக் கட்டணமும், மீதம் 35% கட்டணத்தை மேற்படி கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட இரண்டு மாத காலங்களில் வசூல் செய்ய வேண்டும்.” “2021–2022ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் செய்யவேண்டும். கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது தகுந்த ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மின்னஞ்சல் (feesgrievancecellmdu@gmail.com) வழியாக புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக் விரைவில் திறக்கப்பட இருக்கின்றது என்ப

75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை...

படம்
 அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை...

மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...