கூடுதல் கல்விக் கட்டணம்: முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை...



 கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தனியார் மெட்ரிகுலேசன் / நர்சரி & பிரைமரி / பிறவாரிய (CBSE / ICSE / IGCSE) பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 2021 முடிய 40% கல்விக் கட்டணமும், மீதம் 35% கட்டணத்தை மேற்படி கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட இரண்டு மாத காலங்களில் வசூல் செய்ய வேண்டும்.”


“2021–2022ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் செய்யவேண்டும். கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது தகுந்த ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மின்னஞ்சல் (feesgrievancecellmdu@gmail.com) வழியாக புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுக்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக் விரைவில் திறக்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ்7


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...