தேர்தல் பணி பயிற்சி வகுப்பு, அஞ்சல் வாக்கு / தேர்தல் பணிச்சான்று குறித்த தேர்தல் பிரிவு தகவல்கள்... தகவலுக்காக, தேர்தல் பணி பயிற்சி வகுப்பு குறித்து - 22.03.2024 வெள்ளி மாலை 3.30 மணிக்கு நடைப்பெற்ற தேர்தல் பிரிவு காணொளி ஆய்வு கூட்ட தகவல்கள்... 1. எதிர் வரும் 24.03.2024 ஞாயிற்று கிழமை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. 2. இப்பயிற்சியில் காலை 9.30 மணிக்கு வருகை பதிவினை துவங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது. 3. பயிற்சிக்கு வருகை தராமல் இருக்கும் அலுவலர்களது விபரம் சேகரிக்கப்பட்டு, துறை தலைமைக்கு தகவல் வழங்கப்பட்டு, பயிற்சியில் கலந்து கொண்டிட துறை தலைமை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 3. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திடுவதற்காக கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது. 4. நாமக்கல் பாரளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள அலுவலர்கள் , தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியினிலேயே தேர்தல் பணிச்சான்று மூலம் வாக்கினை செலுத்திட பட