தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் திட்டவட்டமாக உள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ரத்து: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, நடைமுறையில் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்தார். மேலும் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு மக்களிடையே நீட் தேர்வு பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தது. இந்த நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவர் கனவு கேள்விக்குறியாக உள்ளது என பலரும் த