கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தற்காலிக பணிநியமன கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 15ம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், கடந்த 2010-11ம் ஆண்டில் காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. இப்பணியிடங்களை நிரப்ப, 36 பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, வரும் 15ம் தேதி, காலை 11 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் எழிலகத்திலுள்ள, ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான அழைப்பாணை பெற்றவர்கள், உரிய சான்றுகளுடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு

அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்...