கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2021 ஜனவரி 1 முதல் ஏற்படப் போகும் மாற்றங்கள்...

 அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும், 'பாஸ்டேக்' கட்டாயம் உட்பட, பல புதிய நடைமுறைகள், வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய மாற்றங்கள்:

* மின்னணு முறையில், சுங்க கட்டணம் செலுத்துவதற்கான, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் இருப்பது, அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* இனி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கான காசோலைக்கு, 'பாசிடிவ் பே' என்ற புதிய முறை கட்டாயமாகிறது.

அதன்படி, அந்த காசோலையின் எண், யாருக்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை, வங்கிக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.

* கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை, 'ஸ்வைப்பிங் மெஷினில்' செலுத்தாமலேயே, பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது சுய விருப்பத்தில் அவரவர் பதிவு செய்து கொள்ளலாம்.

* ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தற்போது, மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். 5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், இனி, காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். இதனால், 94 லட்சம் பேர் பயன் பெறுவர்.

* வரும், ஜன., 15ம் தேதி முதல், தொலைபேசிகளில் இருந்து, மொபைல் போன்களை அழைக்கும்போது, அந்த எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்.

* 'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளம், சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் செயல்படாது.

* பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள்,ஜன., 1 முதல், கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. இடுபொருள் செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலையேற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...