"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...?
👇👇👇👇👇👇👇
*நாடு முழுவதும் நாளை (மே 4) இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.*
*பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:*
*நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.*
*அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.40 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.*
*தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது.*
*இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.*
*தேர்வர்கள் தங்கள் கையில் கிளியர் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம்.*
*மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.*
*வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.*
*முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும்.*
*தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.*
*இதுகுறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தகுதிகாண் தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.*
*இன்று (04.05.2025) நீட் தேர்வு(மருத்துவ தகுதித்தேர்வு) எழுத உள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மகத்தான வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.