கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்


 "நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...?

👇👇👇👇👇👇👇


*நாடு முழுவதும் நாளை (மே 4) இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.*


*பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:*


*நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.* 


*அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.40 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.* 


*தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது.*


*இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.*


*தேர்வர்கள் தங்கள் கையில் கிளியர் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம்.*


*மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் அதை  ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.*


*வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.*


*முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும்.*


*தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.*


*இதுகுறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தகுதிகாண் தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.*


*இன்று (04.05.2025) நீட் தேர்வு(மருத்துவ தகுதித்தேர்வு)  எழுத உள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மகத்தான வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

  G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர...