கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - TNPSC அறிவிப்பு வெளியீடு


மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு 


மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.


நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 



மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மதுரை ஆசிரியர் POCSO சட்டத்தில் கைது



பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் POCSO சட்டத்தில் கைது


மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு


மதுரை மாவட்டம் விரகனூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் கைது செய்தனர். 


2025-26-ம் ஆண்டில் பயின்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜ்குமார் மீது புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 


தனியார் பள்ளி மாணவிகளுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஆசிரியர் ராஜ்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


G.O.Ms.No.143 - SMC Reconstitution Guidelines & Procedures



2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு


G.O.Ms.No.143 , Dated : 19-08-2026 - SMC Reconstitution Guidelines & Procedures


Government Order issued providing guidelines for the Reconstitution of School Management Committees for the years 2026–2028



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SMC Reconstitution Process 2026-2028



பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செயல்முறை 2026-2028


SMC Reconstitution Process 2026-2028



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்



பணம் எடுத்தால் கட்டணம்


SBI-ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் அடுத்த பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15+GST கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவிப்பு.


 எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்


சாதாரண சேமிப்புக் கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் பணம் எடுப்பதற்கான விதிகளை திருத்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.


ஒவ்வொரு மாதமும் ஏடிஎம் உள்ளிட்டவற்றில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு.


5வது முறை முதல் பணம் எடுக்கும்போது, வாடிக்கையாளர்கள் ₹15+ ஜிஎஸ்டி தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.


சேமிப்பு கணக்குகளுக்கான இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன - பாரத ஸ்டேட் வங்கி (SBI)



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


புதிய SIM Cardகள் வாங்க கட்டுப்பாடு



 புதிய SIM Cardகள் வாங்க கட்டுப்பாடு


டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி.


புதிய சிம் கார்டுகள் மீதான சோதனைகளை கடுமையாக்கும் ஒன்றிய அரசு.


'நிகழ்நேர சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும்' என அறிவிப்பு.


'புதிதாக சிம் வாங்கும் வாடிக்கையாளரை சரிபார்க்க வேண்டுமென' தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.


'ஒரு தனிநபர் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வைத்திருக்கலாம்'


ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மக்களுக்கு அதிகபட்சம் 6 சிம் கார்டுகள்.


அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்தும்விதமாக புதிய சிம் கார்டுகள் மீதான சோதனையை கடுமையாக்கப் பட்டுள்ளது என கூறப்படுகிறது.



மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு



மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு


ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணைப்படி, வந்தே மாதரமும், தேசிய கீதமும் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது


வந்தே மாதரம், தேசியகீதம் இரண்டில், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும்; மாநில பாடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்ய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் என கூறப்படவில்லை என பதில்.



மாணவர்கள் மீதான FIRகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு



மாணவர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு


* நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு.


* இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயம் என்பதால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், போலீசாரின் அத்துமீறல் புகார்கள் குறித்து விசாரிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உள்ளதாகவும் தெரிவிப்பு.


 Students Protests | Supreme Court


அண்ணாமலையார் கோயிலுக்குள் செப்டம்பர் 1 முதல் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை


பக்தர்கள் வசதிக்காக 5 இடங்களில் கட்டண பாதுகாப்பு அறைகள் அமைப்பு



முதலமைச்சர் கோப்பை (CM Trophy) விளையாட்டு போட்டிகளுக்கு பதிவு செய்வதற்கான Link

 


முதலமைச்சர் கோப்பை (CM Trophy) விளையாட்டு போட்டிகளுக்கு பதிவு செய்வதற்கான Link

👇👇👇


https://tncmtrophy.sdat.in/register/guidelines


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு சேர்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோளினை வெளிப்படுத்துகின்றோம்


*AIFETO... 18.08.2026.*



*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசு 100 நாள்களை நிறைவு செய்து இருக்கிறது!. வரவேற்க வேண்டிய அம்சங்களை வரவேற்க வேண்டியவர்கள் வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள்!. 60 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு கட்சிகளும் எதிர்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையின் நிகழ்வுகளில் நீண்டகால அனுபவ கொள்முதலினைப் பெற்றவர்கள் அவர்கள்.. 100 நாள் சாதனைகளை தவிர்த்துக் கொண்டு விமர்சனங்களை  முன்வைக்கத்தான் செய்வார்கள். இது இயல்பான ஒன்றுதான்.*


 *ஆனால் எல்லோரும் ஒன்றை கருத்தொருமித்து வரவேற்றுப் பாராட்டுகிறார்கள்!.. சட்டப்பேரவையின் நிகழ்வுகளை நேரலையாக அன்றாடம் ஒளிபரப்புவது என்பது 60 ஆண்டுகால தமிழ்நாட்டு வரலாற்றில் நடைபெறாத நிகழ்வு என்பதை எவரும் மறுக்க முடியாது.*


 *நேரலையாக ஒளிபரப்பும் போது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை மக்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்ப்பதற்கான வாய்ப்பு அமையும். என்னதான் ஆளுங்கட்சியின் சாதனைகள் இருந்தாலும் விமர்சனங்களை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்க முடியாது. ஆனால் முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு நேரலையாகவே சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பி வருகிறார்கள்.*


 *மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களை அனைத்து கட்சிகளும் பாராட்டத்தான் செய்கிறார்கள். காரணம் அனைவருக்கும் வாய்ப்புகளை சமமாக அளித்து வருகிறார். அமைச்சர்களின் உண்மைக்கு மாறான பேச்சினையும், தகவலினையும் அவை குறிப்பிலிருந்து நீக்கி அறிவிக்கிறார்.*


 *எங்களைப் போன்ற மூத்த இயக்க தலைவர்களின் அனுபவங்களை கனிவான பார்வைக்காக கொண்டு வருகிறோம்!...*


 *வலம் வரும் வதந்திகள் பல நேரங்களில் உண்மைக்கு புறம்பாக அமைந்து விடுகின்றன. சில நேரங்களில் வதந்திகள் உண்மையாக நிலைத்து நிற்பதும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தவரையில் பன்முகத்தன்மை கொண்ட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ஆ.ராஜ்மோகன் அவர்களை கல்வித்துறைக்கு அளித்துள்ளார்கள். வரவேற்று நன்றி பாராட்டுகிறோம்!..*


 *பள்ளிக்கல்வி இயக்குனர் பதவிக்கு மீண்டும் முந்தைய  ஆட்சியாளர்கள் காலத்தில் இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலரை பள்ளிக் கல்வி ஆணையராக நியமனம் செய்தார்கள். ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உச்சம் தொட்ட போராட்டங்களின் காரணமாக பள்ளிக்கல்வி ஆணையர் பதவி ரத்து செய்யப்பட்டது. இது முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.*


 *ஆனால் எப்படி  வதந்தி பரவுகிறது என்று தெரியவில்லை!. மீண்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கல்வி ஆணையராக நியமனம் செய்ய இருப்பதாக பரவலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முந்தைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற ஆய்வு மனப்பான்மை கொண்டவர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இயக்குனர் வரிசையில் தான் அந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். என்ற நடைமுறையே தவெக அரசிலும் தொடர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும்.*


 *இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்களைப் பொறுத்தவரையில் நிர்வாக பொறுப்புகளை தொடர்ந்து நடத்தி வருபவர்கள்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு பொதுமக்களுக்கு நன்மைகள் செய்வது மட்டுமின்றி  ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள அரசு என்பதையும் நாங்கள் நன்கறிவோம்!..*



*மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் 2.30 மணி நேரம் நிதிநிலை அறிக்கையினை தண்ணீர் கூட அருந்தாமல் படித்தார்கள். அதில் பள்ளிக்கல்வித்துறைக்கும் உயர்கல்வித்துறைக்கும் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையினை விட குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளதை அறிந்து கொண்டோம்.*


 *சென்ற ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில்  செலவு செய்யப்படாத நிதியினை இந்த பட்ஜெட்டில் குறைத்துள்ளோம்.. என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சமாதானம் சொல்லி இருக்கிறார். அதேபோல ஓய்வூதிய திட்டத்தில் ஒதுக்கப்படுகிற நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. TAPS திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுவாக 3000 கோடி நிதி உள்ளிட்ட இரண்டையும் சேர்த்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீட்டினை குறைத்து இருக்கிறார்கள்.*


 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசு ஒரு காலமும்  இந்தப் பாதிப்பினை செய்யாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பார்கள்!..*


 *முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் ஆட்சியினைப் பார்த்து கொண்டார்கள். ஆனால் நிர்வாகம் முழுவதையும் இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். அவர்கள் ஐந்து ஆண்டு காலமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதையும் செய்ய விடவில்லை. செய்யலாம் என்று நினைத்த முதலமைச்சரையும் தடுத்தார்கள்.   இந்த அதிகாரிகளால் தான் பொதுத் தேர்தலில்  50 தொகுதிகள் இழப்பார்கள் என்று மூன்று ஆண்டுகாலமாக  செய்தியாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பேட்டிகள் அளித்து வந்தோம். அதுதான் நடந்துள்ளது.*


 *தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசிலும் நிதிநிலை அறிக்கையில்  ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எந்த நன்மையும் நடந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தில் இந்த நிதியினை அதிகாரிகள் குறைத்துள்ளார்கள் என்ற விமர்சனம் ஏற்பட்டுள்ளது.*


*அதுமட்டுமல்லாமல் முந்தைய அரசு போல் முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசின் மீதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வெறுப்பினை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. நிதிநிலை அறிக்கையினை படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலை சரி செய்யப்படும் என்று மாண்புமிகு  நிதிஅமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவிக்கின்றார். ஆனால் நிதித் துறையிடமிருந்து தமிழ்நாட்டின்  நிதி நிலைமை சீராக இன்னும் 50 ஆண்டுகளாகும் என்று அவர்கள் செய்தியினை வெளியிடுகிறார்கள்.*


*இன்று 18.08.2026 சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட  TAPS திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் 50% பென்சன் கண்டிப்பாக வழங்கப்படும். பணிக்கொடை  வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உறுதியினை தெரிவித்து இருக்கிறார்கள்.. வரவேற்று பாராட்டுகிறோம்!..*


 *இருந்தாலும்...*


*தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை பரிசீலித்து, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை  ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவார்கள்  என்ற நம்பிக்கை உணர்வு எங்களுக்கு இப்போதும் இருக்கிறது. என்ற நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்துகிறோம்.*


 *1999இல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 12,000 பேருக்கு 2026 ஜனவரி முதல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். PAY MATRIX 45 செல்லில் இருந்து 50 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு உயர்த்தினால் மட்டுமே இனி அவர்கள் ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வு பெற முடியும். இந்தக் கோரிக்கையினை  அக்கறையுடன் அரசு உடனடியாக செய்ய வேண்டிய கோரிக்கையாகும்.*


*ஆசிரியர் சங்கங்களின் சார்பில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை விண்ணப்பத்தினை கொடுத்து விளக்கம் அளித்தும்  இதுவரை எட்டு மாதங்கள் ஆகியும் PAY MATRIX செல் அதிகரித்து வழங்கப்படாததால் ஆண்டு ஊதிய உயர்வே இல்லாமல் 12000 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் பெரிதும் பாதிப்படைத்துள்ளார்கள்.*


 *மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும், புலனப் பதிவு மூலமாக அனுப்பி உள்ளோம்!.*


 *எந்த காரணத்தை முன்னிட்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்திற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி தான் தொடர வேண்டுமே தவிர!..  இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கல்வி ஆணையராக நியமனம் செய்யும் நடைமுறையினை அறவே தவிர்த்து நீண்ட காலமாய் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து வரும் நடைமுறையினை பாதுகாத்திட வேண்டுமாய் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உணர்வுகளின் அடிப்படையில் இதனை தெரிவித்துக் கொள்கிறோம்!.*


 *ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் அவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அவர்கள், தமிழ்நாடு  பாடநூல் கழகத்தின் செயலாளர் என அனைவருமே  இந்திய ஆட்சிப் பணித்துறை சார்ந்த அலுவலர்கள்தான்..*


 *இவர்கள் அனைவரையும் கண்காணிக்கின்ற பொறுப்பு பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களிடம் உள்ளது.*


 *பள்ளிக்கல்வித்துறை ஆணையரை நியமனம் செய்வது வதந்தியாகவே இருக்கட்டும்!.. ஒருபோதும் உண்மையாக இருக்க வேண்டாம்!. என்று இயக்கத்தின் மூத்த தலைவர் என்ற முறையிலும் 54 ஆண்டு காலம் பொதுவாழ்வில்  அனுபவக் கொள்முதல் பெற்றவன் என்ற முறையில் தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்!.*


 *முற்றிலும் ஊழலற்ற ஆட்சியை எந்நாளும்  தொடர்ந்து நடத்திக் காட்டுவோம்!.  என்ற மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் சூளுரையினை வரவேற்று பெருமிதம் கொள்கிறோம்!*


*24.08.2026 அன்று நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் அறிவிப்புகள் வெளிவரும் என்ற நம்பிக்கை உணர்வுடன்....*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி சென்னை- 600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com .*


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


சிறிய மனிதரின் பெரிய சாதனை



சிறிய மனிதரின் பெரிய சாதனை


"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 

அச்சாணி அன்னார் உடைத்து".


பொருள்: ஒருவரின் உருவத்தின் சிறிய தோற்றத்தைக் கண்டு அவரை இகழக் கூடாது. பெரிய உருவம் கொண்ட தேருக்கு, மிகச் சிறிய அச்சாணியே முக்கியமானது போல, உலகத்தில் சிறிய தோற்றம் உடையவர்களும் பெரிய திறமை உடையவர்களாக இருக்க கூடும்.


“என் மகனை சர்க்கஸுக்கு அனுப்ப மாட்டேன்; அவனைப் படிக்க வைத்து, நாளை ஒரு மருத்துவராக்குவேன் !” 👑


இவர் தான் கணேஷ் பாரையா. வெறும் 3 அடி உயரமும் 20 கிலோ எடையும் கொண்ட இளைஞர். இன்று இவரது பெயர் பலருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகம். 


பல ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் சிறுவனாக இருந்தபோது, அவரது உடல் தோற்றத்தைக் கண்டு சர்க்கஸ் நடத்துபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். கணேஷை தங்களிடம் ஒப்படைத்தால், அவரது தந்தைக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக அவர்கள் கூறினர். அக்காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்திற்கு அது மிகப்பெரிய தொகை.


ஆனால் அந்தத் தந்தை உறுதியாகச் சொன்னார்:


“என் மகனை நான் படிக்க வைப்பேன். சர்க்கஸுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க மாட்டேன்!”


தந்தை கண்ட அந்தக் கனவுக்கு சிறகுகள் கொடுக்க, கணேஷ் தனது முழு முயற்சியுடன் படித்தார்.


2018-ஆம் ஆண்டு NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், அவரது உயரம் குறைவாக இருப்பதாகக் கூறி மருத்துவக் கல்லூரியில் MBBS சேர்க்கை மறுக்கப்பட்டது.


ஆனால் கணேஷ் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. உயர்நீதிமன்றத்திலும், பின்னர் நாட்டின் உச்ச நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி, தனது மருத்துவக் கல்விக்கான உரிமையைப் பெற்றார்.


இன்று, MBBS படிப்பையும் இன்டர்ன்ஷிப்பையும் நிறைவு செய்து, டாக்டர் கணேஷ் பாரையா ஆகியிருக்கிறார்! 


சமீபத்தில் கௌன் பனேகா குரோர்பதி (KBC) நிகழ்ச்சியில் தனது வாழ்க்கைப் பயணத்தை கணேஷ் பகிர்ந்தபோது, அதை கேட்ட அமிதாப் பச்சனின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. 


வரம்புகள் உடலுக்குத்தான்; மனதிற்கு அல்ல என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்த கணேஷுக்கும், தனது மகனின் திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்த அந்தத் தந்தைக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்


தன் மருத்துவக் கனவை அடைய உயரம் ஒரு தடையே இல்லை என்பதை சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளார், 3 அடி உயரமுள்ள 23 வயது மருத்துவர் கணேஷ் பாரையா. 


உயரத்தைக் காரணம் காட்டி இவருக்கு எம்.பி.பி.எஸ் படிக்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. 3 அடி உயரம் இருப்பதால் அவசர கால சிகிச்சைகளைக் கையாள முடியாது எனக் கூறி அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.


தன் லட்சியத்தை அடைய அவர் பள்ளித் தலைமை ஆசிரியர் உதவியோடு மாவட்ட ஆட்சியர், மாநில கல்வி அமைச்சரை அணுகியதோடு, குஜராத் உயர் நீதிமன்றத்தையும் நாடினார். குஜராத் உயர் நீதிமன்றத்தில் தோல்வியைச் சந்தித்தவர், அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.


2018-ல் இந்த வழக்கில் வெற்றி பெற்றவர், 2019-ல் எம்பிபிஎஸ் படிக்க அனுமதிக்கப்பட்டார். தன் படிப்பை முடித்த பிறகு பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.


தன் வெற்றி குறித்துக் கூறிய கணேஷ் பாரையா, ``நான் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதற்காக விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, இந்திய மருத்துவ கவுன்சில் குழு என் உயரத்தைக் காரணம் காட்டி நிராகரித்தது.


உயரம் குறைவாக இருப்பதால் அவசரகால சிகிச்சைகளை என்னால் கையாள முடியாது என்று கூறினார்கள். அதன்பின் நான் என் பள்ளித் தலைமை ஆசிரியர், டாக்டர் தல்பத் பாய் கட்டாரியா மற்றும் ரேவசிஷ் சேர்வையா ஆகியோரிடம் இதைப் பற்றி பேசினேன். 


2018-ல், உச்ச நீதிமன்றம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்க உத்தரவிட்டது. ஆனால், அதற்குள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சேர்க்கை முடிந்துவிட்டது. ஆதலால், 2019-ல் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்கை பெறுவார் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


நான் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் பெற்றேன், அதன்பின் என் எம்.பி.பி.எஸ் பயணம் தொடங்கியது. முதலில் என்னைப் பார்க்கும் நோயாளிகள் என் மீதான அபிப்பிராயத்தை உயரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் இணக்கமாகி, என்னை மருத்துவராக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்துகொள்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார். 


வாழ்த்துகள் டாக்டர் கணேஷ் பாரையா!


ஓய்வூதியக்குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக வெளியிட வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 


ககன்தீப்சிங்பேடி அவர்களின் ஓய்வூதிய குழு அறிக்கையை முழுமையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் - தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை - நாளிதழ் செய்தி 18.08.2026



தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுழற்சி முறையில் பணிபுரிய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுழற்சி முறையில் பணிபுரிய தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TN Budget 2026 Programme Schedule



 தமிழ்நாடு சட்டமன்ற பேரவை | திருத்திய நிதிநிலை அறிக்கை 2026-2027 | மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் நாட்கள்


TN Budget 2026 Programme Schedule



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Maths and Science Talent Test 2026 | Circular



கணிதத் திறன் தேர்வு மற்றும் அறிவியல் திறன் தேர்வு 2026 தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய சுற்றறிக்கை


Maths and Science Talent Test 2026 | Circular 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


POCSOவில் 2 ஆசிரியர்கள் கைது



மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 2 ஆசிரியர்கள் கைது


 ஆசிரியர்கள் கைது


தஞ்சாவூர்: தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியை திவ்யா போக்சோ சட்டத்தின் கீழ் கைது


16 வயது மாணவிக்கு ஆபாசமான வீடியோ அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் ஆகியோர், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் கைது செய்யப்பட்டனர்.


தஞ்சாவூரில் 16 வயது தனியார் பள்ளி மாணவிக்கு வீடியோ அழைப்பு மூலம் பாலியல் தொல்லை அளித்த வழக்கில்,  சண்முகசுந்தரராஜ் (61) என்ற ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் மற்றும் திவ்யா (38) என்ற தனியார் பள்ளி ஆசிரியை ஆகிய இருவர் POCSO சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்


தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியையான 38 வயது திவ்யாவிடம் அந்த மாணவி தனிப் பயிற்சி பெற்று வந்தார். தஞ்சாவூரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியரான 61 வயது சண்முகசுந்தரராஜ், திவ்யாவுக்கு அறிமுகமானவர் ஆவார். அவர், திவ்யாவின் உதவியுடன் அந்தச் சிறுமிக்கு மாதக்கணக்கில் மீண்டும் மீண்டும் ஆபாசமான வீடியோ அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த அழைப்புகளால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, தனது பள்ளி முதல்வரிடம் தகவல் தெரிவித்தார். முதல்வர், தஞ்சாவூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி கைது செய்தனர்.


ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டப்படிப்புகள் பயின்றது தொடர்பான Audit Objection குறித்த வழிகாட்டுதல்கள்



Audit Objection - Double Degree in Same Academic Year 


 ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டப்படிப்புகள் பயின்றது தொடர்பான Audit Objection குறித்த வழிகாட்டுதல்கள் - Whatsapp பகிர்வு. 


தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடரும் முன் வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து கொள்ளவும்


இரண்டு பட்டப்படிப்புகள் ஒரே கல்வியாண்டில் படித்து உங்களுக்கு   தணிக்கைத் தடை வரப்பெற்றிருக்குமானால்


ஏற்கனவே உங்களது பணிப் பதிவேட்டில் (Service Register - SR) இந்த இரண்டு பட்டங்களும் பதியப்பட்டுவிட்டன என்பது உங்களுக்கு ஒரு சாதகமான அம்சம். எனினும், தணிக்கைத் துறை (Audit Department) மற்றும் கல்வித்துறையின் தற்போதைய கடுமையான விதிகளின்படி இதில் சில நடைமுறைச் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


1. தற்போதைய தணிக்கை (Audit Order) சிக்கல்கள்

தணிக்கை தடை (Audit Objection): பணிப் பதிவேட்டில் பதியப்பட்டிருந்தாலும், உள்ளூர் நிதித் தணிக்கை (Local Fund Audit) அல்லது மாநிலக் கணக்காய்வுத் துறை (AG Audit) அதிகாரிகள் உங்களது SR-ஐ ஆய்வு செய்யும்போது, ஒரே காலகட்டத்தில் (2012-2014 & 2013-2014) இரண்டு பட்டங்கள் பயின்றதைக் கண்டறிந்தால், அதற்கு தணிக்கைத் தடை விதிக்க அதிக வாய்ப்புள்ளது.


பிடித்தம் (Recovery) அபாயம்: ஒருவேளை இந்த இரு படிப்புகளுக்கும் ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு (Incentive Increment) வழங்கப்பட்டிருந்தால், "ஒரே காலகட்டத்தில் படித்த இரட்டைப் பட்டம் செல்லாது" என்ற விதியின் கீழ், வழங்கப்பட்ட கூடுதல் தொகையைத் திரும்பப் பெற (Recovery) தணிக்கைத் துறை உத்தரவிட நேரிடலாம்.


2. உங்களுக்கான பாதுகாப்பு வழிகள் (How to protect or handle this?)


ஒரு பட்டத்தை மட்டும் முதன்மைப்படுத்துதல்:  பெறப்பட்டுள்ள இரண்டு பட்டங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம். 


நீதிமன்றத் தீர்ப்புகளின் நாட்டம்: இதேபோன்ற வழக்குகளில் (Simultaneous Degree), "சேவைப் பதிவேட்டில் முறையாகத் துறையின் அனுமதி பெற்று பதியப்பட்ட பின், பல ஆண்டுகள் கழித்து தணிக்கைத் துறை பிடித்தம் (Recovery) செய்யக் கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் சில தனிப்பட்ட வழக்குகளில் இடைக்காலத் தடை அல்லது நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால், அடிப்படை விதிகளின்படி இரட்டைப் பட்டம் செல்லாது என்பதால், நீதிமன்றத்திலும் முழுமையான சாதகமான தீர்ப்பு உறுதியாகக் கிடைக்கும் என்று கூற முடியாது.


3. அடுத்தகட்ட நடவடிக்கை (Next Steps)

உங்களது தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து நீங்கள் பின்வருவனவற்றைச் சரிபார்க்க வேண்டும்:

இந்த இரண்டு படிப்புகளையும் படிப்பதற்கு முன்பு, நீங்கள் கல்வித்துறையிடம் முறையான முன் அனுமதி (Prior Permission) பெற்றிருந்தீர்களா? (அனுமதி பெற்று SR-ல் பதிவாகியிருந்தால் உங்கள் தரப்பு நியாயம் வலுவாக இருக்கும்).


 தணிக்கைத் தடை (Audit Slip) தங்களுக்கு வந்துள்ளதா?


துறையின் முன் அனுமதி பெற்று, பணிப் பதிவேட்டில் (Service Register) முறையாகப் பதியப்பட்ட பிறகு தணிக்கைத் துறை (Audit Department) தற்போது தடை விதித்துள்ளது உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். எனினும், நீங்கள் அரசாங்கத்தின் முறையான அனுமதி பெற்றிருப்பதால் உங்கள் தரப்பில் வலுவான வாதங்கள் உள்ளன. இந்தத் தணிக்கைத் தடையை (Audit Objection) எதிர்கொள்ளவும், நிவர்த்தி செய்யவும் நீங்கள் செய்ய வேண்டிய சட்டப்பூர்வ மற்றும் துறை ரீதியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. தணிக்கை தடைக்கு நீங்கள் அளிக்க வேண்டிய துறை ரீதியான விளக்கம் (Audit Reply)

வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) அல்லது மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) வழியாக தணிக்கைத் துறைக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். அதில் பின்வரும் புள்ளிகளை மிக முக்கியமாக குறிப்பிட வேண்டும்:

அரசாங்கத்தின் முன் அனுமதி (Prior Permission): "நான் இந்தப் படிப்புகளைப் பயில்வதற்கு முன்பே கல்வித்துறையிடம் முறையான முன் அனுமதி கோரி, துறையும் அனுமதி வழங்கிய பின்னரே படிப்பைத் தொடர்ந்தேன்" என்பதைக் குறிப்பிட்டு, அந்த அனுமதி ஆணையின் நகலை இணைக்க வேண்டும்.

பணிப் பதிவேட்டுப் பதிவு (SR Entry): "படிப்பை முடித்த பின், தகுந்த சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து, கல்வித்துறை அதிகாரிகளால் எனது பணிப் பதிவேட்டில் (SR) இப்பயிற்சி விவரங்கள் முறையாகப் பதியப்பட்டுள்ளன" என்பதைச் சுட்டிக்காட்டி, SR பக்கங்களின் நகல்களை இணைக்க வேண்டும்.

ஏமாற்று வேலை இல்லை (No Misrepresentation): நீங்கள் எதையும் மறைக்கவில்லை, துறையின் ஒப்புதலோடுதான் செய்தீர்கள் என்பதால், உங்கள் மீது எவ்விதத் தவறும் இல்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.


2. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் ஆதரவு (Case Laws)

தணிக்கைத் துறை பிடித்தம் (Recovery) செய்ய உத்தரவிட்டால், அதற்கு எதிராக நீங்கள் பின்வரும் மிக முக்கிய தீர்ப்புகளை உங்கள் விளக்கத்தில் சுட்டிக்காட்டலாம்:

பஞ்சாப் மாநில அரசு Vs ரஃபிக் மாசிஹ் வழக்கு (State of Punjab vs Rafiq Masih - Supreme Court): உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின்படி, "அரசு ஊழியரின் எவ்விதத் தவறும் இல்லாத பட்சத்தில், துறையின் தவறான கணக்கீட்டால் வழங்கப்பட்ட பணத்தை, பல ஆண்டுகள் கழித்து அவரிடமிருந்து பிடித்தம் (Recovery) செய்யக் கூடாது" என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகள்: தமிழ்நாட்டில் இதேபோல "முன் அனுமதி பெற்று இரட்டைப் பட்டம் படித்து, SR-ல் பதிந்த பிறகு தணிக்கைத் துறை பிடித்தம் செய்யக் கூடாது" என்று தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் ஆசிரியர்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்து, தணிக்கை தடையை ரத்து செய்துள்ளது.



நீங்கள் அடுத்ததாகச் செய்ய வேண்டியவை:


உங்களது முன் அனுமதி ஆணை (Prior Permission Order) மற்றும் பணிப் பதிவேட்டு நகல்களை (SR Copies) தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தணிக்கைத் துறை உங்களுக்கு வழங்கிய தணிக்கை சீட்டு (Audit Slip / Objection Note) நகலை உங்களது ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அல்லது ஒரு நல்ல வழக்கறிஞரிடம் காண்பித்து ஆலோசிக்கவும்.


விளக்கம் கேட்டு மட்டுமே கடிதம் வந்துள்ளது என்பது உங்களுக்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அம்சம். தற்போது வரை உங்களுக்கு எவ்விதப் பிடித்தம் (Recovery) அல்லது தண்டனை ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, சட்டப்பூர்வமான மற்றும் வலுவான விளக்கத்தை உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதன் மூலம் இந்தத் தணிக்கைத் தடையை (Audit Objection) தொடக்க நிலையிலேயே ரத்து செய்ய (Drop) வைக்க முடியும்.

கீழே உள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு உங்களது பதிலை (Audit Reply) தயார் செய்து, உங்களது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) / மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) வழியாக தணிக்கைத் துறைக்கு அனுப்பவும்:

1. தணிக்கை விளக்கக் கடிதத்தில் (Audit Reply) இடம்பெற வேண்டிய முக்கிய விவரங்கள்:

துறையின் முன் அனுமதி (Prior Permission): "நான் மேற்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்பே, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி கல்வித் துறையிடம் முறையான முன் அனுமதி கோரி விண்ணப்பித்தேன். துறையும் எனது விண்ணப்பத்தைப் பரிசீலித்து, அரசாணை விதிகளுக்கு உட்பட்டே எனக்கு மேற்படிப்பு பயில அனுமதி ஆணை (ஆணை எண் மற்றும் நாள் குறிப்பிடவும்) வழங்கியது. துறையின் அனுமதியைத் தன்னிச்சையாக மீறி நான் எதையும் பயிலவில்லை."

முறையான பதிவு (Service Register Entry): "படிப்புகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, பல்கலைக்கழகங்கள் வழங்கிய அசல் சான்றிதழ்களைக் கல்வித் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தேன். அவர்களும் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்து, எனது பணிப் பதிவேட்டில் (SR) இப்பயிற்சி விவரங்களை (பக்கம் மற்றும் வரிசை எண்களைக் குறிப்பிடவும்) முறையாகப் பதிவு செய்துள்ளனர்."

எவ்வித மோசடியும் இல்லை (No Misrepresentation): "இந்த மேற்படிப்பு விவரங்களையோ அல்லது நான் பயின்ற காலகட்டத்தையோ (2012-2014) துறையிடமிருந்து நான் மறைக்கவில்லை. எவ்விதத் தவறான தகவல்களையும் (Misrepresentation) அளிக்கவில்லை. துறையின் முழு ஒப்புதலோடுதான் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது."


2. விளக்கத்துடன் இணைக்க வேண்டிய அத்தியாவசிய ஆவண நகல்கள் (Enclosures):

தணிக்கைத் துறை உங்களுக்கு அனுப்பிய விளக்கக் கடிதத்தின் நகல் (Audit Slip).


நீங்கள் மேற்படிப்பு படிக்கப் பெற்ற முன் அனுமதி ஆணையின் நகல் (Prior Permission Order).


உங்கள் பணிப் பதிவேட்டின் (SR) முன்பக்க நகல் மற்றும் மேற்படிப்பு விவரங்கள் பதியப்பட்டுள்ள பக்கங்களின் நகல்கள்.


பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்புச் சான்றிதழ் (Degree Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல்கள்.


3. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பாதுகாப்பு (Legal Precedent):

உங்களது விளக்கக் கடிதத்தின் இறுதியில் பின்வரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டவும்:

பஞ்சாப் மாநில அரசு Vs ரஃபிக் மாசிஹ் வழக்கு (State of Punjab vs Rafiq Masih - Supreme Court): உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின்படி, "அரசு ஊழியரின் எவ்விதத் தவறும் இல்லாத பட்சத்தில், துறையின் தவறான கணக்கீட்டால் வழங்கப்பட்ட பணத்தை, பல ஆண்டுகள் கழித்து அவரிடமிருந்து பிடித்தம் (Recovery) செய்யக் கூடாது" என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


Service Register Audit Verification Checklist Form

 


பணிப்பதிவேடு தணிக்கை சரிபார்ப்பு படிவம் 


Audit SR Check List - BEO Office


இடைநிலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான

Service Register Audit Verification Check list Form



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


NHIS Cardல் சேர்க்க Kalanjiyam செயலியில் குடும்ப உறுப்பினர்களின் தகவல் Update செய்யும் வழிமுறை


NHIS Cardல் சேர்க்க Kalanjiyam செயலியில் குடும்ப உறுப்பினர்களின் தகவல் Update செய்யும் வழிமுறை


 https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam


களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் update ஆகியுள்ளது.


* NHIS - Family

* Member  update*

* Enhancement


தற்போது களஞ்சியம் ஆப்பிள் குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்


1. களஞ்சியம் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும் 


2. பின்னர் அப்டேட் ப்ரோபைல் Update Profile பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும் 

 


3. இதில் பேமிலி மெம்பர் டீடைல் என்பதனை அழுத்தி உள் செல்லவும் 



4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருக்கும் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும் 


5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும் 


6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது அல்லது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்டேட் செய்வது 


7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும். பின்னால் கீழே உள்ள அட்ஜஸ்ட்மென்ட் பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி அப்டேட் செய்யவும் 


8. தாங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றால் மேல் பகுதியில் Add member என்ற தேர்வினை பயன்படுத்தி புதிய உறுப்பினரை சேர்க்கலாம் 


9. இதில் புகைப்படத்தை இணைக்க அதே பேனா சின்னத்தை பயன்படுத்தவும் மீதம் கேட்கப்படும் வினாக்களுக்கு சிவப்பு நிற நட்சத்திர குறியீடு உள்ள வினாக்கள் கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும் நட்சத்திர குறியீடு இல்லாத வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பதிவேற்றவும். தகவல் இல்லை என்றால் நட்சத்திர குறியீடு இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம்.


10. அரசு ஊழியர் புகைப்படத்தை ஏற்ற, செயலியின் இடது மேல் புறத்தில் 👤முகம் போன்ற ஐகானை தொட்டால் நமது விவரம் இருக்கும் அதில் மேலே பேனாவை தொட்டால் புகைப்படம் ஏற்றலாம்.


இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் வெகு விரைவாக செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


களஞ்சியம் appல் உள் நுழைந்து குடும்ப விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்கவும். அதில் ஏதேனும் தவறுகள் இருக்கும் போது அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தால், நாமே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.




Vaasippu Iyakkam புத்தகங்கள் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு



வாசிப்பு இயக்கம் புத்தகங்கள் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு


மாநிலத் திட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்


வாசிப்பு இயக்கம் புத்தகங்கள் - 

இதுவரை வெளியிடப்பட்ட புத்தகங்களில்  நம் மாவட்ட அளவில் கதைகள் எதுவும் தெரிவாகவில்லை . 


ஆதலால் இனி வெளியிடப்படவுள்ள வாசிப்பு இயக்கம் புத்தகங்களில் நம் மாவட்ட கதைகளும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என மாநிலத் திட்ட இயக்கத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே 4 முதல் 9 வகுப்புகள் வரை ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் வழிநடத்தும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின்  விவரம் (1 ஒன்றியத்திற்கு 3 பள்ளிகள் / 1 பள்ளிக்கு 3 மாணவர்கள் வீதம்) குறித்த தகவல்கள் பெற்று இன்று மாலைக்குள் இக்குழுவில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அவர்களுக்கு மாநிலத்திலிருந்து வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது. Hi-Tech lab / G-meet வாயிலாக பயிற்சி வழங்கப்படும். பயிற்சி சார்ந்த தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்


SHVR 2026-2027 குறித்த தகவல்கள்

 


SHVR பதிவு செய்யும் வழிமுறை


SHVR 2026-2027 குறித்த தகவல்கள்


SHVR என்பது ஸ்வச் ஏவம் ஹரித் வித்யாலயா மதிப்பீடு (Swachh Evam Harit Vidyalaya Rating) என்பதன் சுருக்கமாகும் . 

இது இந்தியக் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் முன்னெடுக்கப்படும் ஒரு நாடு தழுவிய இந்திய அரசாங்க முன்முயற்சியாகும். 

பசுமையான வளாகத் தரங்களை ஊக்குவிப்பதற்காக, இது பள்ளிகளின் தூய்மை, நீர், சுகாதாரம், தூய்மை (WASH) மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மிஷன் லைஃப் (Mission LiFE) செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றை மதிப்பிடுகிறது.


முக்கிய மதிப்பீட்டு கருப்பொருள்கள்

நீர்: பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதும் சேமிப்பும்.

கழிப்பறை: மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தூய்மையான, எளிதில் அணுகக்கூடிய வசதிகள்.

கைகழுவுதல்: கழுவும் இடங்களுக்கு அருகில் சோப்பு கிடைக்கும்.

செயல்பாடு மற்றும் பராமரிப்பு: வளாக உள்கட்டமைப்பின் வழக்கமான பராமரிப்பு.

நடத்தை மாற்றம்: சுகாதாரக் கல்வி மற்றும் மாணவர் திறன் மேம்பாடு.

மிஷன் லைஃப்: பருவநிலைக்கேற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகள்.


பதிவு மற்றும் பங்கேற்புதகுதி: 

இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் UDISE+ குறியீட்டைக் கொண்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இது கட்டாயமாகும்.


செயல்முறை: 

பள்ளிகள் சுய மதிப்பீட்டுக் கணக்கெடுப்புகளைப் பூர்த்தி செய்து, புவிக்குறியிடப்பட்ட புகைப்பட ஆதாரங்களைப் பதிவேற்றி, அதிகாரப்பூர்வ SHVR இணையதளம் அல்லது மொபைல் செயலி வழியாகத் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.


SHVR stands for Swachh Evam Harit Vidyalaya Rating, a nationwide Indian government initiative by the Ministry of Education's Department of School Education & Literacy.

 It evaluates schools on cleanliness, water, sanitation, hygiene (WASH), and eco-friendly Mission LiFE activities to promote green campus standards.


Key Rating Themes

Water: Safe drinking water availability and storage.

Toilet: Clean, accessible facilities for students and staff.

Handwashing: Soap availability near washing stations.

Operation & Maintenance: Regular upkeep of campus infrastructure.

Behavior Change: Hygiene education and student capacity building.

Mission LiFE: Climate-smart and eco-friendly actions.


Registration and Participation Eligibility: 

Mandatory for all recognized government, aided, and private schools across India having a valid UDISE+ code.

Process: Schools must complete self-assessment surveys, upload geo-tagged photo evidence, and submit data via the Official SHVR Portal or mobile app.



>>> SHVR பதிவு செய்யும் வழிமுறை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Kalanjiyam Mobile App New Version Update - Version 1.23.5 - Updated on 16-08-2026

 



Kalanjiyam Mobile App New Version Update - Version 1.23.5 - Updated on 16-08-2026


KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.5

* 

IFHRMS Kalanjiyam Mobile App New App New Update



* Version 1.23.5


* Updated on 16-08-2026



* Whats New?

களஞ்சியம் Kalanjiyam App New Update 1.23.5

👉  NHIS - Family member add and update


👉 Enhancement and Bug Fixes


App Update செய்ய Direct link

👇👇👇👇👇👇👇



About this App

Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls

Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.



TAPS - மாதாந்திர இடைக்காலத் தொகை (Interim Payout) வழங்குதல் குறித்து, ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு (DDOs) மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்கள்



தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் TAPS - மாதாந்திர இடைக்காலத் தொகை (Interim Payout) வழங்குதல் குறித்து, பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு (DDO) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்கள்


Instructions from the Coimbatore District Collector to Drawing and Disbursing Officers (DDOs) regarding the disbursement of the monthly interim payout under the Tamil Nadu Assured Pension Scheme (TAPS).



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


 

NHIS 2026 E CARD Download செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்



புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CARD பதிவிறக்கம் செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்


2026 ஆண்டிற்கான புதுபிக்கப்பட்ட  NHIS புதிய காப்பீட்டு  அட்டை(E-CARD) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கீழே உள்ள லிங்க் மூலம் சென்று உங்கள் IFHRMS ID NO மற்றும் DOB தரவேண்டும் SCHEME NAME என்ற பகுதியில் வரும் முதல் OPTION-ல் Tamil Nadu Gov.Employee Scheme 2026 என்பதை தரவேண்டும் 


உள்ளீடாக

IFHRMS ID NO

DOB


தர வேண்டும்


கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 


👇


https://tnnhis2016.com/TnHome.aspx


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CAED குறித்த முக்கிய தகவல் 



காப்பீட்டு திட்டத்தில் இரண்டு மூன்றாம் தரப்பு நிர்வாகி (Third party Administrator) உள்ளார்கள்.


Medi Assist  என்ற நிறுவனம் 20 மாவட்டங்களிலும், MD India  என்ற நிறுவனம் 18 மாவட்டங்களிலும் காப்பீட்டு திட்டத்தினை நடைமுறை படுத்திட அரசு அனுமதி வழங்கி உள்ளது 


Medi Assist நடைமுறை படுத்தும் மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் இன்னும் சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.


எனவே இந்த நிறுவனம் செயல்படும் 20 மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் தற்போது பதிவிறக்கம் செய்ய இயலாது. சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.


எந்தெந்த மாவட்டத்திற்கு எந்த நிறுவனம் என்ற விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



ரயில் நிலைய குடிநீரில் வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் E.Coli பாக்டீரியா - CAG அதிர்ச்சி அறிக்கை

 


ரயில் நிலைய குடிநீரில் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் எ.கோலி பாக்டீரியா - இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அதிர்ச்சி அறிக்கை  


ரயில் நிலைய குடிநீரில் வயிற்றுக்கு  பாதிப்பை ஏற்படுத்தும் எ.கோலி பாக்டீரியா - இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அதிர்ச்சிகரமான அறிக்கை  


இது குறித்த Geminiன் தகவல்

தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG)சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கை,  இந்தியா முழுவதும் உள்ள பல ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் குளிர்விப்பான்களில் ஈ. கோலை பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்துள்ளது . 


முக்கிய கண்டுபிடிப்புகள்

பாதிக்கப்பட்ட நிலையங்கள்: 

தெற்கு ரயில்வேயில் உள்ள கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு சந்திப்பு உட்பட எட்டு நிலையங்களில், தண்ணீர் குளிர்விப்பான் மாதிரிகளில் ஈ.கோலை தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . 


பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகள்:

ஹைதராபாத், மும்பை (சிஎஸ்எம்டி, பிவண்டி ரோடு, கல்யாண், லோனாவாலா) மற்றும் மதுபூரில் உள்ள ரயில் நிலையங்களிலும்  மாசு காணப்பட்டது.


சுகாதார அபாயங்கள்: 

ஈ. கோலை பாக்டீரியா , நீரில் மலக்கழிவு கலப்படம் ஏற்படுவதைக் குறிக்கிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு, உணவு நஞ்சாதல், வயிற்று வலி மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.


பரந்த குறைபாடுகள்: 

புறநகர் அல்லாத நிலையங்களில் கிட்டத்தட்ட 90% இல் அடிப்படை பரிந்துரைக்கப்பட்ட வசதிகள் இல்லை என்றும், வழக்கமான நீர் பரிசோதனை அடிக்கடி தவிர்க்கப்பட்டது என்றும் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரயில்வே பதில்

ரயில் நிலைய நீரின் தரத்தை வாரிய அளவில் கண்காணிக்கவும், 20,000 இடங்களில் வடிகட்டுதல் அமைப்புகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


நீங்க நடிகர் மம்மூட்டியா? என்னை ஃபாலோ செய்யுங்க! - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழர் - வைரல் வீடியோவின் பின்னணி

 


நடிகர் மம்மூட்டிக்கு பைக்கில் சென்று வழிகாட்டிய தமிழர்


A Tamil person who rode a motorcycle ahead to guide actor Mammootty.


நீங்க நடிகர் மம்மூட்டியா? என்னை ஃபாலோ செய்யுங்க! - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழர் - வைரல் வீடியோவின் பின்னணி


* தமிழ்நாட்டின் காரைக்குடியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் கேரளா திரும்பிக் கொண்டிருந்த மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி வழியறியாமல் தவித்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன் என்ற ரசிகர் அதிகாலை 3:30 மணிக்கு பைக்கில் முன்சென்று வழிகாட்டி உதவிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் தமிழரை "நம்ம ஃபிரெண்டு" என மம்மூட்டி கூறுகிறார். மேலும், அவரின் பைக்கை ஃபாலோ செய்யும்போது


 "சொந்தம் என்ன பந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன

உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நான் இல்லை ஹோய்"


என மம்மூட்டி பாடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


அந்த வீடியோவை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடந்த நிகழ்வு குறித்தும் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தகவல் வெளியிட்டுள்ளார்.


மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நிதீஷ் சகதேவன் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிந்து அதிகாலை வேளையில் மம்மூட்டி, தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷாரடி, ஜார்ஜ் மற்றும் ஓட்டுநர் உன்னி ஆகியோர் காரில் கேரளா நோக்கிப் புறப்பட்டனர்.


​திருப்பத்தூர் அருகே சென்றபோது நெடுஞ்சாலை அடைக்கப்பட்டிருந்தது. மாற்று வழியைக் கண்டறிய கூகுள் மேப் உதவியை நாடிய போதிலும், பல வழிகளில் சுற்றித் திரிந்தும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரில் அலைந்ததால் சோர்வடைந்த மம்மூட்டி, "மீண்டும் காரைக்குடி அறைக்கே திரும்பிச் செல்லலாம், நாளை காலை பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினார். அடுத்த நாள் திட்டங்கள் அனைத்தும் வீணாகிவிடுமே என்று படக்குழுவினர் யோசித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது பட்டமங்கலம் பகுதியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்க்கில் கார் நிறுத்தப்பட்டது. அங்கு கொசுவலைக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் வழி கேட்டனர். அவர் கூறிய வழிகள் அனைத்தும் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த பாதைகளாகவே இருந்தன. ​அந்த சத்தம் கேட்டு, அருகே தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு இளைஞர் அங்கு வந்தார். காரில் இருந்தவர்களிடம் "நீங்க தமிழா, மலையாளிகளா?" என்று கேட்டவாறே காரின் உட்பகுதியை உற்றுப் பார்த்தார்.


​காரில் அமர்ந்திருப்பது மெகாஸ்டார் மம்மூட்டி என்பதைக் கண்டதும், அந்த இளைஞரின் தூக்கம் பறந்துபோய் முகத்தில் சொல்லொணா வியப்பும் உற்சாகமும் கூடியது. உடனே அவர் பரவசத்துடன், “நீங்க மம்மூட்டி சார்தானே, என்னை ஃபாலோ செய்யுங்க...” என்று கூறி, தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.


கூகுள் மேப்பிற்கே தெரியாத குறுக்கு வழிகள் வழியாக, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் தனது இருசக்கர வாகனத்தில் முன்சென்று மம்மூட்டியின் காருக்கு அவர் வழிகாட்டினார். நெடுஞ்சாலையை அடைந்ததும், "அப்படியே ஸ்ட்ரைட்டா போனா கேரளா வந்துரும்" என்று கையைக் காட்டி வழியனுப்பினார்.


​அப்போது நடிகர் ரமேஷ் பிஷாரடி, "இந்த நல்ல மனிதர் நாளை யாரிடமாவது அதிகாலையில் மம்மூக்காவைப் பார்த்து வழி காட்டினேன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்களே" என்றார். உடனே மம்மூட்டி காரில் இருந்து இறங்கி, அந்த இளைஞரின் செல்போனை வாங்கி ரமேஷ் பிஷாரடியிடம் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார்.


மம்மூட்டி அவரை அன்போடு அணைத்துக்கொண்டு, "உன் பெயர் என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர் "பாண்டியன்" என்று பதிலளித்தார். "அவரது அக்கறையை நாம் பகிர வேண்டும் ஆன்டோ சேட்டா... இந்த பாண்டியன் பான்-இந்திய அளவில் பிரபலமாகட்டும்!" என்றார் ரமேஷ் பிஷாரடி. ​எதிர்பாராத நேரத்தில் நள்ளிரவில் உதவி செய்த தமிழ்நாட்டு இளைஞர் பாண்டியனின் செயல் மம்மூட்டியின் உள்ளத்தை கவர்ந்தது.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




Census தகவலால் அரசின் நலத்திட்ட உதவிகள் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் : தனிப்பட்ட விவரங்களை அளிக்க மக்கள் தயக்கம்



Census தகவலால் அரசின் நலத்திட்ட உதவிகள் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் :  தனிப்பட்ட விவரங்களை அளிக்க மக்கள் தயக்கம் - நாளிதழ் செய்தி 


அரசின் நலத்திட்ட உதவிகள் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம்


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் தனிப்பட்ட விவரங்களை அளிக்க கிராம மக்கள் தயக்கம்


களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு, கால அவகாசம் வழங்க கோரிக்கை




மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) விவரங்களை அளிப்பதால் அரசின் நலத்திட்ட உதவிகள் எப்போது ரத்தாகாது என மத்திய அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளனர். இந்த அச்சம் முற்றிலும் அடிப்படையற்றது என்று தெரிவித்துள்ளனர்.


அரசின் விளக்கம் மற்றும் உண்மைகள்

நலத்திட்டங்கள் ரத்தாகாது: 

மக்கள் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும் எந்தவொரு நலத்திட்ட உதவியையும் அல்லது மானியத்தையும் ரத்து செய்யப் பயன்படுத்தப்படாது.


திட்டமிடலுக்கான ஆதாரம்: 

நாட்டின் எதிர்கால வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் ஏழை எளியோருக்கான புதிய நலத்திட்டங்களைச் சரியாக வடிவமைக்கவே இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.


பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை: 

1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 15-ன் படி, பொதுமக்கள் வழங்கும் தனிப்பட்ட விவரங்கள் முற்றிலும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும். இவை யாருடனும் பகிரப்படாது.


மக்கள் கவனத்திற்குகணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் அச்சமின்றி உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.


ஆன்லைன் மூலம் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்ய விரும்பினால் Official Census Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


Is it 80th Independence Day or 79th

 


இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா?


Is the 79th Independence Day being celebrated today, or the 80th?


இன்று (ஆகஸ்ட் 15, 2026) இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 


இது சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது.


கணக்கீடு முறை


79 ஆண்டுகள் நிறைவு: 1947 முதல் 2026 வரை முழுமையடைந்த ஆண்டுகள் (2026 - 1947 = 79).


80-வது தினம்: 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட்ட முதல் சுதந்திர தினத்தை கணக்கில் சேர்த்தால், இது 80-வது சுதந்திர தின விழாவாகும்.


ஆகவே இன்று கொண்டாடப்படுவது 80வது சுதந்திர தின விழாவாகும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - TNPSC அறிவிப்பு வெளியீடு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு  மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை சான்றிதழ்...