இடுகைகள்

Medicine லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா), எம்.டி. (யுனானி) மற்றும் எம்.டி.(ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை...

படம்
 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா), எம்.டி. (யுனானி) மற்றும் எம்.டி.(ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை...

தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை - எச்சரிக்கைப் பதிவு - சில மருத்துவ அறிவுரைகள் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா...

படம்
  தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை  அலர்ட் பதிவு  சில மருத்துவ அறிவுரைகள்  Dr.A.B.ஃபரூக் அப்துல்லா  பொது நல மருத்துவர்  சிவகங்கை  தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது.  கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது.  இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம்.  இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.  வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை  நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன.  உடல் சூடாவதை தடுப்பது எப்படி?  1. தண்ணீர்பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம் 2. தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில் ,  ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை கால் முகம் போன்றவற்றை கழுவலாம்.  இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும். 3. வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும்.  ஜீன்

MEFTAL மாத்திரை பயன்பாடு - எதிர்விளைவுகள் குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை (Medicines Authority of India warns about the use of MEFTAL tablets & side effects)...

படம்
 MEFTAL மாத்திரை பயன்பாடு - எதிர்விளைவுகள் குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை (Medicines Authority of India warns about the use of MEFTAL tablets & side effects)... மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் 'MEFTAL' வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய அரசு எச்சரிக்கை. ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு, தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்புள்ளது.  மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி எழும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான  அலர்ட் வழங்கியுள்ளது.  இது குறித்த Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா அவர்களின் பதிவு... அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான  அலர்ட் வழங்கியுள்ளது.  இது போன்ற அலர்ட்களை தொடர்ந்து வழங்குவது இத்துறையின் பணியாகும்.  சமீபத்தில் வந்

தந்தையைப் போல் தனக்கும் பக்கவாத பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு மாத்திரை கேட்டவருக்கு ஆறு மாத்திரைகள் பரிந்துரைத்ததாக பதிவிட்ட மருத்துவர் - வைரலாகும் செய்தி (The doctor posted that he prescribed six pills to a person who asked for a pill to prevent him from having a stroke like his father - viral news)...

படம்
தந்தையைப் போல் தனக்கும் பக்கவாத பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு மாத்திரை கேட்டவருக்கு ஆறு மாத்திரைகள் பரிந்துரைத்ததாக பதிவிட்ட மருத்துவர் - வைரலாகும் செய்தி (The doctor posted that he prescribed six pills to a person who asked for a pill to prevent him from having a stroke like his father - viral news)...  பக்கவாதத்தைத் தடுக்க ஆஸ்பிரின் மாத்திரையை நான் பரிந்துரைக்க வேண்டும் என்று 35 வயதான அவர் இன்று என்னிடம் ஆலோசனை கேட்டார்.  60 வயதான அவரது தந்தை சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், மேலும் எதிர்காலத்தில் அவருக்கு பக்கவாதம் வருவதற்கான அதிக ஆபத்து குறித்து அவர் கவலைப்பட்டார்.  ஒரு மாத்திரைக்கு (ஆஸ்பிரின்) பதிலாக, நான் "6 மாத்திரைகள்" (எனது மருந்துச் சீட்டின் பரிந்துரைகள் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது) பரிந்துரைத்தேன். 35-yr old consulted me today, as he wanted me to prescribe aspirin pill to prevent stroke.  His father aged 60 had recently suffered from stroke (paralysis), and he was concerned about his higher risk of getting stroke in future.  Instead of one pill (a

காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி - இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு (66 children died after drinking cough medicine in Gambia - WHO orders to investigate Indian agency)...

படம்
 காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி - இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு (66 children died after drinking cough medicine in Gambia - WHO orders to investigate Indian agency)... ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஹரியாணாவின் சோனிபட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த மருந்துகள் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், காம்பியாவில் குழந்தைகள் இறப்புடன்

மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்யின் பயன்கள் (Medicinal Benefits of Neem Seed Oil)...

படம்
மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்யின் பயன்கள் (Medicinal Benefits of Neem Seed Oil)... வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை  தினமும் முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும். குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும். காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும். வேப்ப எண்ணெய்யில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது.   வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும். தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலைப் பெறலாம். வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு உகந்தது. வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்த

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)...

படம்
பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)... பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது. உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது. தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் - தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை: - 1 பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்

B.Sc., (Nursing), B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர 25-10-2021 முதல் 10-11-2021 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு...

படம்
 B.Sc., (Nursing), B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர 25-10-2021 முதல் 10-11-2021 வரை tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org ஆகிய வலைதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் - மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு...

கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு மருந்து - மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை...

படம்
 கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்புக்கு Amphotericin - B என்னும் மருந்தைப் பயன்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை...

தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கரோனா தடுப்பு மருந்து: டிஆர்டிஓ கண்டுபிடித்த 2DG மருந்து அடுத்த வாரம் அறிமுகம்...

படம்
 தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கரோனா தடுப்பு மருந்தை அடுத்த வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் 2டிஜி கரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும். கரோனாவிலிருந்து விடுபட முடியும். முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ் பவுடர் மருந்துகளை வெளியிடுவதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன. இந்த முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய

டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மருந்து - கொரோனா பாதிப்பை குணப்படுத்தும்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி...

படம்
  இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பு உருவாக்கிய கொரோனா மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கென குறிப்பிட்ட எந்த மருந்தும் தற்போது நடைமுறையில் இல்லை. அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமாக ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், டிஆர்டிஓவின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) மற்றும் ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகத்துடன் இணைந்து 2 டியோக்ஸிடி குளுக்கோஸ் (2டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் போன்றது. இதை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்.  2 கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்த மருந்தை பெற்ற நோயாளிகள் விரைவில் குணமடைவது நிரூபணமாகி உள்ளது. இதன் 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து 2DG மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரகம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை தந்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சக அறிக்கையில், ‘‘மே 1ம் தேதி முதல் அதிக மற்றும் நடுத்தர பாதிப்புள்ள கொரோனா ந

தடுப்பூசி, ரெம்டிசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
 தடுப்பூசி, ரெம்டிசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த செய்தி தொடர்பாகவும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை தொடர்பான செய்திகளையும் தாமாக முன்வந்து ஐகோர்ட் வழக்கு எடுத்துக்கொண்டது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, தடுப்பு மருந்து பற்றாக்குறை இல்லை என்று விளக்கம் அளித்தார். இருப்பினும், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. ரெம்டிசிவிர் மருந்து பற்றாக்குறை இல்லை என்று விளக்கம் அளித்தார். மேலும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகியும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி, அடுக்கு அடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தனர். மத்திய அரசு தரப்பில், வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது குறித்து தமிழக

தமிழகத்தில் வருகிற ஜனவரி 31ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்...

படம்
 தமிழகத்தில் வருகிற 31-ஆம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி காரணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 31-ஆம் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக, பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையங்களிலும் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...