Google Forms With QR Code முறையில் மதிப்பீடுகள் உருவாக்கும் வழிமுறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Google Forms With QR Code முறையில் மதிப்பீடுகள் உருவாக்கும் வழிமுறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கின்றன – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்
தமிழ்நாட்டில் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குள் நுழைகின்றனர்.
2025-26 கல்வியாண்டிற்கான தமிழக பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இந்தத் தேதியில் செயல்படத் தொடங்க உள்ளன.
பள்ளி திறப்பதற்கு முன், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இவை மாணவர்களின் பள்ளி வாழ்க்கையை சீராகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் வகையில் அமைந்துள்ளன.
*1. பாடப்புத்தகங்கள் விநியோகம்*
பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான புத்தகங்கள் ஏற்கனவே மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தலைமையாசிரியர்கள், புத்தகங்களை வரிசையாக வகுப்புகளின்படி தயார் செய்து வைக்க வேண்டும்.
*2. பள்ளி வளாக சுத்தம் மற்றும் பராமரிப்பு*
பள்ளி வளாகம் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.
கழிவுநீர் சேகரிப்பு, கழிப்பறை வசதி, குடிநீர் உபகரணங்கள் ஆகியவை சீரமைக்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
*3. பாடத்திட்டம், நாட்காட்டி மற்றும் கால அட்டவணை*
புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்ட திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
வாராந்திர கால அட்டவணை மற்றும் ஆண்டு நாட்காட்டி தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
*4. மாணவர் நலத்திட்டங்கள்*
இலவச நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சரியாக பதிவு செய்யப்பட்டு, ஒழுங்காக வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களின் விலாச விவரங்கள், ஆதார் இணைப்பு உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட வேண்டும்.
*5. வாகன பாதுகாப்பு பரிசோதனை*
பள்ளி வாகனங்கள் அனைத்தும் RTO சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அனுமதி சான்றுகள், வாகனப் பராமரிப்பு, டிரைவர் தகவல்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும்.
*6. தொடர்பு முறைமைகள் மற்றும் பெற்றோர் தொடர்பு*
மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்புகள், கால அட்டவணை, விழாக்கள் பற்றிய தகவல்களை SMS / வாட்ஸ்அப் வாயிலாக தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் குறித்து திட்டமிடப்பட வேண்டும்.
*7. வெப்ப அலை / மழை முன்னெச்சரிக்கை*
இந்நேரத்தில் வெப்ப அலை / மழை காரணமாக முன்னெச்சரிக்கைகள் அவசியம்.
தேவையான இடங்களில் கூடுதல் குடிநீர் வசதிகள் மற்றும் நிழலிடங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Maternity Leave Case
மகப்பேறு விடுப்பு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் Supreme Court Judgment - Maternity Leave Case
மகப்பேறு விடுப்பு என்பது மகப்பேறு சலுகைகளில் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் இது பெண்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் என்றும் தமிழ்நாடு பெண் அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதலாவது திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தார். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகள் இருவரும் முதல் கணவரிடம் உள்ளனர். இந்த நிலையில் அரசு பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவர், கருவுற்றிருந்தார்.
இதற்காக அவர் தமது பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக பிரசவ கால விடுமுறைக்காக விண்ணப்பித்த போது, ஏற்கனவே அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக அவருக்கு பிறக்க உள்ள குழந்தைக்கு பிரசவ கால விடுமுறை அளிக்க இயலாது என கூறப்பட்டது.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நபர் நீதிபதி அமர்வில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பார்த்திபன், "ஆசிரியைக்கு 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு காலத்துக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது," என்று உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் இருநபர் நீதிபதி கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், "திருமணம் ஆன அரசு பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது சட்டப்பூர்வமானதுதான். ஆனால், அடிப்படை உரிமை அல்ல," என்று கூறியது. எனவே, ஒரு நபர் நீதிபதி அளித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆசிரியை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "மகப்பேறு சலுகைச் சட்டம் என்பது பெண்களில் மகப்பேறு விடுமுறை உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒரு தாயாகவும், அரசு ஊழியராகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்கான சாத்தியங்கள் போன்ற நெகிழ்வு தன்மைகளை பெண்களுக்கு அளிக்கிறது,” என்றனர்.
மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “பெண் ஆசிரியைக்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த போதிலும், இப்போதைய குழந்தைக்கும் அவருக்கு மகப்பேறு உரிமை உள்ளது. பெண் ஆசிரியை அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். அரசு வேலையில் சேர்ந்த பின்னர், அவர் இரண்டாவது திருமணம் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். எனவே, அரசு பணியில் சேர்ந்த பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததை முதல் குழந்தையாக கருத வேண்டும். மேலும் முதல் திருமணம் மூலம் பிறந்த இரு குழந்தைகள் அவரிடம் இல்லை. முதலாவது கணவரிடம் அதாவது குழந்தைகள் அவரது தந்தையுடன் வசிக்கின்றனர்.
எனவே, மகப்பேறு கால விடுமுறை என்பது மகப்பேறு கால பலன்களோடு இணைந்ததாகும். உடல் நல உரிமை, தனியுரிமை, சம உரிமை, பாகுபாடு காட்டாமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை உள்ளிட்டவை போல சர்வதேச மனித உரிமை சட்டம் உள்ளிட்டவற்றில் இனப்பெருக்க உரிமைகள் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிச்சயமாக பாராட்டத்தக்க நோக்கமாகும், மேலும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதன் நோக்கமும் அதைப் போன்றதுதான். நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இரண்டு குழந்தைகள் விதிமுறை என்ற நோக்கமும், தற்போதைய வழக்கு சூழ்நிலைகளில் மகப்பேறு விடுப்பு உட்பட பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. சமூக நோக்கத்தை அடைய, இரண்டும் ஒரு நோக்கமாக மற்றும் பகுத்தறிவு முறையில் இணக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களில் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 1.12 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் மார்ச் மாதத்துக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு மே 23-ம் தேதிக்குள் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2 மாதங்களில் இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளது இதுவே முதல்முறை. விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த ஆண்டு 33 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், 45 ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மழலையர் வகுப்புகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப் பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்
Tourists narrowly escape from elephants during off-road jeep safari
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
மைசூர் அரச குடும்பத்திற்கு ரூபாய் 3400 கோடி இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக மாநிலம், பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில், பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை அகலப்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது.
இப்பணிகளுக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தை சேர்ந்த 15.39 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு 2023ல் கையகப்படுத்தியது.
இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அரசு மவுனம் சாதித்தது.
இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில், அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம், 3,400 கோடி ரூபாய் டி.டி.ஆர்., எனும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை தொகையாக அளிக்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த தொகையை உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டது. இதன்படி, கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற பதிவாளர் பெயரில் 3,400 கோடியை டிபாசிட் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.
மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3,400 கோடி ரூபாயை உடனடியாக, அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.
கேடிஎம் பைக் நிறுவனத்தை வாங்குகிறது பஜாஜ்
Bajaj to acquire KTM bike company
கேடிஎம் பைக்குகளை தயாரிக்கும் ஆஸ்திரிய நாட்டு நிறுவனத்தை கையகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்
கேடிஎம் நிறுவனத்தில் ரூ.7,765 கோடி முதலீடு செய்து அதன் 4 பெரும்பான்மை பங்குகளை வாங்குகிறது பஜாஜ்
கேடிஎம்ஐ வாங்குவதன் மூலம் உயர் திறன் மோட்டார் பைக் சந்தையில் பஜாஜ் முக்கிய இடம் பிடிக்கிறது
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உதவியுடன் சில ஐரோப்பிய பைக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) என்பன அந்த சில ஐரோப்பிய பைக் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் சில நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனத்தின் மூலமாகவே, இன்னமும் செயல்பட்டு வருகின்றன. அதாவது, ஐரோப்பிய நிறுவனங்கள் நம் இந்தியாவின் பஜாஜ் மூலமாகவே உயிர்பிப்புடன் உள்ளன.
ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தை காட்டிலும் பழமையான பைக் உற்பத்தி நிறுவனம் ஆகும். இரு நண்பர்கள் மூலமாக 1934ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கேடிஎம் நிறுவனம் முதல் 55 வருட கால கட்டத்திற்கு பெரியதாக எந்தவொரு சறுக்கலையும் சந்திக்கவில்லை.
நிறுவனத்தை நிறுவிய நண்பர்கள் இருவரும் இறந்து போனாலும், அவர்களில் ஒருவரது மகன் கேடிஎம் நிறுவனத்தை தூக்கி பிடித்தது மட்டுமின்றி, மெல்ல மெல்ல நிறுவனத்தையும் வளர்க்க ஆரம்பித்தார். இருப்பினும், அவரும் 1989இல் இயற்கை எய்ததை அடுத்து, 1991க்கு பிறகு எந்த பக்கம் செல்வது என தெரியாமல் கேடிஎம் நிறுவனம் தடுமாறியது.
அப்போதுதான், ஆஸ்திரியா நாட்டை தாயகமாக கொண்ட பியரர் மொபிலிட்டி ஏஜி (Pierer Mobility AG) நிறுவனத்தால் கேடிஎம் நிறுவனம் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் சறுக்கலை சந்தித்துவரும் கேடிஎம் நிறுவனத்தை காப்பாற்றி இருப்பது, பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனம் கிடையாது; இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ ஆகும்.
பல்சர் (Pulsar) பைக்குகள் மூலமாக இலாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்த 2007ஆம் ஆண்டு சமயத்தில் அந்த இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனத்தின் கேடிஎம் பிராண்டின் பங்கை வாங்க பஜாஜ் பயன்படுத்தியது. அதன்பின் ஒவ்வொரு வருடமாக கேடிஎம் பிராண்ட் மீதான தனது உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்த பஜாஜ் நிறுவனம், 2012ஆம் ஆண்டில் கேடிஎம் நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தது.
இதன் மூலமாக பஜாஜ் ஆட்டோ உடன் இன்னும் நெருக்கமாகியதன் மூலம் 2013இல் கேடிஎம் நிறுவனத்தின் சுமார் 47.97% பங்கை பஜாஜ் பெற்றது. தற்போது, கேடிஎம் நிறுவனம் மீதான பஜாஜ் ஆட்டோவின் பங்கு மதிப்பு 49.9% ஆகும். இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தை பியர் மொபிலிட்டி நிறுவனத்திடம் இருந்து பிரித்து முழுவதுமாக தானே சொந்தமாக்கி கொள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாராகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தனித்து செயல்பட வேண்டி கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கேடிஎம் நிறுவனம் சார்பில் ஆஸ்திரியா நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு கேடிஎம் நிறுவனம் சார்பில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எல்லா காரணங்களும் கேடிஎம் நிறுவனத்தை பெரியதாக்க வேண்டும் என்பதாக தான் இருந்தன. இந்த நிலையில், சுமார் 56.6 கோடி யூரோக்களை (ரூ.5,431 கோடி) பியர் மொபிலிட்டி நிறுவனத்திற்கு பஜாஜ் ஆட்டோ கடனுதவியாக வழங்க உள்ளது.
இதற்கான ஒப்பந்தங்கள் சமீபத்தில்தான் கையெழுத்தாகி முடிந்துள்ளன. கேடிஎம் நிறுவனத்தில் முதலீடுகள் வருகிற மே 23ஆம் தேதியோடு நிறைவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. வழக்கம்போல், கேடிஎம் நிறுவனத்தின் வணிகம் சமீப காலமாக மிகவும் சரிவை சந்தித்து வருகிறது. இத்தகைய நேரத்தில் கடனுதவியை கொடுத்து, கேடிஎம் நிறுவனத்தை வளைத்து போடலாம் என்பதுதான் பஜாஜ் ஆட்டோவின் ராஜ தந்திரமாக உள்ளது.
+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (19.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் +2 Supplementary Exam Hall Ticket Downlo...