கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
     
விளக்கம் : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் Secunderabad அமிழ்தம் என்று
உணரத்தக்கதாகும்.


பழமொழி :
Small rudders guide great ships.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும் . முயன்றால் முடியும். - நெல்சன் மண்டேலா.


பொது அறிவு :

" 01.பனாமா கால்வாய் இணைக்கும் இரு  பெருங்கடல்கள் எவை?

    அட்லாண்டிக் மற்றும் பசுபிக்       பெருங்கடல்கள்

(Atlantic and Pacific oceans)

02. இந்திய காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?

               ஆலமரம்(Banyan tree)


English words & Tips :

pamper   -       செல்லம் கொடு,

virtue        -      நல்லொழுக்கம்


Grammar Tips

K rule
We all know that letter K is silent in some words but most of the children got confused.There is a small trick ,when it is silent and when it is not.

K  is not silent in King kite and kettle whereas

K is silent in knot,knit,knot,knight, from this we can conclude that when k comes before n then K is silent 


அறிவியல் களஞ்சியம் :

விஞ்ஞானிகள் இருண்ட பொருளைத் தேட ஒரு லெவிட்டேட்டட் காந்தத்தைப் பயன்படுத்தினர், இது பிரபஞ்சம் முழுவதும் இருப்பதாக நம்பப்படும் அடையாளம் காணப்படாத பொருள். இருண்ட பொருள் அல்ட்ராலைட் துகள்களால் ஆனது என்றால், அது காந்தத்தை நுட்பமாகத் தள்ளும் அலை போல நடந்து கொள்ளக்கூடும்.


ஜூன் 19

ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.


நீதிக்கதை

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது.

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள்

19.06.2025

இன்றைய செய்திகள்

பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்; சீனாவை விட 3 மடங்கு குறைவு: சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.

⭐ உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 6,000 க்கும் மேற்பட்ட வடகொரியா வீரர்கள் பலியானதாக இங்கிலாந்து உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

⭐ தமிழ் நாடெங்கும் 10,000 இடங்களில் தமிழக மக்களின் நலத்திட்ட உதவிகள் சம்பந்தமாக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய மகளிர் ஹாக்கி அணி தற்போது நடந்து வரும் FIH புரோ லீக்கில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.

🏀இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி வரவிருக்கும் நான்கு நாடுகள் போட்டியில் பங்கேற்க  பெர்லினுக்கு புறப்பட்டுள்ளது.



TODAY'S HEADLINES

✏️ India has more nuclear weapons than Pakistan; 3 times fewer than China,  report by  International research institute

✏️ A British intelligence report says more than 6,000 North Korean soldiers were killed after being unable to withstand the Ukrainian offensive.

✏️ Theஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார். Tamil Nadu government is planning to hold special camps related to welfare schemes for the people of Tamil Nadu at 10,000 locations acrosஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.s Tamil Nadu.

*SPORTS NEWS*

🏀 The Indian women's hockey team is currently facing Argentina in the ongoing FIH Pro League.

🏀 The Indian junior men's hockey team has left for Berlin to participate in the upcoming Four Nations Tournament.


Covai women ICT_போதிமரம்


+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (19.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்

 

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (19.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


+2 Supplementary Exam Hall Ticket Download From Tomorrow (19.06.2025) Afternoon 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இதர பாடங்களில் உயர்கல்வி Incentive பெற்றதை பிடித்தம் செய்தல் & ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் - DEE Proceedings

 

 

கற்பிக்கப்படாத இதர பாடங்களுக்கு உயர் கல்வி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டது - ஊதிய மறு நிர்ணயம் செய்து அரசுக் கணக்கில் செலுத்த உத்தரவு - தவறுதலாக ஊதிய உயர்வு வழங்கியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


Disciplinary action taken against officers who fixed higher education incentive pay for higher education except Tamil, English, Mathematics, Science and Social Science subjects - Deductions & erroneous determination of pay - Proceedings of the Director of Elementary Education


தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் பாடங்களை (தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்) தவிர- இதர பாடங்களில் பட்டம் பெற்று உயர்கல்வி ஊக்க ஊதியம் பெற்றமை பிடித்தம் செய்தல்  மற்றும் தவறுதலாக ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


1-8 வகுப்புகளில் கற்பிக்கும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தவிர இதர பாடங்களில் பட்டம் பெற்று உயர்கல்வி ஊக்க ஊதியம் பெற்றமை - பிடித்தம் செய்தல்  மற்றும் தவறுதலாக ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 028490 / இ1/ 2024, நாள் : 17-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

விளக்கம் : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது


பழமொழி :
Do well what you have to do.

செய்வன திருந்தச் செய்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

உங்களின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் உங்களின் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் - அப்துல் கலாம்


பொது அறிவு :

01.இந்தியாவில் தேசிய வன ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?

டேராடூன்(Dehradun)

02. உலக வங்கியின் தலைமையகம் எங்கு உள்ளது?

வாஷிங்டன்(Washington)


English words & Tips :

insolent     -     திமிரான

innate    -       உடன் பிறந்த


Grammar Tips :

* The most simple way to find that a given word is a noun is if it follows an article like "the" or "a." Examples: The Apple is red in colour.

* Nouns can also follow possessives or numbers. Examples: There are four pillows on my bed.



அறிவியல் களஞ்சியம் :

பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை ‘இரட்டைக்கோள்கள்’ என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை. ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்..


ஜூன் 18

மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவுநாள்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


கக்கன் அவர்களின் பிறந்தநாள்

திரு. கக்கன்

பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார்.


 
நீதிக்கதை

ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன.

இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம்.

இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது.

ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்தி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது.

சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது.

அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே செத்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.



இன்றைய செய்திகள்

18.06.2025

⭐ தமிழ்நாட்டில் புதிதாக 3,103 வழித்தடங்களில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

⭐இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அரபு நாடுகளில் பணியாற்றி வரும் 92 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

⭐சென்னையிலிருந்து ,,
திருநெல்வேலிக்கு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் இரயில்கள் இயக்கப்படும் - தெற்கு இரயில்வே அறிவிப்பு.

⭐நீட் மறுக் கூட்டல் அறிவிப்பு தேதி ஒத்திவைப்பு-

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 பாரிஸ் டயமண்ட் லீக்கிற்கு நீரஜ் சோப்ரா உறுதி செய்யப்பட்டார்.
இந்தியாவின் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பாரிஸ் டயமண்ட் லீக் தொடக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

🏀U-23 & சீனியர் பெண்கள் கால்பந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Today's Headlines

✏ The minibus scheme has been introduced on 3,103 new routes in Tamil Nadu.

✏ Additional trains will be run from Chennai to Tirunelveli to avoid passenger congestion - Southern Railway announcement

✏ NEET re-valuation  announcement date postponed

✏ The Israel-Iran conflict has disrupted crude oil production, putting 9.2 million Indians working in Arab countries at risk of losing their jobs.

SPORTS NEWS

🏀 Neeraj Chopra confirmed for Paris Diamond League. India's Olympic javelin champion Neeraj Chopra has been included in the starting list for the Paris Diamond League.

🏀 U-23 & Infront Women's Football Teams Announced


Covai women ICT_போதிமரம்


Gpay, Phone Pay போன்ற UPI செயலிகளுக்கான புதிய விதிகள் இன்று முதல் அமல்



Gpay, Phone Pay போன்ற UPI செயலிகளுக்கான புதிய விதிகள் இன்று 17-06-2025 முதல் அமல்


UPI Transactions Rules


யுபிஐ பணப் பரிவர்த்தனைகளின் நேரம் குறைப்பு உள்ளிட்ட புதிய விதிகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.


அதன்படி, கூகுள் பே, ஃபோன்பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளின் நேரம் (Request Pay / Response Pay) 30 வினாடிகளில் இருந்து 15 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.


யுபிஐ பரிவர்த்தனையின் நிலையை (Transaction Status) தெரிந்துகொள்ளும் நேரமும், பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பணம் திரும்பப்பெறுவதற்கான (Transaction Reversal) நேரமும், 30 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. யுபிஐ மூலம் பணம் பெறுபவரின் முகவரி சரிபார்ப்பு (Validating Address) நேரம் 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த யுபிஐ ஆப்கள் மூலமும் பணப்பரிவர்த்தனை செய்யும் கஸ்டமர்களுக்கு என்பிசிஐ (NPCI) என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது இன்று முதல் புது விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. இனிமேல் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து யுபிஐ மூலம் அனுப்பப்படும் பணம் ரூ.100ஆக இருந்தாலும் சரி, ரூ.500ஆக இருந்தாலும் சரி இந்த புது விதிகள் பின்பற்றப்படும். ஆனால், இது கஸ்டமர்களுக்கு எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தாது.


 இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), பீம் (BHIM) போன்ற ஒட்டுமொத்த பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் மட்டுமல்லாமல், பணத்தை அனுப்பும் பேங்குகள் மற்றும் பணத்தை பெறும் பேங்குகளுக்கும் இந்த யுபிஐ பரிவர்த்தனை விதிகள் பொருந்தும். யுபிஐ டிரான்ஸ்சாக்சன் ரெஸ்பான்ஸ் டைம் (UPI Transactions Response Time) ஆனது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதனால், முன்பு இருந்ததைவிட கூடுதல் வேகத்துடன் உங்களது யுபிஐ பரிவர்த்தனைகள் செய்து முடிக்கப்படும். அதாவது, பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை யுபிஐ ஆப்கள் மூலம் கஸ்டமர்கள் பரிவர்த்தனை செய்யும்போது, அந்த பரிவர்த்தனையை எவ்வளவு நேரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்று என்பிசிஐ (NPCI) டைம் லிமிட்டை (Time Limit) வைத்திருக்கிறது.


ஜூன் 16ஆம் தேதிக்கு முன்பு வரையில், ரெக்கொஸ்ட் பே (பணத்தை அனுப்புதல்), ரென்ஸ்பான்ஸ் பே (பணத்தை பெறுதல்) ஆகியவற்றை பேங்குகள் இருந்து யுபிஐ ஆப்கள் மூலம் செய்து முடிப்பதற்கான ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்தது. இந்த டைம், இப்போது 15 நொடிகளுக்கு குறைக்கப்பட்டுவிட்டது. ஆகவே, மேலும் வேகமாக ஒரு யுபிஐ பரிவர்த்தனை செய்து முடிக்கப்படும். அதே நேரத்தில் பணத்தை பெற்ற பிறகோ அல்லது அனுப்பிய பிறகோ யுபிஐ ஆப்கள் மூலம் அந்த பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் செக் (Transaction Status Check) செய்யவதற்கான ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்தது. இன்று முதல் 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல பணத்தை அனுப்பிய பிறகு அது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ரிவர்ஸ் செய்யப்பட்டால்,


அந்த தொகை மீண்டும் உங்களுக்கு வந்து சேருவதற்கான ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்தது. இந்த டைமும் இப்போது 10 நொடிகளாக குறைப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரிவர்ஸ் செய்யப்பட்ட தொகை அதிவேகத்தில் உங்களது அக்கவுண்ட்டுக்கு திருப்பி அனுப்பப்படும். பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர் ஆப்கள் மூலம் முகவரி சரிபார்ப்பு (Validate Address) குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, யுபிஐ ஆப்கள் மூலம் மொபைல் நம்பர் அல்லாமல், அக்கவுண்ட் நம்பர், ஐஎப்எஸ்சி கோட் போன்றவற்றின் மூலம் பணத்தை அனுப்பும்போது, அல்லது கலெக்ட் செய்யும்பொழுதோ அதை சரிபார்ப்பு செய்ய எடுத்து கொள்ளப்படும் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெஸ்பான்ஸ் டைம் விதிகளுடன் இனிமேல் பரிவர்த்தனை நடக்கும்.


இதேபோல ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் நேரடியான மாற்றத்தை கொண்டுவர இருக்கின்றன. இதுவும் லிமிட் அடிப்படையில் வர இருக்கிறது. பேலன்ஸ் சரிபார்ப்பு ஆனது 24 மணி நேரத்துக்கு 50 முறையாக மாற்றப்படுகிறது. ஆகவே, ஒரு யுபிஐ ஆப் மூலம் ஒரு நாளுக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு ஆனது 2 மணி நேரத்துக்கு 3 முறை என்று வர இருக்கிறது. குறைந்தது 90 நொடிகள் இடைவெளியில் சரிபார்ப்பு செய்யலாம். இப்படி ஏகப்பட்ட விதிகள் ஆகஸ்ட் மாதம் வர இருக்கிறது. இதனால், யுபிஐ பேமெண்ட்களின்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் குறையும். அதேபோல எந்த தடையும் இல்லாமல், பரிவர்த்தனைகளை செய்யலாம்.



Application for Paramedical courses starts from 17.06.2025


TamilNadu Paramedical


துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது. Paramedical Admission Prospectus 2025-26


Counseling application for Paramedical courses starts from 17.06.2025


கடைசி நாள் 07.07.2025



 PARAMEDICAL COURSE PROSPECTUS 2025-2026


2025-2026 


படிப்புகள் சார்ந்து தெரிந்து கொள்ள.. விண்ணப்பம் அளிக்க கீழே உள்ள PDF பார்க்கவும்

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



GOVERNMENT OF TAMIL NADU

PROSPECTUS FOR ADMISSION TO PARAMEDICAL DEGREE COURSES UNDER GOVERNMENT QUOTA 2025-2026 SESSION

(As per G.O. (D) No.618, Health and Family Welfare (PME-2) Department, Dated : 12.06.2025 and as amended from time to time)


➢ B.PHARM

➢ B.P.T.

➢ B.ASLP

➢ B.Sc. (NURSING)

➢ B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY

➢ B.Sc. RADIO THERAPY TECHNOLOGY

➢ B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY

➢ B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY

➢ B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY

➢ B.Sc. CARDIAC TECHNOLOGY

➢ B.Sc. CRITICAL CARE TECHNOLOGY

➢ B.Sc. DIALYSIS TECHNOLOGY

➢ B.Sc. PHYSICIAN ASSISTANT

➢ B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY

➢ B.Sc. RESPIRATORY THERAPY

➢ B.OPTOM

➢ B.O.T.

➢ B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY

➢ B.Sc. CLINICAL NUTRITION

LAST DATE FOR UPLOADING ONLINE APPLICATION

07-07- 2025 UPTO 5.00 P.M.


தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASELINE ASSESSMENT

  தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASELINE ASSESSMENT


2025-2026 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்த 2 ஆம் வகுப்பு முதல் 5 ஆம்  வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASE LINE ASSESSMENT TNSED SCHOOLS APPல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது


- EE MISSION



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 Teachers' Transfer Counselling - DSE Proceedings

    2025-26ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் ...