கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Old Pension Scheme லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Old Pension Scheme லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Old Pension Scheme அரசுக்கு செலவைக் குறைக்குமா?

 



பழைய ஓய்வூதியத் திட்டம் அரசுக்கு செலவைக் குறைக்குமா.?


Will the Old Pension Scheme reduce costs for the government?

  

👍👍👍👍👍👍👍👍👍


*_கேள்வி:_*

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும், இதர ஓய்வூதியத் திட்டத்திற்கும் அடிப்படையான வேறுபாடு என்ன.?


*_பதில்:_*

ஓய்வூதியத்திற்காக ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டமே பழைய ஓய்வூதியத் திட்டம்.


இதர ஓய்வூதியத் திட்டங்களான, 

புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS),

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS),

உத்திரவாத ஓய்வூதியத் திட்டம் (GPS),

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS),

தமிழ்நாடு அரசு உறுதியளிக்கும் ஓய்வூதியத் திட்டம் (TAPS ))

போன்ற இதர திட்டங்கள் அனைத்திலும் ஊழியர்களிடம் சந்தா பிடிக்கப்படும்.


நாம் கேட்பது சந்தா பிடிக்காத பழைய ஓய்வூதியத் திட்டமே.!


👍👍👍👍👍👍👍👍👍



*_கேள்வி:_*

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய ராஜஸ்தான், ஜார்கண்ட் சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் சந்தித்த சவால்கள் என்ன.?


*_பதில்:_*


புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்திய தேதி முதல் ரத்து செய்த தேதி வரை பிடித்தம் செய்த பங்கீட்டுத் தொகையை

மேற்கண்ட நான்கு மாநிலங்களும் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) செலுத்தின.


NPS..ஐ ரத்து செய்து OPS திட்டத்தை அமல்படுத்திய பின்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செலுத்திய பணத்தை 

( 10% + 10% )திருப்பித் தர PFRDA மறுத்து விட்டது.


இன்று வரை திருப்பித் தர வில்லை.


இருப்பினும் சம்பந்தபட்ட மாநில அரசுகள் கொள்கை ரீதியாக  OPS திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.


👍👍👍👍👍👍👍👍👍


*_கேள்வி:_*

CPS திட்டத்தை ரத்து செய்தால் தமிழக அரசும் மேற்கண்ட பிரச்சனையை சந்திக்க வேண்டுமா.?


*_பதில்:_*

அப்படி ஒரு பிரச்சனையே எழாது.


தமிழக அரசு PFRDA வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாததால்

CPS திட்டத்தில் பிடித்தம் செய்த பங்கீட்டுத் தொகையை

 ( 10% + 10% ) PFRDA வில் செலுத்தவில்லை.


CPS ல் பிடித்தம் செய்யப்பட்ட 

ரூ. 1,10,000 கோடி  தமிழக அரசிடமே உள்ளது.


👍👍👍.👍👍👍👍👍👍


*_கேள்வி:_*

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதால், தமிழக அரசுக்கு நிதிச் சுமை குறையுமா.?

எப்படி.?


*_பதில்:_*

OPS திட்டத்தை தமிழக அரசு அமுல்படுத்தினால் CPS கணக்கில் உள்ள Rs.1,10,000 கோடி ரூபாயில்

CPS திட்டத்தில் தமிழக அரசு செலுத்திய 10% பங்கீடான 55 ஆயிரம் கோடி ரூபாய் அரசு கணக்கில் திருப்பி வரவு வைக்கப்படும்.


OPS திட்டத்தை அமல்படுத்துவதால் CPS திட்டத்தில் ஒரு வருடம் அரசு செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை ரூ.6240 கோடி செலவு தவிர்க்கப்படும்.


தொடர்ந்து  மாதாந்திர தொடர் செலவுகளும் தவிர்க்கப்படும்.


CPS திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பங்கீட்டுத் தொகை (10% + 10% ) LIC யில் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. முதலீடு செய்த பணத்திற்கு LIC தமிழக அரசுக்கு 6.5% வட்டி வழங்குகிறது.


6.5 % வட்டியை பெற்றுக் கொண்ட தமிழக அரசு One Time Settlement ல் அரசு ஊழியர்களுக்கு 7.1% வட்டி வழங்குகிறது.


 கிடைத்த வட்டியை விட 0.6% கூடுதலாக தமிழக அரசு செலவு செய்து வருகிறது.


OPS திட்டத்தை அமுல்படுத்தினால் தமிழக அரசுக்கு கூடுதலாக வழங்கும் வட்டி 0.6% மிச்சமாகும்,

செலவும் குறையும்.


தொடர் செலவுகளும் குறையும்.



CPS திட்டத்தில் அரசு செலுத்தும் 10% பங்கு தொகை என்பது

ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு,

ஆண்டு ஊதிய உயர்வு,

தேர்வு நிலை,

சிறப்பு நிலைக்கு இரண்டு ஊதிய உயர்வு வழங்குவதால் 10% அரசின் பங்கீட்டுத் தொகை உயர்ந்து கொண்டே இருக்கும்.


அடுத்த ஊதிய மாற்றம் வரும் போது குறைந்தபட்ச ஊதியம் இரட்டிப்பாக உயரும்.


அரசு பங்களிப்பு தொகையும் இரட்டிப்பாக உயரும்.


வரும் 10 ஆண்டுகளில் அரசின் 10% பங்கீட்டுத்தொகை  எவ்வளவு உயரும் என்பதை கணிக்கக் கூட முடியாது.

👍👍👍👍👍👍👍👍👍



*_கேள்வி:_*

ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தியது ஏன்.?


*_பதில்:_*


ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்துவதன் மூலம்,


ஓய்வூதியப் பலன்களுக்கு தமிழக அரசு செய்ய வேண்டிய செலவை கொரானா காலத்தில் ஓராண்டு தள்ளி போடுவதற்காக தான் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆகவும், பின்னர் 59 லிருந்து 60 ஆகவும் உயர்த்தப்பட்டது.


அதே Formula வில் CPS திட்டத்தை ரத்து செய்து OPS திட்டத்தை அமுல்படுத்தினால் தமிழக அரசு ஒரு அரசு ஊழியருக்கு ஓய்வூதியத்திற்காக செய்ய வேண்டிய செலவு 30 ஆண்டுகள் தள்ளிப் போகும்.


தற்போது CPS திட்டத்தில் உள்ள 624140 பேர்களும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறப் போவதில்லை.


மேலும், 60 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே ஓய்வு பெறுவார்கள்.


ஓய்வு பெற்ற பின்புதான் OPS திட்டப்படி அரசு நிதி வழங்கும்.


தற்போது அரசுப் பணியில் உள்ளவர்கள் 30 ஆண்டு பணிபுரிவார்கள்.


 இன்னும் 30 ஆண்டுகள் கழித்து தான் ஓய்வு பெறுவார்கள்.


30 ஆண்டுகளுக்கு பின்னால் ஓய்வு பெறும் ஊழியருக்கு CPS திட்டம்தான் என்றால் மாதாமாதம் தமிழக அரசு பங்கீட்டுத் தொகை வழங்க வேண்டும்.


அதே நேரம் OPS திட்டம் என்றால் தற்போது 30 வயதில் அரசுப் பணி செய்யும் ஊழியர் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து தான் OPS திட்டப்படி தமிழக அரசு ஓய்வூதியத்திற்கு  நிதி வழங்கும்.


ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தியதால் அரசுக்கு செலவு இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போகும் என்றால்,


CPS..ஐ ரத்து செய்து OPS திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் தமிழக அரசின் செலவு 25 லிருந்து 30 ஆண்டுகள் தள்ளிப் போகும் என்பது தான் உண்மை.


*_பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதே, தமிழக அரசுக்கு பெரும் நிதிச் செலவைக் குறைத்து லாபம் தரும் பாதுகாப்பான திட்டமாகும்.!_*


TAPS, OPS அல்லது CPS தொடர்வது குறித்து மாண்புமிகு நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களது பதில்



TAPS, OPS அல்லது CPS தொடர்வது குறித்து மாண்புமிகு நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களது பதில்


TAPS திட்டத்தை அமல்படுத்தினால் ஆண்டிற்கு 5000 கோடியும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10%மும் செலவாகும் என்று வெள்ளை அறிக்கையில் உள்ளதே. TAPS அமுல்படுத்தப்படுமா? அல்லது உங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய ஓய்வு திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் பதில்


TAPS புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5000 கோடி கூடுதல் தொடர் செலவினம்


 TAPS, OPS அல்லது CPS தொடர்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து  முடிவு செய்யப்படும்


- நிதியமைச்சர் மரியவில்சன்



1012 துப்புரவுப் பணியாளர்களுக்கு Old Pension Scheme - G.O. No.: 03, Dated: 09-02-2026 வெளியீடு

 

1012 துப்புரவுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் - அரசாணை எண் : 03, நாள் : 09-02-2026 வெளியீடு


Old Pension Scheme implementation for 1012 Sanitation Workers - Government Order No.: 03, Dated: 09-02-2026 Released


1012 துப்புரவுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து அரசாணை வெளியீடு


G.O.Ms.No.03 - CPS to Old Pension Scheme



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


எத்தகு நிதிச்சூழலிலும் பழைய ஓய்வூதியத்திட்டம் (OPS) தொடரும் - இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் அறிவிப்பு

 


"நான் ஒரு ஊழியரின் மகன், ஊழியர்களின் வலியை நான் நன்கு அறிவேன்"


"எத்தகு நிதிச் சூழலிலும் பழைய ஓய்வூதியத்திட்டம் (OPS)  தொடரும்" !


- ஹிமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அறிவிப்பு!


++++++++++++++++++++++++++


ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, மத்திய நிதி அமைச்சகத்தின் பரிந்துரைகளைத் தள்ளிவைத்து விட்டு, எத்தகு நிதிச்சூழலிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) தொடர்ந்து செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளார். 


2026 பிப்ரவரி மாத நிலவரப்படி, மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுமாறு ஒன்றிய அரசின் நிதித்துறை பரிந்துரைத்த போதிலும், அவர் அதனை நிராகரித்துள்ளார். 


பழைய ஓய்வூதியத்திட்டம் (OPS) குறித்து முதலமைச்சர் முக்கியமான அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளார்.


பழைய ஓய்வூதியத்திட்டம் (OPS) தொடரும் என்று ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சர்  தெளிவுப்படுத்தி உள்ளார்.


மத்திய அரசின் நிதித்துறையின் எச்சரிக்கைகளையும் மீறி, 1.35 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.


மத்திய அரசு, வருவாய் பற்றாக்குறை மானியத்தை (RDG) நிறுத்தியுள்ள போதிலும், மாநிலம் தனது சொந்த வருவாய் ஆதாரங்கள் மூலம் நிதி நிலைத்தன்மையை எட்டும் என்று முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலம் ₹3,500 கோடி முதல் ₹3,800 கோடி வரை கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 "நான் ஒரு ஊழியரின் மகன், ஊழியர்களின்  வலியை  நான் நன்கு உணர்வேன்-அறிவேன்" 

என்று கூறிய ஹிமாச்சலப்பிரதேசத்தின் முதலமைச்சர், ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் அல்லது எந்தவொரு நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது என்று உறுதியளித்துள்ளார்.


ஒன்றிய அரசின் UPS ஓய்வூதியத்திட்டத்திற்கு  மாறினால் ₹1,800 கோடி கூடுதல் கடன் வாங்க மத்திய அரசு அனுமதிக்கும் என்ற மத்திய அரசின் பரிந்துரையை ஹிமாச்சல் பிரதேசத்தின் முதல்வர் நிராகரித்துள்ளார். மேலும், மாநில அரசு செலுத்தியுள்ள ₹9,000 கோடி வரையிலான NPS பங்களிப்பை மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற மாநில அரசு போராடி வருகிறது என்றும் கூறி உள்ளார்‌. 


மத்திய அரசின் நிதி அழுத்தங்களுக்கு இடையிலும், ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக OPS ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து  தக்கவைப்பதே தற்போதைய ஹிமாச்சலப் பிரதேச அரசின் கொள்கையாக உள்ளது. 

OPS ஓய்வூதியத் திட்ட விஷயத்தில்  ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு உறுதியாக உள்ளது.


இது தொடர்பான நாளிதழ் செய்தி 



Sukhu holds firm on OPS, will meet PM to tide over fiscal crisis


SHIMLA 

Himachal Pradesh chief minister Sukhvinder Singh Sukhu on Tuesday ruled out a rollback of the Old Pension Scheme (OPS), asserting that the state will generate its own resources despite the finance department's recommendation to switch to the Centre's Unified Pension Scheme (UPS). To bridge the fiscal gap. Sukhu con firmed he is seeking a meeting with Prime Minister Narendra Modi after the February 16 assembly session to request a special grant for this financial year and the formation of a high level committee to assess the financial health of hill states.


The CM emphasised that the grant is essential to stabilise the state's treasury following the dis-continuation of the Revenue Deficit Grant (RDG), which has hit 15% of Himachal's budget.


Dismissing the finance department's February 8 warn ing that the UPS is necessary to unlock 21,800 crore in borrow ings, the CM assured employees that their pensions are secure.


"Tam the son of an employee so I understand the pain. The finance department makes recommendations but I assure that we will generate our resources and OPS will not be stopped. he said. "No one's pay or pension will be stopped, neither will any wel fare schemes be affected. This is a fight of the state's interest and will be fought at all levels," he said. While Sukhu has reached out to the opposition BJP, led by his predecessor Jai Ram Thakur, to present a united front to the Cen-tre, the party has so far cold-shouldered his overtures. "This is a fight for the state's interest. Every party should raise their voice for Himachal's rights, Sukhu said, adding that he also plans to meet Union minister JP Nadda, who belongs to Hima-chal, during his visit to Delhi.


Justifying the current crunch, Sukhu accused the previous BJP government of leaving the state in financial ruin. He claimed that while the previous BJP regime received over 254,000 crore in grants, it failed to clear 210.000 crore in employee arrears and instead distributed 25,000 crore in "election-year freebies".


"In three years, the Congress government received 217.000 crore in RDG, but not a single rupee in GST compensation. Yet, the government didn't withhold anyone's salary or pension. It didn't allow any welfare schemes to be discontinued. We even gave the Old Pension Scheme to employees. It is due to our management of finances we were able to do so," he said.


tre "The fact remains that Hima-chal's financial needs and challenges are unique and require continued support. Everyone is aware that Himachal is not an economically viable state. So by now stopping the RDG. the Cen-is trying to strangulate the state," said Pathania, after chair ing a high level meeting on Tues day. Pathania said that for many years. Himachal's natural resources have been exploited by central government undertakings and ancillary agencies with out due compensation to the state. "Despite the Supreme Court's orders in our favour, the Centre has failed to implement them. Even the Bhakra Beas Management Board (BBMB) has not paid the arrears due to Him-achal despite the apex court's orders," he added. 24500 crore of BBMB arrears have not been given to the state since 2012 despite the Supreme Court ver dict, as per data.


"If you don't want to give the RDG at Isast give us our rightful


Centre trying to financially strangulate state: Pathania


SHIMLA: Reacting on the discontinuation of RDG, Himachal Pra desh speaker Kuldeep Singh Pathania on Tuesday accused the Centre of financially strangulating the state.


He emphasised that the cen tral government should at least ensure 50% royalty on the power projects who have repaid their entire loan and give all those power projects back to the state who have completed 40 years of commissioning


Regarding the budget session, the speaker, referring to the changed financial scenario fol lowing the discontinuation of RDG, said, "The government will be presenting the Budget in a new situation after the RDG has been stopped. Naturally, prepa ration of the Budget may take some time, and details will be shared once the government communicates its proposal.


Nanda: Govt should stop politicising RDG


BJP state media coordinator Karan Nanda said that the Con gress overtiment and its leaders


are spreading unnecessary con-fusion among the public and employees on the issue of RDG. "The BJP has never stated that the government is about to fall, nor has it mentioned anything like the discontinuation of OPS. employee salaries, or pensions. This entire narrative is being created by the Congress itself." said Nanda. He said that since the closure of the RDG, the CM himself appears to be worried, as he believed that this funding would keep the state's finances running. The government. which once championed the slo-gan of self-reliant Himachal," is now only creating an atmos-phere of fear and cuts instead of providing a concrete roadmap to address financial challenges.


BJP should take initiative to get RDG restored, says Pratibha Singh


Former MP form Himachal Prat-ibha Singh has urged the BJP to take the initiative to restore the RDG in the state's interest, saying that the closure of the RDG will pose a significant challenge to the Himachal's economy, both now and in the future, Singh stated that this is not the time for any accusations or counter-accusations, it is the time to protect Himachal's rights and self-respect



செய்தியின் தமிழாக்கம்


நிதி நெருக்கடியை சமாளிக்க பிரதமரை சந்திக்கவுள்ள சுகு, ஓபிஎஸ் விஷயத்தில் உறுதியாக உள்ளார்.


சிம்லா 

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு செவ்வாயன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) திரும்பப் பெற முடியாது என்று நிராகரித்தார், நிதித்துறை மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாற பரிந்துரைத்த போதிலும், மாநிலம் அதன் சொந்த வளங்களை உருவாக்கும் என்று வலியுறுத்தினார். நிதி இடைவெளியைக் குறைக்க. இந்த நிதியாண்டிற்கான சிறப்பு மானியத்தையும், மலைவாழ் மாநிலங்களின் நிதி நிலையை மதிப்பிடுவதற்கு ஒரு உயர் மட்டக் குழுவை அமைப்பதையும் கோருவதற்காக பிப்ரவரி 16 சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கப் போவதாக சுகு உறுதிப்படுத்தினார்.


வருவாய் பற்றாக்குறை மானியம் (RDG) நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தின் கருவூலத்தை நிலைப்படுத்த இந்த மானியம் அவசியம் என்று முதல்வர் வலியுறுத்தினார், இது ஹிமாச்சலின் பட்ஜெட்டில் 15% ஐ எட்டியுள்ளது.


21,800 கோடி கடன்களைத் திறக்க யுபிஎஸ் அவசியம் என்ற நிதித் துறையின் பிப்ரவரி 8 எச்சரிக்கையை நிராகரித்த முதல்வர், ஊழியர்களின் ஓய்வூதியம் பாதுகாப்பானது என்று உறுதியளித்தார்.


"ஒரு ஊழியரின் மகன் டாம், அதனால் எனக்கு வலி புரிகிறது. நிதித்துறை பரிந்துரைகளை வழங்குகிறது, ஆனால் நாங்கள் எங்கள் வளங்களை உருவாக்குவோம் என்றும் ஓபிஎஸ் நிறுத்தப்பட மாட்டார் என்றும் நான் உறுதியளிக்கிறேன். "யாருடைய ஊதியமோ அல்லது ஓய்வூதியமோ நிறுத்தப்படாது, எந்த நலத்திட்டங்களும் பாதிக்கப்படாது. இது மாநில நலனுக்கான போராட்டம், அனைத்து மட்டங்களிலும் போராடப்படும்," என்று அவர் கூறினார். சுகு தனது முன்னோடி ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான எதிர்க்கட்சியான பாஜகவை மையத்திற்கு ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைக்க அணுகியிருந்தாலும், கட்சி இதுவரை அவரது கருத்துக்களை அலட்சியப்படுத்தியுள்ளது. "இது மாநில நலனுக்கான போராட்டம். ஒவ்வொரு கட்சியும் இமாச்சலத்தின் உரிமைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும்," என்று சுகு கூறினார், மேலும் டெல்லி வருகையின் போது ஹிமாச்சலைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.


தற்போதைய நெருக்கடியை நியாயப்படுத்தி, முந்தைய பாஜக அரசு மாநிலத்தை நிதிச் சீரழிவில் ஆழ்த்தியதாக சுகு குற்றம் சாட்டினார். முந்தைய பாஜக ஆட்சி 254,000 கோடிக்கு மேல் மானியங்களைப் பெற்றாலும், 210,000 கோடி ஊழியர் நிலுவைத் தொகையை வழங்கத் தவறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக 25,000 கோடியை "தேர்தல் ஆண்டு இலவசப் பொருட்களாக" விநியோகித்ததாகவும் அவர் கூறினார்.


"மூன்று ஆண்டுகளில், காங்கிரஸ் அரசாங்கம் 217,000 கோடி ரூபாய் RDG-ஐப் பெற்றது, ஆனால் ஒரு ரூபாய் கூட GST இழப்பீட்டைப் பெறவில்லை. ஆனாலும், அரசாங்கம் யாருடைய சம்பளத்தையோ அல்லது ஓய்வூதியத்தையோ நிறுத்தி வைக்கவில்லை. எந்த நலத்திட்டங்களையும் நிறுத்த அனுமதிக்கவில்லை. நாங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கூட ஊழியர்களுக்கு வழங்கினோம். எங்கள் நிதி மேலாண்மை காரணமாகவே இதைச் செய்ய முடிந்தது," என்று அவர் கூறினார்.


"ஹிமாசலத்தின் நிதித் தேவைகளும் சவால்களும் தனித்துவமானவை, மேலும் அவை தொடர்ந்து ஆதரவு தேவை என்பது உண்மைதான். இமாச்சலப் பிரதேசம் பொருளாதார ரீதியாக சாத்தியமான மாநிலம் அல்ல என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே இப்போது RDG-ஐ நிறுத்துவதன் மூலம். மத்திய அரசு மாநிலத்தை நெரிக்க முயற்சிக்கிறது," என்று செவ்வாய்க்கிழமை ஒரு உயர் மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பதானியா கூறினார். பல ஆண்டுகளாக இமாச்சலின் இயற்கை வளங்கள் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களால் மாநிலத்திற்கு உரிய இழப்பீடு இல்லாமல் சுரண்டப்படுகின்றன என்று பதானியா கூறினார். "உச்சநீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்த போதிலும், மத்திய அரசு அவற்றை செயல்படுத்தத் தவறிவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (BBMB) கூட ஹிமாச்சலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தவில்லை," என்று அவர் மேலும் கூறினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி 2012 முதல் BBMB நிலுவைத் தொகை 24500 கோடி மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.


"நீங்கள் இசாஸ்டில் RDG கொடுக்க விரும்பவில்லை என்றால், எங்கள் உரிமையை எங்களுக்குக் கொடுங்கள்"


மாநிலத்தை நிதி ரீதியாக நெரிக்க முயற்சிக்கும் மையம்: பதானியா


சிம்லா: ஆர்.டி.ஜி. நிறுத்தப்பட்டது குறித்து பதிலளித்த இமாச்சலப் பிரதேச சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா செவ்வாய்க்கிழமை, மத்திய அரசு மாநிலத்தை நிதி ரீதியாக நெரிப்பதாக குற்றம் சாட்டினார்.


முழு கடனையும் திருப்பிச் செலுத்திய மின் திட்டங்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்சம் 50% ராயல்டியை உறுதி செய்ய வேண்டும் என்றும், 40 ஆண்டுகள் செயல்பாட்டுக்கு வந்த அனைத்து மின் திட்டங்களையும் மாநிலத்திற்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து, ஆர்.டி.ஜி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றப்பட்ட நிதி சூழ்நிலையைப் பற்றி சபாநாயகர் குறிப்பிடுகையில், "ஆர்.டி.ஜி நிறுத்தப்பட்ட பிறகு, அரசாங்கம் ஒரு புதிய சூழ்நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இயற்கையாகவே, பட்ஜெட் தயாரிப்பதற்கு சிறிது நேரம் ஆகலாம், மேலும் அரசாங்கம் தனது திட்டத்தைத் தெரிவித்தவுடன் விவரங்கள் பகிரப்படும்.


நந்தா: அரசு ஆர்.டி.ஜி.யை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும்.


பாஜக மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் கரண் நந்தா கூறுகையில், காங்கிரஸ் மேலாதிக்கமும் அதன் தலைவர்களும்


"ஆர்டிஜி பிரச்சினையில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை பரப்பி வருகின்றனர். "அரசு வீழ்ச்சியடையப் போகிறது என்று பாஜக ஒருபோதும் கூறவில்லை, ஓபிஎஸ் ஊழியர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் நிறுத்தப்படுவது போன்ற எதையும் அது குறிப்பிடவில்லை. இந்த முழு விவரிப்பும் காங்கிரஸால் தானே உருவாக்கப்பட்டது," என்று நந்தா கூறினார். ஆர்டிஜி மூடப்பட்டதிலிருந்து, முதல்வர் தானே கவலைப்படுவதாகத் தெரிகிறது, ஏனெனில் இந்த நிதி மாநிலத்தின் நிதியை தொடர்ந்து நடத்தும் என்று அவர் நம்பினார். ஒரு காலத்தில் சுயசார்பு இமாச்சலப் பிரச்சாரத்தை ஆதரித்த அரசாங்கம், "நிதி சவால்களை எதிர்கொள்ள ஒரு உறுதியான சாலை வரைபடத்தை வழங்குவதற்குப் பதிலாக, இப்போது பயம் மற்றும் வெட்டுக்களின் சூழலை மட்டுமே உருவாக்கி வருகிறது."


ஆர்.டி.ஜி.யை மீட்டெடுக்க பாஜக முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரதிபா சிங் கூறுகிறார்.


ஹிமாச்சல பிரதேச முன்னாள் எம்.பி. பிரத்-இபா சிங், மாநில நலனுக்காக ஆர்.டி.ஜி.யை மீட்டெடுக்க பாஜக முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆர்.டி.ஜி. மூடப்படுவது தற்போதும் எதிர்காலத்திலும் இமாச்சலப் பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும் என்றும், இது எந்த குற்றச்சாட்டுகள் அல்லது எதிர் குற்றச்சாட்டுகளுக்கான நேரம் அல்ல என்றும், ஹிமாச்சலின் உரிமைகள் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டிய நேரம் இது என்றும் சிங் கூறினார்.

(Google Translate)

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த முன்மொழிகிறதா?

 

 தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) ஆகியவற்றை ஒழிப்பதன் மூலம், அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த முன்மொழிகிறதா? - நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சரின் பதில்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த முன்மொழிகிறதா?


Whether the Government proposes to implement Old Pension Scheme (OPS)



GOVERNMENT OF INDIA

MINISTRY OF FINANCE

DEPARTMENT OF FINANCIAL SERVICES

LOK SABHA

UNSTARRED QUESTION NO. 2308

ANSWERED ON MONDAY, 15 DECEMBER, 2025/ AGRAHAYANA 24, 1947 (SAKA)

Implementation of Old Pension Scheme

2308 

SHRI ANTO ANTONY 

 SHRI AMRA RAM 

 SHRI UTKARSH VERMA MADHUR

 SHRI IMRAN MASOOD

Will the Minister of Finance be pleased to state:

(a) whether the Government proposes to implement Old Pension Scheme (OPS) for its employees by abolishing the National Pension System (NPS) and Unified Pension Scheme (UPS), if so, the timeline thereof and if not, the reasons therefor;

(b) whether many State Governments have implemented OPS for their employees, if so, the process to return the funds deposited with the Centre to the State Governments along with the amount of funds deposited by the States wherein OPS is in place, State-wise;

(c) whether any discrepancies are associated with the UPS system of pension, if so, the details 

thereof;

(d) whether it is a fact that the contribution deducted from the salary of employees during their service will not be returned to them at the time of retirement; and

(e) if so, the details thereof?


ANSWER

MINISTER OF STATE FOR FINANCE

(SHRI PANKAJ CHAUDHARY)

(a) There is no proposal under consideration of the Government for restoration of Old Pension Scheme (OPS) in respect of Central Government employees covered under National Pension System (NPS) or Unified Pension Scheme (UPS). 

(b) The State Governments of Rajasthan, Chhattisgarh, Jharkhand, Punjab, and Himachal Pradesh have informed Pension Fund Regulatory and Development Authority (PFRDA) about their decision to restart Old Pension Scheme (OPS) for their State Government employees. There is no provision under Pension Fund Regulatory and Development Authority Act, 2013 read along with PFRDA (Exits and Withdrawals under the National Pension System) Regulations, 2015, and other relevant Regulations, vide which the accumulated corpus of the subscribers viz Government contribution, Employees' contribution towards NPS along with accruals, can be refunded and deposited back to the State Government.

(c) to (e): UPS, being a fund-based Pension System, relies on the regular and timely accumulation and investment of applicable contribution (from both the employee and employer) for assured payouts to the employees. Under UPS, at the time of retirement, a subscriber is eligible to receive benefits as below:

i. Assured payout at rate of 50% of the average basic pay drawn over the last 12 months prior to superannuation for a minimum qualifying service of 25 years. This payout to be proportionate for lesser service period up to a minimum of 10 years of service.

ii. Assured family payout at the rate of 60% of payout admissible to the employee immediately before his/her demise to legally wedded spouse.

iii. Assured minimum payout of Rs.10,000 per month on superannuation after minimum 10 years of qualifying service.

iv. Inflation indexation on assured payout, on assured family payout, and assured minimum payout. 

Dearness Relief will be based on All India Consumer Price Index for Industrial Workers (AICPI-IW) as in case of serving employees.

v. Lump sum payment at superannuation in addition of gratuity at rate of 1/10th of monthly emoluments (basic pay+DA) as on the date of superannuation for every completed six months of service. This payment will not reduce the quantum of assured payout.

vi. There is no provision for return of contribution deducted from the salary of employees during their service, once the payout starts. However, UPS subscriber or the legally wedded spouse, as the case may be, shall have an option to withdraw an amount not exceeding 60% of the individual corpus or benchmark corpus, whichever is lower, available in the PRAN tagged to UPS on the date of superannuation or voluntary retirement or retirement under Fundamental Rules 56(j) subject to proportionate reduction in the assured payout payable to such UPS subscriber.

*******


இந்திய அரசு

நிதி அமைச்சகம்

நிதி சேவைகள் துறை

லோக் சபா

நட்சத்திரமிடப்படாத கேள்வி எண். 2308

டிசம்பர் 15, 2025/ அக்ரஹாயனா 24, 1947 (சாகா) திங்கட்கிழமை பதில் அளிக்கப்பட்டது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல்

2308 தமிழ் 

ஸ்ரீ அன்டோ அன்டனி 

 ஸ்ரீ அம்ரா ராம் 

 ஸ்ரீ உத்கர்ஷ் வர்மா மதுர்

 ஸ்ரீ இம்ரான் மசூத்

நிதி அமைச்சர் மகிழ்ச்சியுடன் கூறுவார்:

(அ) ​​தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை ஒழிப்பதன் மூலம் அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) செயல்படுத்த முன்மொழிகிறதா, அப்படியானால், அதன் காலக்கெடு மற்றும் இல்லையென்றால், அதற்கான காரணங்கள்;

(ஆ) பல மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு OPS-ஐ செயல்படுத்தியுள்ளனவா, அப்படியானால், மையத்தில் டெபாசிட் செய்யப்பட்ட நிதியை மாநில அரசுகளுக்குத் திருப்பித் தரும் செயல்முறை மற்றும் OPS நடைமுறையில் உள்ள மாநிலங்களால் டெபாசிட் செய்யப்பட்ட நிதியின் அளவு, மாநில வாரியாக;

(இ) ஓய்வூதியத்தின் யுபிஎஸ் முறையுடன் ஏதேனும் முரண்பாடுகள் தொடர்புடையதா, அப்படியானால், விவரங்கள் 

அதன்;

(ஈ) ஊழியர்களின் பணிக்காலத்தில் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் பங்களிப்புத் தொகை ஓய்வு பெறும் போது அவர்களுக்குத் திருப்பித் தரப்படாது என்பது உண்மையா; மற்றும்

(உ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?


பதில்

நிதித்துறை இணையமைச்சர்

(ஸ்ரீ பங்கஜ் சௌத்ரி)

(அ) ​​தேசிய ஓய்வூதிய முறை (NPS) அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை. 

(ஆ) ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் தொடங்குவதற்கான முடிவை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (PFRDA) தெரிவித்துள்ளன. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 2013 இன் கீழ் PFRDA (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் வெளியேறுதல் மற்றும் திரும்பப் பெறுதல்) விதிமுறைகள், 2015 மற்றும் பிற தொடர்புடைய விதிமுறைகளின் கீழ் எந்த ஏற்பாடும் இல்லை, இதன்படி சந்தாதாரர்களின் திரட்டப்பட்ட கார்பஸ் அதாவது அரசாங்க பங்களிப்பு, NPS-க்கு ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் திரட்டப்பட்ட தொகை ஆகியவற்றைத் திரும்பப் பெற்று மாநில அரசுக்கு மீண்டும் டெபாசிட் செய்யலாம்.

(இ) முதல் (உ): நிதி சார்ந்த ஓய்வூதிய முறையாக UPS இருப்பதால், ஊழியர்களுக்கு உறுதியான கொடுப்பனவுகளுக்காக (பணியாளர் மற்றும் முதலாளி இருவரிடமிருந்தும்) பொருந்தக்கூடிய பங்களிப்பை வழக்கமான மற்றும் சரியான நேரத்தில் குவித்தல் மற்றும் முதலீடு செய்வதை நம்பியுள்ளது. UPS இன் கீழ், ஓய்வு பெறும் நேரத்தில், ஒரு சந்தாதாரர் கீழே உள்ள சலுகைகளைப் பெற தகுதியுடையவர்:

i. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்கு, ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% என்ற விகிதத்தில் உறுதி செய்யப்பட்ட ஊதியம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான குறைந்த சேவை காலத்திற்கு இந்த ஊதியம் விகிதாசாரமாக இருக்கும்.

ii. சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணைக்கு, பணியாளரின் இறப்பிற்கு முன், அவருக்கு அனுமதிக்கப்பட்ட 60% குடும்ப ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டது.

iii. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்குப் பிறகு, ஓய்வூதியத்தின் போது மாதத்திற்கு ரூ.10,000 குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும்.

iv. உறுதி செய்யப்பட்ட ஊதியம், உறுதி செய்யப்பட்ட குடும்ப ஊதியம் மற்றும் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றின் மீதான பணவீக்க குறியீட்டு முறை. 

சேவை செய்யும் ஊழியர்களைப் போலவே, தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI-IW) அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படி நிவாரணம் வழங்கப்படும்.

v. பணி நிறைவு செய்யப்பட்ட ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும், பணி ஓய்வுத் தேதியன்று மாதாந்திர ஊதியத்தில் 1/10 பங்கு (அடிப்படை ஊதியம் + DA) என்ற விகிதத்தில் பணிக்கொடையுடன் கூடுதலாக, ஓய்வூதியத் தொகையின் மொத்தத் தொகை வழங்கப்படும். இந்தக் கட்டணம், உறுதி செய்யப்பட்ட ஊதியத்தின் அளவைக் குறைக்காது.

vi. ஊதியம் தொடங்கியவுடன், ஊழியர்களின் பணிக்காலத்தில் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்ட பங்களிப்பைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடு இல்லை. இருப்பினும், UPS சந்தாதாரர் அல்லது சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்ட வாழ்க்கைத் துணை, சூழ்நிலையைப் பொறுத்து, தனிப்பட்ட கார்பஸ் அல்லது பெஞ்ச்மார்க் கார்பஸில் 60% க்கு மிகாமல் தொகையை திரும்பப் பெறுவதற்கான விருப்பம் இருக்கும், இதில் எது குறைவாக இருக்கிறதோ, அது அடிப்படை விதிகள் 56(j) இன் கீழ், ஓய்வு அல்லது தன்னார்வ ஓய்வூதியம் அல்லது ஓய்வூதிய தேதியில் UPS உடன் இணைக்கப்பட்டுள்ள PRAN இல் கிடைக்கும், அத்தகைய UPS சந்தாதாரருக்கு செலுத்த வேண்டிய உறுதி செய்யப்பட்ட பேஅவுட்டில் விகிதாசாரக் குறைப்புக்கு உட்பட்டது.

********* - வணக்கம்!


​ஓய்வூதியத் திட்டங்களின் ஒப்பீடு (Comparison of OPS, NPS, and TAPS)


ஓய்வூதியத் திட்டங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிறைகளும் குறைகளும் உள்ளன. உங்கள் கேள்விக்கான விரிவான ஒப்பீடு இதோ:


​ஓய்வூதியத் திட்டங்களின் ஒப்பீடு (Comparison of OPS, NPS, and TAPS)


பங்களிப்பு : 


OPS : ஊழியர் பங்களிப்பு இல்லை. 


NPS : ஊழியர் 10% + அரசு 14%. 


TAPS : ஊழியர் 10% + மீதமுள்ள தொகையை அரசு ஏற்கும்.



ஓய்வூதியத் தொகை 

OPS : கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% உறுதி. 


NPS: சந்தை முதலீட்டின் லாபத்தைப் பொறுத்தது (உறுதி இல்லை). 


TAPS : கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% உறுதி.


அகவிலைப்படி 

OPS : (DA) உண்டு (ஆண்டுக்கு இருமுறை உயரும்). 

NPS : கிடையாது. 

TAPS : உண்டு (பணியில் இருப்பவர்களுக்கு இணையாக உயரும்).


பணிக்கொடை (Gratuity) 


OPS : ₹25 லட்சம் வரை. 


NPS :  ₹20 லட்சம் வரை. 


TAPS : ₹25 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு உண்டு.



எந்தத் திட்டம் சிறந்தது?


​பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS): 

இதுவே மிகச்சிறந்த திட்டமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் (Old Pension Scheme) ஊழியர்கள் தங்களது சம்பளத்திலிருந்து எந்தப் பணத்தையும் பிடித்தம் செய்ய வேண்டியதில்லை. அரசு முழுமையாகச் செலவை ஏற்றுக்கொண்டு, பணவீக்கத்திற்கு ஏற்ப (DA) ஓய்வூதியத்தை உயர்த்தும். ஆனால், இது தற்போது புதிய பணியாளர்களுக்கு நடைமுறையில் இல்லை.

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS - 2026):

தமிழ்நாடு அரசு அண்மையில் (ஜனவரி 2026) அறிவித்துள்ள திட்டம் இது (Tamilnadu Assured Pension Scheme) . OPS-க்கும் NPS-க்கும் இடைப்பட்ட ஒரு நடுநிலையான திட்டம்.


சிறப்பு: 

இதில் OPS போன்றே 50% சம்பளம் மற்றும் DA உயர்வு உறுதி செய்யப்படுகிறது.

​குறை: ஊழியர்கள் 10% பங்களிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். OPS கிடைக்காத நிலையில், NPS திட்டத்தை விட இது அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பானது.

புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS):

இது பங்குச்சந்தையைச் சார்ந்தது. சந்தை நன்றாக இருந்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு, ஆனால் ஓய்வூதியத் தொகைக்கு எந்த உறுதியும் இல்லை. இதில் DA உயர்வு கிடையாது என்பது ஒரு பெரிய பின்னடைவு.


சுருக்கமாக:

​பணம் கட்டாமல் பலன் பெற: OPS சிறந்தது (கிடைத்தால்).

​பணம் கட்டினாலும் நிலையான ஓய்வூதியம் பெற: TAPS சிறந்தது.

​சந்தையின் அபாயத்தை ஏற்கத் தயார் என்றால்: NPS (பொதுவாக அரசு ஊழியர்கள் இதை விரும்புவதில்லை).

​தற்போதுள்ள சூழலில், OPS-க்கு அடுத்தபடியாக TAPS திட்டம் அரசு ஊழியர்களுக்கு அதிகப் பாதுகாப்பை வழங்குகிறது.


இவை மட்டுமின்றி மத்திய அரசின் UPS (Unified Pension Scheme) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இணைய பெரும்பாலான மத்திய அரசின் பணியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.




>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



OPS vs CPS vs NPS vs TAPS - ஓய்வூதியத் திட்டங்கள் : ஒப்பீடு

 


OPS vs CPS vs NPS vs TAPS - ஓய்வூதியத் திட்டங்கள் : ஒப்பீடு


அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள பல்வேறு திட்டங்களுக்கும், அறிவிக்கப்பட்டுள்ள புதிய TAPS திட்டத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்


பழைய ஓய்வூதியம் (OPS) 


புதிய ஓய்வூதியம் (NPS) 


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - Contributory Pension Scheme (CPS)


தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் - Tamilnadu Assured Pension Scheme (TAPS)





பழைய ஓய்வூதிய திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்?

 


பழைய ஓய்வூதிய திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்? - திரு. ககன்தீப்சிங்பேடி இ.ஆ.ப. அவர்களிடம் விளக்கிய சங்க பொறுப்பாளர் - காணொளி


Why should the Old Pension Scheme be implemented? - Association Bearer's Explanation to Gagandeep Singh Bedi IAS - Video



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 







>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



boAt Stone 352 Pro/Stone 358 Pro w/ 14W Signature Sound, Up to 12 Hours Playback, RGB LEDs, TWS Feature, Built-in Mic, BTv5.3, Free Music Streaming on JioSaavn Bluetooth Speaker (Groovy Grey)


https://amzn.to/44SiutC




30% ஓய்வூதியமா? - பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது - CPS ஒழிப்பு இயக்கம்


30% ஓய்வூதியமா? - பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது - CPS ஒழிப்பு இயக்கம்


ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக திரு.ககன்தீப்சிங் பேடி இ.ஆ.ப தலைமையில்  அமைக்கப்பட்ட அலுவலர் குழுவில்

 *தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம்* அளித்த பரிந்துரையில் தான் அரசு ஊழியர், ஆசிரியர் நலனுக்கு எதிரான *தமிழ்நாடு மாநில  ஓய்வூதியத் திட்டத்தை (TSPS )* முன்மொழிந்தனர்.


*என்ன முன்மொழிவுகள்.?*


1)  60 வயதில் ஓய்வு பெறும் போது 35%


65 வயதில்  40%

70 வயதில்  45 %

75 வயதில்   50% ஓய்வூதியம் கொடுக்க வேண்டும்.


2) அரசு ஊழியரிடம் பிடித்தம் செய்யும் பங்கீடு 10% 


அரசின் பங்கீடு 10%லிருந்து 20% ஆக உயர்த்த வேண்டும். 


3) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் போன்று பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 /- லட்சமாக்க வேண்டும்.


4) ஓய்வு பெறும் போது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியகளின் 10%  பங்கீட்டை வட்டியுடன் கொடுக்க வேண்டும்.


அரசின் பங்கீட்டை அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது அரசே வைத்துக் கொள்ளலாம்.


5) 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு

குறைந்தபட்சம் ரூ.10000 /- ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


6) பிடித்தம் செய்யப்படும் பங்கீட்டு தொகை 10% +20% நிதியை பராமரிக்க தமிழ்நாடு ஓய்வூதிய நிதி மேலாண்மை வாரியத்தை ( Tamilnadu Pension Management Authority) கருவூல ஆணையர் தலைமையில் அமைக்கலாம்.


இந்த நிதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட, கார் வாங்க வட்டிக்கு கடன் கொடுக்கலாம்.


_________________________


*TSPS திட்டம் சாத்தியமா.?*


NPS (புதிய ஓய்வூதியம் திட்டம் ) திட்டத்திற்கும்

UPS ( ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ) திட்டத்திற்கும் இடைப்பட்ட திட்டம் TSPS.


CPS ல் அரசு ஊழியர் பங்கீடு 10%.

தமிழக அரசு பங்கீடு 10%.


NPS ல் அரசு ஊழியர் பங்கீடு 10%.

பிற மாநிலங்களில் அரசின் பங்கீடு 14%.


UPS அரசு ஊழியர் பங்கீடு 10%.

மத்திய அரசின் பங்கீடு

18.5%.


*TSPS திட்டத்திற்கான பரிந்துரை:*


அரசு ஊழியர் பங்கீடு 10%


*தமிழக அரசின் பங்கீடு 20%*.


தற்போது CPS திட்டத்தில் தமிழக அரசு 10% பங்கீட்டுத் தொகையாக  மாதம் 626 கோடி செலவு செய்து வருகிறது.


TSPS திட்டபடி அரசு பங்கீடு 20% ஆக உயர்த்தப்பட்டால், தமிழக அரசு மாதம் ரூ.1252 கோடி செலவு செய்ய வேண்டும்.


*TSPS திட்டப்படி*

*தமிழக அரசு மாதம் 20% பங்கீடும் செலுத்தி., 60 வயதில் 35% ஓய்வூதியமும்,*


*5 வருடத்திற்கு ஒரு முறை ஓய்வூதியத்தை  5% உயர்த்துவது என்ற TSPS திட்டமானது...*


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதை விட தமிழக அரசுக்கு பன்மடங்கு செலவு கூடுதலாகும்.


பங்களிப்பு சேமநல நிதி ( Contributiory Provided Fund ) திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியதற்கான வரலாறும், பொருளாதாரக் கணக்கும் தெரியாத தலைவர்களின் முன்மொழிவே தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டம்.


*பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட பன்மடங்கு கூடுதல் செலவாகும் என்பதால் தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டம் சாத்தியமே இல்லை.*


😥😥😥😥😥😥😥😥😥


மத்திய அரசில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000/-


எனவே, OPS திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் அகவிலைப் படியுடன் ரூ.9000/-


தமிழ்நாடு அரசில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700/-


எனவே, தமிழக அரசில் OPS திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் அகவிலைப் படியுடன் ரூ.7850/-


10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அச்சங்கம் முன்மொழிவு அளித்துள்ளது.


*குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் தகுதியான ஓய்வூதியத்திற்கு அகவிலைப் படி வழங்க வேண்டும் என்று TSPS திட்டத்தில் வலியுறுத்தவில்லை.*


😥😥😥😥😥😥😥😥😥


பணிக்கொடை அதிகபட்சம் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று அச்சங்கம் முன்மொழிந்துள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக (01.01.2024முதல்) தமிழ்நாட்டில் அதிகபட்ச பணி கொடை ரூ.25 லட்சம்.


ரூ.25 லட்சத்திற்குப் பதில் ரூ.20 லட்சம் என்று குறைவாக  கேட்பது யாருடைய நலனுக்காக.?


*ஓய்வூதியச் சட்டம் வேறு.*


*பணிக்கொடை சட்டம் வேறு.*


தொழிலாளர் நலச் சட்டப்படி

பணிக் கொடை பெறுவது

அரசு ஊழியர்,

ஆசிரியர்,

தொழிலாளர்களின் உரிமை.


பணிக்கொடை வழங்குவது

வேலை வாங்கும்

முதலாளிகள் மற்றும்

அரசுகளின் கடமை.


ஓய்வூதியம் 50% க்கு பதில் 35% வழங்க வேண்டும் என்று கேட்பதற்கு...


*பேரம் பேசுவதற்கு ஓய்வூதியம் சந்தைப் பொருள் அல்ல.*


*ஓய்வூதியம் என்பது பிச்சை பணம் அல்ல.*


*ஓய்வூதியம் என்பது கருணை தொகையும் இல்லை*.


*ஓய்வூதியம் நமது உரிமை*.


*ஓய்வூதியம் சொத்துரிமை போன்றது என்றும்*.,


*ஓய்வூதியம் என்பது*

*கொடுபடா ஊதியம் என்றும்*.. 

*உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது*.


*ஓய்வூதியம் தொடர்பாக பேரம் பேச யார் இவர்களுக்கு உரிமை வழங்கினார்கள்.?*


*பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்று பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே.!*


பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக

CPS 

NPS

UPS

GPS

TSPS

போன்ற எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க முடியாது.


பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே அரசுக்கு பாதுகாப்பானது

செலவும் குறைவு.


*பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது.*


- CPS ஒழிப்பு இயக்கம்



>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



Kraft Seeds Plant Cutter for Garden with Premium Stainless Steel Lock, Sharp Edges - Tree Cutter Tools & Gardening Tools, Grass Trimmer, Shear Cutting, Pruner for Plants and Leaves, Heavy Duty Cutter


https://amzn.to/45yisY0




"வெடிக்கப் போவது பட்டாசா அல்லது போராட்டமா"? - காத்திருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

 

 "வெடிக்கப் போவது பட்டாசா அல்லது போராட்டமா"?  - காத்திருக்கும் அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள்


பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாளை ஜனவரி 3ஆம் தேதி அறிவிப்பார் என்று ஜாக்டோ ஜியோ மற்றும் பிற அமைப்புகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தெரிவித்துள்ளனர் 


பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இருந்தது


இதன் தொடர்ச்சியாக அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று  வந்தது 


மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான திரு ககன்தீப்சிங் பேடி அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைத்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்த ஆய்வுகளை செய்து அறிக்கையை பெற்றது


தற்போது இன்று ஜனவரி இரண்டாம் தேதி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமைச்சர்கள் இன்னும் 24 மணி நேரத்தில் நாளை அதாவது ஜனவரி 3 அன்று ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க உள்ளார் என்று கூறியுள்ளனர்


தமிழ்நாடு அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக மகிழ்ச்சியான கொண்டாட்ட செய்தி வரப்போகிறதா அல்லது தொடர்  வீரியமான போராட்டத்திற்கு வழிவகை செய்யப் போகிறதா என்று தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் முதல்வர் அறிவிப்பினை எதிர்நோக்கி உள்ளனர்


அரசியல் அழுத்தம்


தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்தது


அதனைத் தொடர்ந்து பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் திமுக கட்சிக்கு வாக்களித்ததாக அப்போது கூறப்பட்டது


எடுத்துக்காட்டாக பல தொகுதிகளில் பெரும்பாலான தபால் ஓட்டுக்கள்  திமுக கட்சிக்கு ஆதரவாக விழுந்தன


மேலும் அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரை திமுக கட்சிக்கு வாக்களிக்க அறிவுறுத்தியதாக அப்போது பேசப்பட்டது


தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பெரும் அரசியல் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது


 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நம்பிக்கையை பெற திமுக அரசு நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது


இருப்பினும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் முழுமையாக செயல்படுத்த முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் சில மாற்றங்கள் செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்துவது சாத்தியம் என்று அரசு கருதுகிறது


23 ஆண்டுகளுக்கு முன்பு பழைய ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டபோது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சி எதிர்த்து கடுமையான போராட்டத்தினை செய்தனர் 


மேலும் எஸ்மா, டெஸ்மா போன்ற பல்வேறு சட்டத்தின் விளைவுகளையும் அனுபவித்தனர். அவ்வாறான கடுமையான போராட்டத்திற்கு தற்போது அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்கள் தயாராகி வருகிறதா என்ற கேள்வியும் ஆட்சியாளர்களிடமும் , பிற அரசியல் கட்சிகளிடமும்  உள்ளது


மேலும் பழைய ஓய்வு ஊதியம் குறித்து பிற அரசியல் கட்சிகள்,  எந்த வாக்குறுதியும் இது வரை அளிக்கவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது


"வெடிக்கப் போவது பட்டாசா அல்லது போராட்டமா" என்று நாளை முதல்வர் அவர்களின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்


Portronics Clamp M4 Car Phone Holder Stand with 360 Degree Rotation, Strong Grip, Suction Cup Mount, Single Hand Use, Shockproof Build, Mobile Stand for Car (Black)


https://amzn.to/3LgOKzS




OPS, CPS, UPS வேறுபாடுகள் - முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார்?

 

 

பழைய ஓய்வூதியம் மற்றும் புதிய ஓய்வூதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்  - முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார்?



OPS, CPS, UPS Differences


பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளைத் தெளிவாக விளக்குகிறது கீழேயுள்ள பதிவு.


அதன் முழுமையான விவரங்கள் இதோ:


1. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

அமலாக்கம்: மத்திய அரசில் 1.4.2004-க்கு முன் அதாவது 31-03-2004 வரை (தமிழ்நாட்டில் 31-03-2003 வரை மட்டுமே).


யாருக்கு: 2003-க்கு முன் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.


ஓய்வூதியத் தொகை: கடைசி மாதச் சம்பளத்தில் 50% வரை உறுதியாகக் கிடைக்கும்.


பங்களிப்பு: ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து எவ்விதத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. முழுச் செலவையும் அரசே ஏற்கும்.


இதர பலன்கள்: அகவிலைப்படி (DA) உயர்வு உண்டு. குடும்ப ஓய்வூதியம் முழுமையாகக் கிடைக்கும்.


சவால்: இது அரசுக்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.


2. புதிய / பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ( NPS / CPS)

அமலாக்கம்: 2003-க்குப் பிறகு (தமிழ்நாட்டில்)


யாருக்கு: 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.


ஓய்வூதியத் தொகை: இது முதலீடு சார்ந்தது. நாம் முதலீடு செய்த தொகை மற்றும் பங்குச்சந்தை லாபத்தைப் பொறுத்தே அமையும். ஓய்வூதியம் உறுதி கிடையாது.


பங்களிப்பு: ஊழியர் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும். மத்திய அரசு 14% பங்களிப்பு வழங்கும் (தமிழ்நாடு அரசின் பங்களிப்பு தற்போது வரை 10% மட்டுமே) 


இதர பலன்கள்: மத்திய அரசு பணியில் ஓய்வு பெறும்போது 60% தொகையை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40% மட்டுமே மாத ஓய்வூதியமாக வரும். அகவிலைப்படி உயர்வு கிடையாது. 

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்னும் CPS திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த பணத்துடன், தனது பங்களிப்பையும் சேர்த்து ஓய்வு பெறும் நாள் அன்று வரை உள்ள தொகைக்கு 7.1% வட்டியுடன் மொத்தமாக வழங்கி விடுகிறது.


சவால்: பங்குச்சந்தை அபாயம் உள்ளது; அரசு ஊழியர்களுக்கு தனது பணமும் சேர்ந்து பறிபோகும் வாய்ப்புள்ளது என்பதால் இதில் துளியும் விருப்பம் இல்லை.


3. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)


அமலாக்கம்: 2024-25 (மத்திய அரசின் முன்மொழிவு).


யாருக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு (மாநில அரசுகள் விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம்).


ஓய்வூதியத் தொகை: உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் முதலீடு கலந்த பலன்கள்.


பங்களிப்பு: ஊழியர் பணம் பங்களிப்பு செய்ய வேண்டும். அரசு தனது பங்களிப்பைத் தொடரும்.


இதர பலன்கள்: குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


நிலைப்பாடு: இது அரசுக்கும் ஊழியருக்கும் இடையிலான ஒரு நடுத்தர சமரசத் திட்டமாக இது கருதப்படுகிறது. முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


இறுதியாக : தமிழ்நாட்டில் மத்திய அரசை பின்பற்றி, அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.


ஒரு சிலர் பணி ஓய்வுக்காலம் பாதுகாப்பாக அமைய வேண்டும் எனும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தும் என்று கூறுகிறார்கள்.


ஜாக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் 06-01-2025 அன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருமித்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே கிடைத்துள்ளது என்பதால் அவர்களின் நியாயமான கோரிக்கையை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொள்வார் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். 




பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு - போட்டோ ஜியோ தகவல்

 

 

பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு - போட்டோ ஜியோ தகவல்


நாளைய அறிவிப்பை பார்த்துவிட்டு போராட்டத்தை தொடங்குவதா? வாபஸ் பெறுவதா? எனும் முடிவு - போட்டோ ஜியோ


இன்று அமைச்சர் திரு எ.வ.வேலு மற்றும் நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ஆகியோருடன் போட்டோ ஜியோ மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 





இன்று 02.01.2026 ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர் நடத்திய பேச்சுவர்த்தை விவரம்






பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அறிவிப்பு வெளியான பின்னர் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று அறிவிப்போம்.


அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் பேட்டி



OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்