கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10, 12-ம் வகுப்பு தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சியா? - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்...


 தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 92 சதவீதம் மாணவர்கள் வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கூடத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிக்கூடங்கள் நடைபெறும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பள்ளிக்கூடங்கள் செயல்படும். மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதி, அதற்கான அட்டவணை வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் நடத்த முடியாது என கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’.

பதில்: ‘இந்த பாடத்திட்டங்களை படித்தால் தான் மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் சுலபமாக சந்திக்க முடியும்’.

கேள்வி: மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா?.

பதில்: ‘பொறுத்திருந்து பாருங்கள்’.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The most important places you should visit in Trichy

 திருச்சியில் நீங்கள் காண வேண்டிய மிக முக்கியமான சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்கள் The most important tourist and spiritual places you must ...