இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...

 ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார் . ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி : பள்ளிகள் துவங்கியதால் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது . புதிய பாடத்திட்டம் , மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது . அதற்கேற்ப ஆசிரியர்கள் தேவை எண்ணிக்கை பட்டியலிடப்பட்டு தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் . புதிய ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் . அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் . ஏற்கெனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் . அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் , ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் காலிப் பணியிட விவரம் பெறப்பட்டு , தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவர் . மத்திய அரசு ரூ . 500 கோடி வழங்கி உள்ளது . அந்த நிதியில் அரசு மகளிர் பள்ளிகளில் கூடுதலாக கழிப்பறைகள் கட்டப்படும் . பண்ணாரி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான ஆய்வு நடந்து வருகிறது . இந்தப் பணிகள் விரைவில் துவங்கும் என்றார் .



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...