இடுகைகள்

புதிய பணி நியமனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 15 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களில் முதற்கட்டமாக 9,494 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்(9,494 teachers to be recruited in the first phase out of 15,000 vacant government school teacher posts in Tamil Nadu - Minister Anbil Mahesh Poyyamozhi)...

படம்
 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 15 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களில் முதற்கட்டமாக 9,494 ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். >>> பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2022-2023 - மானியக் கோரிக்கை எண்: 43 - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... >>> பள்ளிக்கல்வித்துறை -  மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023...

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌கள், இளநிலை உதவியாளர்‌கள் மற்றும்‌ நூலகர்‌கள் ஆகியோருக்கு பணிநியமன ஆணைகள்‌ - முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்‌...

படம்
 செய்தி வெளியீடு எண்‌:448, நாள்‌:15.07.2021 செய்தி வெளியீடு பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ நூலகர்‌ ஆகிய பணியிடங்களுக்குப்‌ பணிநியமன ஆணைகள்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்‌. தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலம்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்குத்‌ தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்குப்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக 4 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (15.7.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கினார்‌. மேலும்‌, பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ பணியாற்றும்போது உயிர்நீத்த பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்குக்‌ கருணை அடிப்படையில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ விதமாக, 250 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்குப்‌ பள்ளிக்கல்வித்‌ துறை அலுவலகங்கள்‌ மற்றும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பணியாற்றிட இளநிலை உதவியாளர்‌ பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும்‌, பொது நூலகத்‌ துறையில்‌ பணியாற்றிட 10 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு நூலகர்‌ பணியிடத்திற்கு

அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

படம்
  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில் அதிகளவிலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பள்ளிகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. மேலும் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்த காரணத்தால் ஏராளமானோர் வேலையிழந்தனர். தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை செலுத்த நிர்பந்தித்து, போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பலர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடப்பு கல்வியாண்டில் வழக்கமானதை விட அதிகளவிலான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. எனவே பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் பொழுது ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் – மாணவர் விகிதம் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் தயார் ச

தமிழகத்தில் தேர்வான 1910 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை -ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் கோரிக்கை...

படம்
 தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2018-2019 ஆம் ஆண்டிற்கான 2144 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் 2020 ஆம் ஆண்டுக்கான காலியிடங்களை நிரப்ப கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அந்த பணியிடங்கள் பின்னடை பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மறுதேர்வு வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை தமிழ்நாடு தேர்வு வாரியம் 1:2 விகிதத்தில் நடைமுறைப்படுத்தியது. அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அடுத்துள்ள நிலையில் உள்ள பிற தேர்வர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே அவர்கள் பள்ளிக்கல்வித்துறையை முற்றுகையிட்டனர். அப்போது 2019-20 ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தனர். ஆனால் 10 மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது வ

7,100 உபரி ஆசிரியர்கள் உள்ளனர் - பிப்.13-ம் தேதிக்குள் TRB மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

படம்
 சிவகங்கையில்  அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது: ’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதிச் சுமை ஏற்படும். மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும

முதுகலை வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் நியமனம்...

படம்
 அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, இரண்டாண்டுகளுக்கு முன், தேர்வு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன், பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 313 முதுநிலை பட்டதாரிகளுக்கு, வேதியியல் ஆசிரியர் பணிக்கான பணி நியமன உத்தரவு, நேற்று வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய ஆசிரியர்கள், நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TRB மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு (முதுகலை ஆசிரியர் - பொருளியல் ) 03.02.2021 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

படம்
  TRB மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு ( முதுகலை ஆசிரியர் - பொருளியல் ) 03.02.2021 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 6365/ டபிள்யு3/ இ2/ 2019, நாள்: 29-01-2021... >>> பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 6365/ டபிள்யு3/ இ2/ 2019, நாள்: 29-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Direct Recruitment for the post of Economics Post Graduate Assistants – 2018-19 ( Revised Provisional Selection List )...

படம்
  As per Notification No. 10/2019, dated 12.06.2019, for the Direct recruitment of 220 Post Graduate Assistants in Economics, examination was held on 27.09.2019. Final Key and Mark List was published on 21.10.2019 and the Provisional Selection List was published on 03.01.2020. Thereafter, the Board had published the Revised Mark and Certificate Verification List on 06.01.2021. The Board also conducted Certificate Verification on 20.01.2021 for those candidates who were not called for certificate verification as per earlier list.              Now, the Board had decided to withdraw the earlier Provisional Selection list published on 03.01.2020 and publish the revised Provisional Selection list based on the Revised Mark List published on 06.01.2021 and Certificate Verification held on 08.11.2019, 09.11.2019, 21.01.2020 and 20.01.2021.             The revised provisional selection list for the post of Post Graduate Assistants in Economics subject now released is purely provisional and is s

அரசு பள்ளிகள் பொருளியல்(Economics) முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு...

படம்
 அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, திருத்தப்பட்ட பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 220 பொருளியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல், ஜன.,6ல் வெளியானது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே வெளியான பட்டியலில் மாற்றங்கள் செய்து, புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. விபரங்களை, http://trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். >>> Direct Recruitment for the post of Economics Post Graduate Assistants – 2018-19 ( Revised Provisional Selection List )...

உடற்கல்வி ஆசிரியர் மற்றும் நூலகர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு...

படம்
  தமிழ்நாட்டில்  9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது எப்போது? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மாணவர் வருகை 98 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய கூடுதலாக 650 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள நூலகர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...

படம்
 ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார் . ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி : பள்ளிகள் துவங்கியதால் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது . புதிய பாடத்திட்டம் , மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது . அதற்கேற்ப ஆசிரியர்கள் தேவை எண்ணிக்கை பட்டியலிடப்பட்டு தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் . புதிய ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் . அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் . ஏற்கெனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் . அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் , ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் காலிப் பணியிட விவரம் பெறப்பட்டு , தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவர் . மத்திய அரச

புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

படம்
 தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். ஆசிரியர் தேர்வு: கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் அதிகளவில் சேர்த்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளை விட இருமடங்கு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதனால் போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நியமனம் செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிட

அரசு உதவி பெறும் பள்ளி நியமனங்கள் - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...

படம்
  புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்... அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளும்போது, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் கொண்டு வரலாம் என, பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் உள்ள அரசு உதவி்பெறும் வடமட்டம் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு முருகன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட இப்பணியிடத்துக்கான நியமனத்துக்கு அனுமதி கோரி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது. பள்ளியின் கோரிக்கையை நிராகரித்து, மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அனுமதி பெற அவசியமில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் பிற பள்ளிகளில் உபரியாக உள்ள பணியாளர்களை நியமிக்க வேண்டிய

தேர்தல் அறிவிப்புக்கு பின், பொதுத்தேர்வு அறிவிப்பு & ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் - அமைச்சர் செங்கோட்டையன்...

படம்
 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகே, பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் & ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...

24 கணினி ஆசிரியர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு...

படம்
  தமிழகத்தில் இன்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு. 24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு. வெளிமாநில மாணவர்களா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு 02.01.2021 முதல் பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு...

படம்
 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு 02.01.2021 முதல் பணிநியமன கலந்தாய்வு -  பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 8101/ வி1/இ2/ 2019, நாள்: 30-12-2020... >>> பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 8101/ வி1/இ2/ 2019, நாள்: 30-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்...

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி வெளியாகும் அதிகாரப்பூர்வமற்ற தகவலை நம்ப வேண்டாம்...

படம்
 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அரசு கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஆசிரியர் பணியிடம் வாங்கித்  தரகர்கள் தருவதாக சில, அங்கீகரிக்கப்படாத நபர்கள் தங்களை அணுகுவதாக, சில விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆசிரியர் பணி தொடர்பாக வரும் நம்பகத்தன்மை இல்லாத, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு, பணி வாங்கித் தருவதாக கூறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

படம்
 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு 30.12.2020 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 392/ டபிள்யு3/ இ3 /2019, நாள்: 19-12-2020... >>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிருநாளில் பணி நியமன ஆணை வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

படம்
  2018-ல் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை வழங்கப்படும். கோபிசெட்டிபாளையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம்  அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தமிழ்நாடு அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணினி கல்வியில் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் - தலைமைச் செயலாளர் கடிதம்...

 தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி  அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணினி கல்வியில் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்... Chief Secretary Letter No. 29530/S1/2020-1, Dated: 03-12-2020... >>> Click here to Download Tamilnadu Chief Secretary Letter No. 29530/S1/2020-1, Dated: 03-12-2020... >>> நாளிதழ் செய்தி....

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...