தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - சிம்மம்

பிலவ வருடம் 2021-2022

எதிலும் நேர்மையுடனும், விவேகத்துடனும் செயல்படக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே!!

பிலவ வருடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வாழ்க்கையில் உருவாகக்கூடிய பலன்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.




கிரக அமைப்புகள் :


ராசிக்கு நாளில் கேதுவும்


ஆறில் சனியும்


ஏழில் குருவும்


எட்டில் புதனும்


ஒன்பதில் சூரியனும், சுக்கிரனும், சந்திரனும்


பத்தில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர்.


கிரகப் பார்வைகள்

குரு

5ம் பார்வை7ம் பார்வை9ம் பார்வைமிதுனம்சிம்மம்துலாம்

சனி

3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைமீனம்கடகம்துலாம்

செவ்வாய்

4ம் பார்வை7ம் பார்வை8ம் பார்வைசிம்மம்விருச்சிகம்தனுசு

பலன்கள் :


மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த சிறு சிறு பயங்களும், பதற்றங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டாலும் சில நேரங்களில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தாய்வழி உறவுகளிடம் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். சொத்து பிரிவினை தொடர்பான விஷயங்களில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாகன பழுது ஏற்பட்டு சிறு சிறு விரயங்கள் ஏற்படும். அலுவலகம் தொடர்பான விஷயங்களை பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் :


உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இனிப்பு மிகுந்த உணவுகளை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செலவு செய்வது சேமிப்பை பாதுகாக்கும்.


மாணவர்களுக்கு :


மாணவர்கள் பிடிவாத குணத்தை விடுத்து பொறுமையுடன் பாடங்களில் கவனத்தை செலுத்துவது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து அவர்களின் நட்புகளை பெறுவது நல்லது. பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விளையாட்டு மற்றும் எழுத்து தொடர்பான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களுக்கு இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.


பெண்களுக்கு :


உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றத்தை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவான பலன்கள் கிடைக்கும். பேசும் வார்த்தைகளால் மன வருத்தங்கள் ஏற்பட இருப்பதினால் பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். திருமணம் மற்றும் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எண்ணங்கள் மற்றும் கற்பனைகளில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றமும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.


உத்தியோகஸ்தர்களுக்கு :


உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோகம் நிமிர்த்தமான சிறு தூரப் பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சக ஊழியர்களிடத்தில் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும்.


வியாபாரிகளுக்கு :


வியாபாரிகளுக்கு தொழில் அபிவிருத்தி நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் லாபங்கள் மேம்படும். வியாபாரத்தில் நுட்பமான விஷயங்களை செயல்படுத்தும் பொழுது தகுந்த ஆலோசனை பெற்று முயற்சிகளை மேற்கொள்வது நன்மையளிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆவணங்களை பெற்று கொடுக்க வேண்டும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து, அனுசரித்து வேலைகளை வாங்குவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான அணுகுமுறைகளும், வாய்ப்புகளும் கிடைக்கும். நேர்மையுடன் செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நன்மதிப்பையும், நம்பிக்கையையும் மேம்படுத்த முடியும். தொண்டர்கள் மற்றும் சக மக்களுடைய ஆதரவுகளை காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். கட்சி நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த பதவி கிடைக்கப் பெற்ற பின் செய்திகளை வெளிப்படுத்துவது நல்லது. சிறு வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் உங்களை பற்றிய எண்ணங்களில் மாற்றம் உண்டாகும்.


கலைஞர்களுக்கு :


கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தன வருவாய் மற்றும் சேமிப்புகள் அதிகப்படுத்தும் காலக்கட்டங்கள் இதுவாகும். முயற்சிக்கான பலன்கள் சாதகமாக அமையும். வேகத்தைவிட விவேகத்துடன் செயல்படுவது பாராட்டுகளை பெற்று தரும். முயற்சிக்கேற்ப அங்கீகாரங்களை கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகங்களும், புதுவிதமான அனுபவங்களும் கிடைக்கும்.


வழிபாடு :


சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெயில் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர கணவன்-மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.


 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...