கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வங்கதேசத்துக்கு 5,000 டன் டீசல் வழங்கிய இந்தியா

 


வங்கதேசத்துக்கு 5,000 டன் டீசல் வழங்கிய இந்தியா


அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


போர்ச்சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தாய்லாந்தில் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இன்று குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட்டது. இந்த டீசல் பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் குழாய் வழியாக அனுப்பப்பட்டது.


மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நட்பின் அடிப்படையில் வங்கதேசத்துக்கு 5,000 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்பட்டது என இந்தியா அறிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNLA Election 2026 - Leading Status

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - முன்னிலை நிலவரம்  TNLA Election 2026 - Leading Status இதே இணைப்பில் Update செய்யப்படும். தொடர்ந்து முன்...