சனிப்பெயர்ச்சி நிகழ்வு - திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் விளக்கம்
Saturn Transition - Shani Peyarchi Event - Thirunallar Saneeswarar Temple Administration Explains
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
சனிப்பெயர்ச்சி நிகழ்வு - திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் விளக்கம்
Saturn Transition - Shani Peyarchi Event - Thirunallar Saneeswarar Temple Administration Explains
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இன்று (18-03-2025) மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு
Madurai Meenakshi Amman Temple closed today (18-03-2025)
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் இன்று (மார்ச் 18) மதியம் 12:15 முதல் 12:45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.
இதற்காக இன்று அதிகாலை 4:00 மணிக்கு அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்ஸவத்தில் பங்கேற்கின்றனர்.
இதையொட்டி இன்று அதிகாலை முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு இரவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்
Tirupati Darshan Ticket via WhatsApp
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம்.
சேவையை பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு `Hai' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
விருப்பங்களை தேர்ந்தெடுத்து விவரங்கள் வழங்கியவுடன் டிஜிட்டல் ரொக்கப்பணம் செலுத்தும் `கேட்வே' உடனடியாக தோன்றும்.
பணம் செலுத்திய உடன், டிக்கெட் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும்.
டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு கோயில்களுக்கு செல்லலாம்.
`மன மித்ரா` என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது ஆந்திர அரசு..
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் 1,00,008 வடை மாலை சிறப்பு அலங்காரத்தில்
On the occasion of Hanuman Jayanthi, Namakkal Anjaneyar in 1,00,008 Vadai Malai special decoration
மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாடு போற்றும் நாமக்கல் நாயகன் அருள்மிகு ஆஞ்சநேயர் பகவான் 1,00,008 வடை மாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று (30-12-2024) அதிகாலை முதல் அருள் பாலித்து கொண்டிருக்கிறார்
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடு இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் அடையாள அட்டை
Special darshan arrangement introduced for devotees going to Sabarimala by Peruvazhi Pathway - identity card to be issued to them
பழனி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி
At Palani Temple at 3 AM, trekking is permitted
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16-12-2024 முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவதால் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலையேற நிர்வாகம் அனுமதி வழங்கியது.
அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும், அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
Tiruvannamalai Annamalaiyar Temple | Drone Video | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் | டிரோன் வீடியோ
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
சபரிமலையில் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் - காவலர்களின் பணி நேரம் - திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அளித்த பேட்டி
Devotees Spot Booking at Sabarimala - Working Hours of Police - Travancore Devasam Board President Interview
சபரிமலை: திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது பம்பையில் ஸ்பாட் புக்கிங் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆதார் கார்டுடன் வந்தால் அனைவருக்கும் தரிசனத்திற்கான பாஸ் வழங்கப்படும்.
இருமுடிக்கட்டில் பாலிதீன் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று தந்திரியும், தேவசம்போர்டும் வேண்டுகோள் விடுத்தும் தொடர்ந்து அதிகளவில் பாலிதீன் வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.அரசு, தேவசம்போர்டு நடவடிக்கையால் ஒன்பது நாட்களாக தரிசனம் சுமுகமாக நடைபெறுகிறது. மொத்தம், 6 லட்சத்து, 12,290 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
இந்த ஒன்பது நாட்களில் நேற்று முன்தினம், 84,000 பேர் வந்தபோதும், அனைவரும் நல்ல தரிசனம் செய்து திருப்தியாக திரும்பினர். இதனால் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை கூட்டும் எண்ணம் தேவசம் போர்டுக்கு இல்லை. தேவைப்படுபவர்களுக்கு பம்பையில் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதி வழங்கப்படும். தேவைப்பட்டால் பம்பையில் ஸ்பாட் புக்கிங் கூடுதல் கவுன்டர் திறக்கப்படும்.
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வர முடியாத பட்சத்தில், அதை ரத்து செய்ய, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.ஆனாலும், ஏராளமானோர் அதை ரத்து செய்வதாக தெரியவில்லை. தினமும் 10 முதல் 15,000 பேர் வரை வராமல் இருக்கின்றனர். இது வேண்டுமென்றே திட்டமிட்டு யாராவது செய்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மேலும் 18 படிகளில் போலீசாரின் பணி நேரத்தை 20-ல் இருந்து 15 நிமிடமாக குறைத்தது நல்ல பலனை தந்துள்ளது. 20 நிமிடமாக இருந்த போது, கடைசி ஐந்து நிமிடத்தில் போலீசார் மிகவும் சோர்வுற்று படி ஏற்றும் வேகம் குறைந்தது.அத்துடன் 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரண்டு பக்கங்கள் வழியாக நேரடியாக சென்று மூலவரை வழிபடும் திட்டம், நடப்பு சீசனுக்கு பின்னர் பரிசோதனை ரீதியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக கேரள அரசு, ஐகோர்ட், மாஸ்டர் பிளான் கமிட்டி, தந்திரி உள்ளிட்ட அனைவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு மூலவரை தரிசிக்க ஏற்பாடு செய்யும் போது பக்தர்களுக்கு அதிக நேரம் தரிசனம் கிடைக்கும். ஒரு நிமிடத்தில், 80 பேர் மட்டுமே படியில் ஏறுவதால் அந்த 80 பேரும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் நேரில் தரிசிக்க முடியும் என்பது தேவசம் போர்டு கருத்து.
மொத்த வருமானத்தை கணக்கிட்டால் இந்த ஆண்டு 41 கோடியே, 64 லட்சத்து, 65 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது, 28 கோடியே, 30 லட்சத்து 20,364 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 13 கோடியே 33 லட்சத்து 79,801 ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு
முக்கிய கோவில்களில் தரிசன நேரம்
காடாம்புழா பகவதி கோவில் :
காலை: 5 மணி ➖ 11 மணி
மாலை : 3:30pm ➖ 7pm
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் :
காலை: 3 மணி ➖ 1 மணி
மாலை: 3 மணி ➖ இரவு 9 மணி
திருப்பரையாறு ஸ்ரீ ராமசுவாமி கோவில் :
காலை: 4.30 மணி ➖ 12 மணி
மாலை : 4.30Pm ➖ 8:30pm
கொடுங்கள்ளூர் பகவதி கோவில் :
காலை: 4 மணி ➖ 12 மணி
மாலை: 4.30 மணி ➖ இரவு 8 மணி
சோட்டாணிக்கரை பகவதி கோவில் :
காலை: 3:30am ➖ 12pm
மாலை : 4Pm ➖ 8pm
துணை ஈர்ப்பு :
இரவு: 8.30 மணி
வைக்கம் மகாதேவர் கோவில் :
காலை: 4 மணி ➖ 12 மணி
மாலை: 5 மணி ➖ இரவு 8 மணி
கடுதுருத்தி மகாதேவர் கோவில் :
காலை: 4 மணி ➖ 12 மணி
மாலை: 5 மணி ➖ இரவு 8 மணி
மல்லியூர் கணபதி கோவில் :
காலை : 4.30AM ➖ 12:30pm
மாலை: 4.30 மணி ➖ இரவு 8 மணி
ஏத்தமானூர் மகாதேவர் கோவில் :
காலை: 4 மணி ➖ 12 மணி
மாலை : 5 மணி ➖ இரவு 8 மணி
கிடாங்கூர் சுப்ரமணியர் கோவில்:
காலை: 5 மணி ➖ 11:30 மணி
மாலை: 5 மணி ➖ இரவு 8 மணி
கடப்பத்தூர் மகாதேவர் கோவில் :
காலை: 4 மணி ➖ 12 மணி
மாலை : 4Pm ➖ 8pm
எருமேலி சாஸ்தா கோவில் :
காலை: 4 மணி ➖ 12 மணி
மாலை : 4Pm ➖ 8pm
நிலக்கல் மகாதேவர் கோவில் :
காலை: 4 மணி ➖ 12 மணி
மாலை : 4Pm ➖ 8pm
பம்பா கணபதி கோவில் :
காலை: 3 மணி ➖ 1 மணி
மாலை : 4Pm ➖ 11pm
சபரிமலை சன்னிதானம் :
3AM to 1pm
3 pm to 11pm
நெய் அபிஷேகம் :
காலை 3.20 மணி ➖ 11.30 மணி
ஹரிவராசனம் :
இரவு 10.50 மணி
நிலக்கல் பம்பை KSRTC கட்டணம்
சாதாரண - ரூ 40
ஏசி தாழ்தளம் - ரூ 90
மின்சாரம் - ரூ100
பம்பை கணபதிகோவில் அருகே உள்ள ஹனுமான் கோவிலின் முன் வெர்ச்சுவல் க்யூ சரிபார்ப்பு பணிகள்.
மினரல் வாட்டர் பாட்டில்கள் கிடைக்காது. குடிநீர் கவுண்டரில் இருந்து தண்ணீர் சேகரிக்க ஒரு எவர்சில்வர் / அலுமினிய பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
அப்பாச்சி மேடு ஷெட்களில் இது வரை தண்ணீர் வசதி இல்லை.
3-4 மணி நேரம் Qவில் நிற்க நேரலாம். கைவசம் சிற்றுண்டி வைத்து கொள்ளவும்
முடிந்தவரை பிளாஸ்டிக்கை தவிர்க்கவும்
மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் உள்ளன.
உரக்குழி தீர்த்த நுழைவாயில், அழுதை, முக்குழி துவக்கங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக மாலை 4 மணி வரை மட்டுமே கடந்து செல்ல இயலும்
பம்பாவிலும் இலவச உணவு உண்டு. சன்னிதானத்தில் உள்ள மாளிகைப்புரம் கோயிலுக்குப் பின்புறம் பெரிய அன்னதான மண்டபம் உள்ளது. அருகே கழிப்பிட வசதிகள் உள்ளன
நடைபந்தலில் BSNL wifi வசதி 30 நிமிடத்திற்கு இலவசம்
எல்லாவர்க்கும் நல்ல யாத்திரை காலம் மற்றும் திவ்ய தரிசனம் அமையட்டும்.
சுவாமியே சரணம் ஐயப்பா...
60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முன்பதிவு மற்றும் விபரங்களை tnstc.in மற்றும் TNSTC செயலி மூலம் அறியலாம்.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
SETC சார்பில் வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து படுக்கை வசதி, மிதவை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிப்பு.
குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி உண்டு.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் திருச்செந்தூரில் நிர்வகிக்கப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு 29-10-2024 முதல் தொடக்கம்...
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு 29-10-2024 முதல் தொடக்கம் - அறைகள் வாடகை குறித்த தகவல்கள் - இந்து சமய அறநிலையத் துறை - செய்தி வெளியீடு...
Booking for the hostel rooms for devotees built by Arulmiku Subramania Swamy temple in Tiruchendur will start from 29-10-2024 - Details of Room Rent - TNHRCE Press Release...
>>> இந்து சமய அறநிலையத் துறை - செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை.
- உடனடியாக அமலுக்கு வருவதாக BCAS அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமானத்தில் சிறப்பு சலுகை அறிவித்ததுடன், அவை உடனடியாக அமலுக்கு வருவதாக சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில், சபரிமலைக்கு விமானத்தில் பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக தற்போது புதிய நடைமுறையை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, தேங்காய் சரக்கு பட்டியலில் இடம் பெறும் என்பதால் அதனை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.
ஆனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்லும் போது அதில் தேங்காய் இருக்கும் என்பதால் விமானத்தில் எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி எடுத்து செல்ல அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது முதல் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு - அறைகளை முன்பதிவு செய்யும் முறை...
Thiruchendur Murugan Temple Opening of Devotees Hostel - Room Booking Procedure...
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி திறப்பு.. ரூம்களை எப்படி புக்கிங் செய்வது ?
புதிய பக்தர்கள் தங்கும் விடுதி வசதிகள்:
இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில்
• குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bedrooms),
• 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks),
• ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages),
• சமையல் அறையுடன் கூடிய உணவகம்,
• ஓட்டுநர்கள் ஓய்வு அறை,
• வாகனங்கள் நிறுத்துமிடம்,
• மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
*கட்டணம் எவ்வளவு தெரியுமா.?*
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், கழிப்பறையுடன் கூடிய இரண்டு படுக்கை கொண்ட 100 அறைகள் உள்ளது.
2 பேர் தங்கக்கூடிய அறைக்கு 500 ரூபாயும், ஏசி அறைக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய டார்மெட்டரிக்கு 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவர் 100 முதல் 150 ரூபாய் கட்டணத்தில் தங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி.?
திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியில் தங்க விரும்பும் நபர்கள் நேரடியாக கோவில் தங்குமிட வசதி அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது வெளியூர் பக்தர்கள் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற திருச்செந்தூர் கோயிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் கோயில் தங்கும் விடுதி தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தில் முன்பதிவு செயவதற்கான வசதிகள் இணைக்கப்படவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் இணைக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே நவம்பர் 2 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மற்றும் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு புரட்டாசி மாத கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...
புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம்...
>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா - அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பேட்டி...
"முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.
முதற்கட்ட பயணம் வரும் ஜனவரி 28ஆம் தேதி துவங்குகிறது'' என அமைச்சர் சேகர்பாபு நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட துறை நிலை ஓய்வூதிய பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.
இப்புதிய திட்டத்தின் மூலம் 2,646 துறை நிலையிலான ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில், அறுபடை திருத்தலங்களுக்கு பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இலவச சுற்றுலா:
பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
ஆட்சி அமைந்து இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 304 நிகழ்ச்சி நடந்து உள்ளது.
முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 200 பக்தர்களை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.
முதற்கட்ட பயணம் வரும் ஜனவரி 28ஆம் தேதி துவங்குகிறது.
இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர்கள்.
ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.
60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 200 பேர் கட்டணம் இல்லாமல் முழுமையாக 50 லட்சம் ரூபாய் செலவில் அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்களின் சிறப்பு தொகுப்பு...
1. திருப்பரங்குன்றம் :
இங்கு முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.
2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்):
இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.
3. திரு ஆவினன்குடி (பழனி):
இங்கு ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனி ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.
4. சுவாமிமலை (திருஏரகம்):
இங்கு தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.
5. திருத்தணிகை (குன்று தோராடல்):
இங்கு குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.
6. பழமுதிர்ச்சோலை :
இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு - கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் (Attention Ayyappa Devotees Visiting Sabarimala – Opening and Closing Times of Major Temples in Kerala)...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு....
கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்...
காடாம்புழா பகவதி கோயில்
காலை : 5am ➖ 11am
மாலை : 3:30Pm ➖ 7pm
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
காலை : 3 மணி ➖ 1 மணி
மாலை 3 மணி ➖ இரவு 9 மணி
திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்
காலை : 4.30AM ➖ 12pm
மாலை : 4.30Pm ➖ 8:30pm
கொடுங்களூர் பகவதி கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை : 4.30Pm ➖ 8pm
சோட்டானிக்கரை பகவதி கோயில்
காலை : 3:30AM ➖ 12pm
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
கீழ்க்காவு குருதி
இரவு: 8.30 மணி
வைக்கம் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கட்டுருத்தி மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
மல்லியூர் கணபதிகோயில்
காலை : 4.30AM ➖ 12:30pm
மாலை : 4.30Pm ➖ 8pm
ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கிடங்கூர் சுப்ரமணியகோயில்
காலை : 5AM ➖ 11:30am
மாலை 5 மணி ➖ இரவு 8 மணி
கடப்பட்டூர் மகாதேவகோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
நிலக்கல் மகாதேவர் கோயில்
காலை : 4 மணி ➖ 12 மணி
மாலை 4 மணி ➖ இரவு 8 மணி
பம்பா கணபதிகோயில்
காலை : 3 மணி ➖ 1 மணி
மாலை 4 மணி ➖ 11 மணி
சபரிமலை சன்னிதானம்
நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am
ஹரிவராசனம் : இரவு 10.50
நிலக்கல்🔁 பம்பை🔁 நிலக்கல் KSRTC கட்டணம்
சாதாரண பேருந்து ரூ40
ஏசி பேருந்து ரூ90
பேட்டரி பேருந்து ரூ100
வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.
ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..
பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து தூய்மையை காக்கவும்
மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..
உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி வரை மட்டும் அனுமதிக்ககப்படும்
எல்லாக் கோயில்களிலும் பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோயிலுக்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதான மண்டபம் உள்ளது.
சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil
சிவபுராணம் பாடல் வரிகள் தமிழில் (sivapuranam lyrics tamil)...
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்….
திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
திருச்சிற்றம்பலம்!!!
தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!
ஓம் நமசிவாய… சிவாய நமஹ… திருச்சிற்றம்பலம்…
சிவபெருமான் காயத்ரி மந்திரம் 1
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாத்...
சிவபெருமான் காயத்ரி மந்திரம் 2
ஓம் த்ரயம்பகாய வித்மஹே
ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்:பொருட்பால். இயல்:குடியியல் ...