இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ். (IAS - Indian Administrative Service) பணிநிலை என்பது என்ன?
இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ். (IAS - Indian Administrative Service) பணிநிலை என்பது என்ன? அரசு என்பது ஒரு அறக்கட்டளை மாதிரி. அரசின் அதிகாரிகள்தான், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த இரண்டுமே மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரி இந்தியாவின் உயர்ந்த ஆட்சிப் பணி அதிகாரிதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனப்படுகிறார். ஆங்கிலேயர் காலத்தில் ஐ.சி.எஸ் (Indian Civil Service) என்று இருந்தது, சுதந்திர இந்தியாவில் IAS (Indian Administrative Service) என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், அரசு இயந்திரத்தை தலைமையேற்று இயக்குபவர்கள் இவர்களே. அரசு என்பது வேறு. அரசு இயந்திரம் என்பது வேறு. ஏனெனில், ஆட்சிக்கு வருபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். எனவே, அரசு அவ்வப்போது மாறும். ஆனால், அரசு இயந்திரம் மாறாது. அது, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டே இருக்கும். ஒரு அரசாங்கம் (Ministry) எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு இயந்திரம்