இடுகைகள்

Remdesivir லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரெம்டெசிவிர் விரைவில் கைவிடப்படும்: மருத்துவர் தகவல்...

படம்
 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும்' என, டில்லி மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டில்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா, ''ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளிடம் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரெம்டெசிவிர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாததால், அதைக் கைவிட முடிவு செய்துள்ளோம். தற்போது மூன்று மருந்துகள் மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன,'' எனக் கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பிளாஸ்மா சிகிச்சை முறையும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் படி ஏற்கெனவே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி மருத்துவமனைகளுக்கே நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து - முதல்வர் மு.க ஸ்டாலின்...

படம்
 பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்து இனி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர்  மருந்து வழங்கும் முறையை செயல்படுத்துவது குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு. இதுதொடர்பாக அவர் இன்று தலைமைச் செயலகத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாகப் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்கமுடியாத சூழ

ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...

படம்
மக்களின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில், வீட்டுத் தனிமையில் இருப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. ரெம்டெசிவிர் மருந்து தேவையும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இதில் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சிக்கிக் கைதாகின்றனர். இதுகுறித்து திடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால் அவ்வாறு பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: “மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமைய

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...