ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து
Governor R.N. Ravi send Birthday wishes to Chief Minister of Tamil Nadu Mr. M.K.Stalin
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து
Governor R.N. Ravi send Birthday wishes to Chief Minister of Tamil Nadu Mr. M.K.Stalin
மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
We are also studying the changes brought by the central government in the pension scheme which may have a major impact on the financial condition of the state governments - Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin.
மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் உரை - பக்கம் 4, பத்தி 2ல்
25-01-2025 அன்று டிடோஜாக் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கடிதம் வழங்கிய புகைப்படம்
On 25-01-2025 the TETOJAC in-charges were met the Leader of the Opposition in the Tamil Nadu Assembly and Former Chief Minister Hon'ble Mr. Edappadi K.Palaniswami and presenting the demand letter
5,300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் உருக்கு இரும்பின் தொழில்நுட்பம் - முதலமைச்சர் அறிவிப்பு
Technology of Wrought Iron in Tamil Nadu 5,300 Years Ago - Chief Minister's Announcement
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது.
5,300 ஆண்டுகளுக்கு முன்னரே உருக்கு இரும்பின் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகம் ஆகின.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியில்துறை ஆராய்ச்சிகளின்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகில் உள்ள தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பகுப்பாய்வுகளின் முடிவுகளின்படி கி.மு.3,345ல் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமானது தெரியவந்துள்ளது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் (ஜனவரி 23) அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், " கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்றார்கள்.
இன்று அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று கூறியிருந்தேன். பலரும் அது என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அறிவிப்பு என்னவென்றால், `தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கி இருக்கிறது. இதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். 5300 ஆண்டுகளுக்கு முன்னாடியே இரும்பின் பயன்பாடு அறிமுகம் ஆகிவிட்டது. அதற்கான ஆய்வு முடிவுகள் நம்மிடம் இருக்கிறது" என்று அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர்
The Chief Minister listed the educational structures of Tamil Nadu
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
Kerala Chief Minister's security vehicles collided one after the other at Thiruvananthapuram's Vamanapuram
திடீரென சாலையை கடந்த பெண்ணால் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்
திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் - காயங்களின்றி பயணத்தை தொடர்ந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள்
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அணிவகுப்பு பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் ஒன்றுடன் மோதி திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரம் என்ற பகுதியில் சாலையில் பெண் ஒருவர் தமது ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். சாலையில் ஒருபுறம் நடுவழியில் தமது வாகனத்தை நிறுத்திய அப்பெண் வலதுபுறம் திரும்பினார்.
அதே நேரத்தில், முதல்வர் பினராயி விஜயன் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பரபரப்பான சாலையில் பெண்ணின் வாகனம் நின்று திரும்புவதை அறியாமல் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டு நின்றது.
இதையடுத்து, முதல்வர் இருந்த வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் திடீர் பரபரப்பு நிலவியது. முதல்வர் பினராயி விஜயன் பயணித்த கார் சிறிது சேதம் அடைந்தது. அவருக்கும், உடன்வந்த பாதுகாவலர்கள் உள்பட யாருக்கும் நல்வாய்ப்பாக எந்த காயமும் ஏற்படவில்லை.
முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் ₹30.50 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் ₹29.50 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1379, நாள்: 06-09-2024...
Chief Minister's Order to formulate and publish new guidelines for regulating various programs in schools in the State - Press Release No: 1379, Dated: 06-09-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.
எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.
தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.
அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது:
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து...
ஜனநாயக நெறிமுறைகள், அரசியல் சட்ட மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறைபட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே நடத்தும் மாநில உரிமைக்கான போராட்டத்தை மதிக்கிறேன். நீதி அவர் பக்கம் நிற்கும் என நம்புகிறேன்.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. அவ்வாறு வெற்றி பெற்ற 39 எம்.பி.க்கள் மூலம் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது. மீண்டும் இதேபோன்ற நிலை உருவானால், உங்கள் வெற்றியின் பலன் எவ்வாறாக இருக்கும்?
மீண்டும் அதே நிலை உருவாகாது. இண்டியா கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளை செயல்படுத்திக் காட்டுவோம். கடந்த 5 ஆண்டு காலத்தில் பாஜகவுக்கு மிகச் சரியான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டுள்ளது. மோடி அரசின் சர்வாதிகார சட்டங்கள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்துள்ளோம். எதேச்சதிகார செயல்கள் அனைத்தையும் மிக கடுமையாக அம்பலப்படுத்தி உள்ளோம்.
மாநில உரிமைகளுக்காக உரக்க ஒலித்துள்ளோம். ஒற்றை சர்வாதிகார நாடாக ஆக்க நினைக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்துள்ளோம். இதே சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி போராடி இருக்கிறோம். திமுக உறுப்பினர்களின் சிந்தனையால்தான் இண்டியா கூட்டணியே கொள்கை கூட்டணியாக உருவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், வெற்றி வசமானால் உங்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
வெற்றியை மக்கள் எங்களுக்கு முழுமையாக வழங்குவார்கள். நாங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மாற்றுக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் செய்கின்றனர். இதை மாற்ற என்ன முயற்சி எடுப்பீர்கள்?
ஆளுநர் என்பது நியமன பதவியே தவிர, அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பதவி கிடையாது. ஆளுநர்கள் மூலமாக பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அத்துமீறுவதும், போட்டி அரசாங்கம் நடத்த நினைப்பதும் அரசியல்சட்டத்தை மீறும் செயலாகும். அதனால்தான், ஆளுநர் என்கிற நியமனப் பதவியே தேவையில்லை என்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கலைஞர் காலத்திலும் தற்போதும் திமுகவின் நிலைப்பாடு. ஆனால், நடைமுறையில் ஆளுநர் பதவி நீடித்துவரும் நிலையில், ஆளுநர்களை நியமிக்கும்போது, மாநில முதல்வர்களின் ஆலோசனைகளை பெற்று நியமிக்க புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநர் சட்டநடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறும்போது ஆளுநர்களின் அதிகார அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக மட்டுமே இருப்பதை பார்க்க முடிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த கோரிக்கை நிறைவேறுவது சாத்தியமா?
நீட் தேர்வால் மருத்துவ மாணவர்களின் கல்விக் கனவு சிதைக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்குவோம். பயிற்சி மையங்கள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இதுதான் உண்மை. நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கிறது. அதனால் அதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கக் கோரி சட்டமுன்வடிவு இயற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளை கவனிக்கும் மற்ற மாநிலங்களும் இதிலிருந்து விலக்குப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்.
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இது உங்கள் தேர்தல் வெற்றியை பாதிக்காதா?
சட்டப்பேரவை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என உத்தரவாதம் அளித்திருக்கிறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஆட்சி சக்கரத்தை இயக்கக்கூடியவர்கள். அவர்கள் இந்த அரசு எந்தளவு நிதி நெருக்கடியில் இருந்து மெதுவாக மீண்டுவருகிறது என்பதை அறிவார்கள்.
மூன்றாண்டுகளுக்கு முன் இருந்த நிதி நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டதன் விளைவாக மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுபோல, நிதி நெருக்கடி இன்னும் சீராகும்போது மற்ற வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். மத்திய அரசிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதி உரிய வகையில் கிடைக்கின்ற காலம் கனிய இருப்பதால் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேறும் காலம் கனியும்.
இந்த முறை மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே. சில குறிப்பிட்ட சமூகத்துக்கு இடம் தரவில்லை என்கிறார்களே?
அனுபவம் கொண்ட மூத்தவர்களும், அறிமுகமாகும் இளைஞர்களும் இணைந்த வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதுபோல அனைத்து சமுதாயத்தினருக்குமான பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால், உங்கள் கேள்விக்கே இடமிருக்காது. சில தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்கும் சூழலும் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.
‘உயிரே போனாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன்’ என்று துரை வைகோ பேசியுள்ளார். உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும் என்று திமுக சார்பில் அவருக்கு அழுத்தம் தரப்பட்டதா?
தனி சின்னத்தில் நிற்பதாகவே தொகுதிப் பங்கீட்டின் போதும் மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. 'தீப்பெட்டி' சின்னத்தில் துரை வைகோ நிற்கிறார். எனவே, திமுக எந்த அழுத்தமும் தரவில்லை என்பதை நீங்கள் அறியலாம். இவ்வாறு முதல்வர் கூறினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் - துறை வாரியாக வழங்கப்படும் சேவைகள் மற்றும் நடைபெறும் இடங்கள் - கிருஷ்ணகிரி மாவட்டம் (Hon'ble Tamil Nadu Chief Minister's "Chief Minister with People" Program Camp - Department wise Services Offered and Venues - Krishnagiri District)...
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மிசோரம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக லால்து ஹோமா பதவியேற்றுக் கொண்டார் (Laldu Homa sworn in as the new Chief Minister of Mizoram)..
மிசோரம் மாநில முதலமைச்சராக ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்து ஹோமா பதவியேற்றார்.
லால்டுஹோமாவுக்கு 74 வயதாகிறது, இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா்.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாகவும் இவா் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லால்துஹோமா 1987ல் மாநிலத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத, மிஜோ தேசிய முன்னணி (MNF) அல்லாத முதல்வர் ஆவார். மிசோரமின் அரசியலில் இரண்டு கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன, லால்தன்ஹாவ்லா (காங்கிரஸ்) மற்றும் ஜோரம்தங்கா (MNF) ஆகியோர் 34 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட முறை முதல்வர் நாற்காலியில் இருந்தனர். ஆறு பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியான ZPM, சமீபத்தில் நடந்து முடிந்த மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் 40ல் 27ல் வெற்றி பெற்று அபார வெற்றி பெற்றது. லால்துஹோமாவின் முன்னோடி, MNF தலைவர் ஜோரம்தங்கா (79), மற்றும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லா (81) ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். பதவியேற்ற பிறகு, லால்துஹோமா தனது அரசாங்கத்தின் கவனம் "விவசாயிகளுக்கு உகந்த கொள்கைகள், நிதி சீர்திருத்தங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான உந்துதல்" என்று கூறினார். கேபினட் அமைச்சர்களாக பதவியேற்ற ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் ZPM செயல் தலைவர் கே.சப்தங்கா, வன்லால்லானா, சி. லால்சவிவுங்கா, லால்தன்சங்கா, வன்லால்த்லானா, பிசி வன்லால்ருடா மற்றும் லால்ரின்புயி (புதிய அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சர்). நான்கு மாநில அமைச்சர்கள் (சுயேச்சைப் பொறுப்பு), எஃப் ரோடிங்லியானா, பி லால்சன்சோவா, லால்னில்வாமா மற்றும் லால்ங்கிங்லோவா ஹ்மர் ஆகியோருக்கும் ஆளுநரால் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது. மிசோரம் முதலமைச்சராக பதவியேற்ற லால்துஹோமாவுக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா X தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். "மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன் மற்றும் வளமான மற்றும் இணக்கமான வடகிழக்கைக் கட்டியெழுப்ப உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் எழுதினார்.
Lalduhoma is the first non-Congress, non-MNF chief minister of the state since its formation in 1987. Mizoram’s politics had been dominated by the two parties, with Lalthanhawla (Congress) and Zoramthanga (MNF) occupying the chief minister’s chair for over 34 years.
The ZPM, an alliance of six regional parties, secured a landslide win in the recently concluded Mizoram Assembly elections, winning 27 of the 40.
Lalduhoma’s predecessor, MNF president Zoramthanga (79), and former Congress chief minister Lal Thanhawla (81) were also present at the swearing-in ceremony.
After the swearing-in, Lalduhoma stated that his government’s focus would be “farmer-friendly policies, fiscal reforms and a drive against corruption”.
The seven legislators who took oath as cabinet ministers are ZPM working president K Sapdanga, Vanlalhlana, C. Lalsawivunga, Lalthansanga, Vanlalthlana, PC Vanlalruata and Lalrinpuii (the only woman minister in the new cabinet).
Four ministers of state (independent charge), F Rodingliana, B Lalchhanzova, Lalnilwama and Lalnghinglova Hmar, were also administered the oath of office and secrecy by the Governor.
Assam chief minister Himanta Biswa Sarma took to X to congratulate Lalduhoma on assuming office as the chief minister of Mizoram.
“Wishing you a successful stint in advancing the state’s development and looking forward to working with you to build a prosperous & harmonious North East,” he wrote.
மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தொடக்கம் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (A new program called "Ungalai Thedi, Ungal Ooril (Looking for you, in your town)" where the government machinery will come to the field to find people, listen to people's grievances and solve them immediately - Honorable Chief Minister Mr.M.K.Stalin's announcement)...
>>> செய்தி வெளியீடு எண் : 2328, நாள்: 23-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - இளநிலை பட்டப் படிப்பு வரை உதவித்தொகை வழங்க ஏற்பாடு...
அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்! என்று போற்றத்தக்க வகையில் பள்ளிக்கல்வி வரலாற்றில் மாணவர்களின் நலத்திற்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரைப்படி கல்வியில் மட்டுமல்லாது கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என பள்ளிகள் தோறும் கலைத் திருவிழாக்களை நடத்தி வருகிறோம். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. மாணவர்களின் திறமைகளை கண்டு ஊக்குவிக்கும் வண்ணம் பாராட்டு தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் இப்படி ஊக்குவிப்பதால் எங்கள் மாணவர்களும், பெற்றோர்களும் வானைத் தாண்டிய உயரங்களையும் அடைவார்கள்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று இரவு 8.40 மணிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த ரெயில் நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும். அங்கு இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு விழாவில் பங்கேற்கிறார்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதன்முறையாக இப்போதுதான் ரெயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்-அமைச்சரின் பயணத்திற்காக பொதிகை ரெயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது. இதில் சொகுசு ஓட்டலில் உள்ளதுபோல் பல்வேறு வசதிகள் உண்டு. இந்திய ரெயில்வே நிர்வாகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்-அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக 'சலூன்' என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி உள்ளது.
இந்த சலூன் பெட்டி என்பது நகரும் வீடு போன்றது. பாத்ரூம் வசதியுடன் கூடிய 2 பெட்ரூம், பெரியஹால், டைனிங் டேபிள், உட்கார சோபா, நாற்காலி, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உண்டு. சமையலறையில் தேவையான பாத்திரங்கள், சுடுநீர், குளிர்சாதன பெட்டி சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர், போன்றவை பொருத்தப்பட்டிருக்கும்.
இது ரெயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்படுவதால் பின்புறம் இருக்கும் ஜன்னல் மூலமும் இயற்கை அழகை ரசிக்க முடியும். பெரிய நட்சத்திர விடுதியில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இந்த ரெயில் பெட்டியில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் வழங்குகிறது. பயணிகள் தொந்தரவு இல்லாத பயணத்தை இதில் மேற்கொள்ள முடியும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சொகுசு சலூன் பெட்டியில் பயணம் செய்ய இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
Work bookல் உள்ள தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) எழுத உத்தேச Time Table வணக்கம். மதிப்பிற்குரிய HMs & Teachers, Work bookல...