கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CBSE - பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்: ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வரவேற்பு...

 சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்பு தேர்வு வினாத்தாள்முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



நாடு முழுவதும் 23 ஆயிரம் சிபிஎஸ்இ  பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே எதிர்கால தேவையை முன்வைத்து பாடத்திட்டம், தேர்வு வடிவங்களில் பல மாற்றங்களை சிபிஎஸ்இ மேற்கொண்டு வருகிறது.


அதன்படி, 9 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு முறைகளில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 9, 10-ம் வகுப்பு தேர்வு வினாத்தாள்களில் 30 சதவீதமும், 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் 20 சதவீதமும் இனி திறன் மதிப்பீடு கேள்விகள் கேட்கப்படும் என்றுசிபிஎஸ்இ கடந்த வாரம் அறிவித்தது. இந்த மாற்றங்கள் 2021-22-ம்கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். அதற்கேற்ப மாணவர்களை பள்ளிகள் தயார்படுத்த வேண்டும் எனவும் சிபிஎஸ்இ  அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.


இதுகுறித்து சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது;


தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வினாத்தாள்வடிவங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாகஎதிர்கொள்ளவும், உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் வழிவகுக்கும்.


திறன் மதிப்பீடு கேள்விகள் அன்றாட வாழ்க்கை தொடர்பானதாகவும் இருக்கும். எனவே, புத்தகங்கள் தவிர்த்து பொதுஅறிவு தொடர்பான பகுதிகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படியே நடைபெறும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்

5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு...




5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு


கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்


இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்


இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்


நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள்

கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும், அதிகமான ஓட்டுப்பதிவினால் சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம்


35,836 போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர்.


மொத்தம் 5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.


கொரோனா தொற்றால் தேர்தல் அதிகாரி 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.


எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்


- தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - வாக்கு எண்ணிக்கை - மாவட்ட வாரியாக, சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குச் சாவடிகள், மேசைகள் மற்றும் மதிப்பிடப்பட்டுள்ள சுற்றுகள்...



>>> Click here to Download Tamil Nadu Assembly Election 2021 - Counting of Votes - District wise Assembly Constituency wise Polling Stations, Tables and Rounds Estimated Details...


உயர்கல்வித்துறை செயலாளர் செல்வி.அபூர்வா அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக (கூடுதல் பொறுப்பு) நியமனம் - அரசாணை வெளியீடு...



 பள்ளிக்கல்வித்துறை செயலாளர் விடுப்பில் உள்ளதால், உயர்கல்வித்துறை செயலாளர் செல்வி. அபூர்வா அவர்கள்  பள்ளிக்கல்வித்துறை செயலாளராக (கூடுதல் பொறுப்பு) நியமித்து அரசாணை (G.O.Rt.No.1846, Dated: 30-04-2021 ) வெளியீடு...


>>> Click here to Download G.O.Rt.No.1846, Dated: 30-04-2021...



கரோனா வைரஸை தடுக்க மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் மரணம்...

 கர்நாடகாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை விரட்ட‌ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய புரளிகள் அன்றாடம் கிளப்பி விடப்படுகின்றன. அதுபோல் 'எலுமிச்சை தெரபி' என்ற பெயரில் வீடியோ ஒன்று வைரலானது. பாஜக முன்னாள் 



எம்.பி.யும், வி.ஆர்.எல். போக்குவரத்து நிறுவன உரிமையாளருமான விஜய் சங்கேஸ்வர் தனது சமூக வலைதள பக்க‌த்தில் பகிர்ந்து, '' நானும் இதை முயற்சித்திருக்கிறேன். மூக்கில் 2 சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டார்.


இந்நிலையில், ரெய்ச்சூர் அருகேயுள்ள சிந்தானூரை சேர்ந்த ஆசிரியர் பசவராஜ் (42) நேற்று முன் தினம் வீடியோவில் கூறியவாறு தனது மூக்கில் எலுமிச்சை சாறு விட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு தொடர்ச்சியாக வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். ரெய்ச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வதந்தி காரணமாக ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு (G.O.No.389, Dated:24.05.2018) ஏப்ரல் - 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு...



 6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத  பணியிடங்களுக்கு (G.O.No.389, Dated:24.05.2018) ஏப்ரல் - 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு - பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8250/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...


>>> பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8250/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...


DSE - சென்னை மாநகராட்சி - 10 உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - முதன்மைச் செயலாளர் கடிதம்...



DSE - சென்னை மாநகராட்சி - 10 உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - சார்ந்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8079/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...

>>> பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8079/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Type 2 diabetes நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

 டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒர...