கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தபால் வாக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தபால் வாக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Postal Ballot உள்ள உறையை பிரிக்காமலேயே நிராகரிக்க 4 காரணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

தபால் ஓட்டுச்சீட்டு உள்ள உறையை (Form 13B) பிரிக்காமலேயே நிராகரிக்க 4 காரணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் ஓட்டுச்சீட்டு உள்ள சிறிய உறையை (Form 13B) பிரிக்காமலேயே, சில முக்கிய காரணங்களுக்காக அந்த வாக்குகளை செல்லாததாக நிராகரிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை (2026-ன் படி) வழங்கியுள்ளது.

தபால் வாக்குகள் நிராகரிக்கப்படும் முக்கிய காரணங்கள்:

படிவம் 13A இல்லை: ஓட்டுச்சீட்டு இருக்கும் சிறிய உறையுடன் (13B), உறுதிமொழி படிவம் (Declaration - Form 13A) இணைக்கப்படாமல் இருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும்.

கையொப்பம் இல்லை: உறுதிமொழி படிவத்தில் (13A) வாக்காளரின் கையொப்பம் இல்லையெனில் வாக்கு செல்லாது.

சான்றொப்பம் இல்லை: உறுதிமொழி படிவத்தில், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி (Attesting Officer) சான்றொப்பம் (Attestation) செய்யாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.

பொருந்தாத எண்கள்: உறுதிமொழி படிவத்தில் (13A) குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் வரிசை எண்ணும் (Serial Number), சிறிய உறையின் (13B) மீதுள்ள வரிசை எண்ணும் ஒன்றாக இல்லாவிட்டால், அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்படும்.


வாக்கு எண்ணிக்கை நடைமுறை:

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் 500 தபால் வாக்குகளுக்கு ஒரு டேபிள் வீதம் அமைக்கப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மைக்ரோ அப்சர்வர், மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்கள் பணியில் ஈடுபடுவர்.முக்கிய குறிப்பு: தேர்தல் கமிஷன் அனுப்பிய படிவம் தான் என்பதை உறுதி செய்த பிறகே, படிவம்-13சி (Outer Envelope) திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தபால் ஓட்டை பிரிக்காமலேயே நிராகரிக்கலாம் - வழிகாட்டுகிறது தேர்தல் கமிஷன் (பத்திரிக்கைச் செய்தி)



Election Training - Postal Ballot Information

 

தேர்தல் பயிற்சி - தபால் வாக்கு குறித்த தகவல் 


தேர்தல் பயிற்சி செய்தி; (வாட்ஸ்அப் பகிர்வு)


தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் யாவருக்கும் இனிய  வணக்கம்!


இன்று காலை (15/04/2026)  தேர்தல் பயிற்சி வகுப்பின் போது தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் வழங்கப்படவிருக்கிறது.


அதனை அங்கேயே செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


ஆகவே அனைவரும்  தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வருதல் வேண்டும்.


மேலும் கூடுதலாக ஆதார் அட்டை அல்லது தங்களுக்கான பணியாளர் அடையாள அட்டையும் வைத்திருத்தல் நன்று.

 

Postal Ballot - Voting Procedure

 

தபால் வாக்கு - வாக்களிக்கும் வழிமுறை


Postal Vote - Voting Procedure


வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்கு செலுத்தும் முறை...


Procedure for Casting of Postal Ballot / Postal Vote for Polling Officers...



>>> தபால் வாக்கு செலுத்தும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான வழிகாட்டுதல்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தபால் வாக்கு செலுத்தும் முறை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தபால் வாக்கு
13-A உறுதிமொழி படிவம்
13-B தபால் வாக்குச்சீட்டு
13-C OUTER COVER
13-D வாக்காளருக்கான அறிவுரை


COVER A
இதனுள் 13-B வாக்குச்சீட்டு வைத்து ஒட்ட வேண்டும்.


COVER B (13C)
இதனுள் உறுதிமொழிப் படிவம்(13A)
+
COVER A (Containing 13B)


இரண்டையும் (13A வினை Cover A வின் மேல் மடித்து)13C இல் வைத்து ஒட்ட வேண்டும்.



தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே! தங்களது மக்களாட்சி உரிமையை நிலைநாட்டும் கடமையைச் செய்ய அஞ்சல் வாக்குச் சீட்டிற்கு விண்ணப்பித்திருப்பீர்கள்.


கவனமாக வாக்களித்து நமது வாக்காளர் கடமையை 💯 நிறைவு செய்வோம்.


சிறு தவறு செய்தால் கூட நமது ஓட்டு செல்லாத ஓட்டாக மாறிவிடும்.


சட்டமன்றத் தொகுதி உள்ள மாவட்டத்தில் பணியாற்றுவோருக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பிலேயே அஞ்சல் வாக்குச் சீட்டு கிடைக்கும். கிடைக்கப் பெறாதவர்களுக்கும், வெளிமாவட்டத்தினருக்கும் அதன்பிறகு ஒரு சில நாளில் அஞ்சல் வழியே வந்து சேர்ந்துவிடும்.


அஞ்சல் வாக்களிக்கத் தரப்படும் காக்கி உறையில் என்னென்ன இருக்கும்? எப்படி நிரப்புவது? எங்கே சமர்ப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.


நமக்கு வழங்கப்படும் *காக்கி உறையின் உள்ளே,*

1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A)

2. வாக்குச் சீட்டு 

3. இரண்டு உறைகள் (A Cover & B Cover)

4. வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) உள்ளிட்டவை இருக்கும்.


வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) படிவத்தைத் தனியே எடுத்து உங்கள் வசமே வைத்துக் கொள்ளுங்கள். இதை உறையில் வைத்து அனுப்பத்தேவையில்லை.


*1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A) :*


வாக்காளராகிய நீங்கள் கொடுக்க வேண்டிய உறுதிமொழிப்படிவம் இரு பக்கங்களில் இருககும். இதில் *முன்பக்கம் மட்டும் நிரப்பினால் போதும்.* கையொப்பமிடத் தெரியாத / இயலாதவர்களுக்குத் தான் பின் பக்கம்.


உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட வேண்டிய *தொடர் எண் என்பது, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் வரிசை எண்.* இந்த எண் வாக்குச் சீட்டின் பின்புறம் / மேல் பகுதியில் அச்சிடப்பட்டிருக்கும்.


உறுதிமொழிப் படிவத்தின் *மேல்பகுதியில்* இடும் உங்களின் *கையொப்பமும்,* வெளி உறையில் (B cover) இடும் கையொப்பமும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.


உறுதிமொழிப் படிவத்தின் *கீழ்ப் பகுதியில் A / B grade அலுவலர்களிடம் சான்றொப்பம்* பெறப்பட வேண்டும். பெரும்பாலும் பயிற்சி மையத்திலேயே இதில் சான்றொப்பமிட வட்டாட்சியர்கள் தயார்நிலையில் இருப்பர். வெளியிடங்களில் பெற வேண்டுமெனில் *உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், அரசு மருத்துவர்* உள்ளிட்டோரிடம் சான்றொப்பம் பெறுவது சிறந்தது. எளியதும் கூட.


சான்றோப்பத்துடன் சார்ந்த *அலுவலரின் Seal-ஐயும்* பெற மறவாதீர்.


*2. வாக்குச் சீட்டு :*


தங்களது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் அடங்கிய வாக்குச் சீட்டில் தங்களது வாக்கினை தாங்கள் தேர்வு செய்யக்கூடிய தமிழ்நாட்டின் நலன் பேணும், மக்களின் நலனிற்காகத் தொடர்ந்து இயங்கக்கூடிய கூட்டணியின் / கட்சியின் *வேட்பாளரது சின்னத்தில் Ball Point பேனாவில் Tick* அடித்து, முன்னர் மடிக்கப்பட்டபடியே மடிக்கவும்.


ஏதேனுமொரு சின்னத்தில் நீங்கள் அடிக்கும் டிக்கைத் தவிர்த்து *வேறு எந்தவிதக் குறியீடோ கையொப்பமோ வாக்குச்சீட்டில் இடப்படக் கூடாது.*


*3. உறை A :*


A உறையின்மேல் *FORM 13B* என்ற தலைப்பிட்டு சில விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.


*வாக்குச் சீட்டின் வரிசை எண்ணை A உறையின்மேல்* உரிய இடத்தில் எழுதவும்.


அதன்பின், டிக் அடித்து மடித்து வைத்திருக்கும் *வாக்குச் சீட்டினை A உறையினுள் வைத்து உறையை ஒட்டிவிடவும்.*


*4. உறை B :*


B உறையின்மேல் *FORM 13C* என்ற தலைப்பிட்டு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுலர் முகவரி உள்ளிட்ட  விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.


B உறையின்மேல் *இடது புறத்தில் தங்களது கையொப்பத்தை* இட வேண்டும். இக்கையொப்பம் முன்னர் உறுதிமொழிப் படிவத்தில் இடப்பட்ட தங்களது கையொப்பத்தை ஒத்திருப்பது அவசியம்.


இதன்பின் *பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப் படிவம் மற்றும் வாக்குச் சீட்டு வைத்து ஒட்டப்பட்ட உறை A ஆகிய இரண்டையும் B உறையின் உள்ளே வைத்து உறையை ஒட்டிவிட* வேண்டும்.


அவ்வளவு தான் தங்களது அஞ்சல் வாக்கு தயார்.


இனி, இந்த B உறையை *பயிற்சி மையம் / தங்களது தொகுதிக்கான துணை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Taluk Office) / தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Collector Office)* உள்ளிட்ட இடங்களில் உள்ள அஞ்சல் வாக்கிற்கான பெட்டிகளில் போட்டுவிடலாம்.


மேற்படி இடங்களுக்கு நேரில் செல்ல இயலவில்லை எனில், *அருகிலுள்ள அஞ்சலகத்தில் / அஞ்சல் பெட்டியில் அளித்துவிட்டால், அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமே கொண்டு சேர்த்துவிடும்.* இதற்கென Stamp ஏதும் ஒட்டத் தேவையில்லை.


நீங்கள் அனுப்பும் அஞ்சல் வாக்கு பூர்த்தி செய்யப்பட்ட உறை, மே-4-2026 அன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் தங்களது தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை அடைந்திருக்க வேண்டும். இதற்கு ஒரு மாத கால அவகாசமிருப்பினும் ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் சேர்த்துவிடுவது நலம்.




தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - தபால்வாக்கு மூலம் வாக்களிக்க புதிதாக 12 பிரிவினருக்கு அனுமதி - தேர்தல் ஆணையம் உத்தரவு


தமிழ்நாடு அரசின் 5 துறைகள் உட்பட 12 பிரிவினரை தபால் வாக்கு பட்டியலில் புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - தபால்வாக்கு மூலம் வாக்களிக்க புதிதாக 12 பிரிவினருக்கு அனுமதி - தேர்தல் ஆணையம் உத்தரவு


போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், போக்குவரத்து காவலர்கள், சிறைத்துறை , தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பணியாளர்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் தபால் வாக்கு பதிவு செய்யலாம். - அரசிதழ் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

ISSUE OF POSTAL BALLOT TO ABSENTEE VOTERS IN THE CATEGORY OF PERSONS

No. SRO G-10/2026.

EMPLOYED IN ESSENTIAL SERVICES.


No. 52/2026/SDR/Vol-I. -- The following Notifications of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110 001, dated 15th March, 2026 is published:

In pursuance of the provisions of clause (c) of section 60 of the Representation of the People Act, 1951, and on due consideration of the matter in consultation with the Government of Tamil Nadu, the Election Commission hereby notifies the persons employed in the essential services as mentioned in Annexure-I (copy enclosed) as a class of persons to give vote by postal ballot on account of being on duty on the day of poll in the current General Election to the Legislative Assembly of Tamil Nadu, 2026 as per the relevant provisions of the Conduct of Elections Rules, 1961, and the Commission's directions and guidelines. The programme of the said election is scheduled to be notified on 30th March, 2026.

(By Order)

S.B.JOSHI,

Principal Secretary,

Election Commission of India.

ARCHANA PATNAIK,

Chief Electoral Officer and

Principal Secretary to Government,

Public (Elections) Department.


Secretariat,

Chennai-600 009,

17th March, 2026.


Annexure

1. Southern Railway under jurisdiction of Tamil Nadu

2. All India Radio

3. Marine Department

4. Airport Authority of India

5. Ministry of Information of Broadcasting

6. Media Persons

7. Chennai Metro Rail

8. Tamil Nadu State Transport Undertaking

9. Tamil Nadu Power Distribution Corporation Limited

10. Fire and Rescue Services

11. Prison and Correctional Services

12. Traffic Police

(By Order)

S.B.JOSHI,

Principal Secretary,

Election Commission of India.

ARCHANA PATNAIK,

Chief Electoral Officer and

Principal Secretary to Government,

Public (Elections) Department.


Secretariat,

Chennai-600 009,

17th March, 2026.


The power of postal vote of Teachers & Government employees - Speech by former minister Dindigul Srinivasan



ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் தபால் வாக்கு வலிமை - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் பேச்சு


The power of postal vote of Teachers & Government employees - Speech by former minister Dindigul Srinivasan




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



தஞ்சாவூரில் இன்று அதிமுக களஆய்வு என்பது நடந்தது. அப்போது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது அவர் ‛தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் உள்ளது. திண்டுக்கல் சட்டசபை தேர்தலில் எனக்கு ஒரு தபால் ஓட்டு கிடைக்கவில்லை . தபால் ஓட்டில் எத்தனை ஓட்டு தான்யா வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை என்று கூறினார்கள். எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. அட கொலைகார பாவிகளா'' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.


 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் கிடைப்பது இல்லை என்று விமர்சனம் செய்தார்.


இதுதொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது; நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு அதிகாரிகளும், ஆசிரிய பெருமக்களும். அது தெரியுமா? தெரியாதா?. நமக்கு எதிராக தானே ஓட்டுப்போட்டார்கள். எனக்கு என்ன? நான் இப்போது திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ. 22 ஆயிரம் ஓட்டில் நான் வெற்றி பெற்றதாக கூறினார்கள். சரியென்று கையெழுத்துப்போட நான் உட்கார்ந்து இருந்தேன். கலெக்டர் எல்லோரும் உட்கார்ந்து இருந்தோம்.


அப்போது துணை தாசில்தார் ஓடிவந்தாங்க. அய்யா.. அய்யா தபால் ஓட்டு எண்ணி கொண்டு இருக்கிறோம். கொஞ்சம் இருங்க.. கையெழுத்து போடாதீர்கள் என்று சொன்னார். சரி வரட்டும். ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ஓட்டு கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். ஆனால் வெற்றி வித்தியாசத்தில் 5 ஆயிரம் ஓட்டு எனக்கு குறைந்து போய்விட்டதாக கூறினார்கள்.


என்னய்யா.. என்று கேட்டேன். அதற்கு எல்லா தபால் ஓட்டுகளும் திமுகவுக்கு போய்விட்டது. இதனால் 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்து உள்ளீர்கள் என்றார்கள். அதையாவது கொடுங்களேன்யப்பா.. நான் ஜெயிச்சிட்டேல்ல என்று கூறி தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சியடைவது மகிழ்ச்சியடைந்தேன்.


இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் என் தொகுதியில் மட்டும் 5 ஆயிரம் ஓட்டு.. தபால் ஓட்டில் எத்தனை ஓட்டு தான்யா எங்களுக்கு வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை என்று கூறினார்கள். எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. அட கொலைகார பாவிகளா என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை. தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பம் என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் தோழர்களே. இதனால் இது விளையாட்டு கிடையாது. அந்த ஓட்டுகளால் தான் நாம் தோற்றோம். இதனால் அவர்களின் ஓட்டுகளை பெற முயற்சிக்க வேண்டும்'' என்றார்.


39 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள் வாரியாக பெற்றுள்ள அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை...

 

 தபால் வாக்குகள் - 39 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள் வாரியாக பெற்றுள்ள அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை...


Postal Ballots - Number of postal votes received by alliance parties in all 39 constituencies...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இம்முறை தேர்தல் பணியில் அதே தொகுதியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் போன்றோருக்கு பெரும்பாலும் EDC எனப்படும் தேர்தல் பணிச் சான்று வழங்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கும் வசதி கொடுக்கப்பட்டது. 


அஞ்சல் வாக்குச் சீட்டுகள் பெரும்பாலும் வயதானோரும், அருகாமை தொகுதிகளில் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் போன்றோரும் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



தபால் வாக்குகளை பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு - தபால் வாக்குகளை 18.4.2024 வரை பதிவு செய்யலாம் - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம்...

 

 அஞ்சல் வாக்குகளை 17.4.2024 மற்றும் 18.4.2024 ஆகிய நாட்களிலும் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது...


எனவே விடுபட்டுள்ள அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அணுகி தபால் வாக்குகளை செலுத்தலாம்.



>>> தபால் வாக்குகளை 18.4.2024 வரை பதிவு செய்யலாம் - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்கு செலுத்தும் முறை...

 


வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்கு செலுத்தும் முறை...


Procedure for Casting of Postal Ballot / Postal Vote for Polling Officers...



>>> தபால் வாக்கு செலுத்தும் முறை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> வாக்களிப்பு மையம் (Facilitation Centre) தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகள்...



தபால் வாக்கு
13-A உறுதிமொழி படிவம்
13-B தபால் வாக்குச்சீட்டு
13-C OUTER COVER
13-D வாக்காளருக்கான அறிவுரை


COVER A
இதனுள் 13-B வாக்குச்சீட்டு வைத்து ஒட்ட வேண்டும்.


COVER B (13C)
இதனுள் உறுதிமொழிப் படிவம்(13A)
+
COVER A (Containing 13B)


இரண்டையும் (13A வினை Cover A வின் மேல் மடித்து)13C இல் வைத்து ஒட்ட வேண்டும்.


2021 தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...


2021 தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...



தபால் வாக்கு - தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தகவல்...


தபால் வாக்கு - தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தகவல்...



>>>தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தபால் வாக்கு குறித்த தகவல் - நாளை 24.3.2024 ஞாயிறு அன்று தேர்தல் வகுப்பிற்கு செல்லும் அனைத்து ஆசிரிய பெருமக்களின் கவனத்திற்கும் உரிய செயல்பாட்டிற்கும்...



*தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு...



24.03.2024, ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெறும் முதல் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும்போதே கட்டாயமாக  உங்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல், தேர்தல் ஆணை நகல் எடுத்துச் சென்று அத்துடன் Form 12 or Form 12A பூர்த்தி செய்து வழங்கிவிடவும். ஏனெனில் இரண்டாவது வகுப்பிலேயே நமக்கு வாக்குச் சீட்டு அல்லது EDC வழங்கப்படும். 


*இந்த வருடம் வாக்குச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது.  மேலும் நாம் வாக்குச்சீட்டை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.


அங்கேயே தங்களுக்கு வாக்குச் சாவடி அமைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


*அதனால் கட்டாயமாக ஆணை நகல், வாக்காளர் அடையாள நகல் எடுத்துச் செல்லவும்...



தபால் வாக்குகளை இனி அஞ்சலில் செலுத்த முடியாது. அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகளைச் செலுத்தலாம். - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...


 தபால் வாக்குகளை இனி அஞ்சலில் செலுத்த முடியாது. அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகளைச் செலுத்தலாம். - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்...



5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு...




5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு


கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்


இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்


இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்


நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள்

கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும், அதிகமான ஓட்டுப்பதிவினால் சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம்


35,836 போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர்.


மொத்தம் 5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.


கொரோனா தொற்றால் தேர்தல் அதிகாரி 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.


எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்


- தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு


தபால் ஓட்டு எந்தெந்த சமயங்களில் தள்ளுபடியாகும் / செல்லாததாகும்...?

தள்ளுபடி செய்யவேண்டிய தபால் ஓட்டுகள் குறித்து தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.தபால் ஓட்டு பதிவில், செல்லாத ஓட்டு கண்டறிய, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. 




தபால் ஓட்டு உறைக்குள், உறுதிமொழி படிவம் இல்லை என்றாலோ, படிவத்தில் வாக்காளர் மற்றும் சான்றொப்பம் செய்த அதிகாரியின் கையெழுத்து இல்லை என்றாலோ, அது செல்லாத ஓட்டாக கருதப்படும்.உறுதிமொழி படிவத்தில் 



உள்ள வாக்காளர் வரிசை எண்ணும், ஓட்டு சீட்டு உறை மீது எழுதியுள்ள வரிசை எண்ணும் வேறுபட்டு இருந்தால், தள்ளுபடி செய்யலாம்.




உறுதிமொழி படிவத்தை, தனியாக உறைக்குள் வைக்காமல், ஓட்டு சீட்டுடன் சேர்த்து சிறிய உறைக்குள் வைத்திருந்தாலும் தள்ளுபடி செய்யலாம். ஓட்டு சீட்டை 'படிவம் ~ 13பி'க்குள் வைக்காமல், தனியே வைத்திருந்தாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளித்திருந்தாலும், போலி ஓட்டு சீட்டு என்றாலும் தள்ளுபடி செய்யலாம். 




சேதமாகி, முற்றிலும் கிழிந்த மற்றும் கசங்கிய நிலையிலோ உள்ள தபால் ஓட்டுகளையும் தள்ளுபடி செய்யலாம். இவற்றை தள்ளுபடி செய்ய தேர்தல் நடத்தும் அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்