கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் வரவு வைக்கப்படும் தேதி அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் - ஏப்ரல் 2ஆம் தேதி வரவு வைக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


March salary for government employees, teachers and pensioners - will be credited on April 2nd - Tamil Nadu Government Press Release





Salary and pension / family pension for approximately 9.30 lakh Tamil Nadu Government Employees / Teachers and 7.05 lakh pensioners / family pensioners for the month of March 2025 will be credited to their bank accounts on April 2, 2025, since April 1 is a holiday for Banks in view of Annual Accounts Closing.


ஏப்ரல் 1 ஆம் தேதி வருடாந்திர கணக்குகள் முடிவடைவதைக் கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், மார்ச் 2025 ஆம் ஆண்டிற்கான சுமார் 9.30 லட்சம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் மற்றும் 7.05 லட்சம் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் ஏப்ரல் 2, 2025 அன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.






நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், தினசரி படி, கூடுதல் ஓய்வூதியம் உயர்வு - 01-04-2023 முதல் நடைமுறை



MPs monthly salary, pension, daily allowance, additional pension increased from 01-04-2023


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், தினசரி படி, கூடுதல் ஓய்வூதியம் உயர்வு - 01-04-2023 முதல் நடைமுறை


Increase in monthly salary, pension, daily allowance, additional pension for members of Parliament


 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,24,000 ஆக உயர்வு - குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.31,000ஆகவும், தினசரி படி ரூ.2,500-ஆகவும் உயர்வு - பதவியில் இருந்த ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.2500 கூடுதல் ஓய்வூதியம்


எம்.பி.களுக்கு சம்பளம் உயர்வு


* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாத ஊதியம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாகவும், 


* தினசரி படி ரூ.2,000ல் இருந்து ரூ.2,500-ஆகவும், 


* முன்னாள் எம்.பி.களுக்கான ஓய்வூதியம் ரூ.25,000ல் இருந்து ரூ.31,000 ஆகவும் உயர்கிறது.


* இந்த ஊதிய உயர்வு 2023 ஏப்ரல் 1 முன்தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு


MINISTRY OF PARLIAMENTARY AFFAIRS

NOTIFICATION

New Delhi, the 21" March, 2025

G.S.R. 188(E).— In exercise of the powers conferred by sub-section (2) of section 3 and sub-section (1A) of section 8A of the Salary, Allowances and Pension of Members of Parliament Act, 1954 (30 of 1954), the Central Government hereby notifies the increase in the salary, daily allowance, pension and additional pension of Members and Ex-Members of Parliament on the basis of Cost Inflation Index specified under clause (v) of the Explanation to section 48 of the Income-tax Act, 1961(43 of 1961), with effect from the Is April, 2023, as under :-


Existing Rate (X)w.e.f.1.4.2018 - Revised Rate (X)w.e.f.1.4.2023 

Salary : 1.00.000/-per mensem to 1,24,000/- per mensem 

Daily Allowance : 2,000/- to 2,500/-

Pension  : 25,000/-per mensem to 31,000/-per mensem

Additional Pension for every year service in excess of five years : 2,000/- per mensem to 2,500/- per mensem


[F.No.4/3/2022-ME]Dr. SATYA PRAKASH, Addl. Secy.



Government aided schools face problem in getting salaries due to lack of allocation of funds



 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் சம்பளம் பெறுவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி 


Government aided schools face problem in getting salaries due to lack of allocation of funds - Daily News 



அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களின் ஜனவரி மாத சம்பள பட்டியலை பதிவேற்றும்போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் 9000 அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு மாதந்தோறும் சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வட்டார கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் கருவூலத்துறைக்கு அனுப்பப்படும்.


அங்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளம் IFHRMS Website மூலம் சம்பள பட்டியல் தயார் செய்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாதந்தோறும் சம்பள பட்டியல் பள்ளி தாளாளர், செயலாளர் கையெழுத்து பெற்று அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


அங்கிருந்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் சரி பார்க்கப்பட்டு கருவூலத்துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.


ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் சம்பள பில்லை பதிவேற்றம் செய்வார்கள்.


சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்யும் போது 'சம்பள மானியம்' என்ற பகுதியில் உள்ளீடு செய்யும் போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என்று தகவல் வருகிறது.


இதனால் ஜனவரி மாத சம்பளம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள் மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாதம்‌ ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க அறிவுறுத்தல் - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ (Instructions for payment of salary and other benefits for the month of November 2022 to the teachers in the Unions where Block Educational Officers have been transferred - Proceedings of the Director of Elementary Education, TamilNadu) ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...


>>> வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள் மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாதம்‌ ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க அறிவுறுத்தல் - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ (Instructions for payment of salary and other benefits for the month of November 2022 to the teachers in the Unions where Block Educational Officers have been transferred - Proceedings of the Director of Elementary Education, TamilNadu) ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...


 பொருள்‌: தொடக்கக்‌ கல்வி - நிர்வாக சீரமைப்பு - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது -  பணியிடம்‌ மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு அக்டோபர்‌ 2022 மாதம்‌ பின்பற்றப்பட்ட நடைமுறையின்‌ படி ஊதியம்‌ பெற்று வழங்க வட்டாரக்‌ கல்வி அலுவலர்களை அறிவுறுத்த தெரிவித்தல்‌ - தொடர்பாக


பார்வை: 

1. அரசாணை (நிலை) எண்‌:84, பள்ளிக்‌ கல்வித்‌ (பக(1)) துறை, நாள்‌.09.09.2022

2. தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.26666/ஐ1/2022, நாள்‌.23.09.2022

3. தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.229610/சி2/2022, நாள்‌:10.10.2022

4, தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌:10.10.2022


பார்வை 1 இல்‌ கண்டுள்ள அரசாணையில்‌ பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளவும்‌, மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்கும்‌ பொருட்டும்‌ பள்ளிக்‌ கல்வி துறையில்‌ உள்ள நிர்வாகத்தினை சீரமைத்து ஆணை வழங்கப்பட்டது. 


மேற்கண்ட நிர்வாக சீரமைப்பினை தொடர்ந்து, பார்வை 1 இல்‌ கண்டுள்ள அரசாணையில்‌ அனுமதிக்கப்பட்ட 75 வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு பகிர்ந்தளித்தும்‌, உபரியாக கண்டறியப்பட்ட 47 வட்டாரக் கல்வி அலுவலர்‌ பணியிடத்திகனை தேவைப்படும்‌ ஒன்றியங்களுக்கு பணியிடம்‌ மாற்றம்‌ செய்தும்‌ பார்வை 2 இல்‌ கண்டுள்ள செயல்முறைகளின்‌ வாயிலாக ஆணையிடப்பட்டது.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ என்பது அப்பணியிடத்தின்‌ ஆளுமையின்‌ கீழ்‌ உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம்‌ பெற்று வழங்கும்‌ பணியிடமாகும்‌.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியத்தில்‌ அப்பணியிடத்திற்கென புதியதாக DDO Code மற்றும்‌ IFHRMS Office Code ஆகியவை பெறப்படவேண்டும்‌. மேலும்‌, ஒன்றியங்களில்‌ கூடுதலாகப் பெறப்பட்ட வட்டாரக்‌ கல்வி அலுவலரின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ சில பள்ளிகளை கொண்டு வந்து, அப்பள்ளிகளில் பணிபுரியும்‌ ஆசிரியர்களை கூடுதலாக அனுமதிக்கப்பட்ட வட்டாரக்‌ கல்வி அலுவலரின்‌ DDO Codeயின்‌ கீழ்‌ IFHRMS மூலம்‌ Post Mapping செய்த பின்னர்தான்‌ அவர்களுக்கு ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க இயலும்‌.


மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள கால அவகாசம்‌ தேவைபடுவதால்‌, கூடுதலாக வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ அனுமதிக்கப்பட்ட ஒன்றியங்களில்‌ ஏற்கனவே பணிபுரியும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களே அவ்வொன்றியத்தில்‌ உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாத (30.11.2022) ஊதியம்‌ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்‌.


தொடக்கக்கல்வி இயக்குநர்

பெறுநர்
சார்ந்த மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ (தொடக்கக்‌ கல்வி)

TPF சந்தாதாரர்களின் கவனத்திற்கு - உங்கள் ஆகஸ்ட் மாத ஊதியத்தில் 200 அல்லது 300 ரூபாய் குறைகிறதா? (Attention TPF Subscribers - 200 or 300 rupees shortfall in your August salary?)...



TPF சந்தாதாரர்களின் கவனத்திற்கு - உங்கள் ஆகஸ்ட் மாத ஊதியத்தில் 200 அல்லது 300 ரூபாய் குறைகிறதா? (Attention TPF Subscribers - 200 or 300 rupees shortfall in your August salary?)...


உங்களுக்கான பதிவு இது.


உங்கள் TPF சந்தா குறைந்தபட்சம் 12% இருக்க வேண்டும்.


*உதாரணமாக


Basic       - 65500

DA 34%.  - 22270


TOTAL  - 87770


87770 x 12% = 10532


10532 rounded 

to hundred           = 10600


அப்பவும் எனக்கு சரியாக வரவில்லை. என்ன செய்வது?


நீங்கள் 2000PP வாங்கும் TPF இடைநிலை ஆசிரியரா?


அப்போ அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்... 


*உதாரணமாக


Basic       - 61700

DA 34%.  - 20978

PP.            -   2000


TOTAL.    - 84678


84678 x 12% = 10161


10161 rounded 

to hundred           = 10200


அடுத்துள்ள ஆயிரம் ரூபாய்க்கு சந்தா தொகையை உயர்த்திக் கொள்வது நல்லது...


நன்றி...





உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017 & 2021 [The High Court and the Supreme Court Judges (Salaries and Conditions of Service) Amendment Bill, 2017 & 2021]...

 


உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017 & 2021 [The High Court and the Supreme Court Judges (Salaries and Conditions of Service) Amendment Bill, 2017 & 2021]...


உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் அவர்களால் லோக்சபாவில் டிசம்பர் 21, 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 


இந்த மசோதா திருத்தமானது 

(i) உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; மற்றும் 

(ii) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958. இந்தச் சட்டங்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகின்றன. 


சம்பளம்: இரண்டு சட்டங்களும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தைக் குறிப்பிடுகின்றன. 


ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களின் சம்பளத்தை திருத்த மசோதா அமல்: 


அட்டவணை 1: நீதிபதிகளின் சம்பளம் (மாதந்தோறும்)

Table 1: Salary of judges (per month)

பதவி

தற்போது (ரூ.) 

முன்மொழியப்பட்டது (ரூ.) 

இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India)

1,00,000

2,80,000

உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of the Supreme Court)

90,000

2,50,000

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of High Court)

90,000

2,50,000

உயர் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of High Court)

80,000

2,25,000

 

ஆதாரங்கள் : 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958; உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017; 


படிகள் : 

இரண்டு சட்டங்களின் கீழ், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு, பார்வையாளர்களை உபசரிப்பதற்காக ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்ய, ஒரு தொகை படி வழங்கப்படுகிறது. 

செப்டம்பர் 22, 2017 முதல் இந்த படியை திருத்த மசோதா அமலாக்குகிறது. 


அட்டவணை 2: 

நீதிபதிகளின் தனிப்பட்ட செலவுகளுக்கான படி (மாதத்திற்கு) 

Table 2: Sumptuary Allowance of judges (per month)

பதவி (Designation)

தற்போது (ரூ.) Present (Rs)

முன்மொழியப்பட்டது (ரூ.) Proposed (Rs)

இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India)

20,000

45,000

உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of the Supreme Court)

15,000

34,000

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of High Court)

15,000

34,000

உயர் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of High Court)

12,000

27,000

 

ஆதாரங்கள் : 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958; உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017; 



உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உத்தியோகபூர்வ இல்லத்தை வாடகை செலுத்தாமல் பயன்படுத்துவதற்கு உரிமையுடையவர்கள் என இரண்டு சட்டங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், நீதிபதிகள் இந்த உரிமையைப் பயன்படுத்தாவிட்டால், அவர்களுக்கு அவர்களின் சம்பளத்தின் 30%க்கு சமமான மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். இந்தச் சலுகையை அவர்களின் சம்பளத்தில் 24% ஆக மாற்றியமைக்க மசோதா முயல்கிறது. 

மேலும், இந்தக் படி பின்வருமாறு திருத்தப்படும் என்று குறிப்பிடுகிறது: 

(i) அகவிலைப்படி (DA) 25% ஐத் தாண்டும்போது சம்பளத்தில் 27%, மற்றும் 

(ii) DA 50% ஐ தாண்டும்போது சம்பளத்தில் 30%. 


ஓய்வூதியம்: 

இரண்டு சட்டங்களும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வூதியத்தைக் குறிப்பிடுகின்றன: 

(i) அவர்கள் முன்பு மத்திய அல்லது மாநில அரசாங்கங்களின் கீழ் ஓய்வூதியம் பெறக்கூடிய பதவியை வகித்திருந்தால் அல்லது 

(ii) அவர்கள் அத்தகைய பதவியை வகிக்கவில்லை என்றால். 

இந்த இரண்டு பிரிவுகளின் கீழும் நீதிபதிகளுக்கான ஓய்வூதியத்தை திருத்த மசோதா முயல்கிறது. 

மேலும், இந்த நீதிபதிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஓய்வூதியத்தின் உச்சவரம்பையும் இது திருத்துகிறது (அட்டவணை 3 ஐப் பார்க்கவும்). 


அட்டவணை 3: நீதிபதிகளின் அதிகபட்ச ஓய்வூதியம் (ஆண்டுக்கு) 


பதவி (Designation)

தற்போது (ரூ.) Present (Rs)

முன்மொழியப்பட்டது (ரூ.) Proposed (Rs)

இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India)

6,00,000

16,80,000

உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of the Supreme Court)

5,40,000

15,00,000

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of High Court)

5,40,000

15,00,000

உயர் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of High Court)

4,80,000

13,50,000


ஆதாரங்கள் : 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958; உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017...


நன்றி: 

https://prsindia.org/billtrack/the-high-court-and-the-supreme-court-judges-salaries-and-conditions-of-service-amendment-bill-2017




உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2021

நவம்பர் 30, 2021 அன்று மக்களவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

மசோதா திருத்தங்கள் : 

(i) உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954, மற்றும் 

(ii) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958. இந்தச் சட்டங்கள் சம்பளம் மற்றும் நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகின்றன. 

இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணி. ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தின் கூடுதல் அளவு சட்டங்களின் கீழ், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. 

குறிப்பிட்ட அளவுகோலின்படி குறிப்பிட்ட வயதை அடையும் போது, ​​கூடுதல் அளவு ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. இந்த அளவுகோலில் ஐந்து வயது அடைப்புக்குறிகள் உள்ளன (குறைந்தபட்ச வயது 80, 85, 90, 95 மற்றும் 100 ஆண்டுகள்), 

மேலும் கூடுதல் அளவு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது (ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தில் 20% முதல் 100% வரை). 

சம்பந்தப்பட்ட வயது வரம்புக்குட்பட்ட குறைந்தபட்ச வயதை நிறைவு செய்யும் மாதத்தின் முதல் நாளிலிருந்து ஒரு நபர் கூடுதல் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்திற்கு உரிமையாளராக இருப்பார் என்பதை மசோதா தெளிவுபடுத்துகிறது.


நன்றி: 

https://prsindia.org/billtrack/the-high-court-and-supreme-court-judges-salaries-and-conditions-of-service-amendment-bill-2021



>>> இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் மற்றும் தகுதி...


பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம்... வழங்குமா அரசு?

 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை கடந்த 2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். ஆனாலும் நியமனம் செய்தது முதலே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் முந்தைய அ.தி.மு.க அரசால் மறுக்கப்பட்டது. 


எத்தனையோ முறை கோரிக்கை வைத்து இருந்தாலும் 10 ஆண்டுகளும் மே மாதம் மட்டும் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை.


இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க புதிய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என நம்பிக்கை கொடுத்துள்ளது. 


ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இதற்காக தனித்துறை ஏற்படுத்தி தனி அதிகாரியை நியமித்துள்ளார் முதல்வர். 


இதிலும் கோரிக்கை மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் கொடுத்து உள்ளார்கள். எனவே கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளார்கள்.


இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது,



"கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கை இப்போது அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் மே மாதம் சம்பளம் கொடுத்து அனைவரின் குடும்பங்களுக்கு உதவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம்.



பெருமனதுடன் முதல்வர் அவர்கள் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு இம்முறை மே மாதம் சம்பளத்தை வழங்கினால், இவர்களின் உணவு, வீட்டு வாடகை குறித்த கவலைகள் குறையும். ஏற்கனவே, மே மாதம் சம்பளம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நல்ல விடியலை கொடுப்பதாக பள்ளிக்கல்விஅமைச்சர் பேட்டி ஒன்றில் பதில் சொன்னதை ஆவலாக நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம்" என்றார்.

DSE - சென்னை மாநகராட்சி - 10 உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - முதன்மைச் செயலாளர் கடிதம்...



DSE - சென்னை மாநகராட்சி - 10 உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - சார்ந்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8079/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...

>>> பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8079/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...



7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

 


AZ கணக்குத் தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

>>> Click here to Download Proceedings of the Director of School Education R.c.No.: 011658/ L/ E3/ 2021, Dated: 29-03-2021...


3296 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...



 3296 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

Proceedings of the Director of School Education Rc.No.000688/ L/ E3/ 2021, Dated: 27-02-2021...

>>> Click here to Download Proceedings of the Director of School Education Rc.No.000688/ L/ E3/ 2021, Dated: 27-02-2021...




மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு - விரைவில் விசாரணை...

 


தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு- ஊதியப் பட்டியல் தயாரித்தல் சார்ந்த விளக்கம்...

தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடந்த மாத ஊதியப் பட்டியலிலிருந்து, இந்த மாத ஊதியப் பட்டியலில் எந்தெந்த இனங்களில், மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்ற விவரத்தை, ஊதியப் பட்டியலுடன் இணைத்துத் தரும் போது, இணைய தளத்தில் ஊதிய விவரங்களை பதிவேற்றம் செய்யும், அலுவலகப் பணியாளர்களுக்கும், ஊதியப் பட்டியலை சரி பார்த்து ஒப்புதல் அளிக்கும் அலுவலர்களுக்கும் எளிதாக இருக்கும்.

இதன் மூலம் ஊதியப் பட்டியலில் கோரப்படும் ஊதியம், எவ்வித வித்தியாசமும் இன்றி உரிய தலைப்புகளில் சரியாக வரவு வைக்கப் படுவதுடன், (உதாரணமாக PF சந்தா, வருமான வரி பிடித்தம் மற்றும் பிற...) ஆசிரியர்களின் வங்கிக் கணக்கிலும், ஊதியப் பட்டியலில் கோரப்பட்ட சரியான நிகரத் தொகை வரவு வைப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

கணினி மூலம், தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியல் தயாரிப்பவர்கள், இந்த மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்யப் பட்டுள்ள ஊதியம் மற்றும் பிடித்தம் இனங்களின் விவரங்களை மட்டும் Bold செய்து காண்பிக்கலாம். கடந்த மாத ஊதியம் / பிடித்தம் விவரங்களை Bold செய்ய வேண்டாம்.

கையினால் எழுதப்படும் ஊதியப் பட்டியல் தயாரிப்பவர்கள், கடந்த மாத ஊதியத்தில்  பெறப்பட்ட  இனங்களின் விவரங்களை ஊதா மையினாலும், இந்த மாத ஊதியப் பட்டியலில், செய்யப் பட்டுள்ள மாற்ற விவரங்களை மட்டும், சிவப்பு வண்ண மை கொண்டு எழுதலாம்.

மாற்றம் செய்யப்பட்ட இனங்களில்  கடந்த மாதம் பெற்ற / பிடித்தம் செய்யப் பட்ட தொகையை ஊதா மையினாலும், இந்த மாதம் பெற வேண்டிய ஊதியம் (ஆண்டு ஊதிய உயர்வு, தேர்வு நிலை ஊதியம், சிறப்பு நிலை ஊதியம், ஊக்க ஊதியம், ஊதியமில்லா விடுப்பு நாட்கள், அரைச் சம்பள விடுப்பு ஊதியம் போன்ற மாற்றம் செய்யப் பட்ட விவரங்கள் மட்டும்) பிடித்தம் செய்யப் பட வேண்டிய தொகையையும் (PF சந்தாத் தொகை உயர்த்துதல், வருமான வரி பிடித்தம் உயர்த்துதல் மற்றும் சொசைட்டி பிடித்த மாற்றம் போன்றவை) சிவப்பு நிற மையினாலும் எழுதி, ஊதியப் பட்டியலுடன் இணைத்து ஒப்படைத்தால், சம்பளப் பட்டியல் பதிவேற்றம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

சீர்காழி அருகே 3 மாதம் சம்பளம் வழங்காததால் அரசு பள்ளி ஆசிரியர் தர்ணா...

 

சீர்காழி அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு மூன்று மாதங்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தைரியநாதன் (48). இவருக்கு அரசு வழங்கக்கூடியது பணப் பயன்கள் மற்றும் கடந்த மூன்று மாதங்களாக வழங்கக்கூடிய மாத சம்பளம் ஆகியவற்றை வழங்காமல் பள்ளி தலைமையாசிரியர் பழிவாங்குவதாக ஆசிரியர் தைரியநாதன் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தைரியநாதன் நேற்று பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தற்பொழுது கொரோனா காலத்தில் தனக்கு சம்பளம் வழங்காததால் தன் குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராமல் பள்ளி பூட்டியே கிடப்பதால் தான் தினந்தோறும் பள்ளிக்கு வந்து பள்ளி வாசலில் உட்கார்ந்து செல்வதாகவும் ஆசிரியர் தைரியநாதன் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது தலைமையாசிரியர் மீதுள்ள புகார் மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஆசிரியருக்கு அவருக்கு வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

🍁🍁🍁 ஊதியப் பட்டியலில் (PAYBILL) குறிப்புகள் எழுதுதல் தொடர்பான தகவல்கள்...

 


🍁🍁🍁 CPS / TPF சந்தா பிடித்தம் தொடர்பான தகவல்கள்...

 சம்பளம் பட்டியல் சார்ந்து.

👉CPS சந்தா PAY+DA இல் 10% மட்டுமே.

👉TPF சந்தா PAY+DAல் minimum 12%. 

Maximum individual option...

👉TPF சந்தா பிடித்தம் செய்யும் சில ஆசிரியர்கள் 12%க்கு குறைவாக பிடிக்கின்றனர். ஆனால் IFHRMSல் தானாகவே 12% பிடித்து விடும். அதுவும் 12%தொகையை அடுத்த 100ரூபாய்க்கு Round செய்து பிடிக்கும். Incrementல் ஊதியம் கூடினால் 12%ம் கூடும். எனவே TPF பிடிப்பவர்கள் 12%ஐ விட கூடுதலாக பிடித்தம் செய்தால் மேற்கண்ட பிரச்சனை ஏற்படாது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு D.A Hike

   மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு Dearness allowance hike for central government employees மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்ப...