கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு - DEE செயல்முறைகள்...


01-01-2024ன் படி 31-12-2022 வரை பதவி உயர்வு பெற்ற 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் - Middle School HM State Seniority As On 01.01.2024  வெளியீடு - DEE செயல்முறைகள் - State Level Priority List of 5760 Middle School Headmasters - DEE Proceedings...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000030/ ஐ1/ 2024, நாள்: 03-01-2024...



>>> 5760 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல்...


பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசாணை (2டி) எண்: 01, நாள்: 02-01-2024 வெளியீடு...


பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசாணை (2டி) எண்: 01, நாள்: 02-01-2024 வெளியீடு - Pongal Gift Package - Ordinance (2D) No: 01, Dated: 02-01-2024 Issued...



>>> அரசாணை (2டி) எண்: 01, நாள்: 02-01-2024  - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.01.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.01.2024 - School Morning Prayer Activities...


    

திருக்குறள்: 



பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை


குறள்:328


நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கங் கடை.


விளக்கம்:


வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.



பழமொழி :

Laugh away your fears


இடுக் கண் வருங்கால் நகுக



இரண்டொழுக்க பண்புகள் :


1) பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.                                                           


2) எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும்  முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.



பொன்மொழி :


தேதி கேலண்டரின் தாளைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய யோசனை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு புதிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!’’


- சார்லஸ் எஃப். கேட்டரிங் (அமெரிக்க தொழிலதிபர்)



பொது அறிவு :


1.தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?


திண்டுக்கல்


2.தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?

திருநெல்வேலி



English words & meanings :


 Bloom- a flower, especially one cultivated for its beauty.பூக்கும். 

banquet- an elaborate and formal meal for many people.விருந்து.



ஆரோக்ய வாழ்வு : 


சிறுகீரை பயன்கள் :ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களும், இந்த கீரையை அடிக்கடி சாப்பிடவேண்டும். இதனால், ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.



ஜனவரி 03


சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்


சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]


சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.



நீதிக்கதை


 இரண்டு தவளைகள்!


மிகவும் ஆழமான கிணறு ஒன்றில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. இரண்டும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவித்தன. கிணற்றின் ஓரம் ஏறி மேலே வருவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தன.  இரண்டு தவளைகளும் வழுக்கி வழுக்கி உள்ளே விழுந்துக் கொண்டிருந்தன.


இரண்டு தவளைகளும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தகவல் அங்கிருந்த அனைத்து தவளைகளுக்கும் தெரிய வந்தது. அனைத்து தவளைகளும் ஒன்றுக் கூடி கிணற்றின் அருகே வந்தது.


ஆனால் அந்தத் தவளை கூட்டம், அந்த இரு தவளைகளுக்கு உதவி செய்யவில்லை. அதற்கு மாறாக இரு தவளைகளிடமும், ’ஏன் வீணாக முயற்சி செய்துக் கொண்டிருகிறீர்கள்? உங்களால் இது முடியாது. உங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுங்கள். மரணம் தான் உங்கள் முடிவு’ என்று கூச்சலிட்டது.


இரு தவளைகளும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் முயற்சி செய்துக் கொண்டே இருந்தன. தவளை கூட்டம் விடுவதாக இல்லை, ‘இந்தக் கிணறு மிகவும் ஆழமானது. வீண் முயற்சியை விட்டுவிட்டு மரணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கத்தியது.இரு தவளைகளில் ஒரு தவளை சற்று தடுமாறியது. மீண்டும் கத்தியது அந்தக் கூட்டம், ’மேலே நீங்கள் ஏறி வர வேண்டிய தூரத்தைக் கண்டீர்களா? இவ்வளவு தூரம் ஏறி வருவது சாத்தியம் அற்றது. இதுவரை இந்தக் கிணற்றில் விழுந்த 98 தவளைகளும் இறந்துவிட்டன. உங்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை இன்று 100 ஆக உயர போகிறது. முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள் உங்கள் விதி மரணம் தான் என்பதை ஏற்று, கிணற்றின் உள்ளே விழுந்து விடுங்கள்’ என்று ஆரவாரம் செய்தது.


இரு தவளைகளில் ஒரு தவளையின் மனம் மாறியது. மேலே இருக்கும் தவளைகள் கூறுவது சரி தான் என்று ஏற்றுக் கொண்டது. அதன் முயற்சியைக் கை விட்டு, கிணற்றின் நீரினுள் விழுந்து இறந்து விட்டது.


முயற்சி செய்துக் கொண்டிருந்த அந்த ஒரு தவளையைப் பார்த்து, ‘அதோ பார். உன்னோடு ஏறிக் கொண்டிருந்த தவளை உண்மையை உணர்ந்து உள்ளே விழுந்து விட்டது. நீயும் உன் முடிவை ஏற்றுக் கொள். அது தான் உனக்கு இருக்கும் ஒரே வழி’ என்று சத்தம் போட்டன.


ஆனால் அந்த ஒரு தவளை அவை கூறும் எதையும் கண்டுக் கொள்ளவில்லை. மேலே ஏற முயற்சி செய்துக் கொண்டே இருந்தது. பல மணி நேர முயற்சிக்குப் பின் மேலே ஏறி வந்து விட்டது. சுற்றி இருந்த தவளைகளுக்கு ஒரே ஆச்சிரியம். அந்தத் தவளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடின.


அதற்குப் பின் மேலே வந்த தவளை அந்தத் தவளை கூட்டத்திடம், ’தவளை நண்பர்களே! உங்களால் தான் என்னால் இதைச் செய்ய முடிந்தது மிகவும் நன்றி’ என்று உரைத்தது. தவளை கூட்டம் குழப்பமாக நின்றது.


அந்தத் தவளை மேலும் தொடர்ந்தது, ‘எனக்குச் சிறு வயது முதலே காதுக் கேட்காது. செவித்திறன் குறைபாடுள்ள நான் தெரியாமல் கிணற்றின் உள்ளே விழுந்து விட்டேன். ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றுக் கூடி வாயை அசைத்துக் கொண்டே இருப்பதை கவனித்துக் கொண்டே இருந்தேன். 


நான் மேலே ஏறி வர நீங்கள் அனைவரும் இடைவிடாமல் வாயை அசைத்து ஊக்கம் அளித்ததை கவனித்தேன். அது தான் நான் மேலே ஏறி வர உறுதுணையாக இருந்தது’ என்று அப்பாவியாகப் பதில் அளித்தது.


நம் வாழ்க்கையிலும் புதிதாக ஏதேனும் முயற்சி செய்யும்பொழுது, பலர் நம்மை விமர்சனம் செய்துக் கொண்டே இருப்பர். முதல் தவளையைப் போல அவற்றைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தால் நாம் நினைத்த இலக்கை அடைய முடியாது. இரண்டாம் தவளையைப் போல அவற்றுக்குச் செவி சாய்க்காமல் செய்ய நினைப்பதை செய்துக் கொண்டே செல்ல வேண்டும்.


ஒரு நாள் நினைத்த இலக்கை அடைந்த பின் விமர்சித்த வாய் அனைத்தும் வியந்து நம்மை வாழ்த்தும்.



இன்றைய செய்திகள்


03.01.2024


*2023 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் முகேஷ் அம்பானி இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.


*ரன்வேயில் தரையிறங்கிய விமானத்தில் திடீர் தீ விபத்து: ஜப்பானில் பரபரப்பு.


*நெல்லையில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்.


*திருச்சியில் கட்டப்பட்ட பன்னாட்டு விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


*கடந்த ஆண்டை விட மூன்று கோடி பேர் அதிகமாக மெட்ரோ ரயிலில் பயணம்.


*யுனைடெட் கோப்பை டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சின் செர்பிய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Reliance Industries' Mukesh Ambani topped India's billionaire list in 2023.


*Sudden fire in plane landing on runway: stir in Japan


* 92 percent relief amount has been given in paddy - Collector information.


*Prime Minister Modi inaugurated the international airport built in Trichy.


* More than three crore  people travelled by metro train than last year.


*United Cup Tennis; No. 1 player Djokovic's Serbian team advances to the quarterfinals.

 

அரசு அலுவலகங்கள் / பள்ளிகளில் e-Office நடைமுறைப்படுத்துதல் - தேவைப்படும் Computers / Printers / Scanners / Connectivity குறித்த விவரம் - அரசாணை வெளியீடு...


அரசு அலுவலகங்கள் / பள்ளிகளில் e-Office நடைமுறைப்படுத்துதல் - தேவைப்படும் Computers / Printers / Scanners / Connectivity குறித்த விவரம் - அரசாணை (G.O.Ms.No.30, Dated: 27-11-2023) வெளியீடு...



>>> Click Here to Download G.O.Ms.No.30, Dated: 27-11-2023...


கல்வித் துறை நலத் திட்டங்களை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் IAS அதிகாரிகள் உட்பட உயர் அலுவலர்கள் நியமனம் செய்து அரசாணை (G.O.Rt.No.546, Dated: 29-12-2023) வெளியீடு...


கல்வித் துறை நலத் திட்டங்களை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் IAS அதிகாரிகள் உட்பட உயர் அலுவலர்கள்  நியமனம் செய்து அரசாணை (G.O.Rt.No.546, Dated: 29-12-2023) வெளியீடு - Issue of Government Order by appointing high officials including IAS officers in all 38 districts to monitor education sector welfare schemes...



>>> Click Here to Download G.O.Rt.No.546, Dated: 29-12-2023...


சொத்துவரி பெயர் மாற்ற கட்டணம் உயர்வு...

 


சொத்துவரி பெயர் மாற்ற கட்டணம் உயர்வு - Property tax name change fee increase...


வீடு வாங்கியவர்கள், அதற்கான சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், 20,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில், பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. 2022 ஏப்ரல் 1ல் சொத்து வரி, 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில், மற்ற கட்டணங்களும் உயர்ந்து வருகின்றன.


இதில், சொத்து வரி அடிப்படையில், வீடுகளுக்கான திடக்கழிவு மேலாண்மை கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்தையும், உள்ளாட்சி அமைப்புகள் ஓசையின்றி உயர்த்தி வருகின்றன.


நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சொத்து வரி பெயர் மாற்ற, 500 முதல் 1,500 ரூபாய் வரை என்ற, நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.


இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது. சென்னை தவிர்த்து பிற மாநகராட்சிகளில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, சொத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை என்றால், 1,000 ரூபாய்; 10 லட்சம் ரூபாய் வரை என்றால், 3,000 ரூபாய், 20 லட்சம் ரூபாய் வரை என்றால், 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


மேலும், சொத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் வரை என்றால், 10,000 ரூபாய்; ஒரு கோடி ரூபாய் என்றால், 20,000 ரூபாய் வரை கட்டணம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால், பெயர் மாற்ற ஒவ்வொரு ஒரு கோடிக்கும், 20,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.


மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள், மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த கட்டணங்களை நிர்ணயிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், உள்ளாட்சி அமைப்புகள் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தி வருவதால், சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு செல்லும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் தேவைகளை (Pay Slip Download, eChallan Creation உள்ளிட்ட பல்வேறு சேவைகள்) எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரம் வெளியீடு...



களஞ்சியம் (Kalanjiyam) இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் தேவைகளை (Pay Slip Download, eChallan Creation உள்ளிட்ட பல்வேறு சேவைகள்) எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரம் வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்

   உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்  Hi-tech Lab மற்றும் Smart Classகளில் AIக்கள் செய...