கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Implementation of DAAS - Dispensing of Physical Salary Vouchers - submission of online Salary Bills - Letter from Director of Treasuries and Accounts Department to all DDOs and TOs, dated : 24-02-2025


ஊதியப் பட்டியலை கருவூலத்தில் ஒப்படைக்கும் நடைமுறை முடிவுக்கு வருகிறது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநரின் கடிதம், நாள் : 24-02-2025


ஊதியப் பட்டியலை கருவூலத்தில் ஒப்படைக்கும் நடைமுறையில் (Physical  salary vouchers) மாற்றம். Online salary bill system நடைமுறைக்கு வருகிறது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநரின் கடிதம், நாள் : 24-02-2025



Change in the process of handing over the pay bill to the treasury (Physical salary vouchers). Online salary bill system coming into effect - Letter from Director of Treasuries and Accounts Department, dated : 24-02-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT 


From

Tmt. T.Charusree, I.A.S.,

Director of Treasuries and Accounts,

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai,

571, Anna Salai,

Nandanam, Chennai-600 035.


To

All Pay and Accounts Officers

All Treasury Officers


Rc.No.1243239/E1/2025-2, Dated: 24.02.2025


Sir / Madam,

Sub: Accounts - Treasuries and Accounts Department - Kalanjiyam (IFHRMS 2.0) - Digital Audit and Accounting System (DAAS) Portal - Implementation of DAAS - Dispensing of Physical Salary Vouchers - Concurrence given by Accountant General - Decisions have been taken to incorporate the procedures of Dispensing Physical Vouchers and the DDOs of all Departments are requested for submission of online Salary Bills before 2 Working of Salary due date - Intimation to Government - Regarding.

Ref: 1. The Principal Accountant General (A&E), Tamil Nadu, Chennai D.O.Lr No. AG(A&E)/TM/III/2024-25 Dated: 29.01.2025.

2. This office even number letter dated: 24.02.2025.


I invite kind attention to the reference cited. (Copy enclosed)

The integrated Financial and Human Resources Management System(IFHRMS) was implemented from January 2020 and all the Bills and Challans are processed through IFHRMS.

The Monthly Accounts are being compiled in IFHRMS and sent to AG as e-Data through SFTP since January 2020 and district wise monthly accounts with physical vouchers are also being sent to Accountant General by concerned Pay and Accounts Offices and District Treasuries.

Now a new auditing tool Digital Audit and Accounting system (DAAS) has been developed for AG to audit all the vouchers and sub-vouchers online. This tool enables Accountant General to view the vouchers and its attachments online.

Therefore, in the reference cited, the Accountant General has agreed to dispense with submission of physical vouchers for salary with effect from 01.02.2025.

In view of the above, following proposals have been suggested after detailed discussions with Subordinates / District Officials of this department.

1. Dispense with submission of physical salary vouchers to District Treasuries/Pay and Accounts Offices with effect from 01.03.2025 for salary bills.

2. Status-quo to be maintained for February 2025 and physical salary vouchers to be received and retained at Concerned District Treasury / Sub Treasury.



ஊதியம் வழங்கும் நாளுக்கு, குறைந்தபட்சம்  2 நாட்கள் முன்னதாக ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)


உச்சநீதிமன்றத்தில் இன்று (27.02.2025) விசாரணைக்கு வரும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் விவரம்


Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)


 இன்றைய தினம் (27.02.2025) பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.


Record of Proceedings - Supreme Court of India



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




27-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:978

பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

குறள்:
பணிவுடனிருத்தல் பெருமையுடையோர் இயல்வு சிறியோர் தம் பெருமை தாமே பாராட்டுவர்.


பழமொழி :
அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல

It is not wise to talk more.


இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :

"விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை! விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை!"


பொது அறிவு :

1. சீனர்கள் முதன் முதலில் எதன் மீது எழுத்துக்களைப் பொறித்தனர்?

விடை : எலும்புகள் மற்றும் ஆமை ஓடுகள்.      

2. ஒரு நெருப்புக் கோழியின் முட்டை எத்தனை கோழி முட்டைகளுக்குச் சமம்?

விடை : 22


English words & meanings :

Mosque.    -     பள்ளிவாசல்

Park.    -   பூங்கா


பிப்ரவரி 27

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்



நீதிக்கதை

சத்திரம்

ஒருமுறை பீர்பால் தன்

சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல

நேரிட்டது. செல்லும்

வழியில் அரண்மனை

ஒன்று தென்பட்டது.

மிகவும் அசதியாக இருந்த

பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என

முடிவு எடுத்தார். அது

அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு

தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட

மண்ணில் இருக்கும்

அரண்மனை என்றே

அவர் நினைத்தார்.

அந்த அரண்மனையின்

பின்புறம் சென்று

குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே

இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த

பசியில் சிறிதும்

யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர்

அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.

வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று

நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை

உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.

“என் அரண்மனைக்குள்

புகுந்து என் உணவினை

உண்டு, என் படுக்கை

அறையில் படுத்திருக்கிறாயே?” என்று அதட்டினார்.

“ஓஹோ… இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!” என்றார்

பீர்பால்.

தன்னை மன்னர் என்று

அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம

சத்திரம் என்கிறானே

இவன் என கோபமுற்றார்

அந்த மன்னர்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!” என்று கடிந்தார் மன்னர்.

“மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே

இருந்தாலும் இதனையும்

தர்ம சத்திரம் என்று

அழைப்பதில் தவறில்லை!” என்றார் பீர்பால்.

“ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்?

சத்திரம் என்றால் இன்று

ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்… மறுநாள் வேறொருவர் வருவார்..

பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல.

நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!” என்றார்

மன்னர்.

“மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?”

“இதே அரண்மனையில்தான்!”

“உமது தந்தையார்?”

“இதே அரண்மனையில்தான்!”

“நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?”

“இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!”

“ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!” என்றார் பீர்பால்.

பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!

“தாங்கள் யார்?” என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.

“என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!’ என்று பதில் சொன்னார் பீர்பால்.

“அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!” என்றார் அரசர்.

அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்.



இன்றைய செய்திகள்

27.02.2025

* மத்திய மின்துறை வெளியிட்டுள்ள மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண் பெற்று 48-வது இடத்தில் உள்ளது.

* வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை - இலங்கை  இடையேயான  பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் நேற்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

* அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* பெண்கள் புரோ ஹாக்கி லீக்: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்.


Today's Headlines

- The Tamil Nadu Electricity Distribution Corporation has secured 48th place with a score of 11.90 in the rankings of power distribution companies released by the Ministry of Power.¹

- Passenger ship services between Nagapattinam and Sri Lanka have been suspended for three days due to rough weather and strong winds in the Bay of Bengal.

- A 5.1-magnitude earthquake struck off the coast of Odisha near Puri in the Bay of Bengal.

- US President Donald Trump has announced plans to introduce a 'Golden Card' scheme for immigrants, which can be obtained by paying $5 million.

- India won a thrilling match against the Netherlands in the Women's Pro Hockey League.

- Archer achieved a remarkable feat in the international one-day cricket match, surpassing Anderson's record.


Covai women ICT_போதிமரம்


Hindi language erasing - BJP question - Chief Minister M.K.Stalin's response



இந்தி மொழி அழிப்பு - பாஜக கேள்வி - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி


Hindi language erasing - BJP question - Let travelers from northern states learn the same way Tamils ​​know the names of towns when they go to northern states - Chief Minister Stalin's response


இந்தி மொழி அழிப்பு - பாஜக கேள்வி - தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது ஊர் பெயர்களை எப்படி அறிந்துகொள்கிறார்களோ வடமாநிலப் பயணிகளும் அப்படியே அறிந்துகொள்ளட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி


"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!


தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!






Punjabi a compulsory subject in all schools - Punjab Chief Minister Bhagwant Mann orders



 பஞ்சாப் மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயப் பாடம் - பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவு


Punjab to make Punjabi a compulsory subject in all schools - Punjab Chief Minister Bhagwant Mann orders


பஞ்சாபில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாய பாடம் என அம்மாநில அரசு உத்தரவு


பஞ்சாப் மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ஆம்னில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.



முன்னதாக, 2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


26-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:977

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான் சீரல் லவர்கண் படின்.

பொருள்:
கல்வி, செல்வம், சிறப்புகள் சிறுயாரைச் சேருமாயின் தவறான
செயல்களையே செய்விக்கும்.


பழமொழி :
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்

Face the danger boldly than live in fear.


இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :

இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார்.

- பைபிள்


பொது அறிவு :

1. இரைப்பையில் சுரக்கப்படும் நொதியங்கள். _______, ___________

விடை: பெப்சின், ரெனின்.      

2. ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை எவ்வளவு?

விடை: 230-280 கிராம்


English words & meanings :

Jail.    -        சிறைச்சாலை

Market.     -    சந்தை


வேளாண்மையும் வாழ்வும் :

 பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...


நீதிக்கதை

முதல் வழக்கில் வெற்றி!

ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர்

தர்பாரில், வாயிற்காவலன்

உள்ளே நுழைந்து,“பிரபு!

ஒரு கிழவரும், இளைஞரும்

நியாயம் கேட்டு

வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்!”

என்றார் அக்பர்.

உடனே, தர்பாரில் ஒரு

கிழவரும், ஓர் இளைஞனும்

உள்ளே நுழைந்து

சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம்? உங்களில்

யாருக்கு என்ன குறை?”

என்று கேட்டார் அக்பர்.



“பிரபு! என் பெயர் ரகுமான்”

என்று தன்னை

அறிமுகப்படுத்திக்

கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன்!

மாணவர்களுக்கு சட்டத்தின்

நுணுக்கங்களையும், வழக்கு

விசாரணைகளைப் பற்றியும்

கற்பிக்கிறேன்".



இதோ நிற்கிறானே மணி!

இவன் என் மாணவனாக

இருந்தவன்! இவன் மீது

நான் குற்றம் சாட்ட

வந்துள்ளேன்” என்றார்.

அந்த இளைஞன் செய்த

குற்றம் குறித்து அக்பர் கேட்டார்.

“பிரபு! இவன் என்னிடம்

மாணவனாக சேர விரும்பிய

போது, நான் மாதம் மூன்று

பொற்காசு வீதம் குரு

தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க

வேண்டும் என்றும் கூறினேன்.

ஆனால் இவன் தான் பரம

ஏழை என்றும், தட்சிணை

கொடுக்க இயலாது என்றும்

கூறினான். படிப்பு முடிந்ததும்

வழக்கறிஞனாகி முதல்

வழக்கில் வெற்றி பெற்றவுடன்,

முப்பத்தாறு பொற்காசுகள்

சேர்த்து தருவதாகவும்

வாக்களித்தான். அதை

நம்பி இவனுக்கு ஓராண்டு

காலம் கற்பித்தேன்.

இவன் மிகவும் கெட்டிக்கார

மாணவன் என்பதால்

ஓராண்டிலேயே மிகச்

சிறப்பாக சட்ட

நுணுக்கங்களைக் கற்றுக்

கொண்டு விட்டான். நானும்

இவன் வழக்கறிஞனாகி,

முதல் வழக்கிலேயே வெற்றி

பெறுவான் என்றும்,

தட்சிணையை மொத்தமாகக்

கொடுப்பான் என்றும்

நம்பினேன்” என்று சொல்லி

நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல்

ஏமாற்றுகிறானா?” என்று

அக்பர் கேட்டார்.



“இல்லை பிரபு! இவன் திடீரென

வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு

விட்டான். அந்தத் தொழிலில்

ஈடுபடப் போவதில்லையாம்!”

என்றார். உடனே அக்பர்

அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய

உத்தேசத்தை நீ மாற்றிக்

கொண்டாய்?” என்று கேட்டார்.



“பிரபு! நான் சட்டம் பயின்று

முடித்ததும் வழக்கறிஞர்

தொழிலில் ஈடுபடுவதாகத் தான் இருந்தேன். ஆனால்

என் சித்தப்பா திடீரென

இறந்து போனார். அவர்

தன்னுடைய உயிலில்

அவருடைய அனைத்து

சொத்துகளுக்கும் என்னை

வாரிசாக்கி விட்டார். இப்போது

நான் லட்சாதிபதி. அதனால்

எந்த வேலையும் செய்யத்

தேவையில்லை,” என்றான்.



“அப்படியானால் இவருடைய

தட்சிணை என்ன ஆவது?”

என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக்

காப்பாற்றுவேன். எனக்கு

என்று வழக்கறிஞனாக

ஆக வேண்டும் என்று

தோன்றுகிறதோ, அப்போது

தான் தட்சிணையும் தர முடியும்”

என்றான்.



மணி கூறுவது சரியே

என்று நினைத்த அக்பர்.

இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன்.

என்னைப் பொறுத்தவரை

இந்த வழக்கில் மணியின்  பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக்

காப்பாற்றுவேன் என்று

இந்த தர்பாரில் அவன்

உறுதி அளித்துள்ளான்.



அவன் சொல்லை ஏற்றுக்

கொண்டு, அவனுக்கு என்று

வழக்கறிஞராக வேண்டும்

என்று தோன்றுகிறதோ, அன்று

அந்தத் தொழிலில் ஈடுபட்டு

குருவின் தட்சிணையைத்

திருப்பித் தரலாம். அதுவரை

குரு காத்திருக்க வேண்டும்.

இதுவே என் தீர்ப்பு!” என்றார்

அக்பர். தர்பாரில் அனைவரும்

இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர்.

இதை எதிர்பார்க்காத கிழவர்

ஏமாற்றத்தினாலும்,

வருத்தத்தினாலும் உடல்

குறுகிப் போனார்.

ஆனால் பீர்பால் மட்டும்

தீர்ப்பைப் பாராட்டாமல்

மிகவும் மௌனமாக

இருந்ததை கவனித்த அக்பர்,

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு

செய்யுமாறு பீர்பாலிடம்

கூறினார்.அதைக்கேட்டதுமே

கிழவரின் முகம் மலர்ந்தது.

மிகவும் புத்திசாலியான

பீர்பால் சரியான தீர்ப்பு

வழங்குவார் என்று அவர்

உறுதியாக  நம்பினார்.



பீர்பால் இளைஞனை

நோக்கி,“நீ கொடுத்த வாக்கில்

உறுதியாக இருக்கிறாய்

அல்லவா?” என்றார். “அதில் என்ன சந்தேகம்?

கண்டிப்பாக அப்போது

அதில் கிடைக்கும்

வருமானத்திலிருந்து என்

குருநாதருக்கு சேர வேண்டிய

தட்சிணையைக் கட்டாயம்

தந்து விடுவேன்” என்றான்

இளைஞன்.



பிறகு கிழவரை நோக்கி, “மணியின் நிபந்தனையை

நீங்கள் ஆரம்பத்திலேயே

ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பீர்பால்

“ஆம் ஐயா!” என்றார் கிழவர்.



“அப்படியானால் சட்டப்படி

இளைஞனின் தரப்பில்தான்

நியாயம் உள்ளது. அவன்

வழக்கில் வெற்றி பெற்று

தட்சிணை தரும் வரை நீங்கள்

காத்திருக்க வேண்டியதுதான்”

என்றார் பீர்பால். பீர்பாலையும்,

அக்பரையும் வணங்கிவிட்டு

அவர் தள்ளாடித் தள்ளாடி

வெளியேற, இளைஞன்

வெற்றிப் பெருமிதத்துடன்

வெளியேறினான்.



திடீரென மணியை அழைத்து, “மணி ! இதுதான்

சக்கரவர்த்தியின்

நீதிமன்றத்தில் உன்னுடைய

முதல் வழக்கு! உன்னுடைய

வழக்கை விசாரிக்க வேறு

வழக்கறிஞரை நியமிக்காமல்

நீயே உன் தரப்பு நியாயத்தை

வெகு அழகாக எடுத்துக்

கூறினாய்” என்றார் பீர்பால்.

மணி  மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா!” என்றான்.



பீர்பால் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய

முதல் வழக்கில் நீயே

வழக்கறிஞராக இருந்து

வாதாடி அதில் வெற்றி

பெற்று விட்டாய். இல்லையா?”

என்று பீர்பால் கேட்டார். “ஆம் ஐயா!” என்றான்

மணி  மகிழ்ச்சியுடன்.

“அப்படியானால் நீ

வழக்கறிஞராக இருந்து

வெற்றி பெற்ற முதல் வழக்கு

இது! நீ வாக்களித்தபடியே,

குருதட்சிணையை உன்

குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!” என்றார்.

ஒருகணம் திகைத்துப்

போன அனைவரும்,

மறுகணமே கைதட்டி

ஆர்ப்பரித்தனர். கிழவர்

பீர்பாலுக்கு மனமார நன்றி

கூற, அக்பர் பீர்பாலை மிகுந்த

மகிழ்ச்சியுடன் தழுவிக்

கொண்டார்.



இன்றைய செய்திகள்

26.02.2025

* மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் ரூ.194.67 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

* இந்தியாவில் 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. 193 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

* ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று தொடக்கம். விதர்பா - கேரளா அணிகள் மோதல்.


Today's Headlines

- *Women's Self-Help Groups*: The Tamil Nadu government has announced that products made by women's self-help groups have been sold for ₹194.67 crore.

- *Chief Minister's Pharmacies*: Chief Minister M.K. Stalin has inaugurated 1,000 pharmacies across Tamil Nadu, providing quality medicines at affordable prices to the public.

- *Cancer Treatment*: According to the Indian Council of Medical Research, three out of five cancer patients in India die due to inadequate treatment.

- *UN Resolution*: India has abstained from voting on a UN resolution demanding Russia's withdrawal from Ukraine. 93 countries voted in favour, 18 against, and 65 abstained.

- *Ranji Trophy Finals*: The Ranji Trophy finals begin today, with Vidarbha facing Kerala.


Covai women ICT_போதிமரம்


HC directs TN Govt to remove temporary employees and take disciplinary action against appointees




2020ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகப் பணியாளர்களை நீக்கவும், பணி நியமனம் செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


High Court directs Tamil Nadu government to remove temporary employees appointed in government departments after November 2020 and take disciplinary action against appointees


2020-க்குப் பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


2020 நவம்பருக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு.


தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.


அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த வழக்கு விசாரணையின்போது, தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படமாட்டாது என தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.


இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைச் செயலாளர் சார்பில், "2020-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தற்காலிக பணி நியமனம் செய்வது கைவிடுவது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், 2020 நவம்பர் 28ஆம் தேதிக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டனர். அத்துடன் தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.


இந்த உத்தரவுகள் தொடர்பாக மார்ச் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-03-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை ...