கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

27-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:978

பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

குறள்:
பணிவுடனிருத்தல் பெருமையுடையோர் இயல்வு சிறியோர் தம் பெருமை தாமே பாராட்டுவர்.


பழமொழி :
அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல

It is not wise to talk more.


இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :

"விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை! விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை!"


பொது அறிவு :

1. சீனர்கள் முதன் முதலில் எதன் மீது எழுத்துக்களைப் பொறித்தனர்?

விடை : எலும்புகள் மற்றும் ஆமை ஓடுகள்.      

2. ஒரு நெருப்புக் கோழியின் முட்டை எத்தனை கோழி முட்டைகளுக்குச் சமம்?

விடை : 22


English words & meanings :

Mosque.    -     பள்ளிவாசல்

Park.    -   பூங்கா


பிப்ரவரி 27

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்



நீதிக்கதை

சத்திரம்

ஒருமுறை பீர்பால் தன்

சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல

நேரிட்டது. செல்லும்

வழியில் அரண்மனை

ஒன்று தென்பட்டது.

மிகவும் அசதியாக இருந்த

பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என

முடிவு எடுத்தார். அது

அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு

தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட

மண்ணில் இருக்கும்

அரண்மனை என்றே

அவர் நினைத்தார்.

அந்த அரண்மனையின்

பின்புறம் சென்று

குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே

இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த

பசியில் சிறிதும்

யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர்

அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.

வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று

நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை

உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.

“என் அரண்மனைக்குள்

புகுந்து என் உணவினை

உண்டு, என் படுக்கை

அறையில் படுத்திருக்கிறாயே?” என்று அதட்டினார்.

“ஓஹோ… இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!” என்றார்

பீர்பால்.

தன்னை மன்னர் என்று

அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம

சத்திரம் என்கிறானே

இவன் என கோபமுற்றார்

அந்த மன்னர்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!” என்று கடிந்தார் மன்னர்.

“மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே

இருந்தாலும் இதனையும்

தர்ம சத்திரம் என்று

அழைப்பதில் தவறில்லை!” என்றார் பீர்பால்.

“ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்?

சத்திரம் என்றால் இன்று

ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்… மறுநாள் வேறொருவர் வருவார்..

பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல.

நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!” என்றார்

மன்னர்.

“மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?”

“இதே அரண்மனையில்தான்!”

“உமது தந்தையார்?”

“இதே அரண்மனையில்தான்!”

“நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?”

“இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!”

“ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!” என்றார் பீர்பால்.

பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!

“தாங்கள் யார்?” என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.

“என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!’ என்று பதில் சொன்னார் பீர்பால்.

“அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!” என்றார் அரசர்.

அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்.



இன்றைய செய்திகள்

27.02.2025

* மத்திய மின்துறை வெளியிட்டுள்ள மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண் பெற்று 48-வது இடத்தில் உள்ளது.

* வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை - இலங்கை  இடையேயான  பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் நேற்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

* அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* பெண்கள் புரோ ஹாக்கி லீக்: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்.


Today's Headlines

- The Tamil Nadu Electricity Distribution Corporation has secured 48th place with a score of 11.90 in the rankings of power distribution companies released by the Ministry of Power.¹

- Passenger ship services between Nagapattinam and Sri Lanka have been suspended for three days due to rough weather and strong winds in the Bay of Bengal.

- A 5.1-magnitude earthquake struck off the coast of Odisha near Puri in the Bay of Bengal.

- US President Donald Trump has announced plans to introduce a 'Golden Card' scheme for immigrants, which can be obtained by paying $5 million.

- India won a thrilling match against the Netherlands in the Women's Pro Hockey League.

- Archer achieved a remarkable feat in the international one-day cricket match, surpassing Anderson's record.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)

உச்சநீதிமன்றத்தில் இன்று (27.02.2025) விசாரணைக்கு வரும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் விவரம் Details of school education related case...