6ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு - இந்த மாதத்திற்குள் எடுத்துக்கொள்ள அனுமதி...

 தமிழகத்தில் கடந்த 6 ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் கடந்த 6 ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் பணியில் அரசு துறைகளை சேர்ந்த வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை , பள்ளிக்கல்வித்துறை , வேளாண்மைத்துறை , சுகாதாரத் துறை , கூட்டுறவு துறை போன்ற 20 க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை கடந்த ஒரு மாதமாக பல்வேறு நிலைகளில் தேர்தல் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த நாளில் வேலை செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 6 ம் தேதி தேர்தல் நாளில் பணியாற்றிய அனைத்து வகையை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மாத்திற்குள் ஒருநாள் சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...