கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு - இந்த மாதத்திற்குள் எடுத்துக்கொள்ள அனுமதி...

 தமிழகத்தில் கடந்த 6 ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் கடந்த 6 ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் பணியில் அரசு துறைகளை சேர்ந்த வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை , பள்ளிக்கல்வித்துறை , வேளாண்மைத்துறை , சுகாதாரத் துறை , கூட்டுறவு துறை போன்ற 20 க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை கடந்த ஒரு மாதமாக பல்வேறு நிலைகளில் தேர்தல் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த நாளில் வேலை செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 6 ம் தேதி தேர்தல் நாளில் பணியாற்றிய அனைத்து வகையை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மாத்திற்குள் ஒருநாள் சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Transfer Counseling for BEOs held on today

  வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-ல் மாறுதல் கலந்தாய்வு Transfer Counseling for Block Education Officers held today, May 16th வட்டாரக் க...