அரசுப் பணிகளில் சேர்வதற்கும், உயர் கல்வி நிறுவங்களில் பயில்வதற்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) வழங்கப்பட்டுள்ள உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை (G.O.Ms.No.: 75, Dated: 26-07-2021) வெளியீடு...

 


ABSTRACT 

Public Services - Reservation of appointments in Public Services - Special Reservation to MBC (Vanniakula Kshatriya), MBC&DC and MBC within the reservation provided for Most Backward Classes and Denotified Communities — Act enacted - Modification to the roster - Orders - Issued. 

HUMAN RESOURCES MANAGEMENT (K) DEPARTMENT 

G.0 (Ms.) No.75, Dated 26.07.2021  

Read: 

1. G.O.(Ms) No. 241, Personnel and Administrative Reforms (K)Department, dated 29.10.2007. 

2. G.O.(Ms.) No. 101, Personnel and Administrative Reforms (K) Department, dated 30.5.2008. 

3. G.O.(Ms.) No. 206, Personnel and Administrative Reforms (K) Department, dated 6.11.2008. 

4. G.O.(Ms.) No. 65, Personnel and Administrative Reforms (K) Department, dated 27.05.2009. 

Read also: 

5. Tamil Nadu Act No.8 of 2021 


அரசுப் பணிகளில் சேர்வதற்கும், உயர் கல்வி நிறுவங்களில் பயில்வதற்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) வழங்கப்பட்டுள்ள உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை (G.O.Ms.No.: 75, Dated: 26-07-2021) வெளியீடு...


வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு 2.5% சிறப்பு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு...


வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள  20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது.


அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் உறுதி அளித்திருந்தார். அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.


இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


>>> Click here to Download G.O.Ms.No.: 75, Dated: 26-07-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...