காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் - அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)... போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருப்போரின் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O.Ms.No.67, Dated: 22-01-2010) அன்று பிறப்பிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் தடை இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது. அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, சீருடைப் பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லாது, சட்டவிரோதமானது என்றும், எதிர்காலத்தில் இந்த அரசாணையை செயல்படுத்தக்கூடாது என்றும்