மின்வெட்டு, புதிய மின் இணைப்புகள், பில்லிங் சிக்கல்கள், பழைய மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைப் பதிவு செய்ய மின்னகம் ஹெல்ப்லைன் எண் : 9498794987 (Minnagam Helpline Number : 9498794987 to register various complaints like power cut, new power connections, billing issues, replacement of old poles etc.)...



  மின்வெட்டு, புதிய மின் இணைப்புகள், பில்லிங் சிக்கல்கள், பழைய மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைப் பதிவு செய்ய மின்னகம் ஹெல்ப்லைன் எண் : 9498794987 (Minnagam Helpline Number : 9498794987 to register various complaints like power cut, new power connections, billing issues, replacement of old poles etc.)...


உங்களது வீடுகளிலோ.. கடைகளிலோ.. இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் Fuse போய் விடும். அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும். அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....?


பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும்.. அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்...


அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்...


இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்...

 

தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் 9498794987 என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன  புகாரோ அதை தெரிவித்தால் போதும்...


தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்...


அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும். அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள்... 


இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்... இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை...


மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : TN EB CUSTOMER CARE : 9498794987


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) நுகர்வோரின் பல்வேறு மின்சார புகார்களைப் பதிவு செய்ய 'மின்னகம்' என்ற சேவை அழைப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. 


1912க்கு பதிலாக 9498794987 என்ற பிரத்யேக ஹெல்ப்லைனை TANGEDCO அறிமுகப்படுத்தியுள்ளது, இது புதிய சேவை எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இதில் மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோர் மின்வெட்டு, புதிய மின் இணைப்புகள், பில்லிங் சிக்கல்கள், பழைய மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைப் பதிவு செய்யலாம். 


மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள். முன்பு மின்தடை குறித்து மட்டுமே நுகர்வோர் புகார் அளிக்க முடியும். பிரத்யேக சேவை அழைப்பு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அண்ணாசாலையில் உள்ள TANGEDCO தலைமையகத்தில். மூன்று ஷிப்டுகளில் 24 மணி நேரமும் செயல்படும் சேவை அழைப்பு மையத்தில் 195 டெலிபோன் ஆபரேட்டர்களும், ஒவ்வொரு ஷிப்டிலும் 65 ஆபரேட்டர்கள் அழைப்புகளை நிர்வகிப்பார்கள் என்று ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. CC-MAC கணினிமயமாக்கப்பட்ட நெட்வொர்க்கில் பணிபுரியும் தானியங்கி அழைப்பு மையம், வாட்ஸ்அப் மூலம் புகார் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவலை அனுப்பும், மேலும் புகார்கள் சரி செய்யப்பட்ட பிறகு நுகர்வோருக்கு குறுந்தகவல் சேவை (SMS) மூலம் திருத்தம் குறித்து தெரிவிக்கப்படும்.



The Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) has launched 'Minnagam', a service call centre to register various electricity complaints by the consumers.


Tangedco has introduced a dedicated helpline bearing 9498794987 replacing 1912, which has been integrated with the new service number, wherein consumers throughout the State could register various complaints including power failure, new electricity connections, billing issues, replacement of old electricity poles, and any other issues related to electricity. Previously consumers could give complaints only regarding power disruptions.



The dedicated service call centre was inaugurated by Chief Minister M.K. Stalin at Tangedco's headquarters on Anna Salai recently.


A press release said the service call centre functioning round-the-clock in three shifts would have 195 telephone operators with each shift having 65 operators to manage the calls.


The automated call centre working on the CC-MAC computerised network would send information to the local officials concerned once a complaint gets registered through WhatsApp and after the complaints are rectified the consumer would be informed of the rectification through a Short Messaging Service (SMS).


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...