கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை



பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை


அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கும் திட்டம் அறிமுகம்


பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.


அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அவர் 2021-ம் ஆண்டு பதவியேற்றதும் தனது முதல் சுதந்திர தின உரையில் ‘மாத்ரி பித்ரி வந்தனா’ திட்டத்தில் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார். அது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.


இந்த திட்டத்தின் கீழ் வருகிற நவம்பர் 14, 15-ந் தேதிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பை பெற (சி.எல்.), அரசு அனுமதிக்கிறது. இந்த விடுமுறையை அதற்கான வழிகாட்டலின் அனுமதியுடன் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவில் மாநில கவர்னரும் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IGNOU - B.Ed பட்டச் சான்றிதழ்-க்கு தனியாக மதிப்பீடு பெற தேவை இல்லை - மாவட்டக் கல்வி அலுவலர்

 புது டெல்லி இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டச் சான்றிற்கு  தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை  என அனை...