கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் திரு பெரியகருப்பன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



 ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் திரு பெரியகருப்பன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 


ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் திரு.பெரியகருப்பன் வழக்கு


நாளை அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


 திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் சுமார் 83,374 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்குகள் கூடுதலாக, அதாவது 83,375 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், அந்த தொகுதியில் வென்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் எனக்கோரி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதில் மறுசரிபார்ப்புச் செயல்முறை தொடர்பாக பதிவான காணொளி காட்சிகளை பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.


வழக்கின் போது பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பத்தூர் என்ற பெயரில் 185 மற்றும் 50 என்ற எண்களுடன் இரு தொகுதிகள் உள்ளன. ஒரு தபால் வாக்குச்சீட்டு தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மற்றொரு திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த வாக்குச்சீட்டு அங்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.


அந்த வாக்கு சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அந்த வாக்கு எண்ணப்பட்டிருந்தால் இறுதி முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று வாதிட்டார்.


 இதையடுத்து, திருப்பத்தூர் என்ற பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கு தொடர்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது பெரியகருப்பன் தரப்பில் முன்வைக்கப்பட்ட புகாரை ஏன் பரிசீலிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற NEET UG தேர்வுகள் ரத்து

  கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய...