கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுகள் எழுதாத 32014 மாணவர்களை தொடர்பு கொண்டு, துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வழங்க தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் உத்தரவு


+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வுகள் எழுதாத 32014 மாணவர்களை தொடர்பு கொண்டு, துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வழங்க தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் செயல்முறைகள் வெளியீடு


Class-12 District Wise Board Exam Fail & Absent Students Abstract



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள், சென்னை-600 006


உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்


ந.க.எண்:1623/L1/CG4/MS/2026, நாள்:19.05.2026


பொருள்:


உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் கடந்த மார்ச்2026 இல் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வெழுதாத மாணவர்களை தொடர்பு கொண்டு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து.


உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 2026 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத/ தேர்வெழுதாத மாணவர்கள், துணைத்தேர்விற்கு 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026(சனிக்கிழமை ) வரையிலான நாட்களிலும், மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணபிக்க தவறும் மாணவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் 01.06.2026 (திங்கட்கிழமை ) மற்றும் 02.06.2026 (செவ்வாய்க்கிழமை ) ஆகிய நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 வரை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பள்ளி தேர்வுகள் இயக்ககத்தின் தரவின் படி, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் 26,846 மாணவர்களும், தேர்வெழுதாத 5168 மாணவர்களும் உள்ளனர். இம்மாணவர்கள் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறுகிய கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில், இணைப்பில் மாவட்ட வாரியாக வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்கிட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை தலைமையாசிரியர்களின் வாயிலாக EMIS இணைய தளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளி வந்த பிறகு, அந்த மாணவர்களுக்கும் வழிக்காட்டுதல்கள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. 


இணைப்பு:


1 மாவட்ட வாரியாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத/ தேர்வெழுதாத மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள்.


2. துணைத்தேர்வு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணைகள் அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006.


உறுப்பினர் செயலர்


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


நகல்


இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுகள் எழுதாத 32014 மாணவர்களை தொடர்பு கொண்டு, துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வழங்க தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் உத்தரவு

+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வுகள் எழுதாத 32014 மாணவர்களை தொடர்பு கொண்டு, துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வழங்க தமி...