கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Perunthalaivar Kamarajar Breakfast Scheme | G.O. (Ms) No. 20 , Dated : 15-07-2026

 


அரசாணை (நிலை) எண். 20 , நாள் : 15.07.2026 - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என பெயரிடப்படுதல் - அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல் - அரசாணை வெளியீடு


G.O. (Ms) No. 20 , Dated : 15-07-2026 - Naming the Chief Minister's Breakfast Scheme as the "Perunthalaivar Kamarajar Breakfast Scheme" - Extension of the Perunthalaivar Kamarajar Breakfast Scheme to students studying in Classes 6 to 8 in all government and government-aided schools - Government Order issued



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயரிடப்படுதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (ச.ந.4-1) துறை


அரசாணை (நிலை) எண். 20 , நாள் : 15.07.2026


திருவள்ளுவர் ஆண்டு 2057 ஸ்ரீ பராபவ, ஆனி 31


படிக்கப்பட்டவை


1. அரசாணை (நிலை) எண்.43, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 27.07.2022.


2. அரசாணை (நிலை) எண்.01. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 13.01.2023.


3. அரசாணை (நிலை) எண்.33, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 07.06.2023.


4. அரசாணை (நிலை) எண்.60. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந-4-1) துறை, நாள் 11.09.2023.


5. அரசாணை (நிலை) எண்.17, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 11.03.2024


6. அரசாணை (நிலை) எண்.71. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 27.06.2025.


7. அரசாணை (நிலை) எண்.96, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 08.10.2025.


8. தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்.229, நாள் 15.06.2026.


9. சமூக நல இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண். 3060546/சஉதி-2 (1)/2026, நாள் 03.07.2026.


ஆணை:-


மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) பயிலும் 1,14,095 தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்குவதற்காக முதற்கட்டமாக முதலமைச்சரின் உணவுத் திட்டத்தினை செயல்படுத்த ஆணையிடப்பட்டது. காலை


2. பின்னர், மேலே இரண்டு முதல் ஆறு வரை படிக்கப்பட்ட அரசாணைகளின்படி, தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் (மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி) மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, தற்போது 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 19,34,230 மாணவ மாணவியருக்கு பயனளிக்கக் கூடிய வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


3. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், 15.06.2026 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் LOITGOOT GU மாணவியருக்கு. தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று முதல் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.


4. இதனைத் தொடர்ந்து, மேலே ஒன்பதாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், சமூக நல இயக்குநர். இத்திட்டம் தொடர்பாக ஏற்கனவே வகுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 15.14,274 மாணவ/மாணவியர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியையும், இதற்கான தொடரும் செலவினத்திற்காக ரூ.240.01 கோடியும் தொடரா செலவினத்திற்காக ரூ.28.71 கோடியும் ஆக மொத்தம் ரூ.268.72 கோடிக்கான நிதி அனுமதியையும் கோரியுள்ளார்.


5. மேலே பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-


i. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயரிடப்படுகிறது.


ii . தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் (இணைப்பு-1-ல் உள்ளவாறு) 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. 


iii. இத்திட்டம் இணைப்பு-II-இல் உள்ள ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் விரிவுப்படுத்தப்படுகிறது.


iv. மாணவ/மாணவியரின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 12,87,133 மாணவ/மாணவியருக்கு. ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அளவில். ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ.343,55,00.000/- (ரூபாய் முந்நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சம் மட்டும்) செலவிட நிதி அனுமதி வழங்கப்படுகிறது.


v. 2026-2027 ஆம் நிதியாண்டுக்கு, இத்திட்டத்துக்கென கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்ட தொடரும் செலவினம் ரூ.204,05,84,395/- மற்றும் தொடரா செலவினம் ரூ.13.57.25.000/- ஆக மொத்தம் உத்தேச செலவினம் ரூ.217,63,09,395/க்கான (ரூபாய் இருநூற்று பதினேழு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.



முழுமையான அரசாணை


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்