மாணவர்களின் ஆதார் மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்ய மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் வெளியீடு
Proceedings of the District Educational Officer (Elementary Education) regarding the uploading of students' Aadhaar and Post Office Savings Bank account details to EMIS.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்
ந.க.எண்.2198/ஆ5/2026 , நாள். 22.07.2026
பொருள்: தொடக்கக் கல்வி - கல்வி உதவித் தொகை - காஞ்சிபுரம் மாவட்டம் -மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்பெறும் பொருட்டு ஆதார் புதுப்பித்தல் மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு துவங்குதல் EMIS இல் இவ்விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்யக் கோருதல்-சார்ந்து.
பார்வை: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் நே.மு.க.ந.க.எண்.1758/அ4/2025, நாள். .07.2026.
பார்வையில் காணும் கடிதத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொடக்கக் கல்வியின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து விதமான கல்வி உதவித் தொகைகளும் EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு அந்தந்த நலத்தறை வாயிலாக நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்துவதற்கு கீழ்க்காணுமாறு EMIS வளைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இப்பணிக்கென ஒரு Nodal Officer-ஐ உடனடியாக நியமித்து, மாணாக்கர்களின் ஆதார் எண், வங்கிகணக்கு எண், சாதி மற்றும் ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்களை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சரிபார்த்து EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். மேலும், பதிவேற்றம் செய்பவருடன் ஒரு பொறுப்பாசிரியரை நியமித்து இப்பணியை கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும். மாணாக்கர்களின் செயல்பாடற்ற வங்கி கணக்கினை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர தக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் EMIS தளத்தில் மாணாக்கர்களது விவரங்கள் அனைத்தும் எவ்வித காலதாமதமும் இன்றி 100% முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டமைக்கான அறிக்கையினை (Compliance Report) 27.07.2026 முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) காஞ்சிபுரம்.
பெறுநர்-
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்
காஞ்சிபுரம் / வாலாஜாபாத் / உத்திரமேரூர்/ ஸ்ரீபெரும்புதூர் / குன்றத்தூர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.