இடுகைகள்

Gratuity லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"பணிக்கொடை" (Gratuity) குறித்த தகவல்கள்...

படம்
 "பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?   Gratuity - Amount "கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள். குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது. இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை. இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.     பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது. சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது. நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.  கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம். ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குரிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.    உதாரணமாக ஒருவர் 25ஆண்டுக

பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை 01.01.2024 முதல் ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated 06 September 2024 வெளியீடு...

படம்
பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை Death Cum Retirement Gratuity Amount 01.01.2024 முதல்  ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக   உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated: 06-09-2024 வெளியீடு... 1.1.2024 முதல்  பணிக்கொடை 25,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது..  1.1.2024 முதல் நடைமுறை.. 1.1.2024 to 31.8.2024 வரை ஏற்கனவே ஓய்வு பெற்றோர்.... ( தமிழ்நாட்டில் GPF employee) இந்த கூடுதல் பணப் பலனை பெறலாம்... புதிய கருத்துருக்கள் அனுப்பும் போது DCRG அதிகபட்சமாக 25L வரை பெறலாம்... >>> Click Here to Download - DCRG G.O.Ms.No.281, Dated 06-09-2024...

பணிக்கொடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - விளக்கமான அரசாணை வெளியிட வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு...

படம்
 பணிக்கொடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - விளக்கமான அரசாணை வெளியிட வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு - நாளிதழ் செய்தி... An end to the Gratuity controversy - An explanatory ordinance should be issued - Tamil Nadu government employees expect - Daily News... . >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

குறித்த காலத்தில் வழங்காததால் பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வுக்காலப் பணப்பலன்களுக்கு வட்டி வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் டிரைவர், கண்டக்டர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமமூர்த்தி உள்பட 11 பேர், தங்களுக்கு சட்டப்படி இரண்டு மாதங்களுக்குள் பணிக்கொடை விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் வழங்காததால், அதற்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அளித்த உத்தரவு வருமாறு: தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வுகால பணப்பலன்களுக்கு 6 சதவீத வட்டியை, ஆறு தவணைகளாக வழங்கும்படி ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கிலும், ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்களுக்கு 6 சதவீத வட்டியை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும். இந்த தொகையை, மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆறு மாத தவணைகளாக வழங்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் வட்டி தொகையை வழங்காவிட்டால், 10 சதவீத வட்டியை வழங்க வேண்டும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...