கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

CPS Account Slip 2025-2026 Download செய்யும் வழிமுறை

 


CPS Account Slip 2025-2026 Download செய்யும் வழிமுறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



CPS Account slip _ களஞ்சியம் செயலி வழியாக பதிவிறக்கம் செய்தால் தாங்கள் பதவி ஏற்ற வருடம் முதல் இந்த வருடம் (2025-2026 ) வரை உள்ள அனைத்து வருடம் வாரியாக அனைத்து பட்டியலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


தரவிறக்கம் ஆகிறது. 



👉👉👉👉  CPS Account Slip 2025-2026 Download செய்யும் வழிமுறை


Login IFHRMS Kalanjiyam App 

⬇️

PF/CPS

⬇️

CPS BALANCE 

⬇️

DOWNLOAD AS A REPORT




CPS Account Slip 2025-2026 வெளியீடு



CPS Account Slip 01.07.2026 அன்று காலை 10.00 மணிக்கு வெளியீடு - செய்தி வெளியீடு எண் : 313, நாள் : 30-06-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



செய்தி வெளியீடு எண்: 313 , நாள் : 30.06.2026


செய்தி வெளியீடு


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2026 அன்று காலை 10 மணிக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரகத்தால் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு) வெளியிடப்படுகிறது. அத்துறையின் www.karuvoolam.tn.gov.in (களஞ்சியம்) பணியாளர் சுய சேவை (Employee Self Service) (IFHRMS Employee ID உள்ள பணியாளர்கள்) மற்றும் http://cps.tn.gov.in/public (IFHRMS Employee ID பெறாத பணியாளர்கள் /அயற்பணியில் உள்ள பணியாளர்கள்) ஆகிய இணையதள முகவரிகளில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9




Press Release No: 313 , Date: 30.06.2026

Press Release


The Contributory Pension Scheme (CPS) Account Slips for the financial year 2025-2026 pertaining to the Tamil Nadu Government Servants and Teachers have been generated and hosted through online by The Treasuries and Accounts Department (CPS Wing) on 01.07.2026 at 10.00 AM. The subscribers can view and download their CPS Account Slips from the website www.karuvoolam.tn.gov.in (Kalanjiam) Employee Self service (For Employees having IFHRMS Employee ID) and http://cps.tn.gov.in/public (For Employees not having IFHRMS Employee ID/Employee under Foreign Service)


Issued By:- DIPR, Secretariat, Chennal - 9


TAPS, OPS அல்லது CPS தொடர்வது குறித்து மாண்புமிகு நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களது பதில்



TAPS, OPS அல்லது CPS தொடர்வது குறித்து மாண்புமிகு நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களது பதில்


TAPS திட்டத்தை அமல்படுத்தினால் ஆண்டிற்கு 5000 கோடியும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10%மும் செலவாகும் என்று வெள்ளை அறிக்கையில் உள்ளதே. TAPS அமுல்படுத்தப்படுமா? அல்லது உங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய ஓய்வு திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் பதில்


TAPS புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5000 கோடி கூடுதல் தொடர் செலவினம்


 TAPS, OPS அல்லது CPS தொடர்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து  முடிவு செய்யப்படும்


- நிதியமைச்சர் மரியவில்சன்



பணியில் இருக்கும் போது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

 




பணியில் இருக்கும் பொழுது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் 


Benefits available to Teachers and Government Employees who die while on duty


நண்பர்களே வணக்கம் 🙏

பணியில் இருக்கும் போது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட நிகழ்வு சார்ந்த தொகுப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Benefits available for teachers and government employees who pass away while in service:


ஓய்வூதியப் பணப்பயன் (Pension benefits): eligible for government pension.


கடன் மறுப்பு (Insurance coverage): compensation through state government insurance scheme.


வாரிசுதாரர்களுக்கு பணி வாய்ப்பு (Compassionate appointment): a family member might be eligible for a government job.


கல்வி உதவி (Educational assistance): financial support for their children's education.


பணிக்கொடை (Gratuity): a lump sum payment based on the length of their service.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்க உயிரையும் தியாகம் செய்யத் தயார் - CPS ஒழிப்பு இயக்கம்

 


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்க உயிரையும் தியாகம் செய்யத் தயார் - CPS ஒழிப்பு இயக்கம் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

------------------------------------------------------------


பெறுநர்         நாள்: 10.01.2026

ஆசிரியர் அவர்கள்.


…………………………. நாளிதழ்/ஊடகம்


மதிப்பிற்குரிய ஐயா,


வணக்கம்.


எங்களது அமைப்பின் சார்பாக வழங்கப்படும் கீழ்காணும் பத்திரிக்கை செய்தியினை தங்களது நாளிதழ்/ஊடகத்தில் பிரசுரம்/ஒளிபரப்பு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


-----------------------------------------------------------

      *_பத்திரிகை செய்தி_*

------------------------------------------------------------

CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சு.ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் மற்றும் மு.செல்வக்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட பத்திரிகை செய்தி.


**************************************

பச்சை துரோகம் இழைத்துள்ள திமுக அரசு – அரசு ஊழியர், ஆசிரியர்களின் பணம் ரூபாய் ஒரு லட்சம் கோடி கபளீகரம் – CPS ஒழிப்பு இயக்கம் கடும் கண்டனம்

***************************************

திமுக-வின் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண். 309-ல் புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக அரசாணை வெளியிட்டு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தையே மீண்டும் அறிவித்து துரோகம் இழைத்திருக்கிறது.


தமிழக அரசு. மாதம் தோறும் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்கின்ற ரூபாய் ஒரு லட்சம் கோடியை இந்த அரசாணை மூலம் கபளீகரம் செய்திருக்கிறது தமிழக அரசு.


ஓய்வு பெறும் போது ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை தரமறுத்திருக்கிறது இந்த அரசாணை எண்.7. இது அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் உருவாக்கி இருக்கிறது.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஒழிப்பேன் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிக்கு நேர் எதிராக இந்த அறிவிப்பை செய்திருக்கிறது. அதுவும் 01.01.2026-க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் விருப்பத் தேர்வு எனவும், 01.01.2026-க்கு பின்னர் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது.


மேலும், தற்போது CPS திட்டத்தில் உள்ளவர்கள் தனது விருப்பத்தை ஓய்வு பெறுவதற்கு முன்னர் தெரிவித்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நிலைக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர்.


தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை CPS-யை ஒழிக்க வேண்டும் என போராடி வரும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் வாயாலேயே CPS-யே எங்களுக்கு போதும் என சொல்ல வைக்கும் நடவடிக்கையாகவும், நியாயமான போராட்டங்களை முடக்க நினைக்கும் செயலாகவுமே நாங்கள் பார்க்கிறோம்.


உண்மையில் சொல்வதென்றால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சேமிப்பான ரூபாய் ஒரு லட்சம் கோடியை கபளீகரம் செய்யப் போவதை உறுதி செய்துள்ளது இந்த அரசாணை. 


இது அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஆளும் திமுக அரசு இழைத்திருக்கும் பச்சை துரோகம். இந்த அரசாணை எண்.7 CPS திட்டத்தில் பணிபுரியும்  அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் நீரு பூத்த நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கான விலையை, விளைவை ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும்.


எனவே, தனக்கு துதிபாடும் அமைப்புகளின் பெரும்பாலான தலைவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் நீடிக்கும் நிலையில் அவர்களின் ஆதரவு என்பது ஒட்டு மொத்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஆதரவு எனும் மாயையிலிருந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளிவந்து, அவர்களின் 2021 சட்ட மன்றத் தேர்தல் வாக்குறுதி எண்.309-ன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 


அவ்வாறு காலதாமதம் ஏற்படும் சூழலில் வருகின்ற 03.02.2026 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களை இணைத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்குச் செல்ல உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


இந்திய சுதந்திரப் போரில் நாட்டிற்காக தன் இன்னுயிரை ஈந்த தியாகிகள் திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், குதிராம்போஸ்,  பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போல், தமிழகத்தில்  1960-களின் துவக்கத்தில் மொழிப் போரில் தன் இன்னுயிரை ஈந்த தியாகிகள்  வைரமாலி சண்முகம், கோவை தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி, மற்றும் அய்யம்பாளையம் வீரப்பன் ஆகியோரைப் போல், தமிழ் ஈழத்திற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமாரைப் போல், நிரபராதியை விடுதலை செய் என்ற முழக்கத்தோடு தீக்குளித்து மாண்ட சகோதரி செங்கொடியைப் போல், சமீபத்தில் விவசாய வேளாண் சட்டத்திற்கு எதிராக களமாடி 800 உயிர்களை தியாகம் செய்த விவசாயப் போராளிகளைப் போல், தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வை இருட்டாக்கி, வாழ்நாள் சேமிப்பை கபளீகரம் செய்ய நினைக்கும் தமிழக அரசின் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையை இரத்து செய்து, எதிர்கால தலைமுறையின் சமூகபாதுகாப்புத் திட்டமான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுக்க எங்கள் உயிரையும் தியாகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறோம்.


நன்மதிப்புகளுடன்


மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

மாநில மையம்.


​ஓய்வூதியத் திட்டங்களின் ஒப்பீடு (Comparison of OPS, NPS, and TAPS)


ஓய்வூதியத் திட்டங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிறைகளும் குறைகளும் உள்ளன. உங்கள் கேள்விக்கான விரிவான ஒப்பீடு இதோ:


​ஓய்வூதியத் திட்டங்களின் ஒப்பீடு (Comparison of OPS, NPS, and TAPS)


பங்களிப்பு : 


OPS : ஊழியர் பங்களிப்பு இல்லை. 


NPS : ஊழியர் 10% + அரசு 14%. 


TAPS : ஊழியர் 10% + மீதமுள்ள தொகையை அரசு ஏற்கும்.



ஓய்வூதியத் தொகை 

OPS : கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% உறுதி. 


NPS: சந்தை முதலீட்டின் லாபத்தைப் பொறுத்தது (உறுதி இல்லை). 


TAPS : கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% உறுதி.


அகவிலைப்படி 

OPS : (DA) உண்டு (ஆண்டுக்கு இருமுறை உயரும்). 

NPS : கிடையாது. 

TAPS : உண்டு (பணியில் இருப்பவர்களுக்கு இணையாக உயரும்).


பணிக்கொடை (Gratuity) 


OPS : ₹25 லட்சம் வரை. 


NPS :  ₹20 லட்சம் வரை. 


TAPS : ₹25 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு உண்டு.



எந்தத் திட்டம் சிறந்தது?


​பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS): 

இதுவே மிகச்சிறந்த திட்டமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் (Old Pension Scheme) ஊழியர்கள் தங்களது சம்பளத்திலிருந்து எந்தப் பணத்தையும் பிடித்தம் செய்ய வேண்டியதில்லை. அரசு முழுமையாகச் செலவை ஏற்றுக்கொண்டு, பணவீக்கத்திற்கு ஏற்ப (DA) ஓய்வூதியத்தை உயர்த்தும். ஆனால், இது தற்போது புதிய பணியாளர்களுக்கு நடைமுறையில் இல்லை.

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS - 2026):

தமிழ்நாடு அரசு அண்மையில் (ஜனவரி 2026) அறிவித்துள்ள திட்டம் இது (Tamilnadu Assured Pension Scheme) . OPS-க்கும் NPS-க்கும் இடைப்பட்ட ஒரு நடுநிலையான திட்டம்.


சிறப்பு: 

இதில் OPS போன்றே 50% சம்பளம் மற்றும் DA உயர்வு உறுதி செய்யப்படுகிறது.

​குறை: ஊழியர்கள் 10% பங்களிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். OPS கிடைக்காத நிலையில், NPS திட்டத்தை விட இது அரசு ஊழியர்களுக்குப் பாதுகாப்பானது.

புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS):

இது பங்குச்சந்தையைச் சார்ந்தது. சந்தை நன்றாக இருந்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு, ஆனால் ஓய்வூதியத் தொகைக்கு எந்த உறுதியும் இல்லை. இதில் DA உயர்வு கிடையாது என்பது ஒரு பெரிய பின்னடைவு.


சுருக்கமாக:

​பணம் கட்டாமல் பலன் பெற: OPS சிறந்தது (கிடைத்தால்).

​பணம் கட்டினாலும் நிலையான ஓய்வூதியம் பெற: TAPS சிறந்தது.

​சந்தையின் அபாயத்தை ஏற்கத் தயார் என்றால்: NPS (பொதுவாக அரசு ஊழியர்கள் இதை விரும்புவதில்லை).

​தற்போதுள்ள சூழலில், OPS-க்கு அடுத்தபடியாக TAPS திட்டம் அரசு ஊழியர்களுக்கு அதிகப் பாதுகாப்பை வழங்குகிறது.


இவை மட்டுமின்றி மத்திய அரசின் UPS (Unified Pension Scheme) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இணைய பெரும்பாலான மத்திய அரசின் பணியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.




>>> தரம் மற்றும் வசதிகளுடன் கூடிய சில சிறந்த Neckband (Bluetooth Earphones) மாடல்களின் விவரம்...



Tamil Nadu Assured Pension Scheme (TAPS) குறித்து அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய குறைபாடுகள் / வரம்புகள்


தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் - Tamil Nadu Assured Pension Scheme (TAPS) குறித்து அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய குறைபாடுகள் / வரம்புகள் 

கீழே நேர்மையாகவும் நடைமுறையாகவும் பட்டியலிடப்படுகின்றன.


OPS Vs TAPS - ஓய்வூதியர் மீது ஏற்படும் நிஜமான தாக்கம் (Financial Legal)


Tamil Nadu Assured Pension Scheme (TAPS) குறித்து அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய குறைபாடுகள் / வரம்புகள் கீழே நேர்மையாகவும் நடைமுறையாகவும் பட்டியலிடப்படுகின்றன. (இவை OPS-ஐ ஒப்பீட்டுத் தரமாக கொண்டு விளக்கப்படுகின்றன.)

1. OPS போல முழுமையான “Non-Contributory” அல்ல


TAPS:

ஊழியர் பங்களிப்பு தொடரும்

அரசு பங்களிப்பும் தொடரும்

➡️ “உறுதியான ஓய்வூதியம் இருந்தாலும், சம்பளத்தில் பிடித்தம் நிறுத்தப்படாது”



2. 100% OPS சமமான ஓய்வூதியம் இல்லை

OPS-ல்:

கடைசி சம்பளத்தின் 50% + DA

TAPS-ல்:

50% Basic Pay மட்டும் உறுதி

DA சமமாக வழங்கப்படுமா என்பது எதிர்கால அரசாணை சார்ந்தது

➡️ DA பாதுகாப்பு OPS அளவுக்கு உறுதி இல்லை (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீட்டில் ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது)



3. சேவை ஆண்டுகளுக்கு கடும் நிபந்தனைகள்

குறைந்தபட்ச சேவை: 10 ஆண்டுகள்

முழு பலன் பெற: 20 / 25 ஆண்டுகள்

➡️ இடைநிறுத்த சேவை, VRS, medical invalidation இருந்தால் முழு பலன் குறித்து அரசாணையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




4. CPS Corpus முழு சுதந்திரம் இல்லாமல் போகும்

CPS-ல்:

corpus உங்கள் சொத்து

முதலீட்டு மாற்றம் / annuity தேர்வு உண்டு

TAPS-ல்:

corpus அரசு கட்டுப்பாட்டுக்குள் வரும்

lump sum சுதந்திரம் குறையும்

➡️ “உங்கள் பணம், ஆனால் உங்கள் கட்டுப்பாடு இல்லை” என்ற நிலை



5. எதிர்கால விதிமுறை மாற்ற அபாயம்

TAPS ஒரு புதிய திட்டம்

OPS போல 50+ ஆண்டுகள் நிலைத்த சட்டப் பாதுகாப்பு இல்லை ➡️ வருங்கால அரசுகள் விதிமுறைகளை மாற்ற வாய்ப்பு உள்ளது.



6. அதிக சம்பள உயர்வு இருந்தால் OPS அளவுக்கு பயன் இல்லை

OPS-ல்:

கடைசி சம்பளம் உயர்ந்தால் ஓய்வூதியமும் அதிகம்

TAPS-ல்:

ceiling / cap வர வாய்ப்பு உள்ளது (அரசாணையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது)

➡️ Senior officers / high pay matrix உள்ளவர்களுக்கு வரம்பு வரலாம்.


7. மரணத்திற்குப் பின் குடும்பத்திற்கான முழு OPS பாதுகாப்பு இல்லை

OPS-ல்:

Family pension + DA + gratuity மிக தெளிவு

TAPS-ல்:

Family pension உறுதி என்றாலும்

விகிதம், கால அளவு முழுமையாக அறிவிக்கப்படவில்லை (அரசாணையில் குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது)


8. நீதிமன்ற சவால் / சட்டத் தெளிவின்மை

CPS → OPS → TAPS

தொடர்ச்சியான மாற்றங்கள் ➡️ எதிர்காலத்தில் வழக்குகள் வந்தால் நடைமுறை தாமதம் ஏற்படலாம்


9. “Choice Option” தெளிவாக அறிவிக்கப்படவில்லை

CPS உறுப்பினர்கள்:

கட்டாயமாக TAPS-க்கு மாற வேண்டுமா?

அல்லது option வழங்கப்படுமா? ➡️ தேர்வு உரிமை பற்றிய தெளிவான அரசாணை இன்னும் இல்லை


10. பணவீக்கம் (Inflation) எதிர்ப்பு OPS அளவுக்கு இல்லை

OPS-ல்:

DA மூலம் பணவீக்கம் கட்டுப்பாடு

TAPS-ல்:

DA இணைப்பு இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை


நேர்மையான முடிவு (Professional Verdict)

TAPS:

CPS-க்கு மிகவும் மேம்பட்டது

OPS-க்கு முழுமையான மாற்று அல்ல


👉 “CPS-இன் அபாயம் குறைத்து, OPS-இன் பாதுகாப்பை ஓரளவு கொண்டுவரும் இடைநிலைத் திட்டம்” என மதிப்பிடப்படுகிறது 

CPS திட்டத்தை விட, TAPS திட்டம் பலன் அளிக்கக் கூடியது


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை CPS விட, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் TAPS பலன் அளிக்கக் கூடியது - Whatsapp பகிர்வு


✍️✍️✍️✍️✍️✍️✍️

அறிவார்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு

வணக்கம்🙏


தமிழகத்தில் இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.


அரசு ஊழியர்கள், ஆசிரியரகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் சுமார் ஐம்பது இலட்சம் ஓட்டுகள் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய பென்சன் திட்டம் வழங்கப்டாமல், ஒரு உத்திரவாதமான பென்சன் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


நம்முடைய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் பலர் யாரோ போட்ட பதிவை, அவர்கள் என்ன நோக்கத்திற்காக பதிவிடுகிறார்கள் என்று கூட  தெரியாமல் அதையே, வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


பழைய பென்சன் திட்டம் வழங்கப்படவில்லை என்பது வருத்தம்தான்.


ஆனால், போராட்டத்தின் விளைவாக ஏற்கனவே, பெற்றுக் கொண்டிருந்த, பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தை காட்டிலும், உத்திரவாத பென்சன் திட்டம் மேலானது.



கீழ்க்கண்ட உதாரணங்கள் மூலம் இதனை நிரூபிக்க முடியும்.


இருபது ஆண்டுகள்  பணி முடித்த *X என்ற* கல்லூரி ஆசிரியர் ஓய்வு பெறும் போது அவர் வாங்கும் மாத அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.2,40, 000 என எடுத்துக்கொண்டால்,

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் அரசின் பங்கு மற்றும் ஆசிரியரின் பங்கு என மொத்தம் *70, 00,000 இருக்க* வாய்ப்புள்ளது.


இந்த 70,00,000 அவர் பெற்றுக்கொள்ளலாம். 


பணிக்கொடை எதுவும் கிடையாது.


இந்த எழுபது இலட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதிகம்பட்சம், ஆண்டுக்கு 12% வட்டி என கணக்கிட்டால்,


மாதத்திற்கு ரூ. 70,000 கிடைக்கலாம்.


 10 ஆண்டுகள் கழித்தும்  மாதம் 70,000 தான் கிடைக்கும்.


பத்து ஆண்டுகளில் இதன் சராசரி உண்மை மதிப்பு  மாதம் ரூ. 56,000


பத்து ஆண்டுகள் பெறும் உண்மை மதிப்பு

56000×120= 67,20,000


ஆனால் இன்றைக்கு 70,000 என்பது,  ஆண்டுக்கு 6% பணவீக்கம் என வைத்துக் கொண்டாலும் பத்து ஆண்டுகள் கழித்து இன்றைய மதிப்பிற்கு ரூ. 39,000 ஆக சுருங்கி இருக்கும்.


 உங்களுடைய வைப்புத்தொகையின் மதிப்பும் 39,00,000 ஆக குறைந்திருக்கும்.


ஆக பத்து ஆண்டுகளில் சராசரி உண்மை  மதிப்பு

நீங்கள் பெற்ற வட்டி

67,20,000+ பத்து ஆண்டுகள் கழித்து உங்கள் வைப்புத் தொகையின் உண்மை மதிப்பு 39,00,000=  *1.06.20,000.* 


இதுவே, தமிழ்நாடு உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்தை *Mr.Y* தேர்ந்தெடுத்தால், மாதம் ஒரு இலட்சம் பென்சன் கிடைக்கும்.


 அகவிலைப்படியும் உண்டு என்பதால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாத பென்சன் ரூ. 1,79,000 ஆக உயரும்.


இந்த பத்து ஆண்டுகளில் சராசரி மாத பென்சன் ரூ. 1,36,000.


அப்படியென்றால் இந்த பத்து ஆண்டில் பெறப்பட்டுள்ள பென்சன்

1,36,000×120=

1,63,20,000.


மேலும், உத்திரவாத பென்சன் திட்டத்தில், இவருக்கு 24,00,000 பணிக்கொடை கிடைக்கும்.


இந்த பணிக்கொடையினை ஆண்டுக்கு 12% கூட்டு வட்டி கண்க்கிட்டால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் தொகை  ரூ. 74,50,000




உத்திரவாத பென்சன்

திட்டத்தின் மூலம் Mr. Y வருமானம் . 1,63,20,000.+74,50,000= *2,37,70,000.* 


பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்

மூலம் Mr. X  பெறுவது *1,06,20,000* 



இதில் யார் புத்திசாலி X or Y?


இங்கே பத்து வருடம் ஏன் கணக்கிடப்படுகிறது என்றால், ஓய்வு பெற்று  குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் உயிரோடிருக்கு வாய்ப்பிருக்கிறது என்ற நிகழ்தகவின் அடிப்படையில்.


பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் பத்து ஆண்டிற்கு பிறகு, பணத்தின் மதிப்பு மீண்டும் குறையும்.


ஆனால் அதே நேரத்தில், பத்து ஆண்டு கழித்து இறந்தவருக்கு, அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவர் இணையர் உயிரோடு இருக்கும் வரை வழங்கப்படும்.


எனவே, இரண்டு திட்டத்தையும் ஒப்பீடு செய்தால், உத்திரவாத ஓய்வூதியத் திட்டமே சிறந்தது என்பது புலனாகும்.


இது கல்லூரி ஆசிரியருக்கு மட்டுமல்ல.


இதே, போன்ற கணக்கீட்டை எந்த ஆசிரியருக்கும், அரசு ஊழியருக்கும் கணக்கீட்டால், உத்திரவாத பென்சன் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை விட உயர்வானது என புரிய வரும்.



எதையும் யோசிக்காமல் புலனக்குழுக்களில் வரும் தகவல்களை படித்து, உணர்ச்சி வசப்பட்டு, நாமும் டென்சனாகி, மற்றரையும் டென்சனாக்காமல் சற்று அறிவுப்பூர்வமாக மேலே சொன்னவற்றை ஆராயுங்கள்.


முழு பென்சனுக்கான காலம் அரசின் ஓய்வூதிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்படாதலால், 25 ஆண்டுகள் என அனுமானிக்கப்பட்டுள்ளது.


இது முப்பது ஆண்டுகள் என கணக்கில் கொண்டால், உத்திரவாத பென்சன் திட்டத்தில் பெறும் தொகை மேலே கண்ட கணக்கீட்டின் படி 20,00,000 முதல் 25,00,000 வரை குறைய வாய்ப்புள்ளது.



தவறான தகவல்களை பதிவிடுபவர்களில் இரண்டு வகை.


ஒன்று,உண்மை தெரியாமல் பதிவிடுவது, forward செய்து.


இரண்டு, ஒரு சில அரசியல் கட்சிகளின் தகவல் தொழில் நுட்பக்குழுக்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புவது.


இறுதியாக உங்களின் சிந்தனைக்கு,


அரசின் வழக்கமான பங்களிப்பு தொகையாக ஆண்டுக்கு ரூ11,000 கோடியும், கூடுதலாக  

ஆண்டுக்கு ரூ13,000 கோடியும் ஒதுக்கப்படுகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் 13,000 கோடி மூலம் கூடுதல் பலன்கள்தானே கிடைக்கும் என்பதைக்கூட நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா?



OPS vs CPS vs NPS vs TAPS - ஓய்வூதியத் திட்டங்கள் : ஒப்பீடு

 


OPS vs CPS vs NPS vs TAPS - ஓய்வூதியத் திட்டங்கள் : ஒப்பீடு


அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள பல்வேறு திட்டங்களுக்கும், அறிவிக்கப்பட்டுள்ள புதிய TAPS திட்டத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்


பழைய ஓய்வூதியம் (OPS) 


புதிய ஓய்வூதியம் (NPS) 


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - Contributory Pension Scheme (CPS)


தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் - Tamilnadu Assured Pension Scheme (TAPS)





OPS, CPS, UPS வேறுபாடுகள் - முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார்?

 

 

பழைய ஓய்வூதியம் மற்றும் புதிய ஓய்வூதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்  - முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார்?



OPS, CPS, UPS Differences


பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளைத் தெளிவாக விளக்குகிறது கீழேயுள்ள பதிவு.


அதன் முழுமையான விவரங்கள் இதோ:


1. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)

அமலாக்கம்: மத்திய அரசில் 1.4.2004-க்கு முன் அதாவது 31-03-2004 வரை (தமிழ்நாட்டில் 31-03-2003 வரை மட்டுமே).


யாருக்கு: 2003-க்கு முன் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.


ஓய்வூதியத் தொகை: கடைசி மாதச் சம்பளத்தில் 50% வரை உறுதியாகக் கிடைக்கும்.


பங்களிப்பு: ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து எவ்விதத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. முழுச் செலவையும் அரசே ஏற்கும்.


இதர பலன்கள்: அகவிலைப்படி (DA) உயர்வு உண்டு. குடும்ப ஓய்வூதியம் முழுமையாகக் கிடைக்கும்.


சவால்: இது அரசுக்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.


2. புதிய / பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ( NPS / CPS)

அமலாக்கம்: 2003-க்குப் பிறகு (தமிழ்நாட்டில்)


யாருக்கு: 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.


ஓய்வூதியத் தொகை: இது முதலீடு சார்ந்தது. நாம் முதலீடு செய்த தொகை மற்றும் பங்குச்சந்தை லாபத்தைப் பொறுத்தே அமையும். ஓய்வூதியம் உறுதி கிடையாது.


பங்களிப்பு: ஊழியர் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும். மத்திய அரசு 14% பங்களிப்பு வழங்கும் (தமிழ்நாடு அரசின் பங்களிப்பு தற்போது வரை 10% மட்டுமே) 


இதர பலன்கள்: மத்திய அரசு பணியில் ஓய்வு பெறும்போது 60% தொகையை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40% மட்டுமே மாத ஓய்வூதியமாக வரும். அகவிலைப்படி உயர்வு கிடையாது. 

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்னும் CPS திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த பணத்துடன், தனது பங்களிப்பையும் சேர்த்து ஓய்வு பெறும் நாள் அன்று வரை உள்ள தொகைக்கு 7.1% வட்டியுடன் மொத்தமாக வழங்கி விடுகிறது.


சவால்: பங்குச்சந்தை அபாயம் உள்ளது; அரசு ஊழியர்களுக்கு தனது பணமும் சேர்ந்து பறிபோகும் வாய்ப்புள்ளது என்பதால் இதில் துளியும் விருப்பம் இல்லை.


3. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)


அமலாக்கம்: 2024-25 (மத்திய அரசின் முன்மொழிவு).


யாருக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு (மாநில அரசுகள் விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம்).


ஓய்வூதியத் தொகை: உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் முதலீடு கலந்த பலன்கள்.


பங்களிப்பு: ஊழியர் பணம் பங்களிப்பு செய்ய வேண்டும். அரசு தனது பங்களிப்பைத் தொடரும்.


இதர பலன்கள்: குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


நிலைப்பாடு: இது அரசுக்கும் ஊழியருக்கும் இடையிலான ஒரு நடுத்தர சமரசத் திட்டமாக இது கருதப்படுகிறது. முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


இறுதியாக : தமிழ்நாட்டில் மத்திய அரசை பின்பற்றி, அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.


ஒரு சிலர் பணி ஓய்வுக்காலம் பாதுகாப்பாக அமைய வேண்டும் எனும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தும் என்று கூறுகிறார்கள்.


ஜாக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் 06-01-2025 அன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருமித்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே கிடைத்துள்ளது என்பதால் அவர்களின் நியாயமான கோரிக்கையை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொள்வார் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். 




ஓய்வூதியத் திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக CPS ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு

 

ஓய்வூதிய திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு (பத்திரிகை செய்தி)




>>> CPS ஒழிப்பு இயக்கத்தின் அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Bajaj Frore Neo Table Fan 400 MM | Table Fans For Home & Office | Aerodynamically Balanced Blades | 100% Copper Motor | High Air Delivery | 3-Speed Control | 2-Yrs Warranty 【White】


https://amzn.to/48LO6mT




தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய முடியும்

 

தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய முடியும் - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி 




Pigeon by Stovekraft Amaze Plus Electric Kettle (14289) with Stainless Steel Body, 1.5 litre, used for boiling Water, making tea and coffee, instant noodles, soup etc. (Silver)




Actual Price: Rs. 1101

Offer Price : Rs. 579

Benefit : Rs. 522


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4nugs9F



Combo Offer 



https://amzn.to/4oJ9EpF


Actual Price: Rs. 1545

Offer Price : Rs. 689

Benefit : Rs. 856


விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்



பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

 

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு




மறியல் போராட்டத்திற்கு வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் / அலுவலர்கள் சங்கம் முழு ஆதரவு



CPS Pension Proposal / Final Settlement அனுப்புதல் : அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கருவூல இயக்குநரின் செயல்முறைகள்



பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஓய்வூதிய முன்மொழிவு CPS Pension / Final Settlement Proposal அனுப்புதல் : அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கருவூல இயக்குநரின் செயல்முறைகள்


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஓய்வூதிய முன்மொழிவு அனுப்புதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக


CPS திட்டத்தில் ஓய்வு & மரணம் அடையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆவணங்கள் சரிபார்த்து அனுப்பாமல் தொடர்ந்து திருப்பப்படுகிறது. (அசல் பணிப்பதிவேடு தேவையில்லை) தொடர்ந்து தவறுகள் நடக்கும் பட்சத்தில் ஒப்பளிக்கப்பட்ட நாட்கள் முதல் வட்டித்தொகை கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர் பொறுப்பாக நேரிடும் என எச்சரிக்கை.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Old Pension Scheme Implementation : CPS / OPS / UPS குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, ஆசிரியர் அரசு அலுவலர் சங்கங்களுடன் கூட்டம் - நான்கு நாட்களில் கலந்து கொள்ள உள்ள சங்கங்களின் பட்டியல்

 

பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் : Old Pension Scheme Implementation : CPS / OPS / UPS குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, ஆசிரியர் அரசு அலுவலர் சங்கங்களுடன் கூட்டம் - நான்கு நாட்களில் கலந்து கொள்ள உள்ள சங்கங்களின் பட்டியல்


An Committee has formed by the Govt, which is presided by Shri. Gagan Deep Singh Bedi IAS, for the grievances / opinion about Old Pension Scheme Implementation. An time table is scheduled in this August month 2025 is below 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




CPS ஐ ரத்து செய்ய ஏன், எதற்கு போராட்டம் அவசியம் : கையேடு

 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ( CPS ) ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் செய்ய ஏன், எதற்கு தற்போது போராட்டம் அவசியம் என்பதற்கான முழு விளக்க கையேடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அனைத்து குழுக்களுக்கும் பகிரவும்..


80CCD (1B) ல் CPS தொகையை கழித்தவர்களுக்கு கூடுதல் வருமான வரி

 

80CCD (1B) ல்  CPS தொகையை கழித்தவர்களுக்கு கூடுதல் வருமான வரி 


கடந்த பிப்ரவரி 2025-ல் 80CCD 1B -ல்  ரூ 50000 (CPS தொகையை) கழித்தவர்கள் தற்போது வருமான வரி தாக்கல் செய்யும் போது ரூ 50000 க்கான வரியும் சேர்த்து Income Tax செலுத்த வேண்டியுள்ளது. 80CCD 1B என்பது NPS -ல் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். CPS உள்ளவர்களுக்கு பொருந்தாது எனக் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் CPS உள்ள ஆசிரியர்கள் Old Regime -,ல் 80CCD 1B-ல் ரூ 50000 கழித்து காட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"நான் உயிரிழந்திருக்கலாம் ; இல்லை என்றால் அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்கலாம்" - உண்மையான நாயகனின் செயல்

 "நான் உயிரிழந்திருக்கலாம் ; இல்லை என்றால் அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்கலாம்" - உண்மையான நாயகனின் செயல் "I could have lo...