கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Death Cum Retirement Gratuity லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Death Cum Retirement Gratuity லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும் - தமிழ்நாடு அரசு


ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும் - தமிழ்நாடு அரசு (வாட்ஸ் அப் பகிர்வு)


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும்.


- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தகவல்


ஓய்வூதிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு கால அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை


சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி வாயிலாக அரசு தலைமை வழக்கறிஞர் நேற்று ஆஜர்.


CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் நேற்று (17.12.2025) விசாரணைக்கு வந்தது.


புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கப்பட்டது.


மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி அரசு ஊழியரின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு அரசின் பங்களிப்பாக 10% வழங்கப்பட்டு பணி ஓய்வின் போது ஒட்டு மொத்தத்தமாக வழங்கப்படுகிறது.


ஓய்வூதியத்திற்கான உருவாக்கப்பட்ட PFRDAல் அனைத்து மாநிலங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஓய்வூதியத் தொகை அதன் பராமரிப்பில் உள்ளது. பல மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் CPS திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பணிக்கொடையும் இல்லை. எவ்விதமான விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை


அரசின் பங்களிப்பாக 14% பல மாநிலங்கள் உயர்த்தி வழங்கி வருகின்றனர்.


1978 ஓய்வூதிய விதிகளின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.


தேர்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதும் ஒன்று.


2019ல் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர் கே.கே.சசிதரன் அமர்வில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அறிக்கை இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை, பழைய ஓய்வூதியத் திட்டமே அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பானது என்று கூறினார்.


இதனை அடுத்து அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. மனுதாரர் 2005 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்து உள்ளார். 2012 ஆம் ஆண்டுதான் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசாணை எண்கள்: 430, 59 ன்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியத்தை வரையறை செய்துள்ளோம் என்றும், நீதியரசர் சிவஞானம் அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மனுதாரர் தமிழில் வினாக்கள் கொடுத்ததால் , நாங்களும் தமிழில் பதில் வழங்கியுள்ளோம் என்று கூறி இது பற்றி தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.


இதனை அடுத்து நீதியரசர்கள் அரசிற்கு கால அவகாசம் வழங்கி 06.01.2026 அன்றைக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.


Portronics Clamp M3 Adjustable Car Mobile Phone Holder Stand for Dashboard & Windshield, 360° Rotational, Strong Suction Cup, Compatible with 4 to 6 inch Devices (Black)


https://amzn.to/4s5vR3B






Case seeking payment of gratuity in the new pension scheme - High Court order


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்கக் கோரிய வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவு


Case seeking payment of gratuity in the new pension scheme - High Court order


* தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ராஜா என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரி கொடுக்கப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


* புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்குவது பற்றி மூன்று வாரங்களுக்குள் அரசு கூடுதல் வழக்கறிஞர் எதிர்வாத உரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  நீதியரசர் வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.


"பணிக்கொடை" (Gratuity) குறித்த தகவல்கள்...


 "பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

 

Gratuity - Amount


"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள். குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.


இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.


இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.


    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது. சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.


நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.


 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.


ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குரிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.


   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375 நாட்கள் சம்பளமும் 30 ஆண்டுகள் பணி செய்திருந்தால் 30×15=450 நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.


   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு. அதிகப்பட்சம் 2000000 (இருபது லட்சம்) மட்டுமே வழங்கப்படும்.


  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.


உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.


    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.


    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் (அதிகபட்சம் 33 ஆண்டுகள் மட்டுமே கணகக்கீடுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ) சர்வீஸ் முடித்த பனிஷ்மெண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம். (இப்போதைய DA 50%.)


  பேசிக்....................................40000

 DA 50%(40000×50÷100)..............20000

மொத்தம்(40000+20000)........60000

26ஆல் வகுக்க= 42800/26 = 2308ரூபாய்.


   இந்த 2308தான் ஒருநாள் சம்பளம்.


15நாள் சம்பளம்= 2308×15= 34620ரூபாய்


33 ஆண்டுக்கு = 34620×33= 11,42,460ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.


சுருக்கமாகச்சொன்னால்


(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்த ஆண்டுகள். இதுவே கிராஜூவிட்டி ஆகும்


பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை 01.01.2024 முதல் ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated 06 September 2024 வெளியீடு...


பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை Death Cum Retirement Gratuity Amount 01.01.2024 முதல்  ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக   உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated: 06-09-2024 வெளியீடு...


1.1.2024 முதல் 

பணிக்கொடை 25,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. 


1.1.2024 முதல் நடைமுறை..


1.1.2024 to 31.8.2024 வரை ஏற்கனவே ஓய்வு பெற்றோர்....

( தமிழ்நாட்டில் GPF employee)


இந்த கூடுதல் பணப் பலனை பெறலாம்...


புதிய கருத்துருக்கள் அனுப்பும் போது DCRG அதிகபட்சமாக 25L வரை பெறலாம்...



>>> Click Here to Download - DCRG G.O.Ms.No.281, Dated 06-09-2024...


பணிக்கொடை (DCRG - Death Cum Retirement Gratuity) - தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கணக்கிடப்படும் முறை...


பணிக்கொடை என்பது அரசு /அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது.


அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை

பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.


இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)

அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.


பணிக்காலம் கணக்கிடுதல்

ஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.


பணிக்கொடை கணக்கீடு

மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறரை (16 ½) மாத ஊதியமும் பணிக்கொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 20 இலட்சம்.


பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.


அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.


பணியின் போது காலமான ஊழியர்களுக்கு பணிக்கொடை

பணியின் போது இறந்த அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் கணக்கில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்தவர்களுக்கு ஆறு மாத ஊதியமும், ஐந்து முதல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத ஊதியமும், 20 ஆண்டும் அதற்கு மேலும் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு அரை மாத ஊதியம் வீதம் கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்