ஆதார் - பான் இணைக்காதோர் சந்திக்கும் 15 சிக்கல்கள் (15 problems faced by those who do not link Aadhar-PAN)...
ஆதார் - பான் இணைக்காதோர் சந்திக்கும் 15 சிக்கல்கள் (15 problems faced by those who do not link Aadhar-PAN)... ரூ.1,000 அபராதத்துடன் ஆதார் - பான் இணைப்பிற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ம் தேதி முடிவடைந்து விட்டது. இதுவரை இணைக்காதவர்களின் பான் கார்டு ஜூலை 1 முதல் செயலிழந்து விடுமென மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. செயலிழந்த பான் அட்டைதாரர்கள், கீழ்க்காணும் 15 வகையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. அவை என்னென்ன என்று அறிந்து கொள்வோம். 1.வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்க முடியாது. 2.கிரெடிட் ,டெபிட் கார்டு கேட்டு விண்ணப்பிக்க இயலாது. 3.புதிதாக டீமேட் கணக்கு துவங்க விண்ணப்பிக்க முடியாது. 4.ஹோட்டல் அல்லது உணவகங்களில் வழங்கப்படும் பில் தொகைக்கு, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலுத்த முடியாது. 5.ஒரே நேரத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது ரூ.50ஆயிரத்துக்கு மேல் செலுத்த முடியாது. 6.மியூச்சுவல் பண்ட்களில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்ய இயலாது. 7.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியாது. 8.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரிசர்வ் வங்கியின் பத்திரங்களை வா