4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு 6 – மார்ச் முதல் வாரம் (Term 3 - Unit 6 - March 1st Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard)
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு 6 – மார்ச் முதல் வாரம் (Term 3 - Unit 6 - March 1st Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard)
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 6 - மார்ச் முதல் வாரம் (Term 3 - Unit 6 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - March 1st Week)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை
Things to be followed by the students writing the public examination
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் புலனக் குழுக்களில் பகிர....
12th Std - 11th - 10th Std
👉
👉 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்:
Examக்கு எடுத்து செல்ல வேண்டியவை
1) Hall Ticket ( 2 copies)
2) Blue Pen -2
( Ball Point / Ink / Gel )
3) Long Size Scale / Pencil / Sharpener / ink & pencil Eraser /
For Maths: Geometry Box & Pro-circle
*தேர்வு நடைபெறும் நேரம்
: காலை 10 மணி முதல் - மதியம் 1:15 மணி வரை ( 10:00 - 1:15 )
Rules:
1) தேர்வு எழுதும் பள்ளிக்கு சரியாக தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு (அதாவது 9:30 மணிக்குள்) முன்பே சென்றுவிடவேண்டும்.
2) HALL TICKETஐ கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.
3) Blue பேனாவில் மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும். வேறு எந்தப் பேனாவிலும் தேர்வு எழுதக் கூடாது. Sketch / Colour pencil பயன்படுத்தக்கூடாது.
4) Blue & Black pen இரண்டிலும் கலந்து கலந்து Answer எழுதக் கூடாது.
5) Uniformல் தான் Examக்கு போக வேண்டும்.
6) தேர்வு அறைக்குள் Electronic devices, Cell Phone, Kerchief, Scientific Watch, Calculator, Purse, Towel, Bag, Empty Box, Water bottle ஆகியவற்றை வகுப்பறைக்குள் எடுத்துச் செல்ல கூடாது.
7). சாதாரண Watchஐ அணியலாம். மேலும் Chappal, Shoe, Belt வகுப்பறைக்குள் அணிந்து செல்லக் கூடாது.
8) 10 மணிக்குமேல் தேர்வுக்கு சென்றால் தேர்வு எழுத முடியாது. 9:30 மணிக்குள் செல்ல வேண்டும்.
விடை எழுத வேண்டிய முறைகள்:
1) Answer Sheetன் முன்பக்கம் உள்ள உங்களுடைய
Exam Roll No / Name /
Date of Birth / Subject Name / Medium / Date / Photo ஆகிய விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
2) விடையை எழுதுவதற்கு முன் பாடத்தின் பெயரை மேலே தெளிவாக எழுத வேண்டும்.
3) 100 Markக்கும் விடைகளை எழுத வேண்டும். Pass ஆனால் போதும் என்று வெறும் 40, 50 Markக்கு மட்டும் விடை எழுதி விட்டு மீதமுள்ளதை விட்டு விடக்கூடாது. 100/100ம் விடைகளை எழுத வேண்டும்.
4) சரியான Answer தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் தாங்கள் படித்த விடைகளை எழுதலாம்.
5) எழுதிய விடையையே மீண்டும் மீண்டும் எழுதக்கூடாது.
6) தாங்கள் விடைகளை எழுதி, ஒருவேளை அது தவறாக இருந்து அதனை அடித்து விட்டால், உடனடியாக அதனை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு, பின்னர் "இது என்னால் அடிக்கப்பட்டது" என்று விடைத்தாளில் அடித்த வினாவின் பக்கத்தில் எழுத வேண்டும்.
7) எதனையும் அடித்தோ, திருத்தியோ, கிறுக்கியோ, Whitener உபயோகப்படுத்தியோ எழுதக்கூடாது.
8) குறைந்தது 15 to 20 பக்கங்களுக்கு மேல் விடை எழுத வேண்டும். வெறும் 4 பக்கங்கள் 5 பக்கங்கள் என விடை எழுதினால் Pass ஆக முடியாது.
9) குறிப்பாக விடையை எழுதாமல் Gap விடக்கூடாது.
10) Question Numberஐ கவனமாக எழுத வேண்டும். Question Numberஐ எழுதாமல் விட்டால் Answerஐத் திருத்த மாட்டார்கள்.
11) Question Paperல் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் விடை எழுத வேண்டும். எதனையும் விட்டுவிடக்கூடாது.
12) அனைத்துப் பகுதிகளுக்கும் விடை அளித்தால் மட்டுமே Passஆக முடியும்.
13) தேர்வு எழுதி முடித்தவுடன் Question Number & Page Number அனைத்தும் சரியாக உள்ளதா என கவனமாக சரிபார்க்க வேண்டும்.
14) Page Numberஐ கவனமாக Answer Sheetன் முன்பக்கம் எழுத வேண்டும்.
16) எந்த சந்தேகம் இருந்தாலும் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.
17) Question Paperல் எதற்கும் விடையை எழுதவோ, குறிக்கவோ கூடாது.
18) தேர்வின்போது Rough Work, Maths sum calculation போடுவதற்கு விடைத்தாளின் கீழ்ப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். Sideல் Calculation எழுதக்கூடாது.
19) Answer Sheetல் Answer எழுதும்போது உள்பக்கம் எந்த இடத்திலும் உங்களுடைய Name & Exam Numberஐ எழுதக்கூடாது.
20) தேர்வு அறையில் தங்களுக்குக் கொடுக்கும் Attendance Sheetல் மாணவர்கள் கண்டிப்பாக கையெழுத்து போட வேண்டும்.
21) விடைத்தாளின் முன்பக்கம் உள்ள Present என்னுமிடத்தில் (√) Tick குறி போட வேண்டும்.
22) Choose the correct answer சரியான விடை எழுதும் போது கண்டிப்பாக option ( a/ b/ c/ d) (அ/ஆ/இ/ஈ) ( i, ii, iii, iv ) answer எழுத வேண்டும். a b c d என்னும் option போடாமல் விடை எழுதினால் அது தவறு ஆகும்.
23) எந்த விடையும் கலந்து கலந்து எழுதாமல் இருப்பது நல்லது. அதாவது தெரிந்த விடைகளை முன்னரும், தெரியாத விடைகளை யோசித்துப் பின்னரும் எழுதாமல் இருப்பது நல்லது.
Order மாறாமல் வரிசை மாறாமல் ஒரே சீராக எழுத முயற்சிக்கவும்.
24) எந்த விடையும் incomplete ஆக எழுதக் கூடாது. முழுமையாக விடை எழுத வேண்டும்.
General Advice: 👇👇👇👇
Bit அடிப்பது /பிறரைப் பார்த்து எழுதுவது /
பிறர் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது போன்று தேர்வில் நேர்மை இல்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. தேர்வை நேர்மையாக எழுத வேண்டும்.
👇👇👇👇
தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெறவும்.
*அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்!*
👍👍👍
All the Best
👍🏽👍🏽👍🏽
💯💯💯💯🙏
11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி
Chief Minister M.K.Stalin's congratulatory message For students appearing for Class 11th and 12th Public Examination
🔹🔸11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து
✍️ "நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளை தரும். எனக்கு உங்கள் உழைப்பில் முழு நம்பிக்கை உள்ளது.
நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்
Demand White Paper on Fulfilled Election Promises - CPS Abolish Movement Urges
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்
A white report is needed on how many of the promises made to teachers & government employees have been fulfilled - CPS Abolition Movement Urges
திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
நான்காண்டுகளாகியும் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவுனம் சாதித்து வருவதை சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.
2016ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெடுத்துள்ளது.
வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம்பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வலம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம், 2026 ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையானால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித்தால் ஏமாற மாட்டோம் என்றார்.
பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கான உணவுகள்
Best diet for students at public exam times
பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளின் கவனத்திற்கு
பிளஸ்-2 தேர்வுகள் நாளை தொடங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேர்வு தருகின்ற மன அழுத்தத்தால் மாணவர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆகவே, தேர்வு நேரத்தில், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அவர்கள் நல்ல மதிப்பெண் பெற ஊக்குவிப்பதற்கும் உதவுகின்ற வகையில் உணவு முறைகளை அமைத்துக் கொள்ளவேண்டியது முக்கியம். அதுபற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
இவர், பொது தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு தரும் ஆலோசனைகள்...
*காலை உணவு...*
‘‘மூளை சீராக இயங்க அதிக ஆக்சிஜனும், சீரான ரத்த ஓட்டமும் அவசியம். எல்லா சத்துகளும் கொண்ட சமச்சீரான உணவு மட்டுமே மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். மூன்று வேளை சாப்பிட வேண்டும். என்ன காரணமாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவு தான் உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது. தேர்வு நேரத்தில் காலையும், மதியமும் நன்றாக சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவை காலை உணவுக்கும், இரவு உணவுக்கும் நல்லது. தோசை, பூரி, நூடுல்ஸ் போன்றவற்றை காலை வேளையில் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால், தினை பொங்கல், சேவை நூடுல்ஸ் போன்றவைகளை காலை உணவாக சாப்பிடலாம்.
*மன அழுத்தம் நீங்க...*
அரிசி சாதம், தக்காளி சாதம், பருப்பு சாதம், ரசம் சாதம், கீரை சாதம் மதிய உணவுக்கு நல்லது. புளியோதரை, லெமன் சாதம் போன்ற புளிப்புள்ள சாத வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் இரவில் வயிறு நிறைய சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கச்செல்லும் போது பால் சாப்பிடலாம். பாலில் உள்ள ‘டிரிப்டோபென்' எனும் அமினோ அமிலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கும் அற்புத மருந்து. அதுமட்டுமல்ல, மூளையில் நினைவாற்றலுக்கு உதவும் நரம்பு செல்களை உறுதியாக வைத்திருப்பதும் இதுதான்.
*மோர் அவசியம்...*
மதிய உணவில் தினமும் ஒரு பருப்பு, ஒரு கீரை, ஒரு காய்கறி, தயிருக்கு மாற்றாக நீர் மோர் இருக்க வேண்டும். கேரட், பீட்ரூட், அவரை, முட்டைக்கோஸ் போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகள் தேர்வு நேரத்தில் ஏற்றவை. மூளையை இயக்குகின்ற சத்து இவற்றிலிருந்து கிடைக்கும். வைட்டமின் ஏ நிறைந்த முருங்கைக் கீரை கண்களுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் அதிக நேரம் படிக்கும் போது கண்ணில் எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும். தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால் மாணவர்களுக்கு வயிற்றில் அதிகமாக அமிலம் சுரந்து அல்சர், அஜீரணம் போன்றவை தலை காட்டும். மோர், அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்துவதோடு, ஜீரண சக்தியை ஒழுங்குபடுத்தும்.
*மாலை நேர ஸ்நாக்ஸ்*
மாலை நேரத்தில் சுண்டல், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, தேனில் ஊறவைத்த பேரீட்சை, அத்திப்பழம், முளைகட்டிய பயறுகள், காய்கறி சாலட், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். பாதாம் பருப்பில் உள்ள ‘செலினியம்' நினைவாற்றலுக்கு மிக நல்லது. ஊறவைத்த பாதாமை அரைத்து சூடான பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிப்பது படித்தது மறக்காமல் இருக்க உதவும்.
*பழம் நல்லது...*
தேர்வு நேரங்களில் நோய்வராமல் பாதுகாக்க வேண்டுமானால் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவுகிறது. வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தக்காளி, பப்பாளி ஆகியவை உடனடியாக புத்துணர்வைத் தருபவை’’- இவ்வாறு தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ரேணுகா தேவி அதுதொடர்பான தகவல்களை வழங்கி, புத்துணர்வை ஊட்டினார்.
*முத்திரை...*
மறந்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருவதில் யோக முத்திரைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் தேர்வறையில் படித்த பாடங்கள் மறந்துபோனால், சின் முத்திரையை செய்து பாருங்கள். மோதிர விரலும், கட்டை விரலும் தொடும்படி மற்ற விரல்களை நேராக நீட்டுங்கள். இப்படி செய்யும்போது, படித்த விஷயங்கள் நினைவுக்கு வரும். திரும்பவும் கூறுகிறேன்.... படித்த விஷயங்கள் மட்டுமே நினைவுக்கு வரும்.
*இரவு கண்விழித்து படிக்கும்போது...*
மாணவர்கள் தூக்கம் வராமல் இருக்க காபி, டீ அருந்துவது வழக்கம். ஆனால் இவையும் மந்தத்தன்மையை உண்டாக்கும். இவற்றுக்கு பதிலாக, இரவில் சூடான பால், லெமன் டீ, காலையில் எலுமிச்சை பழச்சாறு அல்லது காய்கறி சூப், கீரை சூப் சாப்பிடலாம். தண்ணீர் நிறைய பருகுவது, படிக்கும் போது ஏற்படுகின்ற தலைவலியைக் குறைக்கும். படிக்கின்ற நேரத்தில் சிப்ஸ், சீவல் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டாம். தேர்வு முடியும் வரை கொழுப்பு மிகுந்த அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. முடியாத பட்சத்தில் மீன், முட்டை சாப்பிடலாம். அதுவும் இரவில் நிச்சயம் வேண்டாம். கொழுப்பு உணவு மூளையை மழுங்கடித்து தூக்கத்தை வரவழைக்கும்.
*தேர்வுக்கு செல்வதற்கு முன்...*
பரீட்சைக்கு செல்லும் முன்பு, சப்போட்டா, அத்தி இது போன்ற பழங்களை அதிகமாக சாப்பிடலாம். வால்நட்ஸ், பாதாம், உலர் திராட்சை, பேரீட்சை போன்றவை நல்ல ஆற்றலை கொடுக்கும் என்பதால் தேர்வுக்கு செல்லும் முன்பு இவற்றை சாப்பிடலாம். பசி தாங்கும்.
*துரித உணவுகள்..*
குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லெட், நூடுல்ஸ், பாஸ்ட் புட் போன்றவை ரொம்ப பிடிக்கும். ஆனால் தேர்வு முடியும் வரை அவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக, பாதாம், வால்நட், பேரீட்சை இவை மூன்றையும் நன்றாக அரைத்து, லட்டு போல உருவாக்கி உண்ண கொடுக்கலாம். இது படிக்கும்போதும், தேர்விற்கு செல்லும்போதும் சிறப்பான ஸ்நாக்ஸாக இருக்கும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் தொடர் போராட்டம் அறிவிப்பு
CPS Abolition Movement Announces Continued Protest Demanding Implementation of Old Pension Scheme
தமிழக அரசு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
நான்காண்டுகளாகியும் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவுனம் சாதித்து வருவதை சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.
2016ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெடுத்துள்ளது.
வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம்பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வலம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம், 2026 ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையானால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித்தால் ஏமாற மாட்டோம் என்றார்.
TamilNadu Paramedical துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது Counseling application for Paramed...