கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NPS / CPS to GPF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NPS / CPS to GPF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Demand White Paper on Fulfilled Election Promises - CPS Abolition Movement Urges

 


நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்


Demand White Paper on Fulfilled Election Promises - CPS Abolish Movement Urges


அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்


A white report is needed on how many of the promises made to teachers & government employees have been fulfilled - CPS Abolition Movement Urges




திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ்  கூறியதாவது:


தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.


நான்காண்டுகளாகியும் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவுனம் சாதித்து வருவதை சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.


2016ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெடுத்துள்ளது.


வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம்பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வலம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம், 2026 ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையானால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித்தால் ஏமாற மாட்டோம் என்றார்.


CPS Abolition Movement Announces Continued Protest Demanding Implementation of Old Pension Scheme


 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் தொடர் போராட்டம் அறிவிப்பு


CPS Abolition Movement Announces Continued Protest Demanding Implementation of Old Pension Scheme


தமிழக அரசு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.


நான்காண்டுகளாகியும் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவுனம் சாதித்து வருவதை சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.


2016ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெடுத்துள்ளது.


வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம்பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வலம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம், 2026 ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையானால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித்தால் ஏமாற மாட்டோம் என்றார்.





Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பி. பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.


தமிழ்நாடு அரசுக்கு எதிர்வாத உரை அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.



Comparison of UPS , NPS & OPS



ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் - ஒப்பீடு


Unified Pension Scheme, New Pension Scheme and Old Pension Scheme - Comparison


Comparison of UPS , NPS & OPS



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பழைய & புதிய பங்களிப்பு ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக் கால நன்மைகளும் குறித்த முழுமையான தகவல்கள் - தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025 அறிக்கை - நிதித்துறை மானியக் கோரிக்கை எண்: 50...



 பழைய & புதிய பங்களிப்பு ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக் கால நன்மைகளும் குறித்த முழுமையான தகவல்கள் - தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025 அறிக்கை - நிதித்துறை மானியக் கோரிக்கை எண்: 50...


Complete Information on Old Pension & New Contributory Pensions and Other Retirement Benefits - Government of Tamil Nadu Policy Note 2024-2025 Report - Finance Department Grant Request No: 50...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பா? சீரமைப்பா? இதுவே தக்க தருணம்...


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பா? சீரமைப்பா? இதுவே தக்க தருணம்...


இந்திய ஒன்றிய அளவில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு 01-04-2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அல்லது புதிய ஓய்வூதியத் திட்டம் (Contributed Pension System or New Pension System) எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. அதாவது தமிழ்நாடு அரசுப் பணி, அரசு கல்வி மற்றும் அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியில் உள்ளோர் மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பயன்படும் வகையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.


தமிழ்நாடு அரசு முன்னோடி மாநிலமாக நடைமுறைப்படுத்திய இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இந்திய அரசு ஜனவரி 1, 2004 முதல் ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 01.01.2004-க்கு முன்பு ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவம், துணை இராணுவப் படைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்கனவே உள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. இந்திய ஒன்றிய அரசைப் பின்பற்றி அதன்பின் பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு பணியில் சேரும் தமது ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்தி வருவது எண்ணத்தக்கது.


அதன்படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி மட்டும் உள்ளடக்கிய மாத ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத ஓய்வூதிய வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் மேற்குறித்த வைப்பு நிதிக் கணக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் தம் பங்காகச் செலுத்தி அவற்றிற்குரிய அவ்வக்கால வட்டியும் கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் கணக்குச்சீட்டு வழங்கி வருகின்றன. புதிய ஓய்வூதிய திட்ட நிதியை மேலாண்மை செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இதை நிர்வகித்து வருகிறது. 


தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நிதியை மாநில கணக்காயர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிலையாக்கப்படாத பணியாளர்கள் அனைவருக்கும் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் புதிய கணக்கு எண் மற்றும் கணக்குச்சீட்டு வழங்குதல், கணக்குகள் பராமரிக்கும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேமிக்கும் மாதாந்திர கூட்டுத்தொகைக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளோருக்கான பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் இதற்கான வட்டித் தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. 


தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டித் தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது இதன் சிறப்பாகும். இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் தம் பணிக்காலத்தில் சேமித்த தொகையுடன் அதற்கு ஈடாக அரசின் பங்களிப்புத் தொகை, அவற்றிற்குரிய வட்டி ஆகியவை முறையே கணக்கிடப்பட்டு முழுவதும் ஒரே தவணையில் வழங்கப்பட்டு விடுகிறது.‌ இதுதவிர, ஒன்றிய அரசு வழங்குவது போல் பணிக்கொடை இவர்களுக்குக் கொடுக்கப்படுவது இல்லை. 


ஓராண்டு பணிக்கு 15 நாட்கள் சம்பளம் பணிக்கொடையென்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்துள்ளாரோ அதற்குரிய தொகையை பணிக்கொடையாக வழங்கவேண்டும் என்பது விதியாகும். இதன் உச்சவரம்பு 20 இலட்சமாக தற்போது வரை இருக்கின்றது. இந்த பணிக்கொடை தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் அவரவர் பணிபுரிந்த பணிக்காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு அளிக்கப்படுகிறது. 


இத்தகைய சூழலில், அண்மையில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு 50 விழுக்காட்டைக் கடந்ததையொட்டி ஒன்றிய அரசு தம் பணிக்கொடை உச்சவரம்பை 20 இலிருந்து 25 இலட்சமாக உயர்த்தி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 


ஒன்றிய அரசுக்கு இணையாக ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு சலுகைகளை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் நடைமுறையைக் கடைபிடித்து வரும் திராவிட மாடல் அரசு பணிக்கொடை உயர்வையும் கவனத்தில் கொள்வது நல்லது.


மேலும், ஒன்றிய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அத்திட்டத்தின் முழு பலனையும் சலுகைகளையும் அனுபவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பிடித்தம் செய்துள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதி இன்னமும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது. 


இதுகுறித்து பலகட்டமாக தனித்தும் கூட்டமைப்பாக ஒருங்கிணைந்தும் இயக்கங்கள் பழைய ஓய்வூதியம் மீட்புப் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெறாமல் இல்லை. அப்போதெல்லாம் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகள் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பு உறுதிமொழி அளிக்கப்படும் நிகழ்வுகளும் இங்கு நடந்தேறி வருவதும் அறியத்தக்கது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை ஒரு விடிவும் கிடைத்தபாடில்லை. நெருக்கடி சூழ்நிலையைச் சமாளித்து இயல்பு நிலை திரும்ப ஒப்புக்கு குழு அமைப்பதும் பின்னர் அதைக் கிடப்பில் போடுவதும் தொடர்ந்து நடந்து வருவது வேதனைக்குரியது. 


மீண்டும் பழைய ஓய்வூதியம் நிறைவேற இதுவே நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காக்கும் அரசாக தற்போதைய விடியல் அரசு உள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வதை எளிதாகப் புறம்தள்ளிவிட முடியாது. ஏனெனில், அவர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதியம் மீண்டும் நிறைவேற்றித் தரப்படும் என்று போராட்ட காலகட்டத்தில் நேரிலும் அதன் நீட்சியாக தேர்தல் அறிக்கையிலும் நம்பிக்கையுடன் வாக்குறுதி அளித்துள்ளார்கள். 


இனியும் காலம் கடத்துதல் சரியாகாது. ஏனென்றால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தள்ளப்பட்ட பலபேர் தம் பணி நிறைவு காலத்தை எட்டவிருக்கின்றனர். இவர்களுள் பலர் 40 வயதிற்கு மேல் பணிக்கு வந்தவர்கள். பணி ஓய்வின்போது இவர்கள் பெறப்போகும் பணப்பலன்கள் பெரிய அளவில் இருக்கப் போவதில்லை. அதில் வீட்டுக்கடனை அடைப்பதா? பிள்ளைகளை உயர்கல்வி படிக்க அனுப்புவதா? பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைப்பதா? பணிக் காலத்தில் சீதனமாகப் பெற்ற உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவச் செலவுகள் பார்ப்பதா? என்று கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்று திசை தெரியாமல் விழிபிதுங்கிக் கிடப்பதை அறியமுடிகிறது. 


இத்தகைய நிலையில் ஒன்றிய அரசு முன்மொழிந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தாம் சேர்க்கப்பட்டிருந்தால்கூட பங்களிப்பு ஓய்வூதியத் தொகையுடன் பணிக்கொடையும் கிடைத்திருக்குமே என்று அங்கலாய்ப்பதையும் ஆதங்கத்தில் முணுமுணுப்பதையும் ஊன்றிக் கேட்க முடிகிறது. கந்தலான வாழ்க்கையில் பட்டு வேட்டி கனவாக இருந்தாலும் நான்கு முழ கதர் வேட்டி கிடைப்பதை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?


அதுபோல், இந்த பழைய ஓய்வூதிய மீட்பு சிக்கலை அரசுடன் சுமுகமாகப் பேசித் தீர்க்க புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பங்கு பெற பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்போர் எத்தகைய முக்கிய பதவி வகித்தாலும் சற்று விலகிக்கோண்டு வழிவிடுதல் காலத்தின் கட்டாயமாகும். நல்லதோ, கெட்டதோ எந்த முடிவாக இருப்பினும் அஃது பாதிக்கப்பட்டோர் கூடி முடிவெடுப்பது தான் சாலச்சிறந்ததாக அமைய முடியும். மூன்றாம் நபர் தலையீடு என்பதும் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் பேசுவதென்பதும் பிற்காலத்தில் பல்வேறு விரும்பத்தகாத பின்விளைவுகளையே தரும். இஃது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆசிரியர் சங்கங்களுக்குள் உள் முரண் மற்றும் உட்பகைக்குக் காரணமாக அமையக்கூடும்.


எனினும் ஒரு சில முன்மொழிவுகளை முன்வைப்பது தவறில்லை என்று படுகிறது. முதலாவதாக இருபதாண்டு கால நெடுங்கனவையும் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் பொருட்டு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து மார்ச் 31, 2023 இல் நடைமுறையில் இருந்து வந்த பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்வதாகவும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரால் சேமிக்கப்பட்ட தொகைக்கு மட்டும் வட்டி கணக்கிடப்பட்டு அது முறையே வருங்கால வைப்பு நிதியாகப் பேணப்படும் என்றும், பணிநியமன நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மூன்று இலட்சத்திற்கு மிகாமல் இருப்புத் தொகையில் 75 விழுக்காட்டைத் தற்காலிக முன்பணக் கடன் பெற இயலும் என்றும் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருதரப்பு சுமுக பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு கொள்வது நலம் பயக்கும்.


இரண்டாவதாக, மாநிலத்தில் காணப்படும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி வேறுவழியின்றிக் கை விரிக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசு வலியுறுத்துவது போல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி முழுவதையும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் அளித்து ஜனவரி 1, 2004 முதல் பணப்பலன் சலுகைகள் கிடைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் ஒன்றிய அரசு தம் பணியாளர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் பெறத் தகுதி வாய்ந்தவர்களாக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மேம்படுத்துதல் இன்றியமையாதது. 


மேலும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 25,000 தொகைக்குக் குறையாமல் வாழ்வாதார ஓய்வூதியம் இவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்தல் இன்றியமையாதது. இந்த முடிவுகள் அனைத்தும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் அரசும் கூட்டாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். சம்பந்தப்படாதவர்கள் தேவையின்றி இப்பிரச்சினையில் நேரடியாகப் பங்கேற்பதைத் தவிர்த்து மறைமுகமாக உதவிகரமாக இருப்பதே உத்தமம்.


தற்போது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பயனாளிகள் தம் வருமானவரி சேமிப்பு சலுகையில் கழித்து வந்த கூடுதல் பங்களிப்பு ஓய்வூதியத் தொகை ரூ 50000 ஐயும் கடந்த ஆண்டு முதல் கழிக்க முடியா அவலநிலை உள்ளது வருந்தத்தக்கது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். ஏனெனில், இது வருமான வரி கழிவிற்கு உகந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேராது என்று கூறப்படுகிறது.


அரசுக்குத் தம் தரப்பு நியாயங்களைக் கோரிக்கையை முன்வைத்து உரிமையுடன் கேட்பவர்கள் முன் எடுத்துரைக்க எப்படி எல்லா உரிமையும் இருக்கின்றதோ அதுபோல் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலைச் செவிமடுத்துக் கேட்கும் கடமையும் பொறுப்பும் இருப்பதை ஒருக்காலும் தட்டிக் கழிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளத்தக்கது. இஃது ஆகவே ஆகாது என்று எடுத்த எடுப்பிலேயே ஆயிரமாயிரம் காரணங்களை முடியாததற்கு அடுக்குவதில் காட்டும் அக்கறையில் ஏற்கத்தக்கதே என்று முடிவெடுக்க நல்லதொரு காரணத்தைப் பாதிக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கிய வல்லுநர் குழு மூலம் ஆராய்தல் கோடி புண்ணியம். 


அரசியல் கிணற்றுக்குள் பல்லாண்டுகள் மூழ்கிக் கிடக்கும் இறுகிய பாறாங்கல்லைப் போன்ற பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீள எடுத்து வந்து பாவ விமோசனம் அளித்து சுமார் ஆறு இலட்சம் குடும்பங்களின் கண்ணீர் துடைக்கவும் கௌரவமான முறையில் வாழ்க்கை வாழவும் மனிதாபிமானத்துடன் அரசு முன்வரவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும். தற்போது பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி உள்ளதாக அறியப்படுகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடும் இடம்பெற வேண்டும் என்பது வேண்டுகோள் மட்டுமல்ல, வேண்டுதலும் கூட.


எழுத்தாளர் மணி கணேசன்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...


 பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...



பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி கிடைக்கும் - சொல்கிறார் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிர்வாகி...

 


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி கிடைக்கும் - சொல்கிறார் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிர்வாகி...



பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...

 


பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...


பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...


நாகர்கோவில் கோட்டாறு நாராயண குரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: 


முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகப்பெரிய நிதி நெருக்கடி அரசுக்கு உள்ளது.


இந்த சுமையை தாண்டி மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு நிதியாக நாம் செலுத்துகின்ற வரிக்கு அவர்கள் திருப்பித் தருவது ஒரு ரூபாய்க்கு 29 காசு தான். நமக்கு சரியான நிதி பகிர்வு இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவித்து விடுவார். 


முதல்வர் நிச்சயமாக சொன்னதை செய்து விடுவார். ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் சந்தித்து அவர்களை அழைத்துப் பேசி ஒரு ஒரு உறுதியை கொடுத்துள்ளார். எனவே அளித்த வாக்குறுதியை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். இவ்வாறு அவர் பேசினார்.




பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - வினாக்களும் விடைகளும் - CPS ஒழிப்பு இயக்கம்...


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - வினாக்களும் விடைகளும் - CPS ஒழிப்பு இயக்கம்...


🙏🙏🙏🙏🙏🙏

*CPS ஒழிப்பு இயக்கம்*

*மாநில மையம்*


*CPS யை  இரத்து செய்யக் கோரி 26.02.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*சிபிஎஸ் இரத்து செய்ய முடியுமா ?*


*பதில் :*


*முடியும்..!*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*இந்தியாவில் சிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் உண்டா ?*


*பதில் :*


*உண்டு..!*


*மேற்கு வங்காளத்தில் இன்றுவரை CPS திட்டம் அமல்படுத்தப்பட வில்லை..!*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*Contributory Pension Scheme திட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க மாநிலங்களுக்கு சட்டபூர்வமான உரிமை உண்டா ?*


*பதில் :* 


*சட்டபூர்வ உரிமை உண்டு..!*


*மத்திய அரசு அமல்படுத்திய சிபிஎஸ் சட்டத்தில்.....*


*புதிய ஓய்வூதியத் திட்டத்தை.... அமல்படுத்துவதும் அமல்படுத்தாமல் இருப்பதும் ஒரு மாநிலத்தின் உரிமை என குறிப்பிடப்பட்டுள்ளது.*


*மாநில உரிமை என்ற அடிப்படையில் மேற்கு வங்க மாநில அரசு சிபிஎஸ் திட்டத்தை அம்மாநில அரசு ஊழியருக்கு அமல்படுத்தவில்லை..!*


*ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், சிக்கிம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*தமிழ்நாட்டில் அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் வித்தியாசம் உண்டா ?*


*பதில் :*


*வித்தியாசம் உண்டு.* 


*மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிபிஎஸ் திட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசு அமைத்துள்ள ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன்  (PFRDA ) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சிபிஎஸ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.* 


*தமிழ்நாடு அரசு 2003 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.*


*சிபிஎஸ் திட்டத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்கப்படுகிறது.*


*மத்திய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் தொகையில் கடன் வாங்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.*


*தமிழ்நாடு அரசு பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை.*


*CPS.. ஐ அமல்படுத்திய மாநிலங்களில்...*


*PFRDA வுடன் கையெழுத்து இடாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.*


 *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் பணிக்கொடை கிடையாது*


*செலுத்திய தொகையில் முன்பணம் கோர முடியாது என்ற நிலைமை உள்ளது.*


*தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால்  சிபிஎஸ் இரத்து செய்வதற்கு மத்திய அரசு மற்றும் PFRDA விடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*முன் தேதியிட்டு PFRDAவுடன் தமிழ்நாடு அரசு கையெழுத்து இட முடியுமா?*


*பதில் :* 


*வாய்ப்பே இல்லை.*


*முன்தேதியிட்டு கையெழுத்திட விரும்பினால்...*


*1.4.2003 முதல் ஊழியர்கள் செலுத்திய பங்கீடு  10 % அரசு செலுத்த வேண்டிய 10%  என்று 20%*


*அதாவது Rs.42 ஆயிரம் கோடி தொகையை., தமிழ்நாடு அரசு PFRDA வில் செலுத்த வேண்டும்.*


*Rs 70,000 கோடியை PFRDA வில் செலுத்த இன்றும் சரி.. எதிர்காலத்திலும் சரி.. தமிழ்நாடு அரசுக்கு வாய்ப்பில்லை.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*ஒரு வேளை தமிழக அரசு, அவ்வளவு தொகையை செலுத்த விரும்பினால்...*


*PFRDA... அந்தத் தொகையை...ஏற்றுக் கொள்ளுமா..?*


*பதில் :*


*PFRDA.. தமிழ்நாடு அரசு எவ்வளவு செலுத்தினாலும், அந்தத் தொகையை ஏற்றுக் கொள்ளும்.*


*ஆனால்.. தமிழ்நாடு அரசு எந்தத் தேதியில் தொகையினை செலுத்துகிறதோ..*


*அந்தத் தேதியிலிருந்து தான்.. CPS.. ஐ அமுல்படுத்த முடியும்.*


*ஏனெனில், PFRDA அத்தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து..*


*அதில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் தான் ஓய்வூதியம் வழங்கும்.*


*முன் தேதியிட்டு தொகை செலுத்தப்பட்டாலும்..*


*முன்தேதியிட்டு முதலீடு செய்ய வாய்ப்பில்லை அல்லவா..?*


*எனவே, முன் தேதியிட்டு ஓய்வூதியம் வழங்க வாய்ப்பே இல்லை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*PFRDA வுடன் கையெழுத்து போட இயலாத சூழ்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன ?*


*பதில் :*


*1). இதே நிலையில் தொடர்வது.*


*2). CPS திட்டத்தை இரத்து செய்வது.*


*இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.*


*இதே நிலையில் தொடர்வதற்கு சட்ட ரீதியான உரிமை.. அதிகாரம் அரசுக்கு இல்லை.*


*தமிழ்நாடு அரசு அமுல்படுத்தி வரும் இத்திட்டமானது... "அரசியலமைப்புச் சட்டத்திற்கு " எதிரானதாகும்.*


*எனவே, CPS திட்டத்தை ரத்து செய்து விட்டு, இதுவரை அரசு ஊழியர்களிடமிருந்து இதற்கென பிடித்தம் செய்த பங்குத் தொகையினை GPF.. ல் போடுவதைத் தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தமான நிலை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*CPS.. ஐ ஆட்சியாளர்கள் தானாக இரத்து செய்வார்களா ?*


*பதில் :*


*தானாக இரத்து செய்ய மாட்டார்கள்.*


*இரத்து செய்வதற்கான நிர்பந்தத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*நிர்பந்தம் கொடுத்தால் CPS இரத்து செய்ய முடியுமா?*


*பதில் :*


*நிச்சயம் முடியும்..!*


*CPS.ஐ தமிழகத்தில் 2003ல் அமுல்படுத்திய பின்பு 2006 மற்றும் 2011  ல் இரண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.


*2006 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் CPS.ஐ இரத்து செய்வோம் என திமுக மற்றும் அதிமுக  வாக்குறுதி அளிக்கவில்லை.*


*2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற 10 நாள் வேலை நிறுத்தத்தின் விளைவால்...*


*2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக...*


*CPS.. ஐ இரத்து செய்வோம் என்று திமுக மற்றும் அதிமுக வாக்குறுதி அளித்தன.*


*2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நாம் போராடியதால்..*


*CPSஐ இரத்து செய்திட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.*


*"ஒன்றுபட்ட தொடர் போராட்டம் செய்தால் CPS.. ஐ நிச்சயம் இரத்து செய்ய முடியும்..!*


*CPS இரத்து செய்திட பங்கேற்பீர்.....*


*26.02.2024 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..*


🙏🙏🙏🙏🙏🙏


*CPS ஒழிப்பு இயக்கம்*


🙏🙏🙏🙏🙏🙏


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டி பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (CPS) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி (An interview to the news media regarding the protest announcement by the state coordinators of the Contributory Pension Scheme (CPS) Abolition movement demanding the re-implementation of the old pension scheme)...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டி பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (CPS) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி (An interview to the news media regarding the protest announcement by the state coordinators of the Contributory Pension Scheme (CPS) Abolition movement demanding the re-implementation of the old pension scheme)...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



PENSION கோரி ஒரு இலட்சம்பேர் தமிழ்நாடு முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட CPS ஒழிப்பு இயக்கம் அறைகூவல் - தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை நிறைவேற்ற வலியுறுத்தி, CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று (28.10.2023) திருச்சியில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் 4 கட்டப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


18.11.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் குடும்பத்தோடு பட்டினிப் போராட்டம்.


27.12.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் மறியல்.


23 & 24.01.2024 :

2 நாள்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்.


08.02.2024 :

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இல்லத்தை முற்றுகையிடுவது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


​​தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்கள் - பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) செயல்படுத்தும் மாநிலங்களின் பெயர்கள் - பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS)-ஐ மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா? - மாநிலங்களவையில் அரசின் பதில் (States that have implemented National Pension Scheme - Names of States implementing Old Pension Scheme (OPS) - Is the Government considering re-implementation of Old Pension Scheme (OPS)? - Government's response in Rajya Sabha)...

​​


>>> தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்கள் - பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) செயல்படுத்தும் மாநிலங்களின் பெயர்கள் - பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS)-ஐ மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா? - மாநிலங்களவையில் அரசின் பதில் (States that have implemented National Pension Scheme - Names of States implementing Old Pension Scheme (OPS) - Is the Government considering re-implementation of Old Pension Scheme (OPS)? - Government's response in Rajya Sabha)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

***** 

 GOVERNMENT OF INDIA 

MINISTRY OF FINANCE 

DEPARTMENT OF FINANCIAL SERVICES 

***** 

RAJYA SABHA 

UNSTARRED QUESTION NO. 1505 

TO BE ANSWERED ON 14th MARCH, 2023 (TUESDAY)/ 23 PHALGUNA, 1944 (SAKA) 

STATES ADOPTING NATIONAL PENSION SCHEME 

1505. Shri Ram Nath Thakur

 

Will the Minister of Finance be pleased to state: 

(a) the states which have implemented the National Pension Scheme;

(b) the liability along with interest payable towards OPS by the employees of the States implementing  the said scheme; 

(c) the names of OPS implementing States that are demanding deposits; 

(d) the action taken by Government to give deposits under OPS so that the employees can be benefitted ; and 

(e) whether Government is considering re-implementation of OPS on the lines of those States? 

ANSWER 

THE MINISTER OF STATE IN THE MINISTRY OF FINANCE 

(DR. BHAGWAT KARAD) 

(a) and (b) The National Pension System (NPS) was introduced by the Government of India vide notification  dated 22.12.2003 to replace the defined benefit pension system by defined contribution pension  scheme in order to provide old age income security in a fiscally sustainable manner and to channelize  small savings into productive sectors of the economy through prudential investments. It was  made mandatory for all new recruits to the Government service (except armed forces) with effect from  01.01.2004, and has also been rolled out for all citizens with effect from 01.05.2009, on voluntary  basis. As informed by the Pension Fund Regulatory and Development Authority (PFRDA), 26  State Governments except the State Government of Tamil Nadu and the State Government of West Bengal , have notified and implemented NPS for their employees. As such liability under Old Pension Scheme  (OPS)- a defined benefit pension system- is an unfunded liability of State Government, which will  be met from their future revenues.

(c) and (d) The State Governments of Rajasthan, Chhattisgarh, Jharkhand, Punjab, and Himachal Pradesh  have informed the Central Government/PFRDA about their decision to restart Old Pension Scheme  (OPS) for their State Government employees, and have requested refund of corpus accumulated  under NPS. There is no provision under Pension Fund Regulatory and Development Authority  Act, 2013 read along with PFRDA (Exits and Withdrawals under the National Pension System ) Regulations, 2015, and other relevant Regulations, vide which the accumulated corpus of the  subscribers viz Government contribution, Employees' contribution towards NPS along with accruals , can be refunded and deposited back to the State Government. 

(e) There is no proposal under consideration of Government of India for restoration of old pension scheme  in respect of Central Government employees recruited on or after 01.01.2004 on the lines of those  States. 

********

(Google Translate மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது)

இந்திய அரசு 

நிதி அமைச்சகம் 

நிதி சேவைகள் துறை 

***** 

ராஜ்ய சபா 

நட்சத்திரமிடப்படாத கேள்வி எண். 1505 

14 மார்ச், 2023 (செவ்வாய்கிழமை)/ 

23 பல்குனா, 1944 (சகா) 

அன்று பதில் அளிக்கப்படுகிறது.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற மாநிலங்கள்  

1505. ஸ்ரீ ராம் நாத் தாக்கூர் நிதியமைச்சர் : 

(அ) ​​தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்கள்; 

(ஆ) அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் மாநிலங்களின் ஊழியர்கள் OPS க்கு செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய பொறுப்பு; 

(இ) பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) செயல்படுத்தும் மாநிலங்களின் பெயர்கள்; 

(ஈ) ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) கீழ் டெபாசிட் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை; மற்றும் 

(உ) அந்த மாநிலங்களின் வழியில் பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS)-ஐ மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா? 


பதில்

 நிதி அமைச்சகத்தில் மாநில அமைச்சர் (டாக்டர். பகவத் கரத்) 

(a) மற்றும் (b) தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) இந்திய அரசாங்கத்தால் 22.12.2003 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது நிலையான முறை மற்றும் விவேகமான முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகளில் சிறு சேமிப்பை மாற்றுதல். 01.01.2004 முதல் (ஆயுதப் படைகள் தவிர) அரசுப் பணியில் சேரும் அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டது, மேலும் இது 01.05.2009 முதல் தன்னார்வ அடிப்படையில் அனைத்து குடிமக்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெரிவித்தபடி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் தவிர 26 மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு NPS அறிவித்து செயல்படுத்தியுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் இத்தகைய பொறுப்பு- வரையறுக்கப்பட்ட நன்மை ஓய்வூதிய முறை- மாநில அரசின் நிதியில்லாத பொறுப்பாகும், இது அவர்களின் எதிர்கால வருவாயில் இருந்து ஈடுசெய்யப்படும். 

(c) மற்றும் (d) ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில அரசுகள், தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் தொடங்கும் முடிவைப் பற்றி மத்திய அரசு/PFRDA-க்கு தெரிவித்து, பணத்தைத் திரும்பக் கோரியுள்ளன. NPS இன் கீழ் திரட்டப்பட்ட கார்பஸ். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 2013 இன் கீழ், PFRDA (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் வெளியேறுதல் மற்றும் திரும்பப் பெறுதல்) விதிமுறைகள், 2015 மற்றும் பிற தொடர்புடைய ஒழுங்குமுறைகள் ஆகியவற்றுடன் சேர்த்துப் படிக்க எந்த ஏற்பாடும் இல்லை. 'என்பிஎஸ்க்கான பங்களிப்பை, திரட்டல்களுடன் சேர்த்து, திரும்பப் பெற்று, மாநில அரசிடம் டெபாசிட் செய்யலாம்.

(இ) 01.01.2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்த வரையில் அந்த மாநிலங்களைப் போன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான எந்த முன்மொழிவும் இந்திய அரசின் பரிசீலனையில் இல்லை.

********






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசுப் பணியாளர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி பஞ்சாப் மாநில அரசு நிதித்துறை அறிவிப்பு வெளியீடு, நாள்: 18-11-2022 (Punjab State Government Finance Department Notification Dated: 18-11-2022 to cancel CPS scheme for Government Employees and implement Old Pension Scheme)...



>>> அரசுப் பணியாளர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி பஞ்சாப் மாநில அரசு நிதித்துறை அறிவிப்பு வெளியீடு, நாள்: 18-11-2022 (Punjab State Government Finance Department Notification Dated: 18-11-2022 to cancel CPS scheme for Government Employees and implement Old Pension Scheme)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சரியா? -வாசகர்களின் பதில் - தினமணி 25-05-2022 (Is the demand for implementation of the old pension scheme for government employees correct? -Readers' Answer - Dinamani 25-05-2022)...

 அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சரியா? -வாசகர்களின் பதில் - தினமணி 25-05-2022 (Is the demand for implementation of the old pension scheme for government employees correct? -Readers' Answer - Dinamani 25-05-2022)...






சத்தீஸ்கர் மாநிலத்தில் CPS ஐ ரத்து செய்து GPF ஆக மாற்றம் செய்ததை அரசிதழில் வெளியீடு ( Abolition of CPS and conversion to GPF - Chhattisgarh Published in Gazette)...



>>> சத்தீஸ்கர் மாநிலத்தில் CPS ஐ ரத்து செய்து GPF ஆக மாற்றம் செய்ததை அரசிதழில் வெளியீடு ( Abolition of CPS and conversion to GPF - Chhattisgarh Published in Gazette)...


(தமிழாக்கம்)

அடல் நகர், 11 மே 2022

அறிவிப்பு

எண் F-2016-04-03289- இந்திய அரசியலமைப்பின் 309 வது பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, சத்தீஸ்கர் ஆளுநர், இதன் மூலம், புதிதாக வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துகிறார். 1-11-2004 அன்று அல்லது அதற்குப் பிறகு மாநில அரசின் ஓய்வூதியம் பெறக்கூடிய நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்பட்டது, மாநில அரசின் அறிவிப்பு எண். 977/C 761/F/R/04, தேதியிட்ட அக்டோபர் 27, 2004, மற்றும்


திட்டம் பின்வருமாறு செயல்படுத்தப்படும்:


1. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டம் 01-11-2004 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.


2. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதாந்திர பங்களிப்புக்கான 10% பிடித்தம் 01-04-2022 முதல் ரத்து செய்யப்படும் மற்றும் பொதுச் சட்டத்தின்படி அடிப்படைச் சம்பளத்தில் (ஊதியங்கள்) குறைந்தபட்சம் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதி விதி..


3. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களின் சட்டீஸ்கர் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகள் இயக்குனரகத்தில் இருக்கும். கருவூலம், கணக்குகள் மற்றும் ஓய்வூதியங்கள் கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்குப் பதிலாக நிதித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் (ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான புதிய இயக்குநரகம் நிறுவப்படும் நேரம் வரை).


4. சத்தீஸ்கர் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து பணிகளையும் பராமரிப்பதற்காக ஒரு தனி இயக்குநரகம், ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவப்படும். 5. NSDL இலிருந்து பெறப்பட்ட அரசாங்க பங்களிப்பு தொகை மற்றும் பெறப்பட்ட வட்டி


இது எதிர்காலத்தில் பொதுக் கணக்கின் கீழ் ஒரு தனி நிதியில் வைக்கப்படும்


ஓய்வூதிய பொறுப்புகளை செலுத்துதல் மற்றும் 4 சதவீதத்திற்கு சமமான தொகை


ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதிய நிதியில் முந்தைய ஆண்டின் ஓய்வூதிய பொறுப்புகள் முதலீடு செய்யப்படும்.


6. சத்தீஸ்கர் பொது வருங்கால வைப்பு நிதிக்கு அரசு ஊழியரின் முதன்மைத் தொகை மாற்றப்படும் மற்றும் சத்தீஸ்கர் பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் வட்டி விகிதம் குறித்து அவ்வப்போது மாநில அரசு வழங்கும் அறிவுறுத்தல்களின்படி 01-11-2004 முதல் வட்டி செலுத்தப்படும். நிதி விதிகள்.


7. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தேதிக்கும் 01-11-2004க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற/இறந்த ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி தகுதியான அரசு ஊழியர்கள்/குடும்பங்களுக்கு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலோ அல்லது அரசு ஊழியர் மரணம் அடைந்தாலோ, ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியப் பலன்களைப் பெற்ற அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி பலன் நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் தனித்தனியாக வெளியிடப்படும்.



8. திட்டத்தின் கீழ் கணக்கியல், ஒழுங்குமுறை மற்றும் செயல்முறை தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் தனித்தனியாக வெளியிடப்படும்.


9. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைத்தல் மற்றும் பிற துணை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிதித் துறை மேற்கொள்ளும்.


உத்தரவின்படி மற்றும் சத்தீஸ்கர் ஆளுநர் பெயரில், ATISH பாண்டே, இணைச் செயலாளர்.








ராஜஸ்தான் மாநில அரசு தனது பணியாளர்களுக்கு 01-04-2022 முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துகிறது - ஒரு மனிதாபிமான, வரலாற்று முடிவு - தமிழாக்கம் (Rajasthan implements Old Pension Scheme - A Historic, Humane Decision)...

 


ராஜஸ்தான் மாநில அரசு தனது பணியாளர்களுக்கு 01-04-2022 முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துகிறது - ஒரு மனிதாபிமான, வரலாற்று  முடிவு - தமிழாக்கம் (Rajasthan implements Old Pension Scheme - A Historic, Humane Decision)...


```RAJASTHAN State's implementation of OLD PENSION SCHEME : A HISTORIC HUMANE DECISION```


வணக்கம்.


இராஜஸ்தான் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது தொடர்பாக அம்மாநில 'தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை' நாடு முழுவதிலும் வெளியாகும் ஆங்கில தினசரி நாளிதழ்களில் *'ஒரு வரலாற்றுப்பூர்வ மனிதநேய முடிவு'* எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கை ஆங்கில தினசரி நாளிதழ்களின் முதல் பக்கத்தை முழுமையாக அலங்கரித்துள்ளது.


இது வெற்று விளம்பரமாக இல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டி நாடு முழுவதும் போராடி வரும் ஊழியர்களுக்கும் அவர்கள் பணியாற்றும் அரசு நிருவாகத்திற்கும் இடையேயான 'கோரிக்கையை வலுப்படுத்தும் பாலமாகவே' அமைந்துள்ளது எனலாம். ஏனெனில், அவ்விளம்பரம் ஒரு அரசின் சாதனை விளம்பரமாக இல்லாமல், ஊழியர்களின் & பொதுமக்களின் நிலையில் நின்று அவர்களுக்கான உரிமையின் நியாயத்தைப் பேசுவதாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு சேமநல அரசிற்கான பார்வையில் அவ்விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.


எனவே, தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் குறிப்பாகப் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், CPS ஒழிப்பு இயக்கம் பொறுப்புணர்வுடன் அவ்விளம்பரத்தைத் தமிழ்ப்படுத்தி இங்கே வெளியிடுகிறது.


👇👇👇👇👇👇👇👇


👉 இராஜஸ்தான் அரசு தனது 2022-23 நிதிநிலை அறிக்கையில் 1.1.2004-ற்குப் பிறகு பணியேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தது.


👉 இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை (Gratuity), ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதால் அவர்களின் சமூகப் பொருளாதாரம் வலுவடையும்.


👉 தற்போது பிடித்தம் செய்யப்பட்டு வரும் 10% பிடித்தம் உடனடியாக நிறுத்தப்படுவதால் 1.4.2022 முதல் அவர்களின் ஊதியம் உயரும்.


👉 கூடுதலாக இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கும் GPF வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு அவர்களின் பணி ஓய்வின் போது வழங்கப்படும்.


--- ----- ---- ----


NPS-ஐ நடைமுறைப்படுத்தியதால் நேர்ந்தது என்ன?


★ ஓய்வூதியத்திற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் போனது.


★ ஊழியர்கள் 10% பங்களிப்பு செய்ய வேண்டியது கட்டாயமானது.


★ ஊழியர்களை மனித உரிமை மீறலில் இருந்து பாதுகாக்க வேண்டி, இந்திய ஒன்றிய அரசிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் NPS-ஐ மறு ஆய்வு செய்யும் குழுவை அமைக்கும்படி கேட்டுக் கொண்டது.


★ இரண்டாவது நீதித்துறை ஊதிய ஆணையம் நீதித்துறையினருக்கு NPS திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என பரிந்துரைத்தது.


★ கேரளா, ஆந்திரா, இமாச்சல் & பஞ்சாப் மாநில அரசுகள் NPS-ஐ மறு ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.


★ படைவீரர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதிலிருந்து அவர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பை பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே வழங்கும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.


--- ----- ---- ----


NPS-ஐ திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல் & பார்வையிடலில் மத்திய தணிக்கை ஆணையம் (CAG) வெளியிட்ட அதிர்ச்சிகரமான உண்மைகள் :


★ NPS நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதற்கான பணிசார் விதிகள் / NPS-ல் பணியேற்ற ஊழியர்களுக்கான ஓய்வுக்காலப் பலன்கள் குறித்து தற்போது வரை இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்படாது கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.


★ இத்திட்டம் செயல்பட்டுவரும் விதம்  குறித்த வழக்கமான மதிப்பீடுகளை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை  மேற்கொள்ளுதல் சார்ந்தோ அல்லது வேறு ஏதாகிலும் தொழில்நுட்பத்தைச் சேர்த்து இத்திட்ட நடைமுறை சார்ந்த நம்பகத்தன்மையை அறியவோ எவ்விதக் குறியீட்டுமுறைமையும் இதில் இல்லை.


★ இத்திட்டத்தில் தகுதியானோருக்கான 100%  வரையறைகளை உறுதி செய்வதில் இன்னமும் தேக்கமே உள்ளது.


--- ----- ---- ----

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் :


★ ஊழியருக்கான ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி மாத ஊதியத்தின் 50%-ஐ ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் பெறுவர்.


★ பணவீக்கத்தில் இருந்து ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான பஞ்ச நிவாரணமாக இது இருக்கும்.


★ ஊழியர் எந்தவித பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை.


★ 33% வரையிலான ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) கிடைக்கக்கூடும்.


--- ----- ---- ----


பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநில அரசிற்கு ஏற்படும் நேர்மறைப் பலன்கள் :


★ நல்லாட்சி நடக்க உதவியாக ஊழியர்கள் தமது பணியில் அதிக ஊக்கத்தோடு செயல்படுவர்.


★ அறிவார்ந்த மற்றும் திறமைவாய்ந்த இளைஞர்கள் அதிக அளவில் அரசின் புதிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பர்.


★ பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மாநில & மாநில மக்கள் நலனுக்கான வளர்ச்சித்திட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயைக்கூட குறைக்க வேண்டிய தேவையிருக்காது.


- தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை, இராஜஸ்தான் அரசு


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி,  மேற்கண்டவாறு அதற்கான காரணத்தையும் ஒரு மாநில அரசே வெளியிட்டுள்ளது உள்ளபடியே மகிழ்வையும் நம்பிக்கையையும் அதிகரிப்பதாகவே உள்ளது.


தமிழ்நாடு CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக, இராஜஸ்தான் மாநில ஊழியர்களுக்கும் மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடே இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு.அசோக் ஹெலாட் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கோள்கிறோம்.



பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் கருத்துரு எதுவும் பரிசீலனையில் இல்லை - இந்திய நிதித்துறை அமைச்சகம் (To Implement Old Pension Scheme, there is no Proposal under consideration of Government of India - Ministry of Finance) Answer to Lok Sabha Unstarred Question No.2009 on 14-03-2022...



>>> பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் கருத்துரு எதுவும் பரிசீலனையில் இல்லை - இந்திய நிதித்துறை அமைச்சகம் (To Implement Old Pension Scheme, there is no Proposal under consideration of Government of India - Ministry of Finance) Answer to Lok Sabha Unstarred Question No.2009 on 14-03-2022...



2003 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான NDA அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) ரத்து செய்து, ஏப்ரல் 1, 2004 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) அறிமுகப்படுத்தியது. 


காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் எடுத்த முடிவுகளின் படி, அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதற்கான நோக்கத்தை திங்களன்று மத்திய அரசு மறுத்துள்ளது.


பட்ஜெட் கூட்டத்தொடரில், இரண்டாம் கட்டத்தின் முதல் நாளில்,  சத்தீஸ்கரின் பஸ்தாரின் காங்கிரஸ் எம்.பி., என்.பி.எஸ்-ஐ ரத்து செய்து, மத்திய அரசின் அனைத்து அதிகாரிகளையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (ஓ.பி.எஸ்.) கீழ் திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் எண்ணம் உள்ளதா என்று அரசாங்கத்திடம் கேட்டார். கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத் கூறுகையில், இந்திய அரசின் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தும் எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றார். 


அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அது ஆட்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ல் ரத்து செய்துவிட்டு, தற்போதுள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஏப்ரல் 1, 2004 அன்று அறிமுகப்படுத்தியது.  மத்திய அரசின் ஓய்வூதியப் பொறுப்புகளிலிருந்து விடுபடுவதற்காக தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்டது. பயனாளிகள் அதாவது அரசு ஊழியர்கள் தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய இது அனுமதிக்கிறது. அவர்களின் பணிக்காலம் முழுவதும் ஓய்வூதியக் கணக்கில் தவறாமல் பங்களிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் ஓய்வூதியத் தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம். 


இதற்கு மாறாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு மற்றும் பணியாளர்கள் ஓய்வூதிய நிதிக்கு சமமான பங்களிப்பை வழங்கினர். விதிகளின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு அரசு ஊழியரின் ஓய்வூதியத் தொகையாகக் கடைசியாக கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதம் அடங்கும். தற்போது, ​​ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள், அடுத்த நிதியாண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை புதுப்பிக்க முடிவு செய்துள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ராகுல் காந்தியிடம், கேரளா, ஆந்திரா மற்றும் பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநில அரசுகள் கூட ஓபிஎஸ் குழுவை அமைத்துள்ளதாகக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்திருந்தார்.


நன்றி: Hindustan Times


The NDA government under Atal Bihari Vajpayee in 2003 had scrapped the Old Pension Scheme (OPS) and introduced the National Pension Scheme (NPS) from April 1, 2004.


The Centre on Monday denied intentions of scrapping the existing National Pension Scheme (NPS) for the government employees and reverting to the old pension scheme, along the lines of decisions taken by Congress-ruled Rajasthan and Chhattisgarh.On the first day of the second leg of the budget session, Congress MP from Chhattisgarh's Bastar asked the government whether it had any intentions of scrapping the NPS and revert all the officials of central government under the Old Pension Scheme (OPS).Replying to the question, union minister of state for finance Dr Bhagwat Karad said there was no proposal under consideration under the government of India.It was the NDA government under Atal Bihari Vajpayee that had scrapped the old pension scheme in 2003 and had introduced the existing national pension scheme on April 1, 2004, just a month before it was voted out of power.


The National Pension Scheme was initiated for the central government to get rid of pension liabilities. It allows the beneficiaries i.e government employees to decide where they want to invest their money. This can be done by contributing regularly in a pension account throughout their career. After retirement, they can withdraw a part of the pension amount.


Contrary to this, the old pension scheme had government and employees contribute an equal portion towards the pension fund. As per rules, the old pension scheme involved 50 per cent of the last drawn salary as the pension amount to a government employee.


At present, Rajasthan and Chhattisgarh have announced the decision to revive the old pension scheme from the next financial year. According to reports, Rajasthan chief minister Ashok Gehlot told Rahul Gandhi that the state governments of Kerala, Andhra Pradesh and even BJP-ruled Assam had formed committees on the OPS.


Samajwadi Party president Akhilesh Yadav had promised to bring back old pension scheme had his alliance won the Uttar Pradesh polls.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Work bookல் உள்ள தொகுத்தறி மதிப்பீடு (SA) எழுத உத்தேச Time Table

  Work bookல் உள்ள  தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) எழுத உத்தேச Time Table வணக்கம். மதிப்பிற்குரிய HMs & Teachers, Work bookல...